search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவதிருப்பதி கோவில்கள்"

    • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களில் இன்று மாலை சுவாமி சயனக்கோலத்தில் எழுந்தருளிக்கிறார்.
    • இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான இன்று கள்ளப்பிரான் சயானக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    தென்திருப்பேரை:

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களில் இன்று மாலை சுவாமி சயனக்கோலத்தில் எழுந்தருளிக்கிறார். இரவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான்

    மார்கழி- திருஅத்யயன திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது. நவதிருப்பதி கோவில்களில் பரமபத வாசல் திறப்பு என்று அழைக்கப்படும். சொர்க்கவாசல் திறப்பு இன்று மாலை நிகழ்ச்சி நடைபெறும்.

    ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவில், தென்திருப்பேரை மகரநெடுகுழைகாதர் கோவில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் ஆகியவற்றில் பகல் பத்து திருவிழா, இராப்பத்து திருவிழா வருகிற 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் நடைபெறும் பகல் பத்து திருவிழா நாட்களில் தினமும் காலையில் சுவாமி எழுந்தருளலும், மாலை 6 மணிக்கு சேர்த்தியில் ராஜாங்கம், நவநீத கிருஷ்ணன், நாச்சியார் திருக்கோலம், மாரிசன் வதை, கஜேந்திர மோட்சம், கன்றுகொன்டு விளாகண்ணி எறிதல், கோபியர் துகில் பறித்தல், கோவர்த்தன கிரியை குடைபிடித்தல், வாமானா ஆவதாரம், ஆண்டாள் திருக்கோலங்களில் சுவாமி கள்ளப்பிரான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான இன்று காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை சுவாமி கள்ளப்பிரான் சயானக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    மாலை 7 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி, இரவு 10 மணிக்கு பக்தி உலா, படியேற்றம் கற்பூர சேவை நடைபெறுகிறது. இராப்பத்து திருவிழாவில் 2-ம் நாளில் இருந்து தினமும் இரவு 7 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு, பக்தி உலா, 9 மணிக்கு படியேற்றம் கற்பூர சேவை நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை

    இதேபோல் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை சுவாமி சயனதிருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இரவு 10.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தென்திருப்பேரை ஸ்ரீ மகரநெடுங்குழைக்காதர் கோவில் மார்கழி திரு அத்யயன உற்சவம் - திருவாய்மொழி முதல் திருநாள் மூத்த வேலியார் குடும்ப டிரஸ்டுக்கு பாத்தியப்பட்ட வைகுண்ட ஏகாதசி மண்டகப்படியின் சேஷ சயனம் மிக சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்க்கு கோவில் செயல் அலுவலர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் மூத்தவேலியார் குடும்ப டிரஸ்டு தலைவர் ரா.சுந்தர ராஜன், தோழப்பர் கண்ணன் சுவாமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    ×