search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஸ்"

    • ரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த செஸ் போட்டியில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.
    • இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடா சலம் எம்.எல்.ஏ. பரிசு வழங்க உள்ளார்.

    ஈரோடு:

    சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500- க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ -மாணவிகளுக்கு தனி தனியே செஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தனர்.

    பள்ளிகளுக்கு இடையே நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவிலான போட்டி இன்று நடந்தது. இதில் ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த செஸ் போட்டியில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.

    இதேப்போல் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பர்கூர், தவிட்டுப்பாளையம், அத்தாணி, பச்சாம்பாளையம், சங்கரா பாளையம், எண்ணமங்கலம், சின்னத்தம்பி பாளையம் உள்ளிட்ட 55 அரசு பள்ளியில் பயிலும் 200 மாணவ-மாணவிகள் பங்கு பெறும் சதுரங்க போட்டி இன்று காலை 10 மணி அளவில் நடந்தது.

    இதில் முதன்மை நடுவர் ராமசாமி மேற்பார்வையில் ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன்.பவானி மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி, அந்தியூர் வட்டார கல்வி அலுவலர்கள் மாதேஷா முருகன் மற்றும் டி.ஐ. மோகன்குமார் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார மேற்பார்வையாளர் (பொறுப்பு) லிங்கப்பன்,

    அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பானுமதி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி, உடற்கல்வி ஆசிரியர்கள் திருமா வளவன், ஜெயந்தி மற்றும் உடற்கல்விஆசிரியர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவி களுக்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடா சலம் எம்.எல்.ஏ. பரிசு வழங்க உள்ளார்.

     நெரிஞ்சிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோபிசெட்டிபாளையத்தில் வெள்ளாங்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, டி.என்.பாளையத்துக்கு பங்களாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார செஸ் போட்டி நடந்தது.

    இதேபோல் நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி, சத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கொடுமுடிக்கு சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சென்னிமலைக்கு ஈங்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இன்று வட்டார செஸ் போட்டி நடந்தது.

    இதில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் வரும் 25-ந் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

    • இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.
    • இப்போட்டி வருகிற 28-ந்தேதி முதல் முதல் 10-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

    நாமக்கல்:

    இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி வருகிற 28-ந்தேதி முதல் முதல் 10-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

    இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த ஸ்டிக்கர்களால் அலங்கரிக்ப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

    கே.ஆர்.பி மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி, எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி, செல்வம் கல்லூரி, காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாரதி மேல்நிலைப்பள்ளி, செல்வம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்களில் 44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த தகவல்கள் அடங்கிய ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    • சேலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன.
    • மாணவ- மாணவிகளும் இப்போட்டியில் பங்கேற்க–லாம் என்று மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    சென்னை மகாபலிபுரத்தில் வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதற்காக 100 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பார்வையிடுவதற்காக தமிழகம் முழுவதும் இளம் வீரர் வீராங்கனைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி சேலம் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் வருகிற 25,26 ஆகிய தேதிகளில் சேலம் உடையாப்பட்டி நோட்டரி டாம் ஹோலிகிராஸ் பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    25-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு போட்டிகள் தொடங்க உள்ளன 9 சுற்றுகளின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறவுள்ளன. 15 வயதிற்கு உட்பட்டோருக்கு மட்டும் போட்டிகள் நடைபெற உள்ளன. மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளும் இப்போட்டியில் பங்கேற்கலாம் என்று மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இப்போட்டிகளில் வெற்றி பெறும் இளம் வீரர் வீராங்கனைகளுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. மேலும் முதலிடம் பெறும் வீரர், வீராங்கனை, மகாபலிபுரத்தில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை நேரில் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நட்சத்திர விடுதிகளில் தங்கும் இடம், உணவு, மற்றும் பயணச் செலவுகள் சதுரங்க கழகத்தின் சார்பில் செய்யப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இது தொடர்பான போட்டி அட்டவணை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பட்டுள்ளது.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி வருகிற 25,26-ந் தேதிகளில் நடக்கிறது.
    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைக்கிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வரலாற்றில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் எனப்படும் பிரமாண்டமான 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1800-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்டு 10 வரை நடைபெற இருக்கிறது.

    வரலாற்று சிறப்பு மிக்க போட்டி என்பதால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 15 வயதிற்குட்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் விருதுநகர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிசிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வருகிற ஜூன் 25,26 தேதிகளில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியை சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், காளீஸ்வரி கல்லூரியின் செயலாளர் ஏ.பி. செல்வராஜன் ஆகியோர் முன்னிலையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைக்கிறார்.

    இதில் முதலிடம் பெறும் மாணவர் மற்றும் மாணவியரை தேர்வு செய்து 44-வது ஒலிம்பியாட் போட்டியை நேரில் கண்டுகளிக்க தமிழக அரசு மற்றும் அணைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பு செலவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் 25 மாணவர்களுக்கும், 25 மாணவிகளுக்கும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட உள்ளது. மேலும் 8வயது, 11 வயதிற்குட்பட்ட 3 சிறுவர், சிறுமியருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 3 வெகு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

    இந்த போட்டியில் பங்குபெற நுழைவு கட்டணம் இல்லை. அனைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பில் பதிவு செய்திருந்த அனைவரும் கலந்து கொள்ளலாம். பதிவு செய்ய இன்று (22-ந் தேதி) கடைசி நாள் ஆகும். போட்டியில் பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் கணேஷ்பாண்டி (98437 57767), இன்பராஜலிங்கம் (70106 56213) ஆகியோரது கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல்வர் ஸ்டாலின் குதிரை உருவம் கொண்ட சின்னம் ஒன்றையும் வெளியிட்ட அவர், அதற்கு ‘தம்பி’ என பெயர் வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் வரும் ஜூலை 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    சென்னை:

    நார்வே செஸ் தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் கிளாசிக்கல் சுற்றில் பங்கேற்ற முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் 3வது இடத்தை கைப்பற்றினார். குரூப் ஏ சுற்றில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த தொடரில் மற்றொரு இந்திய வீரரான சந்திபன் சந்தாவும் பங்கேற்றார்.

    இந்நிலையில் இவர்கள் மூவரும் எடுத்துள்ள செல்ஃபி புகைப்படத்தை, விஸ்வநாதன் ஆனந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 'அண்ணனுடன் செஸ் தம்பிகள் இரவு உணவுக்கு செல்கின்றனர்' என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் வரும் ஜூலை 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 187 நாடுகளின் வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த தொடருக்கான லோகோவை கடந்த ஜூன் 9-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இந்த தொடருக்கான குதிரை உருவம் கொண்ட சின்னம் ஒன்றையும் வெளியிட்ட அவர், அதற்கு 'தம்பி' என பெயர் வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

    இதை குறிப்பிடும் வகையில்தான் விஸ்வநாதன் ஆனந்த், 'செஸ் தம்பிக்கள்' என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

    • இறுதிச் சுற்றில் பிரக்ஞானந்தா 49-வது நகர்த்தலில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
    • கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் உலக சாம்பியன் கார்ல்சன் உள்ளிட்ட செஸ் ஜாம்பவான்களை வீழ்த்தி பிரக்ஞானந்தா, இரண்டாவது இடம் பிடித்தார்.

    நார்வே:

    நார்வேயில் நடைபெற்ற குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இந்திய இளம்வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

    மொத்தம் 9 சுற்றுக்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 6 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் டிரா என 7.5 புள்ளிகள் பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    பிரக்ஞானந்தா நேற்று நடந்த கடைசி சுற்றில் இந்தியாவின் பிரனீத்தை  எதிர்கொண்டார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா, 49-வது நகர்த்தலில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் உலக சாம்பியன் கார்ல்சன் உள்ளிட்ட செஸ் ஜாம்பவான்களை வீழ்த்தி பிரக்ஞானந்தா, இரண்டாவது இடம் பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ×