search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஸ்"

    • சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மதுரையில் இருந்து 12 மாணவர்கள் பங்கேற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் ஆகியோர் பதக்கம், பரிசு வழங்கி பாராட்டினர்.

    மதுரை

    மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. இதனை தமிழக அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் கண்டு களிக்கும் வகையில் ஒன்றிய- மாவட்ட அளவில் சதுரங்க போட்டிகள் நடத்துவது என்று மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முடிவு செய்தது.

    அதன்படி 6,7,8-ம் வகுப்பு,9,10-ம் வகுப்பு, 11, 12-ம் வகுப்பு ஆகிய 3 பிரிவுகளில், சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டன. 6,7,8-ம் வகுப்புகளுக்கான சதுரங்க போட்டியில் மதுரை அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த சோலையம்மாள், தமிழரசி, அனுப்பானடி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மகராஜ், டி.அரசம்பட்டி உயர்நிலைப்பள்ளி பாண்டியராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    9,10-ம் வகுப்புக்கான போட்டியில் அ.வல்லா ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி கலைச்செல்வி, கோகிலா, தேவநாத், சந்தோஷ் ஆகியோர் தேர்வாகினர்.

    11,12-ம் வகுப்புக்கான சதுரங்க போட்டியில் ஒத்தக்கடை மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி சங்கீதா, வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வெற்றிசெல்வி, பிரதீப், பேரையூர் காந்தி நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முகமது தபின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் ஆகியோர் பதக்கம், பரிசு வழங்கி பாராட்டினர்.

    பரிசு பெற்ற மாணவ- மாணவிகளை மாமல்லபுரத்துக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. முதலிடம் பெற்ற 4 பேர் விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    மாமல்லபுரம் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வந்த நிகரகுவா நாட்டு வீரர்களை, மதுரை மாணவர் பிரதீப் அடையாள அட்டை ஏந்தியபடி அழைத்து வந்தார்.

    மதுரையில் இருந்து 4 பேர் அடங்கிய குழு, நேற்று பஸ் மூலம் மாமல்லபுரத்துக்கு சென்றது. இந்த நிலையில் 4 பேர் குழு, நாளை மாமல்லபுரம் செல்கிறது. அங்கு அவர்களுக்கு செம்மஞ்சேரி பாலிடெக்னிக் கல்லூரியில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

    • பலகை விளையாட்டுகளில் பாதுகாப்பான கட்டங்கள் “மலைகள்” என அழைக்கப்படுகின்றன.
    • வல்லாட்டம் தொடக்கக்காலத்தில் மலைவாழ் பழங்குடியினரிடையே ஏற்பட்ட யானைப்போரின் அடியொற்றி உருவான விளையாட்டு என்பது புலனாகிறது.

    சங்க இலக்கியங்களில் தற்போது செஸ் என்றழைக்கப்படும் விளையாட்டுக்கு மூலமான வல்லாட்டம் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் காணப்படுவதாலும் கீழடி அகழாய்வில் ஆட்டக்காய்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாலும் இது கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்தே விளையாடப்படும் விளையாட்டு என்பது உறுதியாகிறது. பரிபாடலில் இவ்விளையாட்டை வல்லுப்போர் எனப்போருடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளதால் இது சதுரங்க விளையாட்டை ஒத்த விளையாட்டாகவும் கருதப்படுகிறது.

    கி.பி.18ஆம் நூற்றாண்டு உடைய நூலான குற்றாலக் குறவஞ்சியில் வல்லாட்டக் குறிப்புகள் வருவதால் ஆங்கிலேயர் ஆட்சி வரையிலும் வல்லாட்டம் தமிழர்களால் விளையாடப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது.

    வல்லாட்டம் போர்முறை விளையாட்டு என்பதால் இது தமிழர் சமுகத்தில் காய்கள் நகர்த்தி விளையாடும் விளையாட்டுகளின் பரிணாம வளர்ச்சியாகவே சங்கக்காலத்தில் விளங்கியுள்ளது.

    காடுகளில் வேட்டைச் சமூகமாக வாழும் காலத்தில் விரட்டுதல், தாண்டுதல் பயிற்சிக்காகப் பழங்காலத்தில் விளையாடிய எட்டுக்கோடு விளையாட்டாகவும் பின்னர் மேய்ச்சல் சமூகமாக வாழ்ந்த காலத்தில் விளையாடிய ஆடு புலி ஆட்டம் ஆகவும் மன்னர் ஆட்சிக்காலத்தில் வல்லாட்டமாகவும் பிற்காலத்தில் இது சதுரங்கம் ஆகவும் பரிணமித்து உள்ளது.

    " மூன்று புலிகளும் இருபத்தியொரு ஆடுகளும் கொண்ட ஆடு புலி ஆட்டம் கால்நடை வளர்ப்புச் சமூகத்திலிருந்து பிறந்த ஆட்டமாக இருக்க வேண்டும். புலி திரியும் காடுகளில் ஆடுகளைக் காப்பாற்ற முற்பட்டவனின் முயற்சி இது.

    அரசு இயந்திரம் மிகப்பெரிய வளர்ச்சியினைப் பெற்ற பிறகு பிறந்த மற்றொரு ஆட்டம் சதுரங்கம். அரசன், மதகுரு, குதிரை வீரன், யானை எனப் போர்ப் பயிற்சிக்கான விளையாட்டாக அது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாட்டு மன்னர்களும் இதனை ஆடியிருக்கிறார்கள்.

    'ராஜாக்கள் ஆனைக்கொப்பு ஆடுவாரைப்போல' என்கிறது திருவாய்மொழியின் நம்பிள்ளை ஈட்டு உரை. சதுரங்கம் என்பதனை ஆனைக்கொப்பு என்ற சொல்லால் அக்காலத் தமிழ் மக்கள் வழங்கியிருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. "- பேராசிரியர் தொ. பரமசிவன்.

    வல்யானை அல்லது வல்விலங்கு என்பது சங்க இலக்கியங்களில் போர் யானைகளைக் குறிக்கும் சொல்லாகும். வல்லாட்டம் பழங்காலத்தில் வல்யானைப் போர் என்று யானைப் போராக பழங்குடியினரிடையே தோன்றியதென்பதால், பாதுகாப்பான கட்டங்கள் "மலை" என்று குறிப்பிடப்படுவதோடு "வெட்டு" போன்ற சொற்களையும் கொண்டுள்ளது. யானையடி என்ற சொல் யானையின் நேரான நகர்வினைக் குறிக்கும். யானைகுப்பு என்ற விளையாட்டைக் குறிக்கும் சொல் யானை இளவரசர் என்று பொருள் தருகிறது.

    பலகை விளையாட்டுகளில் பாதுகாப்பான கட்டங்கள் "மலைகள்" என அழைக்கப்படுகின்றன. இவற்றால் வல்லாட்டம் தொடக்கக்காலத்தில் மலைவாழ் பழங்குடியினரிடையே ஏற்பட்ட யானைப்போரின் அடியொற்றி உருவான விளையாட்டு என்பது புலனாகிறது.

    " குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

    உண்டாகச் செய்வான் வினை."

    எனும் குறளுக்குத் தன் கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதானது குன்றின் மேல் ஏறி நின்று யானைப் போரைப் பார்ப்பது போல் மிகவும் பாதுகாப்பானது எனப் பொருள். இந்தக் குறளில் யானைப் போர் மற்றும் பாதுகாப்பான மலை ஆகிய பலகை விளையாட்டு குறியீடுகளைக் காணலாம். இந்த மலைக் கட்டங்களே சதுரங்கத்தின் கருப்புக் கட்டங்களாகப் பின்னர் மாற்றமடைந்துள்ளன.

    வல்லாட்டமானது யானைப்போராகவும் யானை விளையாட்டாகவும் தமிழகத்தில் உருவாகி இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில் யானை விளையாட்டு என்றே பரவியுள்ளது. சீன நாட்டின் சதுரங்கமும் யானை விளையாட்டு என்றே அழைக்கப்படுகிறது. வரலாற்று ரீதியாக இவ்விளையாட்டு ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனலாம்.

    வல்லாட்டத்தில் சங்கக்கால ஆட்சி முறையான எட்டு முக்கியத் தலைமை கொண்ட எண்பேராயம் எனும் முறையில் காய்களும் அதற்கான கட்டங்களும் அமைந்துள்ளன.

    தமிழ்நாட்டு மன்னர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தவர்களை எண்பேராயம் என்று பகுத்துக் காட்டுவது சங்கக்கால வழக்கம். இவர்களை முறையே...

    செயலாளர்

    காவல்

    ஊர் தலைவர்

    படைத்தலைவர்

    தொண்டர் படை

    யானை படை

    குதிரை படை

    உழவர் படை

    என உணர்ந்து கொள்ளலாம். இந்த எண்பேராயத்தின் வெளிப்பாடாகவே வல்லாட்டத்தில் எட்டு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    வல்லாட்ட விளையாட்டில் தொடக்கக் காலத்தில் இராணி என்ற காயே கிடையாது. ஏறக்குறைய 14ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு படைத்தலைவரின் காய் மேற்கத்திய நாடுகளின் சதுரங்க விளையாட்டு ஒழுங்குபடுத்தலில் இராணிக் காயாக மாற்றி விளையாடப்பட்டது.

    - கோடி

    • சேலம் மாவட்டம், ஏற்காடு மலைச் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளின் தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.
    • இச்சாலையோர தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    சேலம்:

    சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வருகின்ற நாளை(வியாழக்கிழமை) முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகளில் 188 நாடுகளைச் சார்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். சேலம் மாவட்டத்தில் அதனைப் பிரபலப்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில், சேலம் மாவட்டம், ஏற்காடு மலைச் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளின் தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. மலைப் பகுதியான ஏற்காட்டிற்கு நாள்தோறும் பல்வேறு சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். இச்சாலையோர தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து சேலம் மாவட்டத்தில் பிரபலப்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சதுரங்கப் போட்டிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் விழிப்புணர்வுக் கோலங்கள் வரைதல், பேரணிகள், காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் மிதவை செஸ் போட்டிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுக்கான செஸ் போட்டிகள் உள்ளிட்ட விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், பள்ளி வாகனங்கள், பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள், செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னம் அடங்கிய ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்தல், செல்பி பாயிண்ட் அமைத்தல் மற்றும் வண்ண பலூன்களை பறக்க விடுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

    • தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • இந்த போட்டியில் சர்வதேச அளவில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    நாமக்கல்:

    தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம் சார்பில் ஒலிம்பியாட் கோலம் வரையப்பட்டது. மேலும் சிலம்பம், வில்வித்தை போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடத்தப்பட்ட செஸ் போட்டியில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என மொத்தம் 4 நபர்களுக்கு தலா ரூ.3 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலைகளையும், 19 நபர்களுக்கு தலா ரூ.1,000-க்கான வங்கி வரைவோலைகளையும் கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசாக வழங்கினார்.

    செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொள்ளும் 188 நாடுகளை குறிக்கும் வகையில், 188 நாடுகளின் கொடிகள் ஒட்டப்பட்ட, ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களை கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவிகள் பறக்க விட்டனர்.மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழாவிற்கு வருகை தந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் 1,000 பேர் ஒலிம்பியாட் சின்னம் அச்சிட்ட தொப்பிகள் அணிந்து வந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலு–வலர் கதிரேசன், உதவி கலெக்டர் மஞ்சுளா, மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, செஸ் சங்கத்தினர், பயிற்சி–யாளர்கள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் செஸ் விளையாடிய உள்ளனர்.
    • தமிழகம் தான் செஸ் விளையாட்டின் தாயகம்.

    திருபுவனம்:

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, நாளை முதல் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் இதை அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டம் தோறும் இந்த போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழர்களுக்கு செஸ் விளையாட்டு ஒன்றும் புதிதானது அல்ல என்றார்.

    3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் செஸ் விளையாடியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். கீழடி அகழ்வாராய்ச்சியில் சதுரங்க ஆட்டக்காய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், செஸ் விளையாட்டின் தாயகமே தமிழகம் தான் என்றும் கூறினார். 

    • எஸ்.என். கல்லூரியில் செஸ் போட்டி நடந்தது.
    • ஏழு சுற்றுக்களில் நடந்த இப்போட்டிகளில் 225 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை பெருங்குடியில் உள்ள சரசுவதி நாராயணன் கல்லூரியில் 44-வது ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியை கொண்டாடும் வகையில் மாநில செஸ் போட்டி நடந்தது.

    ஏழு சுற்றுக்களில் நடந்த இப்போட்டிகளில் 225 மாணவர்கள் கலந்து கொண்டனர். சரஸ்வதி வித்யாலயா பள்ளி ஸ்ரீனிஷ் உதயன், எஸ்.பி.ஓ.ஏ.சீனியர் செகண்ட்ரிபள்ளி அஸ்வின், விசாகா பள்ளி மிர்துன்ராஜ், சி.எஸ்.ஆர்.மெட்ரிக் பள்ளி கெவின்பாரதி, ஜீவனா பள்ளி ஜெய்ஆகாஷ், மகாத்மா பள்ளி அனுஷ்கா, சேதுபதி பள்ளி விஷ்ணுவர்தன், அண்ணாமலையார் பள்ளி கதிர்காமன் முதல் 10 இடங்களை வென்று பரிசுகள் பெற்றனர்.

    மாணவியருக்கான சிறப்பு பரிசில், ஒத்தக்கடை அரசு பள்ளி சங்கீதா, ராஜ் மெட்ரிக் பள்ளி தரணி, அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி சுபஸ்ரீ, கேட்டிவிகாஷ் பள்ளி 7 வயது சக்தி சந்தானம் இளம் வீரருக்கான பரிசு, அதிக மாணவர்கள் பங்கேற்ற அமுதம் மெட்ரிக் பள்ளிக்கு முதல் பரிசும், திருமங்கலம் பி.கே.என். பள்ளிக்கு 2-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். வணிகவியல் துறைத்தலைவர் ஜெயக்கொடி வரவேற்றார். மாவட்ட சதுரங்க சங்க முதுநிலை ஆர்பிட்டா அரசப்பன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் யுவராஜ் நன்றி கூறினார்.

    • மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    • செஸ் போட்டியை பிரபலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பௌலின் தலைமையில் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் செஸ் போட்டியை பிரபலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பௌலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தி ல்வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா, ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாஸ்கரன், பேரூராட்சி செயல் அலுவலர் குகன், மீன்வளத்துறை ஆய்வாளர் நடேசராஜா, மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் மணிவண்ணன் ,முதல் நிலை வருவாய் ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வன், மேகலா மற்றும் தன்னார்வலர்கள் அனைத்து துறைஅதிகா ரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக விழிப்புணர்நடத்துவது என்றும், வருகிற 27ஆம் தேதி வேதாரண்யத்தில் மிக பிரம்மாண்டமான விழா நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    • ஒருபகுதியாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி வருகிற 26-ந் தேதி அதிகாலை கன்னியாகுமரி காந்தி மண்டபத்தை வந்தடைகிறது.
    • அமைச்சர்கள் ஒலிம்பியாட் தீபத்தினை கிராண்ட் மாஸ்டர் நிலோபர் தாசிடம் வழங்குகின்றனர்.

    நாகர்கோவில் :

    44-வது செஸ் ஒலிம்பியாட் உலக போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்க உள்ளது. இதன் ஒருபகுதியாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி வருகிற 26-ந் தேதி அதிகாலை கன்னியாகுமரி காந்தி மண்டபத்தை வந்தடைகிறது.

    தொடர்ந்து காலை 6.30 மணிக்கு காந்தி மண்டபத்தில் இருந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு அமைச்சர்கள் ஒலிம்பியாட் தீபத்தினை கிராண்ட் மாஸ்டர் நிலோபர் தாசிடம் வழங்குகின்றனர்.

    ஒலிம்பியாட் தீபமானது திருவள்ளுவர் சிலைக்கு கொண்டு சென்று சிலையை சுற்றி வலம் வர உள்ளது. தொடர்ந்து அன்று நடைபெறும் நிகழ்ச்சியில், பள்ளி மாணவ-மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்வுகள் நடை பெற உள்ளது.

    இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலேக்டர்அரவிந்த். தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, மாவட்ட விளையாட்டு நல அலுவலர் டேவிட் டேனியல் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

    • மதுக்கூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.
    • உதவி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. மதுக்கூர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகாலிங்கம், வட்டார கல்வி அலுவலர் மனோகரன், தலைமை ஆசிரியர் பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தனர். உதவி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

    இந்த செஸ் போட்டியின் ஆர்பிட்டராக மனிஷா செயல்பட்டார். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஒன்றிய அளவிலான போட்டியில் வெல்பவர்கள் மாவட்ட அளவிலான செஸ் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    • கபிலர்மலை, மோகனூர் பகுதியில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பரமத்திவேலூர்:

    சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28- ந் தேதி தொடங்குகிறது.இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழக முழுவதும் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கபிலர்மலை ஒன்றிய பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) பரமசிவம் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) நாகராஜ் அனைவரையும் வரவேற்றார். செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மோகனூர்

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேருந்து நிலையத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) தேன்மொழி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) பரமேஸ்வரன், மோகனூர் பேரூராட்சித் தலைவர் வனிதா மோகன்குமார், துணைத் தலைவர் சரவணகுமார் , இளநிலை உதவியாளர் சுரேஷ்ராஜ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மணி, கார்த்திக் , மகளிர் சுய உதவி குழுவினர்,துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் பேரூராட்சிஅலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கபிலர்மலை, மோகனூர் பகுதியில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பரமத்திவேலூர்:

    சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28- ந் தேதி தொடங்குகிறது.இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழக முழுவதும் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கபிலர்மலை ஒன்றிய பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) பரமசிவம் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) நாகராஜ் அனைவரையும் வரவேற்றார். செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மோகனூர்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேருந்து நிலையத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) தேன்மொழி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) பரமேஸ்வரன், மோகனூர் பேரூராட்சித் தலைவர் வனிதா மோகன்குமார், துணைத் தலைவர் சரவணகுமார் , இளநிலை உதவியாளர் சுரேஷ்ராஜ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மணி, கார்த்திக் , மகளிர் சுய உதவி குழுவினர்,துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் பேரூராட்சிஅலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • உலக செஸ் ஒலிம்பியாட் ஜோதி 26-ந்தேதி வருகை தருவதாக கலெக்டர் கூறினார்.
    • மக்கள் அனைவரும் இந்த செஸ் ஒலிம்பியாட்டிற்கு ஆதரவு தர வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறியதாவது:-

    அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28-ந்தேதி முதல் சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி வருகிற 26-ந்தேதி மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய இடங்களுக்கும் இந்த ஜோதி கொண்டு செல்லப்பட்டு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன் முன்னோடியாக ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து பொது இடங்களில் எங்கெல்லாம் மக்கள் அதிகம் கூடுகின்றனரோ அங்கெல்லாம் செஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அனைத்து மக்களும் இந்த செஸ் ஒலிம்பியாட்டை கொண்டாட வேண்டும். செஸ் விளையாட்டு பற்றி அறிந்து கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் இந்த செஸ் ஒலிம்பியாட்டிற்கு ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ்களில் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான ஸ்டிக்கர்களை ஒட்டி கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    ×