search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு செஸ் போட்டி
    X

    மாணவர்களுக்கு செஸ் போட்டி நடந்தது.

    மாணவர்களுக்கு செஸ் போட்டி

    • மதுக்கூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.
    • உதவி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. மதுக்கூர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகாலிங்கம், வட்டார கல்வி அலுவலர் மனோகரன், தலைமை ஆசிரியர் பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தனர். உதவி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

    இந்த செஸ் போட்டியின் ஆர்பிட்டராக மனிஷா செயல்பட்டார். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஒன்றிய அளவிலான போட்டியில் வெல்பவர்கள் மாவட்ட அளவிலான செஸ் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×