search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்வி"

    வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளுடன் செல்பி எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வனத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    தேன்கனிக்கோட்டை:

    கசிவுநீர் குட்டையில் விளையாடிக் கொண்டிருக்கும் காட்டு யானைகளை பாதுகாப்பு கருதி செல்பி எடுக்க வேண்டாம் என்றும் அதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட வனத்துறை அதிகாரி தீபக்பில்கி தெரிவித்தார். தேன்கனிக்கோட்டையில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் கேரட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் ஐந்து யானைகள் முகாமிட்டிருந்தது. யானைகள் வனப்பகுதியில் உள்ள கசிவுநீர் குட்டையில் விளையாடி கொண்டிருப்பதை அதிகாலை கேரட்டி வனப்பகுதியில் கால்நடைகளை மேய்க்க சென்றவர்கள் பார்த்தனர்.

    இந்த தகவல் அறிந்த கிராம மக்கள் யானைகள் தங்கி உள்ள பகுதிக்கு வந்து வன விலங்குகளுக்கு இடையூறு செய்ததோடு மட்டுமில்லாமல் அதனுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அங்கு வந்து பொது மக்களை கலைந்து போக வேண்டியும் செல்பி எடுக்க வேண்டாம் என்றும் கேட்டு கொண்டனர். 

    இதை பொருட்படுத்தாமல் செல்பி எடுப்பதில் பொதுமக்கள் தீவிரம் காட்டியதால் வனத்துறையினர் தங்களின் உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி செல்பி எடுப்போரின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட வனத்துறை அதிகாரி தீபக் பில்கி உத்தரவிட்டார்.

    மேலும், இது குறித்து அவர் கூறுகையில், வனவிலங்குகளுடம் செல்பி எடுப்பது மிகவும் ஆபத்தான செயல் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
    குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் எனவும் எந்த சூழ்நிலையிலும் பிரிந்து விடக்கூடாது என்றும் கருணாநிதி அடிக்கடி கூறுவார் என்று அவருடைய மகள் செல்வி கூறினார். #Karunanidhi #KarunanidhiDaughter #Selvi
    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    அப்பா எப்போதுமே குடும்பத்தினர் மீது மிகவும் பாசம் காட்டுவார். தமிழ் எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று பேரக்குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பார். அதனால் எல்லா குழந்தைகளுமே தமிழில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தன.

    வெளியூர்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களுக்கு நானும் அம்மாவும், அப்பாவுடன் செல்வோம். கூட்டம் முடிந்தவுடன் என்னம்மா கூட்டம் எப்படி இருந்தது என்று கேட்பார்.

    அது தொடர்பாக ஏதாவது கருத்துக்களை கூறினால் கேட்டுக்கொள்வார். குடும்ப உறுப்பினர்களின் கருத்துகளுக்கு எப்போதுமே மதிப்பளிப்பார்.


    சினிமா பார்ப்பதற்கு பிரிவியூ காட்சிகளுக்கு அப்பா அடிக்கடி செல்வார். அப்போது குடும்பத்தில் உள்ளவர்களையும் அழைத்துச் செல்வார். நானும் அப்பாவுடன் சென்று படம் பார்த்துள்ளேன். வெளியூர்களில் நடக்கும் கூட்டத்துக்கு காரில் செல்லும் போது கட்சி தலைவர்களும் எங்களுடன் காரிலேயே வருவார்கள். அவர்களுடன் பேசிக் கொண்டே பயணிப்பார்.

    அப்பாவை சந்திக்க வரும் கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களிடம் மரியாதையாக பேச வேண்டும் என்பதில் கண்டிப்புடன் இருப்பார்.

    ஒருமுறை அப்பாவை பார்ப்பதற்காக நாவலர் நெடுஞ்செழியன் வீட்டுக்கு வந்திருந்தார். நான் அப்பாவிடம் போய் நெடுஞ்செழியன் வந்திருக்கிறார் என்று கூறினேன். கோபத்தில் திட்டி விட்டார். அப்படியெல்லாம் பெயர் சொல்லக்கூடாது நாவலர் என்றே அழைக்க வேண்டும் என்றார். இதே போல அன்பழகனை பேராசிரியர் என்றே கூப்பிட வேண்டும் என்பார். மற்றபடி எந்த வி‌ஷயத்துக்கும் அப்பா எங்களை திட்டியது இல்லை.

    சிறு வயதில் சர்ச் பார்க் பள்ளியில் சேர்க்க ஸ்டாலினையும், என்னையும் அழைத்துச் சென்றனர். ஸ்டாலின் என்கிற பெயருக்கு சீட் தர முடியாது என்று பள்ளி நிர்வாகம் கூறி விட்டது.

    இதுபற்றி அப்பாவிடம் கூறியதும், அப்படி ஒரு பள்ளியில் படிக்க வேண்டியதில்லை என்று கூறி வேறு பள்ளியில் சேர்த்து விட்டார்.

    தமிழ்நாட்டில் பெரியார் மண்ணான ஈரோடு, அண்ணா பிறந்த காஞ்சீபுரம், திருவாரூர் ஆகியவை கருணாநிதிக்கு பிடித்தமான ஊர்களாகும்.

    எனது திருமணத்தை பொறுத்த வரையில் எனக்கு கணவர் யார் என்பதை நான் பிறந்தவுடனேயே அப்பா முடிவு செய்து விட்டார்.

    நான் பிறந்தவுடன், தனது அக்காவுக்கு எழுதிய கடிதத்தில் செல்வத்துக்கு செல்வி பிறந்து விட்டாள் என்று குறிப்பிட்டுள்ளார். பெரியவளானதும், இவர் தான் எனக்கு கணவராக வரப்போகிறவர் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

    அண்ணா முன்பு எங்களையெல்லாம் வசனம் பேச சொல்வார். அழகிரி அண்ணன் நன்றாக வசனம் பேசி காட்டுவார். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பிரிந்து விடக்கூடாது என்று அடிக்கடி கூறுவார். அத்தையும் இதையே எங்களிடம் சொல்லிக் கொண்டிருப்பார். அம்மா வைக்கும் மீன் குழம்பு அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும்.


    சில ஆண்டுகளாகவே நான் அவருக்கு சாப்பாடு ஊட்டி விடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். அப்போது என்னை பார்த்து நன்றாக ஊட்டி விடுகிறாயேம்மா என்று கூறி இருக்கிறார். (இப்படி கூறும்போது கதறி அழுதார்)

    பிற கட்சிகளின் தலைவர்கள் சந்திக்க வரும் போது அவர்களுக்கு பிடித்ததை செய்து தரச்சொல்லி கொடுப்பார். ஒருமுறை இந்திராகாந்தியை பார்க்க டெல்லி சென்றபோது எங்களையும் அழைத்துச் சென்றார். அவருடன் அமர்ந்து சாப்பிட்டதை மறக்க முடியாது.

    அப்பாவுக்கு எப்போதுமே வேட்டி-சட்டை அணிவது தான் பிடிக்கும். ஒரே ஒரு முறைதான் பேண்ட் அணிந்திருப்பார் என்று நினைக்கிறேன். அப்பாவின் மறைவை வெறுமையாகவே உணர்கிறேன்.

    இவ்வாறு செல்வி கூறினார். #Karunanidhi #KarunanidhiDaughter #Selvi
    பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கருணாநிதி மகள் செல்வி மீதான நில மோசடி வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
    பூந்தமல்லி:

    சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த நெடுமாறன் என்பவர் கருணாநிதி மகள் செல்வி மற்றும் செல்வியின் மருமகன் ஜோதிமணி ஆகியோர் மீது கடந்த 2009-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

    அதில் செல்வி, அவரது மருமகன் ஜோதிமணி ஆகியோர் பனையூரில் உள்ள அவர்களது நிலத்தை என்னிடம் விற்க ஒப்பந்தம் செய்தனர். அதற்காக ரூ.4½ கோடியை முன் பணமாக கொடுத்தேன். ஆனால் நிலத்தை எனக்கு விற்காமல் வேறு நபருக்கு விற்றுவிட்டனர். நான் முன்பணமாக கொடுத்த ரூ.4½ கோடியை திருப்பி கேட்டபோது மிரட்டல் விடுத்தனர்.

    அதனால் எனது பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறி இருந்தார். இவ்வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எண்.1-ல் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று நீதிபதி குருலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கருணாநிதி மகள் செல்வி கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி குருலட்சுமி வருகிற 25-ந் தேதி செல்வியை மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டார். #Tamilnews
    ×