search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகுண்ட ஏகாதசியையொட்டி குமரி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
    X

    வைகுண்ட ஏகாதசி தினமான இன்று வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி குமரி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

    • திரளான பக்தர்கள் தரிசனம்
    • கோவில்களில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    கன்னியாகுமரி:

    பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா இன்று நடந்தது. இதையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கன்னியாகுமரி விேவகானந்தபுரத்தில் உள்ள விவேகான ந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேஷ்வர பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாத நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து கோவிலின் வடக்குப் பக்கம் மலர்களால் அமைக்கப்பட்ட வடக்கு வாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேஷ்வர பெருமாள் கோவிலில் பூலங்கிசேவை, சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், அலங்கார தீபாராதனை, மாலையில் தோமாலை சேவை போன்றவை நடந்தது. இரவு பள்ளியறை எழுந்தருளும் ஏகாந்த சேவை நிகழ்ச்சி நடந்தது.

    மேலும் குமரி மாவட் டத்தில் திருப்பதிசாரம் திருவாழிமார்பன் திருக்கோ வில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் போன்ற கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி இன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவில், சுசீந்தி ரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், ஏழகரம் பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோவில், மகாதானபுரம் நவநீத சந்தாண கோபால கிருஷ்ண சாமி கோவில், கன்னியாகுமரி பாலகிருஷ்ணசாமி கோவில் உள்பட குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கோவில்களில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். கோவில்களில் உற்சவ மூர்த்தி பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×