search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீரங்கம்"

    • ஸ்ரீரங்கத்திற்கும், ஸ்ரீராமருக்கும், அயோத்திக்கும் இடையிலான தொடர்பு தொன்மையானது.
    • பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் ஸ்ரீரங்கம் கோவில் விமானம்.

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது. 108 திருப்பதிகளில் தானாய் தோன்றிய (சுயம்பு) திருப்பதிகள் 8 தான். அதிலும் முதல் திருப்பதி ஸ்ரீரங்கம் தான். வைகுண்டத்தின் தத்துவத்தை பூலோகத்தில் உள்ள மக்கள் கண்டு அனுபவிக்கும் வகையில் அமைந்துள்ளதால் இது பூலோக வைகுண்டம் எனப்படுகிறது.

    ஸ்ரீரங்கத்திற்கும், ஸ்ரீராமருக்கும், அயோத்திக்கும் இடையிலான தொடர்பு தொன்மையானது, தெய்வீகமானது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஸ்ரீராமரின் குலதெய்வம் ஆவார். மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே குலதெய்வம் என்று உள்ளது. அதேபோல மகாவிஷ்ணு மனிதராக ஸ்ரீராமராக அவதாரம் எடுத்தவர்.

    அயோத்தியில் அவர் வணங்கிய குல தெய்வம்தான் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் போது ராமரின் குலதெய்வ கோவிலான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திரங்கள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மண் அனுப்பி வைக்கப்பட்டது.

    பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் ஸ்ரீரங்கம் கோவில் விமானம். ரங்க விமானத்தில் அர்ச்சா ரூபமாக அவதரித்தவர் ஸ்ரீரங்கநாதர். ரெங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய பிரம்மா சூரியனை நியமித்தார்.

    பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு கொண்டு சென்று வழிபட்டார். "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்" ராமரின் வம்சமாகிய ரகுவம்சத்தின் குல தேய்வம். காலம்காலமாக அவர்கள் ரெங்கநாதரை வழிபட்டு வந்தனர். சூரிய வம்சத்தில் தசரதருக்கு மகனாக அவதரித்த ராமபிரான் தன் முன்னோர்கள் வழியில் ரெங்கநாதரை வணங்கி வந்தார். 67 தலைமுறைகளுக்கு முன்பு இருந்தே அஜன், திலீபன், தசரதன் என ராமபிரானின் முன்னோர்களால் வழிபட்டு வந்தவர் ரெங்கநாதர். அயோத்தியில் ராமர் தனது கரங்களால் ரங்கநாதருக்கு பூஜை செய்து வந்தார்.

    இந்த சூழலில் ராமர் வனவாசம் முடிந்து அயோத்தியில் மீண்டும் அரசாட்சி புரிந்தார். அவர் முடி சூட்டிக்கொண்ட பிறகு விபீஷணனுக்கு அவன் செய்த உதவிக்காக `ரங்க விமானம்' தருகிறார் ராமர். அதை விபீஷணன் இலங்கை போகும் வழியில் சந்திரபுஷ்கரினி என்னும் தடாகம் பகுதியில் வந்தபோது சிலையை கீழே இறக்கி வைக்க வேண்டாம் என்று கருதி, அங்கு வந்த சிறுவனிடம் கொடுத்துள்ளான்.

    ஆனால் காவிரியில் நீராடி விட்டு திரும்பி வருவதற்கு அந்த சிலையை சிறுவன் கீழே வைத்துவிட்டான். அதன்பிறகு சிலையை எடுக்க முடியவில்லை. கோபத்தில் விபீசணன் அந்த சிறுவனை தேடியபோது அவன் திருச்சி மலைக்கோட்டை உச்சியில் சென்று அமர்ந்து கொண்டான். சிறுவன் வடிவில் வந்தது உச்சிப்பிள்ளையார் என்றும், ரங்கநாதரை காவிரியில் அமர வைக்கவே அவர் இந்த திருவிளையாடலில் ஈடுபட்டுள்ளார். தர்மவர்மா என்ற அந்தப் பகுதி மன்னனின் பக்தியால் உருகி பெருமாள் அந்தத் தீவிலேயே தங்கி விடுகிறார். தர்மவர்மா ஆலயம் எழுப்பினான்.

    பள்ளிகொண்ட நிலையில் பெருமாள் இங்கு அருள்கிறார். இதனை `சயனக் கோலம்' என்பார்கள். திருச்சியில் காவிரியும் கொள்ளிடமும் உருவாக்கிய மணல் தீவு முக்கொம்பு தொடங்கி கல்லணை வரை உள்ளது. `அரங்கம்' என்றால் ஆற்றிடைக்குறை என்று பொருள்படும். ஸ்ரீரங்கம் பெரியகோவில் 6,13,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அதாவது 156 ஏக்கர். கோயில் சுவர்களின் மொத்த நீளம் 32,592 அடி. பெரியகோவில் 7 திருச்சுற்றுக்களோடு அமைந்துள்ளது. இந்தியாவிலேயே 7 சுற்றுக்களைக் கொண்ட கோவில் இதுமட்டுமே. பெருமாள் தென்திசை நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார். விபீஷணனுக்காக "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளி கொண்டுள்ளார் பெருமாள்.

    கருவறை விமானத்தில் 4 கலசங்கள் உள்ளன. இவை 4 வேதங்களைக் குறிக்கின்றன. சுந்தரபாண்டியன் விமானத்துக்குத் தங்கம் பதித்தான். அதனால் பொன்மேய்ந்த பெருமாள் என அழைத்தனர். பொன்னால் வேயப்பட்ட இந்த விமானம் ஓம் என்ற பிரணவ வடிவில் எழுந்தருளி உள்ளது. ரெங்கநா தனின் திருக்கண்கள் விபீஷணனால் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

    மூவேந்தர்கள் தொடங்கி விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் எல்லோருமே ரெங்கநாதரை வணங்கி கோவிலை வளர்த்தனர்.

    கம்பர் தனது ராமகாதையை கி.பி.885-ல் இங்குதான் அரங்கேற்றம் செய்தார். வால்மீகி ராமாயணத்தில் இல்லாத `இரண்ய வதைப்படலம்' எனும்பகுதியை கம்பர் தனது காவியத்தில் எழுதியதை சிலர் ஏற்க மறுத்தனர். ஆனால் மேட்டழகிய சிங்கர் என்ற நரசிம்மர் கர்ஜித்து ஏற்றதாக ஸ்தல புராணம் கூறுகிறது.

    தாயார் சந்நிதிக்கு அருகில் உள்ள நான்குகால் மண்டபத்தில்தான் கம்பராமாயணம் அரங்கேறியதாம். இதன் சாட்சியாக திருவந்திக்காப்பு மண்டபத் தூணில் கம்பர் கைகூப்பி வணங்கும் சிற்பம் உள்ளது.

    பழைமையான தமிழ் வழிபாட்டு முறைகளில் ஒன்றான பெருமாள் வழிபாட்டில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பது ஸ்ரீரங்கம். ஒரு நாட்டின் மன்னனுக்கு நடப்பதுபோன்று பெருமாளுக்கு விழாக்கள் நடக்கின்றன. இதனால்தான், "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே" என்று கூறுகிறார்கள்.

    ஆசியா - பசிபிக் மண்டலத்தில் உள்ள 10 நாடுகளிலிருந்து கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்புகள் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்த யுனெஸ்கோ அமைப்பு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றை பழமை மாறாமல் பாதுகாத்ததற்கான விருதை 2017-ம் ஆண்டில் வழங்கி சிறப்பித்தது. தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த கோவிலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிசேகம் காணப்படும் இந்த சூழலில் ராமபிரானின் குல தெய்வமான ஸ்ரீரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ள ஸ்ரீரங்கமும் முக்கியத்துவம் பெறுகிறது. ராமரின் குலதெய்வத்தை தரிசனம் செய்துவிட்டு, அதன்பிறகு அயோத்தியில் ராமரின் கோவிலை திறந்து வைப்பதே சரி என கருதி பிரதமர் மோடியின் ஸ்ரீரங்கம் வருகை இதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகமாக்கி உள்ளது.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தை மாத பூபதி திருநாள் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 19-ந்தேதி 4-ம் திருநாள் கருடசேவை தரிசனம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஸ்ரீரங்கம் வருவது மேலும் சிறப்பாகும்.

    • அதிகாலை 4 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும்.
    • நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுநதாண்டகத்துடன் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. பகல்பத்து, ராப்பத்து என 20 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் பிரதான நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நாளை (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

    முன்னதாக 13-ந்தேதி முதல் பகல்பத்து திருவிழா நடைபெற்றது. பகல் பத்து உற்சவம் 10-வது நாளான இன்றுடன் நிறைவு பெறுகிறது. சொர்க்கவாசல் திறப்புடன் நாளை ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது.

    இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் நாளை அதிகாலை 3 மணியளவில் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத் திலிருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியில் வருவார். தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே மூன்றாம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார்.

    முன்னதாக விரஜா நதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்ட ருள்வார். அதனைத் தொடர்ந்து காலை 4 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலைக் கடந்து மணல்வெளி, நடைப் பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக் கொட்டகைக்கு வருவார். அங்கு பெருமாள் சுமார் 1 மணிநேரம் பக்தர் களுக்கு சேவை சாதிப்பார்.

    அதன்பின் சாதரா மரியாதையாகி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சேருவார்.

     வைகுண்ட ஏகாதசிவிழா வின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான மோகினி அலங்காரம் வைபவம் இன்று (22-ந் தேதி) நடந்தது. இதை முன்னிட்டு இன்று காலை உற்சவர் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் அர்ச்சுன மண்டபத்திற்கு எழுந்தருளினார். மாலை 5 மணிக்குமேல் நான்காம் பிரகாரம் வலம் வந்து கருட மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார், இரவு 8 மணிக்குமேல் ஆழ்வார், ஆச்சார்யர்கள் மரியாதை யான பின் 9 மணியளவில் மூலஸ்தானம் சேருவார். விழாவிற்கான ஏற்பாடு களை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில், அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், கைங்கர்யபரர்கள், அலு வலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்ட ஒருங் கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.

     வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் விழா கோலம் பூண்டுள்ளது. ராஜகோபுரம் உள்ளிட்ட, 21 கோபுரங்கள், 7 பிரகாரங்கள் வண்ண, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிப்பட்டு ஜொலிக் கின்றன. மேலும், கோவில் வளாகத்திற்குள் மூலவர் ரங்கநாதர், சங்கு, சக்கரம், நாமம் போன்ற உருவங்களில் மின் விளக்குகள் ஜொலிக்கின்றன.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண சுமார் 1 லட்சம் பக்தர்கள் வரு வார்கள் என்று எதிர் பார்க்கபப்டுகிறது. இன்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கி உள்ளனர். இதனால் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணிக்காக திருக்கோவில் ரெங்க விலாஷ் மண்டபம் அருகில் மாநகர காவல்துறை சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றது.

    • பல்வேறு சிறப்புகளையுடைய “வைகுண்ட ஏகாதசி” என்றவுடன் ஸ்ரீரங்கம்தான் நினைவுக்கு வரும்.
    • ஏனென்றால், பூலோக வைகுண்டம் என்ற புகழ்மிக்க திருத்தலம் அது.

    பல்வேறு சிறப்புகளையுடைய "வைகுண்ட ஏகாதசி" என்றவுடன் ஸ்ரீரங்கம்தான் நினைவுக்கு வரும்.

    ஏனென்றால், பூலோக வைகுண்டம் என்ற புகழ்மிக்க திருத்தலம் அது.

    எல்லா ஊர்களிலும் உள்ள விஷ்ணு ஆலயங்களில் இந்த வைகுண்ட ஏகாதசித் திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

    என்றாலும், ஸ்ரீரங்கத்துக்கு தனிச்சிறப்பு உண்டு.

    பிரம்மோற்சவம் என்றால் திருப்பதி எப்படி விசேஷமோ, தீபம் என்றால் திருவண்ணாமலை எப்படி விசேஷமோ, அப்படி வைகுண்ட ஏகாதசி விசேஷம் கொண்டது ஸ்ரீரங்கம்.

    • வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 5-ம் நாள் இன்று.
    • வெண்பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 4-ம் நாளான நேற்று `கண்ணனெனும் கருந் தெய்வம்' பாசுரத்திற்கு ஏற்ப நம்பெருமாள் முத்து சாய் கிரீடம், ரத்தின காது காப்பு, ரத்தின அபயஹஸ்தம், பங்குனி உத்திர பதக்கம், சந்திரகலா, பருத்திப்பூ பதக்கம், நகரி, ஆறு வட முத்துமாலை, காசு மாலை, அடுக்கு வைர மகர கண்டிகை பதக்கங்கள், வைர ரங்கூன் அட்டிகை உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து பின் சேவையாக, புஜ கீர்த்தி, வெண்பட்டு உடுத்தி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    • ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படும்.
    • இந்த விழா வருகிற 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    திருச்சி

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான ஊஞ்சல் உற்சவம் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த விழா வருகிற 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    ஊஞ்சல் உற்சவத்தின் முதல் நாளான இன்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின் ஊஞ்சல் மண்டபத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்தடைவார்.

    அதன்பின் இரவு 7.15 மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆராத்தி கண்டருள்வார். இந்த நிகழ்ச்சி இரவு 8.15 மணிவரை நடைபெறும். அப்போது நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    பின்னர், ஊஞ்சல் மண்டபத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். ஊஞ்சல் உற்சவ நாட்களில் நம்பெருமாள் தினமும் இரவு 7.15 மணி முதல் இரவு 8.15 மணிவரை நம்பெருமாள் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    • காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவார்கள்.
    • காசியில் வாசம் செய்து பல புண்ணிய செயல்கள் செய்ததற்கு சமம்.

    திருச்சி:

    துலா மாத பிறப்பை யொட்டி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமஞ்சனத்திற்காக இன்று காவிரி ஆற்றிலிருந்து தங்க குடத்தில் புனித நீர் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படும். இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாகிறது. துலா (ஐப்பசி) மாதத்தில் ஒரு நாள் ஸ்ரீரங்கம் காவிரியில் புனித நீராடி அரங்கனை தரிசனம் செய்தால் காசியில் வாசம் செய்து பல புண்ணிய செயல்கள் செய்ததற்கு சமம் என பெரியவர்கள் கூறுவர். இதையொட்டி காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவார்கள்.

    இந்த மாதம் முழுவதும் காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தினமும் காலை புனித நீர் தங்க குடத்தில் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டு நம்பெருமாள் திருவாராதனம் மற்றும் திருமஞ்சனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. மற்ற மாதங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தான் கோவிலுக்கு புனிதநீர் கொண்டு செல்ல ப்படுகிறது.

    துலா மாத பிறப்பையொட்டி இன்று காலை காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தங்க குடத்தில் புனிதநீர் எடுக்கப்பட்டு யானை மீது வைத்தும், வெள்ளி குடங்களிலும் புனித நீர் எடுக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதையொட்டி நம்பெரு மாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை 10.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 3 மணிக்கு சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    துலா (ஐப்பசி) மாதத்தில் நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து திருமஞ்சனங்களும் தங்க பாத்திரத்தில் நடைபெறும். மேலும் மூலவர் பெரிய பெருமாள், உற்சவர் நம்பெருமாள், தாயார் தங்க ஆபரணங்கள் மற்றும் சாலக்கிராம மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

    • வைகை எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கம் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல சோதனை ஓட்டம் நடைபெறுகிறது
    • 16-ந் தேதி நடைபெறுகிறது

    திருச்சி:

    வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை- மதுரை இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று, செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீரங்கம் வாசிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தெற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்றுள்ளது.

    அதைத்தொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இனி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலும் நின்று செல்ல உள்ளது.

    இதனை அமல் படுத்தும் விதமாக சோதனை நிறுத்தமானது வருகின்ற 16-ந் தேதி நடக்கிறது.

    அதன் பின் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நிரந்தரமாக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அனுமதியளிக்கும்.

    இந்த ெரயில் தினமும் சென்னை எழும்புரில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு மாலை 06.05 மணிக்கு ஸ்ரீரங்கம் ெரயில் நிலையம் வந்தடையும். மதுரையில் இருந்து காலை 07.00 மணிக்கு புறப்பட்டு காலை 09.36 ஸ்ரீரங்கம் ெரயில் நிலையம் வந்தடையும்.

    ஸ்ரீரங்கம் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திருப்பது அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    இதுகுறித்து ஸ்ரீரங்கம் நகர நல சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் கே. ஸ்ரீநிவாசன் கூறும்போது,

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வரும் சென்னை மற்றும் மதுரை பக்தர்கள் திருச்சி ஜங்ஷன் ெரயில் நிலையம் வந்து அதன் பின்னர் ஆட்டோ அல்லது பஸ்களில் ஸ்ரீரங்கத்துக்கு வர வேண்டி இருந்தது.

    இனிமேல் வைகை எக்ஸ்பிரஸ் வரும் பக்தர்கள் ஸ்ரீரங்கம் ெரயில் நிலையத்துக்கு நேரடியாக வந்து அங்கிருந்து கோவிலுக்கு எளிதில் செல்வார்கள்.

    பண்டிகை காலங்களிலும் இந்த ெரயில் வசதி மக்களுக்கு உபயோகம் உள்ளதாக இருக்கும். ஆகவே ஒரு தெற்கு ெரயில்வே நிர்வாகம் உடனடியாக இதனை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 25-ந்தேதி கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் 2 நிலைகளில் உள்ள கொடுங்கையின் மேற்கூரை பூச்சு இடிந்து விழும் நிலையில் விரிசல் ஏற்பட்டது.
    • விரிசல் விழுந்திருந்த கோபுரத்தின் கொடுங்கை நள்ளிரவில் இடிந்து விழுந்தது.

    திருச்சி:

    பூலோக வைகுண்டம் என்றும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் திகழ்கிறது. இங்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன. இதில் தற்போது பக்தர்கள் தரிசனம் செய்யும் ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது.

    தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 21 கோபுரங்களில் மற்றவை வண்ணமயமாய் காட்சி அளிக்க, ஒன்று மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

    இதில் கடந்த 25-ந்தேதி கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் 2 நிலைகளில் உள்ள கொடுங்கையின் மேற்கூரை பூச்சு இடிந்து விழும் நிலையில் விரிசல் ஏற்பட்டது.

    இதனால் அந்த கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும், மேற்கூரை பூச்சுகளும், அதனை தாங்கி நிற்கும் தூண்களும் இடிந்து எப்போது வேண்டுமானாலும் இடியும் அபாயம் இருந்தது.

    இந்த பகுதியை பக்தர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பயன்படுத்தி வந்தனர். கார்கள், ஆட்டோக்கள், பள்ளி வேன்கள் அவ்வழியாக சென்று வந்தன.

    இந்த நிலையில் தற்காலிகமாக கம்புகளைக் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டது. இருந்த போதிலும் ஒருவித அச்சத்துடன் அந்த பாதையை அனைவரும் பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் விரிசல் விழுந்திருந்த கோபுரத்தின் கொடுங்கை நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதில் அருகில் இருந்த மின் விளக்கு கம்பங்கள் சேதமடைந்தன. நள்ளிரவு ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இடிந்ததால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை.

    இடிந்து கீழே விழுந்த செங்கல் மற்றும் கொடுங்கையின் இடிபாடுகளையும், சேதம் அடைந்த மின் கம்பத்தையும் அங்கிருந்து அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோபுரத்தில் உள்ள கொடுங்கை இடிந்து விழுந்தது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆகவே கோபுரங்கள் மற்றும் மதில் சுவர்களை அவ்வப்போது ஆய்வு செய்து, பாராமரிப்பு பணிகளை மேற்கொண்டு புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் புனிதத்தை பாதுகாக்க வேண்டுமென பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் கூறும் போது,

    ரூ.98 லட்சம் செலவில் கொடுங்கை சரி செய்து கோபுரத்தை புனரமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும் என்றார்.

    • கடந்த சில தினங்களாக விரிசல் ஏற்பட்டு இருந்தன
    • நள்ளிரவு நடைபெற்றதால் சேதங்கள் தவிர்ப்பு

    ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு வாசலில் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை மற்றும் 2-வது நிலை சுவர்கள் சில தினங்களாக விரிசல் ஏற்பட்டு இருந்தன. விரிசல் அதிகமான நிலையில் முதல் நிலை கோபுரத்தின் சுவர் மளமளவென இடிந்து விழுந்தது. நள்ளிரவு 1.50 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    • பழுது பார்க்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
    • முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கட்டைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை சுற்றி சிறிய மற்றும் பெரிய கோபுரங்கள் பல உள்ளன. ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியையும், கீழ அடையவளஞ்சான் வீதியையும் இணைக்கும் சாலையில் கிழக்கு நுழைவு வாசலில் சிறிய கோபுரம் உள்ளது.

    இந்த கோபுரத்தில் கீழிருந்து ஒன்று மற்றும் இரண்டாவது நிலைகளில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே கோபுரத்திற்கு சேதம் ஏற்பட்டு மேலும் உடைந்து விழாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கட்டைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பழுது பார்க்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ள இடத்திலிருந்து சிறிதளவு செங்கல் கட்டுமானங்கள் நேற்று காலை கீழே விழுந்துள்ளன. இக்கோபுர வாசல் வழியாக தினமும் பொதுமக்கள் கடந்து செல்வதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறுவதற்கு முன் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது பற்றி கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போதைக்கு ஆபத்து ஏதுமில்லை. எனினும் ரூ.67 லட்சம் செலவில் இக்கோபுரத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடக்கிறது.
    • இந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து நாளை நடைபெறும் தேரோட்டத்தின்போது, தேரில் எழுந்தருளுவார்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலை தொடுக்கும் தொண்டு செய்து அவருக்கு மனைவியானாள். ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் இடையே சம்பந்தமும், உறவும், மங்கள பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் இருந்து வந்தது. எனினும் பல காரணங்களால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது.

    பின்னர் இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் மங்கள பொருட்கள் பரிவர்த்தனை நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல், பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட மங்கள சீர்வரிசை பொருட்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

    இதையொட்டி நேற்று மாலை 5 மணியளவில் பட்டு வஸ்திரங்கள், மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்கள பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் கோவில் ஊழியர் யானை மீது அமர்ந்து பட்டு வஸ்திரங்களை எடுத்து வர, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் மங்கள பொருட்களை கையில் ஏந்தியும், தலையில் சுமந்தும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    இன்று காலை 6 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினரால் இந்த மங்கள பொருட்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அக்கோவில் நிர்வாகத்தினரிடம் சமர்ப்பிக்கப்படும். இந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து நாளை நடைபெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தின்போது, தேரில் எழுந்தருளுவார்.

    • வஸ்திர மரியாதை பொருட்களை நேற்று இரவு திருப்பதிக்கு எடுத்து சென்றனர்.
    • நாளை ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை அளித்துவிட்டு ஸ்ரீரங்கம் திரும்புவார்கள்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஆகும். முன்பு மொகலாய மன்னர்களின் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உற்சவர் நம்பெருமாள் விக்ரகம், அவர்களிடம் கிடைக்காமல் இருக்க திருப்பதியில் 40 ஆண்டுகள் வைத்து பாதுகாக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆடி மாதம் 1-ந் தேதி வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதிக்கு எடுத்துச்செல்லப்படும் வஸ்திரங்கள், குடைகள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அனைத்தும் கோவிலில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    பின்னர் தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர் ஒரு தட்டை யானை மீது வைத்தும், மற்ற தட்டுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், கோவில் மணியக்காரர் உடையவர் ஸ்ரீதர், அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் கையில் எடுத்து கொண்டும் ஊர்வலமாக வலம் வந்து, மீண்டும் கோவிலுக்கு வந்தனர். பின்னா் வஸ்திர மரியாதை பொருட்களை நேற்று இரவு திருப்பதிக்கு எடுத்து சென்றனர். இவர்கள் ஆடி முதல் தேதியான நாளை(திங்கட்கிழமை) திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை அளித்துவிட்டு ஸ்ரீரங்கம் திரும்புவார்கள்.

    ×