search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேதாரண்யத்தில் 27-ந் தேதி செஸ் போட்டி விழா
    X

    ஆலோசனை கூட்டம்

    வேதாரண்யத்தில் 27-ந் தேதி செஸ் போட்டி விழா

    • மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    • செஸ் போட்டியை பிரபலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பௌலின் தலைமையில் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் செஸ் போட்டியை பிரபலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பௌலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தி ல்வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா, ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாஸ்கரன், பேரூராட்சி செயல் அலுவலர் குகன், மீன்வளத்துறை ஆய்வாளர் நடேசராஜா, மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் மணிவண்ணன் ,முதல் நிலை வருவாய் ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வன், மேகலா மற்றும் தன்னார்வலர்கள் அனைத்து துறைஅதிகா ரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக விழிப்புணர்நடத்துவது என்றும், வருகிற 27ஆம் தேதி வேதாரண்யத்தில் மிக பிரம்மாண்டமான விழா நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×