search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொர்க்கவாசல்"

    • திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது
    • அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் பல்லக்கில் சொர்க்கவாசலை கடந்து வந்து ஆல்வார்களுக்கு எதிர்சேவை அளித்தார்

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா தொட்டியம் அருகே உள்ள அரசலூர் ஊராட்சி திருநாராயணபுரத்தில் அருள்மிகு வேதநாராயண பெருமாள் திருக்கோயிலில் அமைந்துள்ளது. ஆழ்வார்கள், அரையர்களால் பாடப்பட்ட இத்தளத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பகல் பத்து, இரா பத்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இதில் பகல் பத்து நிகழ்ச்சி நடைபெற்று முக்கிய நாளான சொர்க்கவாசல் எனும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்றுஅதிகாலை 5.04 மணியளவில் சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டது. பக்தர்கள் ரெங்கா, ரெங்கா, கோவிந்தா, என பக்திப் பெருக்கோடு கோஷம் எழுப்பினர். அப்போது அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் பல்லக்கில் சொர்க்கவாசலை கடந்து வந்து ஆல்வார்களுக்கு எதிர்சேவை அளித்தார். அப்போது பாசுரங்கள் பாடபட்டது. பின்னர் பெருமாள் தம்பதிர் சமேதமாக ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பத்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்சி மலைக்கோட்டை உதவி ஆணையர் ஹரிஹர சுப்ரமணியன், கோவில் செயல் அலுவலர் பிரபாகர், அறநிலையதுறை ஆய்வாளர் பிருந்தா, தொட்டியம் ஆய்வாளர் ஆனந்தி, தா.பேட்டை ஆய்வாளர் விஜய் பூபதி, முசிறி செயல் அலுவலர் வித்யா, அரசலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சஞ்சீவி, திருநாராயணபுரம் கோயில் கணக்கர் மனோகர் மற்றும் கோவில் அலுவலக உதவியாளர்கள், பொதுமக்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். சொர்க்கவாசல் திறக்கும் போது ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொட்டியம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


    • திருப்புல்லாணி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
    • கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 23ந்தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து உற்சவத்தில் முதல் நாள் நிகழ்ச்சியாகும்.

    இந்த நிகழ்ச்சி நேற்று அதிகாலை தொடங்கியது. காலை 10மணிக்கு பெருமாள் சயன திருக்கோலத்தில் காட்சியளித்தார்.

    பின்னர் மதியம் 1மணிக்கு விஸ்வரூப தரிசனம் அளித்தார். இரவு 7.15மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாதப்பெருமாள் உற்சவர்களாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சீர்பாத தூக்கிகளால் பட்டாபிஷேக ராமர் சன்னதி வழியாக உள்பிரகார வீதி உலா நடந்தது. இதையொட்டி ஆழ்வார்கள் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து இரவு 7.35மணிக்கு பரமபதவாசல் என்னும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, ..கோவிந்தா... என பக்தி கோஷமிட்டு தரிசித்தனர். நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்கள் பாடப்பட்டு சாற்று முறை, கோஷ்டி பூஜை முறைகள் நடந்தது. பெருமாள் எதிர்சேவை மூலம் மூலவரின் இருப்பிடம் கொண்டு செல்லப்பட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (3ந் தேதி) முதல் வருகிற 11ந்தேதி வரை ராப்பத்து உற்சவம் நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் சேதுபதி ராணி ராஜேஸ்வரி நாச்சியார் ஆலோசனையின் பேரில் திவான் மற்றும் நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம் கோதண்ட ராமர் கோவிலில் வை குண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று இரவு சொர்க்கவாசல் வழியாக ராமர், சீதா தேவியுடன் எழுந்தருளினார். தொடர்ந்து கோவிலில் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலில் நேற்று இரவு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
    • ராப்பத்து நிகழ்ச்சி கடந்த 23-ந் தேதி தொடங்கி 1-ந்தேதி வரை நடந்தது. பகல் பத்து 2-ந்தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    மேலூர்

    மதுரை ஒத்தக்கடை அருகே உள்ளது திருமோகூர். இது பிரசித்தி பெற்ற 108 வைணவ தலங்களில் சிறப்பு வாய்ந்தது. இந்த ேகாவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது.

    ராப்பத்து நிகழ்ச்சி கடந்த 23-ந் தேதி தொடங்கி 1-ந்தேதி வரை நடந்தது. பகல் பத்து 2-ந்தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான ஆழ்வார்களில் முதன்மையானவராக கருதப்படும் நம்மாழ்வாருக்கு பெருமாள் மோட்சம் தரும் நிகழ்வாக திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. சொர்க்கவாசல் வழியே காளமேகப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    இதனைக்காண ஒத்தக்கடை, மதுரை, மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் செல்வி, செயல் அலுவலர் இளங்கோவன் வழிகாட்டுதலின்படி அலுவலர்கள் செய்திருந்தனர்.

    ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

    • வைகுண்ட ஏகாதசியை யொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • மார்கழி மாதத்தில் நடக்கும் இந்த உற்சவம் 20 நாட்கள் நடைபெறும்.

    சேலம்:

    வைகுண்ட ஏகாதசியை யொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பெருமாள் கோவில்க ளில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று வைகுண்ட ஏகாதசி விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் நடக்கும் இந்த உற்சவம் 20 நாட்கள் நடைபெறும். இந்த விழாவின் முக்கிய மான நிகழ்ச்சியாக மார்கழி

    மாத வளர்பிறை ஏகாதசி திதி அன்று "சொர்க்க வாசல்" என்று அழைக்கப்ப டும் பரமபத வாசல் திறக்கப்படும். இந்த சொர்க்கவாசல் வழியே அன்றைய தினம் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இதன்படி சேலம் மாநகரில் கோட்டை பெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று

    அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு உற்சவம்வி மரிசையாக நடைபெற்றது.

    சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிக்காக, அழகிரிநாத சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. சரியாக அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அழகிரி நாத பெருமாள் "பரமபத வாசல்" என்றழைக்கப்படும் சொர்க்க வாசல் வழியாக அழைத்து வரப்பட்டார்.

    அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா" என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினார்கள். சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த பெருமாள், கோவிலின் கிழக்கு வாசல் வழியாக மீண்டும் கோவிலுக்குள் சென்று உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    விழாவை முன்னிட்டு கண்ணாடி மாளிகையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் மூலவர் அழகிரிநாதபெருமாள், சுந்தரவல்லி தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர், கருடாழ்வார், கிருஷ்ணர், விஷ்ணுதுர்க்கை சன்னதி களில் மூலவர்களுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.

    சொர்க்கவாசல் திறப்பை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவு கோவிலுக்கு வந்து காத்திருந்தனர். சேலம் மாநகரில் மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிந்தனர். கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாற்றுத்திறனாளி களுக்கும், முதியவர்க ளுக்கும் சாமி தரிசனம் செய்துவிட்டு வருவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுதர்சன பட்டாச்சாரியார் செய்திருந்தார். விழாவை முன்னிட்டு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன், துணை கமிஷனர் லாவண்யா இந்து அறநிலையத்துறை அதி காரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து கோவிலில் "இராப்பத்து" உற்சவமும் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின்போது தினமும் இரவு 8 மணிக்கு பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல், இரவு 8.30 மணிக்கு திருக்கொட்டாரத்தில் பக்தி உலாவுதல் உற்சவமும் நடைபெறுகிறது.

    பட்டை கோவில்

    இதேபோல் சேலம் டவுன் பட்டைக்கோவிலில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு

    சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை தரிசித்த னர். மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பட்டைக்கோவில் அருகே

    உள்ள ஆஞ்சநேயர் சன்னதி யில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    சேலம் செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழாவையொட்டி மூலவர், பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. அங்கும் காலை முதல் மாலை வரை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அம்மாப்பேட்டை சிங்கமெத்தை சவுந்தரராஜ பெருமாள் கோவில், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், சேலம் 2-வது அக்ரஹாரம் லட்சுமி நாராயணசுவாமி கோவில், சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவில், பிருந்தாவன் ரோட்டில் உள்ள வெங்கடா

    சலபதி கோவில், மகேந்திர புரியில் உள்ள அலமேலு மங்கை சமேத வெங்கடேச வரதராஜ பெருமாள் கோவில் உள்பட சேலத்தில் உள்ள அனைத்து பெருமாள்

    கோவில்களிலும் இன்று அதிகாலை வைகுண்ட ஏகா தசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

    • பெருமாள் கோவில்களில் இன்று சொர்க்க வாசல் திறப்பு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • வைகுண்ட ஏகாதசி, சொர்க்க வாசல் திறப்புக்கான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

    தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அரக்கன் மிகவும் துன்புறுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களை காப்பாற்றுமாறு பகவான் விஷ்ணுவிடம் முறையிட்டனர். அனைவரையும் காக்கும் பொருட்டு விஷ்ணு முரனுடன் போரிட்டு வென்றார்.வென்ற பின்னர் ஒரு குகையில் ஓய்வெடுக்க பெருமாள் சென்றார். இதைப் பார்த்த தோல்வியின் விரக்தியில் இருந்த முரன், பெருமாளை கொல்ல ஒரு வாளை ஓங்கியபடி வந்தார். அப்போது விஷ்ணுவின் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தி ஒரு பெண் வடிவில் உருவெடுத்து, முரனுடன் போரிட்டு வென்றாள்.

    முரனை வென்ற அந்த திருமாலின் சக்தியால் உருவான அந்த பெண்ணுக்கு ஏகாதசி என அரங்கன் பெயர் சூட்டினார். அதோடு அன்றைய திதிக்கு ஏகாதசி பெயர் வந்தது. இந்த நாளில் தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக பெருமாள் வரமளித்தார். இதனால் இந்த தினம் வைகுண்ட ஏகாதசி என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

    சொர்க்க வாசல் உருவான கதை

    படைப்பு கடவுளான பிரம்மாவின் படைப்பு காலம் முடிந்து, ஊழிக்காலம் தொடங்கியதும் எல்லா உயிர்களும் இறைவனிடம் ஒடுங்கிவிடும். அப்படி ஊழிக்காலம் தொடங்கியதும். மகாவிஷ்ணுவின் தொப்புள் கொடியில் இருந்த தாமரையில் பிரம்மன் அடங்கினான். பிரம்மனின் அடுத்த பகல் தொடங்கியதும், தாமரை இலை தண்ணீரை பிரம்மன் மேல் தெளிக்க, அதில் சில துளிகள் பிரம்மனின் காதுகளில் சென்றன.

    விழித்த பிரம்மன் முதல் வேலையாக பிராண வாயுவை தூண்டினார். அப்போது அவரின் இரு காதுகளில் இருந்து காது அசுத்தத்துடன் அந்த தண்ணீர் வெளியே வர ஒன்று மிருதுவானதாகவும், மற்றொன்று கடினமானதாகவும் மது, கைடபர் என அரக்கர்களாக உருவெடுத்தன. அப்போது பிரம்மனிடம் ஒலி வடிவில் இருந்த வேத ங்களை அந்த இரட்டையர்கள் திருடி சென்றனர். அப்போது ஹயக்ரீவராக அவதரித்த பெருமாள் வேதங்களை திரும்ப கொண்டு வந்தார். பின்னர் உலகில் உள்ள உயிர்களை துன்புறுத்த துவங்கினர். தேவர்கள், முனிவர்கள் என அனைத்து உயிரினங்களும் விஷ்ணுவிடம் முறையிட, அவர்களை அடக்க இறைவன் புறப்பட்டார்.

    மது, கைடபருடன் போரிட்ட பெருமாள் அவர்களை அழிக்க முற்பட்டார். அப்போது அந்த சகோதரர்கள் சரணடைந்தனர்.உங்களின் சக்தியால் உருவான எங்களுக்கு நீங்கள் தான் கருணை காட்ட வேண்டும், நாங்கள் உங்கள் அருகிலேயே இருக்கும் வழியை காட்டுங்கள் என கேட்டுக் கொண்டனர்.அவ்வாறே அவர்களுக்கு பெருமாள் அருளினார். மேலும் எங்களைப் போல பலரும் இந்த பாக்கியத்தைப் பெற வேண்டும் என்பதற்காக திருமாலிடம் கேட்டுக் கொண்டனர்.

    அதோடு வைகுண்ட ஏகாதசி திருநாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் தாங்கள் வெளியே வரும் போது, தரிசிப்பவர்களுக்கும், அவர்கள் செய்த பாவத்தை எண்ணி வருந்தி அதை திருத்திக் கொள்பவர்களுக்கும் முக்தி அளிக்க வேண்டும் என அசுர சகோதரர்கள் கேட்டுக் கொண்டனர்.இதன் காரணமாக தான் வைகுண்ட வாசல் உருவானது. அதோடு மது கைடபர் ஆகியோரை அடக்கியதால் மதுசூதன் என்ற பெயர் பெருமாளுக்கு வந்தது.

    • இன்று இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
    • 11-ந்தேதி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

    பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். விழாவின் ராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெறும்போது பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறக்கப்படும்.

    7-ம் திருநாளான வருகிற 8-ந்தேதி மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். 8-ம் திருநாளான 9-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. 9-ம் திருநாளான 10-ந் தேதி பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

    ராப்பத்து நிகழ்ச்சியின் 10-ம் நாளான 11-ந்தேதி காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். இன்று திறக்கப்படும் சொர்க்கவாசல், மேலும் 8 நாட்களுக்கு தினமும் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட நாட்களில் மூலவர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ராப்பத்து நிகழ்ச்சிகளிலும் நம்பெருமாள் ரத்தின அங்கி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    • ஸ்ரீரங்கம் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது.
    • 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது மட்டுமல்ல, பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்ற வரலாறும் இதற்கு உண்டு. அந்த ஆழ்வார்கள் யார் யாரென்று பார்ப்போமா?

    திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார், ராமானுஜர், மதுரகவி ஆழ்வார் என்பவர்களே இந்த பன்னிரு ஆழ்வார்கள் ஆவர். இவர்களில் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுப்பதற்காக ரெங்கநாதரால் உருவாக்கப்பட்டதே வைகுண்ட ஏகாதசி விழா என்பது சிறப்புக்குரியதாகும்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் ராப்பத்து திருவாய்மொழி திருநாளான வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றுடன் வைகுண்ட ஏகாதசி விழாவும் நிறைவு பெறுகிறது.

    • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களில் இன்று மாலை சுவாமி சயனக்கோலத்தில் எழுந்தருளிக்கிறார்.
    • இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான இன்று கள்ளப்பிரான் சயானக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    தென்திருப்பேரை:

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களில் இன்று மாலை சுவாமி சயனக்கோலத்தில் எழுந்தருளிக்கிறார். இரவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான்

    மார்கழி- திருஅத்யயன திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது. நவதிருப்பதி கோவில்களில் பரமபத வாசல் திறப்பு என்று அழைக்கப்படும். சொர்க்கவாசல் திறப்பு இன்று மாலை நிகழ்ச்சி நடைபெறும்.

    ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவில், தென்திருப்பேரை மகரநெடுகுழைகாதர் கோவில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் ஆகியவற்றில் பகல் பத்து திருவிழா, இராப்பத்து திருவிழா வருகிற 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் நடைபெறும் பகல் பத்து திருவிழா நாட்களில் தினமும் காலையில் சுவாமி எழுந்தருளலும், மாலை 6 மணிக்கு சேர்த்தியில் ராஜாங்கம், நவநீத கிருஷ்ணன், நாச்சியார் திருக்கோலம், மாரிசன் வதை, கஜேந்திர மோட்சம், கன்றுகொன்டு விளாகண்ணி எறிதல், கோபியர் துகில் பறித்தல், கோவர்த்தன கிரியை குடைபிடித்தல், வாமானா ஆவதாரம், ஆண்டாள் திருக்கோலங்களில் சுவாமி கள்ளப்பிரான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான இன்று காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை சுவாமி கள்ளப்பிரான் சயானக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    மாலை 7 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி, இரவு 10 மணிக்கு பக்தி உலா, படியேற்றம் கற்பூர சேவை நடைபெறுகிறது. இராப்பத்து திருவிழாவில் 2-ம் நாளில் இருந்து தினமும் இரவு 7 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு, பக்தி உலா, 9 மணிக்கு படியேற்றம் கற்பூர சேவை நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை

    இதேபோல் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை சுவாமி சயனதிருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இரவு 10.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தென்திருப்பேரை ஸ்ரீ மகரநெடுங்குழைக்காதர் கோவில் மார்கழி திரு அத்யயன உற்சவம் - திருவாய்மொழி முதல் திருநாள் மூத்த வேலியார் குடும்ப டிரஸ்டுக்கு பாத்தியப்பட்ட வைகுண்ட ஏகாதசி மண்டகப்படியின் சேஷ சயனம் மிக சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்க்கு கோவில் செயல் அலுவலர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் மூத்தவேலியார் குடும்ப டிரஸ்டு தலைவர் ரா.சுந்தர ராஜன், தோழப்பர் கண்ணன் சுவாமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    • திரளான பக்தர்கள் தரிசனம்
    • கோவில்களில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    கன்னியாகுமரி:

    பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா இன்று நடந்தது. இதையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கன்னியாகுமரி விேவகானந்தபுரத்தில் உள்ள விவேகான ந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேஷ்வர பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாத நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து கோவிலின் வடக்குப் பக்கம் மலர்களால் அமைக்கப்பட்ட வடக்கு வாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேஷ்வர பெருமாள் கோவிலில் பூலங்கிசேவை, சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், அலங்கார தீபாராதனை, மாலையில் தோமாலை சேவை போன்றவை நடந்தது. இரவு பள்ளியறை எழுந்தருளும் ஏகாந்த சேவை நிகழ்ச்சி நடந்தது.

    மேலும் குமரி மாவட் டத்தில் திருப்பதிசாரம் திருவாழிமார்பன் திருக்கோ வில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் போன்ற கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி இன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவில், சுசீந்தி ரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், ஏழகரம் பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோவில், மகாதானபுரம் நவநீத சந்தாண கோபால கிருஷ்ண சாமி கோவில், கன்னியாகுமரி பாலகிருஷ்ணசாமி கோவில் உள்பட குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கோவில்களில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். கோவில்களில் உற்சவ மூர்த்தி பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் நமக்கு காட்சி தருகிறார்.
    • வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்லது என்பது நம் முன்னோர்களின் கூற்று.

    வைகுண்டத்தில் தான் விஷ்ணு வசிக்கிறார். 'ஏகம்' என்பது 'ஒன்றை' குறிக்கின் றது. 'தசம்' என்பது பத்தை குறிக்கின்றது. ஒன்றையும் பத்தையும் கூட்டினால் 11. அமாவாசை வளர்பிறையில் பதினோராவது நாளில் ஒரு ஏகாதசியும், பவுர்ணமி தேய் பிறையில் பதினோராவது நாளில் மற்றொரு ஏகாதசி வருகிறது. மொத்தம் வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும்.

    இதில் மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடி வருகிறோம். மற்ற ஏகாதசியில் நம்மால் விரதத்தை கடைபிடிக்க முடியவில்லை என்றாலும் இந்த மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்லது என்பது நம் முன்னோர்களின் கூற்று. ஏகாதசி விரதமானது முதலில் தொடங்கப்பட்ட மாதமும் மார்கழி தான்.

    பெருமாள் கோவில்களில் இருக்கும் சொர்க்க வாசல் என்று கூறப்படும் அந்த கதவினை குறிப்பாக ஏன் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கிறார்கள் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இன்னும் இருந்துதான் வருகிறது. அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக இந்த பதிவு.

    நம்முடைய இந்து புராண கதைகள் என்றாலே அது ஒருவருடைய கர்வத்தை அடக்குவதற்காகவோ அல்லது தீயவர்களிடமிருந்து நல்லவர்களை காப்பாற்றுவதற்காகவோ அல்லது அதர்மத்தை அழிப்பதற்காகவோ தான் இருக்கும். நம் வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக நம் முன்னோர்கள் நமக்கு கூறிவிட்டு சென்றுள்ள வழிபாடுகளும் விரதங்களும் நமக்கு நன்மை தரும் வகையில் அமைந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு நல்ல புராணக்கதையைத்தான் நாம் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

    ஒரு நாள் இந்த பூலோகத்தில் உயிர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் விஷ்ணுவிற்கு வந்தது. உயிர்களைப் படைக்கும் வேலையை செய்வதற்கு ஒரு வரை நியமிக்க வேண்டும் அல்லவா? அதற்காக பிரம்மனை படைத்தார். உயிர்களையெல்லாம் இந்த பூலோகத்தில், பிரம்மாவான நான் தான் படைக்கப் போகிறேன், என்ற கர்வமானது பிரம்மனுக்கும் வந்துவிட்டது. தலைக் கணம் ஏறிவிட்டது. இந்த பிரம்மனின் தலைக்கணத்தை அடக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்த விஷ்ணு தன் காதுகளில் இருந்து இரு அசுரர்களை வெளிக்கொண்டு வந்தார். அந்த இரண்டு அரக்கர்களின் பெயர் லோகன், கண்டன்.

    இந்த இரண்டு அசுரர்களின் கோரதாண்டவத்தை கண்ட பிரம்மாவின் கர்வமானது அடங்கி விட்டது. ஏனென்றால் இந்த இரண்டு அரக்கர்களும் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டவர்கள் அல்லவா? இவர்களுக்கு சக்தி அதிகம். அதாவது ஒரு நல்ல செயலுக்காக உருவாக்கப்பட்ட அரக்கர்கள் இவர்கள்.

    'பிரம்மனின் தலைக் கணத்தை நீக்கிய உங்களுக்கு என்ன வரம் வேண்டும்' என்று விஷ்ணு அந்த இரண்டு அரக்கர்களையும் நோக்கி கேட்டார். அந்த இரண்டு அரக்கர்களும் வித்தியாசமான ஒரு வரத்தை விஷ்ணுவிடம் கேட்டனர். விஷ்ணு பகவானால் படைக்கப்பட்ட அரக்கர்கள் அல்லவா, இவர்களுக்கும் தலைக்கணம் வந்து விட்டது.

    அப்போது விஷ்ணு பகவானான நீங்கள் அரக்கர்களான எங்கள் இருவரிடமும் போர்புரிய வேண்டும்' என்ற ஒரு கோரிக்கையை வைத்தனர். விஷ்ணுவும் இதை ஏற்றுக் கொண்டார். விஷ்ணு பகவான் வடக்கு வாசலின் வழியாக வந்து இந்த இரண்டு அரக்கர்களிடமும் போரினை தொடங்கினார். விஷ்ணுவிடம் பரமபதத்தில் போரிட்ட அந்த இரண்டு அரக்கர்களும் தோல்வி அடைந்து விஷ்ணுவின் பாதங்களில் சரண் அடைந்தனர்.

    பகவானே! 'தங்களின் சக்தியால் உருவாக்கப்பட்ட நாங்கள் வைகுண்டத்தில் உன்னிடமே இருக்க வேண்டும்' என்று வேண்டி வரத்தை கேட்டனர். தோல்வியுற்ற இந்த இரண்டு அரக்கர்களும் வடக்கு வாசலின் வழியாக பெருமாளை சென்றடைந்தனர். இரண்டு அரக்கர்களும், பெருமாளை சென்றடைந்த இந்த நாளைத்தான் வைகுண்ட ஏகாதேசி திருநாளாக கொண்டாடி வருகிறோம். இரண்டு அரக்கர்களும் இன்றுவரை பெருமாளின் இருபுறங்களிலும் சங்கு சக்கரமாக மாறி காட்சி தருகின்றனர். இந்த வடக்குவாசல் தான் சொர்க்க வாசலாக கூறப்படுகிறது.

    இதன்மூலம் 'வைகுண்ட ஏகாதசிஅன்று சொர்க்க வாசல் வழியாக வெளியில் தரிசனத்திற்காக வரும் பெருமாளை தரிசிப்பவர்களுக்கும், பெருமாளை சொர்க்கவாசல் வழியாக பின் தொடருபவர்களுக்கும் பாவங்கள் நீங்கி முக்தி அளிக்க வேண்டும்' என்று அந்த அசுரர்கள் பெருமாளிடம் வரத்தை வாங்கிக்கொண்டனர். இதன் மூலமாகத்தான் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் நமக்கு காட்சி தருகிறார்.

    அந்த விஷ்ணுவால் படைக்கப்பட்ட அசுரர்கள், தெரியாமல் செய்த தவறினை மன்னித்து அவர்களுக்கு மோட்சம் தந்து தன்னுடனே வைத்துக் கொண்ட அந்தப் பெருமாள், மனித பிறப்பு எடுத்து தெரியாமல் தவறு செய்யும் நம்மையும் மன்னித்து மோட்சத்திற்கு அழைத்துச் செல்வார். ஆகவே நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளில் இருந்து விமோசனம் பெற வேண்டுமென்றால் பெருமாளை இந்த ஏகாதசி அன்று சொர்க்க வாசலில் தரிசனம் செய்யுங்கள்.

    • கள்ளழகர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்.
    • கூடலழகர் பெருமாள் கோவிலில் இன்று இரவு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.



    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் பெருமாள் சயன கோலத்தில் காட்சியளித்தார். 

     அலங்காநல்லூர்

    108 வைணவ தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தை முன்னிட்டு தினமும் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலை யில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் காலை 6.25 மணிக்கு உற்சவர் சுந்தரராஜ பெருமாள் வண்ணக்குடை, தீவட்டி பரிகாரங்களுடன் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினர். அப்போது நம்மாழ்வார் எதிர்கொண்டு வரவேற்றார்.

    சொர்க்கவாசல் திறப்பின்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என பக்தி கோஷமிட்டு சாமி கும்பிட்டனர். சொர்க்கவாசல் வழியாக சுவாமி -அம்பாள் சயன மண்டபத்தில் எழுந்தருளி னர்.

    கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் இன்று காலை சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. சொர்க்கவாசல் வழியாக பெருமாள் அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை நகரில் உள்ள கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். இன்று காலை முதல் திரளான பக்தர்கள் குவிந்து சாமி கும்பிட்டனர். இன்று இரவு 7.15 மணிக்கு மேலவடம்போக்கி தெருவில் உள்ள சொர்க்கவாசல் வழியாக கூடலழகர் பெருமாள் எழுந்தருளுகிறார்.

    இதேபோல் மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், மதனகோபால சுவாமி கோவிலில் இன்று மாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    • தொண்டி, சாத்தூர், தேவகோட்டை கோவில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள உந்தி பூத்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அலங்க ரிக்கப்பட்ட பல்லக்கில் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சாத்தூரில் பிரசித்தி பெற்ற வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

    காலை 7 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அந்த வழியாக சாத்தூரப்பன் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டையில் உள்ள ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடந்தது. அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜையும், அதனைத்தொடர்ந்து சொர்க்கவாசல் திறப்பும் நடந்தது. சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளிய ரெங்கநாத பெருமாளை திரளான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×