search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன்மை"

    • சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜன் பேட்டி
    • நாகராஜா திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி:

    சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜன் கன்னியாகுமரியில் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-

    சி.ஐ.டி.யூ. மாநாடு நடைபெறுவதையொட்டி நாகர்கோவிலில் இன்று மாலை ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் செஞ்சட்டை பேரணி நடைபெறுகிறது. வெட்டூர்ணிமடத்தில் இருந்து தொடங்கும் இந்த பேரணி நாகர்கோவில் நாகராஜா திடலை சென்றடைகிறது. பின்னர் நாகராஜா திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரியில் நடைபெற்ற சி.ஐ.டி.யூ.வின் 15-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மத்திய அரசு நமது சமூகத்தில்அமைதியையும்பொருளாதாரத்தையும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறது. பல தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன.

    குறிப்பாக சிறு தொழிற்சாலைகள் அதிக அளவில் மூடப்படுகின்றன. நமது பண மதிப்பு வீழ்ந்து கொண்டே இருக்கிறது. அன்னிய செலாவணி வீழ்ச்சி அடைகிறது. இவையெல்லாம் மிக மோசமான அறிகுறி. இலங்கையில் இருந்த அறிகுறி கள் இப்போது இந்தியாவில் இருப்பது தெளிவாக தெரிகிறது. இது அபாயகரமானது என்று மத்தியஅரசை எச்சரிக்கிறோம். மத்திய அரசாங்கம் தன்னுடைய கொள்கைகளில் உடனடி யாக மாற்றம் செய்ய வேண் டும் என்று வலியுறுத்து கிறோம்.

    நவீன தொழிற்சாலை களில் செயற்கை மூளை, ரோபோக்கள் ஆகியவற்றை பயன்படுத்துவது அதிகரித்த காரணத்தினால் இருக்கிற வேலையும் பறிபோகிறது. உண்மைகளை மறைக்க கடுமையாக பொய் சொல்கி றார்கள். ஏன் ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டது என்று கேட்டால் ரூபாய் மதிப்பு குறையவில்லை டாலர் மதிப்பு கூடி விட்டது என்று நிர்மலா சீத்தாராமன் கூறுவதுபோல ஏராளமாக கூறுகிறார்கள்.

    மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்க வில்லை. கல்வியில், சுகா தாரத்தில் என எல்லா வற்றிலும் தலையிடுகிறார் கள். அதே நேரத்தில் அவர்கள் மக்கள் மத்தியில் சாதி, மதம், மொழியைச் சொல்லி மடைமாற்றம் செய்கிறார்கள். தமிழ்நாட் டில் இந்தி திணிப்பு, அதை யொட்டி இங்கு எழும் எதிர்ப்பு இந்த பிரச்சனைகள் தான் விவாதத்துக்கு வர வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது.

    மத்திய அரசு நமக்கு தரவேண்டிய பணத்தை தராமல் இருப்பது போன்ற வை விவாதத்துக்கு வரக்கூ டாது என்று நினைக்கி றார்கள். அதற்கு ஏற்ப பல்வேறு சதிகளை செய்கி றார்கள். கேரளத்திலும் இதை தான் செய்கிறார்கள். இது ஒருபக்கம் என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தேர்தல் அறிக் கையில் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தி ருந்தார்கள்.

    அந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேறவில்லை.அரசாங்கத்தின் செயல் எங்களுக்கு திருப்தி அளிக்க விலலை என தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். போக்கு வரத்தில் கடந்த ஆட்சியிலிருந்து இதுவரை 85 மாதங்களாக பஞ்சப்படி பாக்கி வைக்கப்பட்டுள்ளது. அதை கொடுப்போம் என்று சொன்னார்கள் அதை கொடுக்கவில்லை.

    பழைய ஓய்வூதியம் ஆட்சிக்கு வந்தால் கொடுப்போம் என்றார்கள். ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கொடுத்து விட்டார்கள். 10 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் ஒரு தொழிலாளி அரசுத்துறையில் பணி யாற்றி இருந்தால் நிரந்தப்ப டுத்துவதாக சொன் னார்கள் செய்யவில்லை. அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களை கால முறை ஊதியத்துக்கு கொண்டு வருவோம் என்று சொன்னார்கள் செய்ய வில்லை.

    தொழிற்சங்கம் அமைக் கும் உரிமையே கேள்விக் குள்ளாகிறது. இதுபோன்ற பிரச்சனைகளில் அர சாங்கம் தலையிட்டு முடி வுக்கு கொண்டு வர வேண்டும். தொழிலாளி கள் அவர்க ளது உரி மையை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். அதைக் கெடுக்க முத லாளிகள் முற்பட்டால் அதில் அரசாங்கம் தலை யிட வேண்டும் என்பது எங்களது ஒரு கோரிக்கை.

    மின்சார கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டதை நாங்கள் கடுமையாக ஆட்சேபிக்கிறோம். சொத்து மதிப்புகள் அவர் கள் போட்டிருக்கும் வரி மிகவும் மோசமானது. சென்னை போன்ற நகரங் களில் தண்ணீர் கட்ட ணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறார்கள். இவையெல்லாம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது என்பதை மாநில அரசு புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நீட், மொழி, மாநில உரிமை போன்றவற்றில் மத்திய அரசு நடவடிக்கைக்கு எதிரான மாநில அரசின் நிலைபப்பாட்டுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.

    மின்சார சட்டம் 2003-இன் படி கட்டணத்தை உயர்த்தாவிட்டால் கடன்தர மாட்டேன் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது என்கிறார்கள். பல விசயங் கில் அப்படி கட்டாயப்ப டுத்துவார்கள் அது மக்க ளை பாதிக்குமா இல்லையா என்பதிலிருந்து மாநில அரசு முடிவு செய்ய வேண்டும். கட்டண உயர்வு அவசிய மற்றது செய்திருக்க கூடாது.

    அரசாங்கம் இதற்கு வேறு வழிகளை தேட வேண்டுமே தவிர மக்களிட மிருந்து வசூலிக்க கூடாது. உயர்வு கடுமையாகவும் இருக்கிறது. சொத்து வரி 150 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. ரூ.4 ஆயிரத்திற்கு பதிலாக இப்போது ரூ.27 ஆயிரம் கட்ட வேண்டும். ஆகவே இந்த பிரச்சனையில் அர சாங்கம் சற்று கனிவொடு பரிசீலிக்க வேண்டும். ஏழை மக்களை பாதிப்பிலிருந்து விடுவிக்கிற அளவுக்கு நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×