என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீரங்கம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
- ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, செக் போஸ்ட் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
திருச்சி:
ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குட்பட்ட ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ஸ்ரீரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில்வே ஸ்டேஷன்ரோடு, கிழக்கு உத்திரவீதி, மேற்கு உத்திரவீதி,
வடக்கு உத்திரவீதி, தெற்கு உத்திரவீதி, வடக்கு சித்திரைவீதி, கிழக்கு சித்திரைவீதி, தெற்கு சித்திரைவீதி, மேற்கு சித்திரைவீதி, அடையவளஞ்சான் தெருக்கள், திருவானைக்காவல் பகுதி சன்னதிவீதி, சீனிவாசநகர், நரியன்தெரு, நெல்சன்ரோடு, அம்பேத்கார்நகர், பஞ்சக்கரை ரோடு, அருள்முருகன் கார்டன், ராகவேந்திராகார்டன், காந்திரோடு,
டிரங்க்ரோடு, சென்னை பைபாஸ்ரோடு, கல்லணைரோடு, கீழகொண்டையம்பேட்டை ஜம்புகேஸ்வரர்நகர், தாகூர்தெரு, திருவென்னைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, செக் போஸ்ட் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.






