search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்து வரி"

    • நகராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக உடனே நிலவையில் உள்ள வரித்தொகையினை அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
    • கடை வாடகை தொழில் உரிமை கட்டணம் ஆகிய அனைத்து தொகையை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி பொதுமக்கள் ஜப்தி நடவடிக்கைகளில் இருந்து மீளுவதற்கு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்துள்ளார்.

    வேதாரண்யம் நகராட்சியில் 2022-2023 ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய சொத்து வரி தொழில்வரி குடிநீர் கட்டணம் கடை வாடகை மற்றும் தொழில் உரிமை கட்டணம் ஆகியவற்றை உடனடியாக நகராட்சியில் இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும் வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. அதில் சுமார் 40,000 பொதுமக்கள் வசித்து வருகின்றனர் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி தெரு விளக்கு பொது சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது நகராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக உடனே நிலவையில் உள்ள வரித்தொகையினை அலுவலகத்தில் செலுத்த வேண்டும்

    வரிகளை செலுத்தவில்லை என்றால் பாக்கி வைத்துள்ளவரின் பெயர்கள் பொது இடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். எனவே உடனே வரி செலுத்தவும். வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும்.

    மேலும் ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை நகராட்சி நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்படும். நகராட்சி மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை கருத்தில் கொண்டு நகராட்சி செலுத்த வேண்டிய சொத்து வரி குடிநீர் கட்டணம் தொழில்வரி கடை வாடகை தொழில் உரிமை கட்டணம் ஆகிய அனைத்து தொகையை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா கேட்டுக் கொண்டுள்ளார்.

    • சென்னைக்கு அடுத்த படியாக திருச்சி மாநகராட்சியில் 42 சதவீத சொத்து வரி வசூலை நடப்பு மாத இரண்டாவது வாரத்திலேயே முடித்துள்ளனர்.
    • திருச்சி மாநகராட்சியில் வரி சீரமைப்புக்கு முன்பு சொத்து வரி ரூ. 61.2 கோடியாகவும், சீரமைப்புக்கு பின் ஒரு ரூ. 108.9 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

    திருச்சி,

    தமிழகத்தில் நகர்புறங்களில் சொத்து மற்றும் தண்ணீர் வரி சமீபத்தில் உயர்த்தப்பட்டது.

    திருச்சி மாநகராட்சி பகுதியிலும் இந்த வரி உயர்வு அமல்படுத்தப்பட்டது. 2022 -23 நிதி ஆண்டுக்கான சொத்து வரி வசூலில் திருச்சி மாநகராட்சி சாதனை படைத்துள்ளது. சென்னைக்கு அடுத்த படியாக திருச்சி மாநகராட்சியில் 42 சதவீத சொத்து வரி வசூலை நடப்பு மாத இரண்டாவது வாரத்திலேயே முடித்துள்ளனர்.

    திருச்சி மாநகராட்சி பொருத்தமட்டில் வரி சீரமைப்புக்கு பின் 2022 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2023 மார்ச் மாதத்திற்குள் நிலுவைத் தொகை உட்பட ரூ. 162 கோடி வசூலிக்க வேண்டும். இதில் தற்போது ரூ. 68 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

    அதே வேளையில் ஆவடி மாநகராட்சி 38 சதவீதமாகவும், கோவை மாநகராட்சி 35 சதவீதமாகவும், மதுரை மாநகராட்சி 33 சதவீதமாகவும், தாம்பரம் 32 சதவீதமாகவும் பின் தங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சென்னையில் நடந்த நகராட்சி நிர்வாக ஆய்வு கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

    திருச்சி மாநகராட்சியில் வரி சீரமைப்புக்கு முன்பு சொத்து வரி ரூ. 61.2 கோடியாகவும், சீரமைப்புக்கு பின் ஒரு ரூ. 108.9 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

    இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் வருவாய் ரமேஷ் குமார் கூறும் போது, சொத்துவரி செலுத்துமாறு அதன் உரிமையாளர்களுக்கு பில் கலெக்டர்கள் மூலம் நேரடியாக நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது. மேலும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒரு சில பொதுமக்கள் திருத்தி அமைக்கப்பட்ட சொத்து வரியை தாமாக முன்வந்தும் நிலுவையை செலுத்தியுள்ளனர்.

    மேலும் நிர்ணயிக்கப்பட்ட தொழில்வரி ரூ.9 கோடியில் 74 சதவீதமும், தண்ணீர் வரி ரூ. 25 கோடியில் 38 சதவீதமும், இதர வருவாயில் ரூ. 8.8 கோடியில் 37 சதவீதமும், பாதாள சாக்கடை டெபாசிட் தொகை ரூ. 10 கோடியில் 34 சதவீதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

    • ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார்.
    • ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சியில் ரூ.7 கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளதாகவும் பொதுமக்கள் வரி இனங்களை விரைவாக செலுத்தி, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பல்லடம் நகராட்சி 18 வார்டுகளில் 15,664 குடியிருப்புகள் 1,263 வணிக கட்டடங்கள், 546 தொழிற்கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளன. சொத்து வரி ரூ.2கோடியே99லட்சத்து 59 ஆயிரம், காலியிட வரி ரூ.5லட்சத்து65 ஆயிரம், தொழில் வரி ரூ.15லட்சத்து39 ஆயிரம், குடிநீர் கட்டணம் ரூ.1கோடியே63லட்சத்து12 ஆயிரம், கடை வாடகை ரூ.3கோடியே15லட்சத்து10 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    எனவே வரி இனங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்துக் கொள்ளுவதோடு, நகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து TN URBAN ESEVAI என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும் அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜன் பேட்டி
    • நாகராஜா திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி:

    சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜன் கன்னியாகுமரியில் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-

    சி.ஐ.டி.யூ. மாநாடு நடைபெறுவதையொட்டி நாகர்கோவிலில் இன்று மாலை ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் செஞ்சட்டை பேரணி நடைபெறுகிறது. வெட்டூர்ணிமடத்தில் இருந்து தொடங்கும் இந்த பேரணி நாகர்கோவில் நாகராஜா திடலை சென்றடைகிறது. பின்னர் நாகராஜா திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரியில் நடைபெற்ற சி.ஐ.டி.யூ.வின் 15-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மத்திய அரசு நமது சமூகத்தில்அமைதியையும்பொருளாதாரத்தையும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறது. பல தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன.

    குறிப்பாக சிறு தொழிற்சாலைகள் அதிக அளவில் மூடப்படுகின்றன. நமது பண மதிப்பு வீழ்ந்து கொண்டே இருக்கிறது. அன்னிய செலாவணி வீழ்ச்சி அடைகிறது. இவையெல்லாம் மிக மோசமான அறிகுறி. இலங்கையில் இருந்த அறிகுறி கள் இப்போது இந்தியாவில் இருப்பது தெளிவாக தெரிகிறது. இது அபாயகரமானது என்று மத்தியஅரசை எச்சரிக்கிறோம். மத்திய அரசாங்கம் தன்னுடைய கொள்கைகளில் உடனடி யாக மாற்றம் செய்ய வேண் டும் என்று வலியுறுத்து கிறோம்.

    நவீன தொழிற்சாலை களில் செயற்கை மூளை, ரோபோக்கள் ஆகியவற்றை பயன்படுத்துவது அதிகரித்த காரணத்தினால் இருக்கிற வேலையும் பறிபோகிறது. உண்மைகளை மறைக்க கடுமையாக பொய் சொல்கி றார்கள். ஏன் ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டது என்று கேட்டால் ரூபாய் மதிப்பு குறையவில்லை டாலர் மதிப்பு கூடி விட்டது என்று நிர்மலா சீத்தாராமன் கூறுவதுபோல ஏராளமாக கூறுகிறார்கள்.

    மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்க வில்லை. கல்வியில், சுகா தாரத்தில் என எல்லா வற்றிலும் தலையிடுகிறார் கள். அதே நேரத்தில் அவர்கள் மக்கள் மத்தியில் சாதி, மதம், மொழியைச் சொல்லி மடைமாற்றம் செய்கிறார்கள். தமிழ்நாட் டில் இந்தி திணிப்பு, அதை யொட்டி இங்கு எழும் எதிர்ப்பு இந்த பிரச்சனைகள் தான் விவாதத்துக்கு வர வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது.

    மத்திய அரசு நமக்கு தரவேண்டிய பணத்தை தராமல் இருப்பது போன்ற வை விவாதத்துக்கு வரக்கூ டாது என்று நினைக்கி றார்கள். அதற்கு ஏற்ப பல்வேறு சதிகளை செய்கி றார்கள். கேரளத்திலும் இதை தான் செய்கிறார்கள். இது ஒருபக்கம் என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தேர்தல் அறிக் கையில் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தி ருந்தார்கள்.

    அந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேறவில்லை.அரசாங்கத்தின் செயல் எங்களுக்கு திருப்தி அளிக்க விலலை என தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். போக்கு வரத்தில் கடந்த ஆட்சியிலிருந்து இதுவரை 85 மாதங்களாக பஞ்சப்படி பாக்கி வைக்கப்பட்டுள்ளது. அதை கொடுப்போம் என்று சொன்னார்கள் அதை கொடுக்கவில்லை.

    பழைய ஓய்வூதியம் ஆட்சிக்கு வந்தால் கொடுப்போம் என்றார்கள். ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கொடுத்து விட்டார்கள். 10 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் ஒரு தொழிலாளி அரசுத்துறையில் பணி யாற்றி இருந்தால் நிரந்தப்ப டுத்துவதாக சொன் னார்கள் செய்யவில்லை. அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களை கால முறை ஊதியத்துக்கு கொண்டு வருவோம் என்று சொன்னார்கள் செய்ய வில்லை.

    தொழிற்சங்கம் அமைக் கும் உரிமையே கேள்விக் குள்ளாகிறது. இதுபோன்ற பிரச்சனைகளில் அர சாங்கம் தலையிட்டு முடி வுக்கு கொண்டு வர வேண்டும். தொழிலாளி கள் அவர்க ளது உரி மையை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். அதைக் கெடுக்க முத லாளிகள் முற்பட்டால் அதில் அரசாங்கம் தலை யிட வேண்டும் என்பது எங்களது ஒரு கோரிக்கை.

    மின்சார கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டதை நாங்கள் கடுமையாக ஆட்சேபிக்கிறோம். சொத்து மதிப்புகள் அவர் கள் போட்டிருக்கும் வரி மிகவும் மோசமானது. சென்னை போன்ற நகரங் களில் தண்ணீர் கட்ட ணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறார்கள். இவையெல்லாம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது என்பதை மாநில அரசு புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நீட், மொழி, மாநில உரிமை போன்றவற்றில் மத்திய அரசு நடவடிக்கைக்கு எதிரான மாநில அரசின் நிலைபப்பாட்டுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.

    மின்சார சட்டம் 2003-இன் படி கட்டணத்தை உயர்த்தாவிட்டால் கடன்தர மாட்டேன் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது என்கிறார்கள். பல விசயங் கில் அப்படி கட்டாயப்ப டுத்துவார்கள் அது மக்க ளை பாதிக்குமா இல்லையா என்பதிலிருந்து மாநில அரசு முடிவு செய்ய வேண்டும். கட்டண உயர்வு அவசிய மற்றது செய்திருக்க கூடாது.

    அரசாங்கம் இதற்கு வேறு வழிகளை தேட வேண்டுமே தவிர மக்களிட மிருந்து வசூலிக்க கூடாது. உயர்வு கடுமையாகவும் இருக்கிறது. சொத்து வரி 150 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. ரூ.4 ஆயிரத்திற்கு பதிலாக இப்போது ரூ.27 ஆயிரம் கட்ட வேண்டும். ஆகவே இந்த பிரச்சனையில் அர சாங்கம் சற்று கனிவொடு பரிசீலிக்க வேண்டும். ஏழை மக்களை பாதிப்பிலிருந்து விடுவிக்கிற அளவுக்கு நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 15.10.2022-க்குள் சொத்துவரி செலுத்தியவர்களுக்கு ரூ.4.67 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
    • தாமதமாக செலுத்தும் சொத்துவரிக்கு கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்த வேண்டும்.

    சென்னை :

    சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சி சட்ட விதிகளின்படி, ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 நாட்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, செலுத்தப்படும் சொத்து வரியில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

    2022-23ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்துவரி சீராய்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது 2-ம் அரையாண்டுக்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் கடந்த 1-ந்தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. 18-ந்தேதி வரை 5.17 லட்சம் சொத்து உரிமையாளர்கள் நிலுவை இல்லாமல் சொத்து வரியை செலுத்தி உள்ளனர்.

    2-ம் அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் அதாவது 15.10.2022-க்குள் சொத்துவரி செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு ரூ.4.67 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி சட்ட விதிப்படி, தாமதமாக சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி, அதாவது அபராதத்துடன் சேர்த்து செலுத்த வேண்டும். எனினும், சொத்துவரி சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்துவரியை இதுவரை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி மதிப்பீட்டிற்குரிய உயர்த்தப்பட்ட சொத்துவரியை தனிவட்டி இல்லாமல் செலுத்துவதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    எனவே, சொத்துவரி சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்துவரியை இதுவரை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதிக்குள் சொத்து வரியை செலுத்தி 2 சதவீத தனிவட்டியை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்டம் முழுவதும் சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கிறது. தமிழகத்தில் ஜல்லி, மணல், கட்டுமான பொருட்கள் கிடைக்க வில்லை
    • எங்கு பார்த்தாலும் திருட்டு சம்பவம், கஞ்சா வியாபாரம், கொலை, சாதாரணமாக நடைபெறுறது

    கன்னியாகுமரி :

    அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஆரல்வாய் மொழி நகர பூங்காவில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் மகராஜபிள்ளை தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம், பொன். சுந்தர்நாத், வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவரும், அ.தி.மு.க. பேரூர் செயலாளருமான முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.

    அ.தி.மு.க பேச்சாளர்கள் பொன்ஸ்ரீராம், ஜீவா கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரன் உள்பட பலர் உரையாற்றினர். கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மாவட்டம் முழுவதும் சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கிறது. தமிழகத்தில் ஜல்லி, மணல், கட்டுமான பொருட்கள் கிடைக்க வில்லை. எங்கு பார்த்தாலும் திருட்டு சம்பவம், கஞ்சா வியாபாரம், கொலை, சாதாரணமாக நடைபெறுறது. இதுதான் இந்த ஆட்சியின் சாதனை.

    ஆரல்வாய்மொழியில் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுபாஷ் நகர் ரெயில்வே பாலம் பணி முடங்கிபோய் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். மக்களை பாதிக்கும் வகையில் சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வு மேலும் பொதுமக்களை வேதனைக்குள்ளாக்குகிறது. ஏழைகளை பற்றி சிந்திக்காத அரசாங்கம், இந்த அரசாங்கம்.

    மண் எடுக்க தடையினால் செங்கல்சூளை தொழில் முடங்கி தொழிலாளர்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கீரிப்பாறை ரப்பர் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு இன்னும் கிடைக்க வில்லை. வீடுகளில் உறிஞ்சி குழி வைக்க வேண்டுமாம். எங்கே போய் வைப்பது. மொத்தத்தில் 1½ ஆண்டில் தி.மு.க. அரசு தன் செயல்பாட்டினால் மக்களின் வெறுப்பை சம்பாதித்து விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் யூனியன் துணைத்தலைவர் லாயம் ஷேக், பேரூர் இணை செயலாளர் பேச்சியம்மாள், துணை செயலாளர் சுதா பாலகிருஷ்ணன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் தர்மர், நகர துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் சங்கரலிங்கம், சுந்தரம்பிள்ளை, இசக்கியப்பன், கச்சேரி நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண் டனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னோடிகள் 21 பேருக்கு அண்ணா விருது வழங்கப்பட்டதோடு அவர்களுக்கு கேடயமும் வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் கவுரவிக்கப்பட்டனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் சுடலையாண்டி நன்றி கூறினார்.

    • சொத்து வரி உயர்த்தப்படும் போது அதன் அடிப்படையில் குடிநீர் வரியும் உயர்த்தப்படுவது வழக்கம்.
    • சொத்தின் ஆண்டு மதிப்பை கணக்கிட்டு 30 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கு சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்டது. இதற்கு மாநகராட்சி மன்ற ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை நகரின் பழைய பகுதிகளுக்கு சொத்து வரி அதிகமாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குறைவாகவும் சொத்துவரி உயர்த்தப்பட்டது. ஆண்டு மதிப்பு மற்றும் சொத்து அமைந்து உள்ள தெருவின் மதிப்பு அடிப்படையில் சொத்து வரி உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதல்-அரையாண்டுக்கான சொத்து வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஏப்ரல்-செப்டம்பர் மாதத்திற்கான சொத்துவரி இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். சென்னையில் 12½ லட்சம் சொத்துவரி உரிமையாளர்கள் உள்ளனர்.

    சொத்துவரியை தொடர்ந்து மின்கட்டணமும் உயர்த்தப்பட்டது. அவை இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வருகின்றது.

    இந்த நிலையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியும் 7 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. சொத்து வரி உயர்த்தப்படும் போது அதன் அடிப்படையில் குடிநீர் வரியும் உயர்த்தப்படுவது வழக்கம். சொத்தின் ஆண்டு மதிப்பை கணக்கிட்டு 30 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது.

    இதில் 23 சதவீதம் சொத்துவரியாக மாநகராட்சி வசூலிக்கிறது. 7 சதவீதம் குடிநீர் வரியாக சென்னை குடிநீர் வாரியம் வசூலிக்கிறது. குடிநீர் வரி உயர்வும் கடந்த ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது.

    எப்போதெல்லாம் சொத்து வரி உயர்த்தப்படுகிறதோ அப்போது குடிநீர் வரியும் உயரும் என்று குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 7.75 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. சொத்துவரி உயர்த்தப்பட்ட அளவில் 7 சதவீதம் குடிநீர் வரி வசூலிக்கப்படும்.

    உதாரணத்துக்கு ஒருவருக்கு சொத்துவரி ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்ந்து இருக்குமானால் உயர்த்தப்பட்ட ரூ.500-க்கு 7 சதவீதம் குடிநீர் வரி உயர்வு கணக்கிடப்படும். இது வழக்கமான நடைமுறை தான். கடந்த 10 வருடத்திற்கு மேலாக குடிநீர் வரி உயர்த்தப்படவில்லை.

    2022-23 நடப்பு ஆண்டிற்கான முதல் அரையாண்டு குடிநீர் வரி தற்போது வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.120 கோடி வருவாய் கூடுதலாக கிடைக்கும்.

    உயர்த்தப்பட்ட குடிநீர் வரி குறித்து தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினர்.

    • சொத்து வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்திட வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    • இதுவரை சுமார் 11 லட்சத்து 58 ஆயிரத்து 79 சொத்து உரிமையாளர்களுக்கு சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாநகராட்சி மன்றத் தீர்மானத்தின் அடிப்படையில், 2022-23-ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டு சொத்துவரி பொது சீராய்வானது மேற்கொள்ளப்பட்டது. சொத்துவரி பொது சீராய்வு அறிவிப்புகள் தபால்துறை மூலமாக சொத்து உரிமையாளர்களின் முகவரி சரிபார்க்கப்பட்டு வருகிறது.

    இதுவரை சுமார் 11 லட்சத்து 58 ஆயிரத்து 79 சொத்து உரிமையாளர்களுக்கு சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இதுவரை சொத்து உரிமையாளர்கள் 5.75 லட்சம் பேர் ரூ.472.88 கோடி சொத்துவரியை செலுத்தியுள்ளனர்.

    சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்ட வரியை கணக்கீட்டு அறிய ஏதுவாக, ஏற்கனவே மாநகராட்சியின் https://erp.chennaicorporation.gov.in/ptis/citizen/revisionNoticeOne!generateReport.action என்ற இணையதள இணைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் சொத்துவரி எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் முதலிய விவரங்களை பதிவு செய்து கணக்கீட்டு விவரத்தினை அறிந்து கொள்ளலாம்.

    தற்போது, சொத்துவரி பொது சீராய்வின்படி, குறிப்பிட்ட தெருவுக்கு சதுரடி அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரி விவரம் அறிவதற்கு மாநகராட்சியின் https://erp.chennaicorporation.gov.in/ptis/citizen/citizenCalc.action என்ற இணையதள இணைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்துவரி விவரத்தை அறிந்து கொள்ளலாம்.

    மேலும், சொத்துவரி பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரி தொடர்பாக எழும் சந்தேகங்கள், கணக்கீட்டு விவரம் குறித்து தெளிவு பெறுவதற்கு மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் தனி கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    எனவே சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி தொடர்பான, சந்தேகங்கள், கணக்கீட்டு விவரம் ஆகியவை குறித்து தெளிவு பெற, மாநகராட்சியின் மண்டலங்களில் அமைந்துள்ள கவுண்ட்டர்களில் பணியாற்றும் பணியாளர்களிடம் நேரில் சென்று, தங்களது சொத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்துவரி குறித்த விவரத்தை அறிந்து கொள்ளலாம்.

    சென்னை மாநகராட்சி இணையதளம், செல்போன் செயலி மூலமாக சொத்துவரி செலுத்தும்போது ஏதேனும் குறைபாடுகள் ஏற்படின் வரி செலுத்துவோர் மாநகராட்சியின் '1913' என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பதிவு செய்யலாம். அதனடிப்படையில் தீர்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை வருகிற 30-ந்தேதிக்குள் செலுத்தி, வட்டி விதிப்பை தவிர்க்குமாறும், மாநகராட்சி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சொத்துவரி, தொழில்வரி இந்த மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் அவர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தொடர் நோட்டீசுக்கு விளக்கம் தராமல் இருந்து வரும் உரிமையாளர்களின் சொத்து சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். குடியிருப்பு வீடுகளாகவும் வணிக பகுதியாகவும் இவை கணக்கிடப்படுகிறது. சொத்து வரி ஆண்டுக்கு இருமுறை அரையாண்டு வீதம் வசூலிக்கப்படுகிறது.

    சொத்துவரி உயர்த்தப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய சொத்து வரி மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1200 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த வகையில் சொத்து வரியை வசூலிக்க வருவாய் துறை ஊழியர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    முதல் அரையாண்டு காலம் இந்த மாதத்துடன் முடிவதால் ரூ.700 கோடி வசூலிக்க வேண்டும். ஆனால், இதுவரையில் ரூ.490 கோடி தான் வசூல் ஆகி இருப்பதாக வருவாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்னும் ரூ.210 கோடி வசூலிக்க வேண்டிய நிலையில் இலக்குடன் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. புதிய சொத்துவரி மட்டுமல்லாமல் ஏற்கனவே செலுத்தாமல் நிலுவையில் உள்ள சொத்து வரியையும் செலுத்த உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    சொத்துவரி செலுத்தாமல் இருந்து வரும் உரிமையாளர்கள் மீது சீல் வைப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல தொழில் வரி செலுத்தவும் இந்த மாதம் வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தொழில் வரியாக ரூ.250 கோடி வசூலிக்க வேண்டும்.

    தொழில் செய்யக் கூடிய நிறுவனங்கள், தொழில் வரி செலுத்த வேண்டும். அதற்கான காலக்கெடுவும் இம்மாதத்துடன் முடிவதால் அதனையும் வசூலிக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சொத்துவரி, தொழில்வரி இந்த மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் அவர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் நோட்டீசுக்கு விளக்கம் தராமல் இருந்து வரும் உரிமையாளர்களின் சொத்து சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.
    • பொதுமக்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டு அவை கடிதங்களாக பெறப்பட்டன.

    பல்லடம் :25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.

    தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரி சீராய்வு செய்யப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதன்படி நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகள், கடைகள் உள்ளிட்டவற்றுக்கு 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது.பல்வேறு தரப்பினரும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.

    இது குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டு அவை கடிதங்களாக பெறப்பட்டன. சொத்து வரி உயர்வு தொடர்பாக நகராட்சி கூட்டத்திலும் ஆலோசிக்கப்பட்டு, எதிர்ப்புகளுக்கு இடையே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சொத்து வரி உயர்த்துவதற்கான கட்டடங்களின் நீள, அகலம், உயரம் உள்ளிட்டவை அளவீடு செய்யும் பணி நடந்தது. இதையடுத்து, புதிய வார்டுக்கு மாற்றம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. சீராய்வு செய்யப்பட்ட சொத்து வரி வசூல் செய்யும் பணி, கடந்த 2 மாதங்களுக்கு நிறுத்தப்பட்டிருந்தது.தற்போது புதிய உயர்த்தப்பட்ட சொத்து வரி வசூல் செய்யும் பணி துவங்கியுள்ளது. புதிய சொத்து வரி, பெயர் மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளையும் இனி மேற்கொள்ளலாம் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • சொத்து வரி விதிப்பை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
    • சொத்து வரியை எந்த காரணம் கொண்டும் குறைக்கப்போவதில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் சூசகமாக தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் சொத்துவரியை வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சீரமைக்கப்பட்ட சொத்துவரி பற்றி வீட்டின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னையில் சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சொத்துவரி குறித்த அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    சொத்துவரி மிக அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி கூறி இருந்தது. அதன்படி சுமார் 4 ஆயிரம் பேர் சென்னை மாநகராட்சியில் கடிதம் கொடுத்தனர்.

    என்றாலும் சொத்து வரி விதிப்பை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சொத்து வரியை எந்த காரணம் கொண்டும் குறைக்கப்போவதில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் சூசகமாக தெரிவித்துள்ளனர். அதிருப்தியில் இருப்பவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

    இதற்கிடையே சொத்து வரியை நீண்ட நாட்களுக்கு நிலுவையில் வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது புதிய அதிரடி நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி சொத்து வரியை நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருக்கும் வீடுகளை சீல் வைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.

    அதற்கு முன்னதாக வரி நிலுவையில் உள்ள கட்டிடங்களுக்கு 3 முறை நோடடீஸ் வழங்கி, 6 மாதம் அவகாசம் கொடுக்கப்படும். வீட்டு உரிமையாளர்களே வீட்டை அளந்து வரி விதிப்பு பற்றி தெரிவிக்கலாம். இதில் அலட்சியம் காட்டினால் வீடு சீல் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    சென்னையில் சொத்து வரியை முழுமையாக வசூல் செய்தால் ஆண்டுக்கு சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,400 கோடி வருமானம் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. உயர்த்தப்பட்ட சொத்துவரி முழுமையாக வசூலிக்கப்பட்டால் சென்னை மாநகராட்சிக்கு மேலும் பல நூறு கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

    இதைக் கருத்தில் கொண்டு சொத்து வரி எவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது என்பதை ஆன்லைன் மூலம் சென்னை மாநகராட்சி வழங்கி வருகிறது.

    • சொத்து வரி உயர்வு அதிகமாக இருப்பதாக கூறி 3,552 புகார்கள் மாநகராட்சிக்கு இதுவரையில் வந்துள்ளன.
    • அதற்கு உரிய விளக்கத்தை அதிகாரிகள் இன்று முதல் அளிக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து உயர்த்தப்பட்டது. 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை பல்வேறு வகையாக பிரித்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை நகரின் பழைய பகுதிகளுக்கு அதிகமாவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குறைந்த விகிதத்திலும் ஒவ்வொரு தெருக்களின் மதிப்பு அடிப்படையில் சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சொத்து வரி எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே செலுத்தப்பட்ட சொத்து வரி எவ்வளவு போன்ற விவரங்கள் ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    சொத்து வரி செலுத்தக்கூடிய 13 லட்சம் பேருக்கு சொத்து வரி உயர்வு விளக்க நோட்டீஸ் கடந்த மாதம் முதல் தபால் மூலம் அனுப்பப்படுகிறது. இருப்பினும் சொத்து வரி உயர்வு அதிகமாக இருப்பதாக கருதினால் மாநகராட்சி ஆணையரிடம் முறையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் சொத்து வரி உயர்வு அதிகமாக இருப்பதாக கூறி 3,552 புகார்கள் மாநகராட்சிக்கு இதுவரையில் வந்துள்ளன. அதற்கு உரிய விளக்கத்தை அதிகாரிகள் இன்று முதல் அளிக்கிறார்கள்.

    மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி அறிவுறுத்தலின் பேரில் மண்டல துணை கமிஷனர்கள் சொத்து வரி புகாருக்கு உரிய விளக்கத்தை ஆன்லைன் வழியாக வழங்குகிறார்கள்.

    இதுகுறித்து மாநகராட்சி துணை கமிஷனர் விஷ்ணு மகாஜன் கூறியதாவது:-

    சொத்து வரி உயர்வு அதிகமாக இருப்பதாக பல புகார்கள் வந்துள்ளன. சொத்து வரியை நாங்கள் குறைக்க முடியாது. அரசின் உத்தரவை தொடர்ந்து சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சி மன்ற கூட்டத்திலும் சொத்துவரி உயர்வுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. சொத்துவரி எவ்வாறு கணக்கிடப்பட்டது என்ற விவரத்தை ஆன்லைன் வழியாக கொடுக்கிறோம். நியாயமான புகார்களுக்கு தகுந்த விளக்கங்கள் தரப்படுகின்றன.

    ஆன்லைன் வழியாக சொத்துவரி புகார் கொடுத்தவர்களுக்கு உயர்வு விளக்கம் கூற தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கார சென்னையாக மாற்ற சொத்துவரியை குறித்த காலத்தில் செலுத்தி உதவிட வேண்டும். சொத்து வரியை முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு சினிமா டிக்கெட், கேஷ்பேக் சலுகை வழங்குகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநகராட்சிக்கு பெறப்பட்ட புகார்களால் அதிகமாக அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், திரு.வி.க.நகர், அம்பத்தூரில் இருந்து வந்துள்ளது. மத்திய சென்னையில் இருந்து 1986 புகார்களில் 221-ல் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

    வடசென்னை பகுதியில் இருந்து பெறப்பட்ட 668 புகாரில் 10 மட்டுமே சரி செய்யப்பட்டுள்ளது. தென் சென்னையில் இருந்து பெற்ற 878 மனுக்களில் 94-க்கு மட்டும் தீர்வு காணப்பட்டுள்ளது.

    ×