என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » செக்கச் சிவந்த வானம்
நீங்கள் தேடியது "செக்கச் சிவந்த வானம்"
பல வெற்றி படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது அவர் படத்தில் நடித்தது வரம் என்று கூறியிருக்கிறார். #AishwaryaRajesh #CCV
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா அந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ‘செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண்விஜய் என்று 4 கதாநாயகர்களுடனும் நடித்துவிட்டேன்.
ஜோதிகா என்னிடம் ’உங்களோட படங்கள் எல்லாம் பார்த்து இருக்கிறேன். தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்கள்’ என்று சொன்னார். நான் நன்றாக நடிப்பதாக பாராட்டினார். இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகும் போது மிகவும் பயந்தேன். மணிரத்னம் எப்படி படப்பிடிப்பில் இருப்பார் என்று பயம் இருந்தது.
அவரைப் பார்க்கும் போது எப்போதும் கண்டிப்பாக இருப்பது போலவே இருக்கும். அவர் எவ்வளவு கூலான நபர் என்று நடித்து முடித்த பிறகு தான் புரிந்தது. அவருடன் பணிபுரிவது எளிதாக இருந்தது. எந்த ஒரு இடத்திலும் கோபப்படவே இல்லை. கஷ்டமே இல்லாமல் வேலை வாங்கினார். அவர் படத்தில் நடித்தது வரம்’ என்று கூறி இருக்கிறார்.
சிம்புவின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சிம்பு அடுத்ததாக இளம் இயக்குநர் கார்த்திக் நரேனுடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. #STR34 #KarthikNaren
வெங்கட் பிரபுவுடனான சந்திப்புக்கு பிறகு, சிம்பு சமீபத்தில் `துருவங்கள் பதினாறு' பட இயக்குநர் கார்த்திக் நரேனையும் சந்தித்திருக்கிறார்.
சிம்பு - கார்த்திக் நரேன் இடையேயான சந்திப்பின் போது கார்த்திக் நரேன், சிம்புவிடம் த்ரில்லர் கதை ஒன்றை கூறியிருப்பதாகவும், சிம்பு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் விரைவில் அடுத்த கட்ட பணிகள் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் `நரகாசூரன்' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், கார்த்திக் நரேன் அடுத்ததாக `நாடகமேடை' படத்தை இயக்க இருப்பதாக அறிவித்தார். `நாடகமேடை' படத்தின் பணிகள் தாமதமாகி இருக்கும் நிலையில், கார்த்திக் நரேன் முதலில் சிம்புவை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஒரு படத்திலும் சிம்பு நடிக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி, சிம்பு இயக்கும் படம் மற்றும் கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா 2 என அடுத்தடுத்து சிம்பு பிசியாக இருப்பதாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எனவே சிம்புவின் அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு நடிப்பில் அடுத்ததாக `செக்கச் சிவந்த வானம்' விரைவில் ரிலீசாக இருக்கிறது. #STR34 #KarthikNaren
மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக முன்னணி இயக்குநர் ஒருவருடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #STR
மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, விரைவில் அந்த படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் சிம்பு, வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி மூன்று பேரும் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு - சிம்பு இணையும் படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது உறுதியாகும் பட்சத்தில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சிம்பு, யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பில்லா 3 படத்தில் இணையவிருப்பதாக வெங்கட் பிரபு கூறியிருந்தார். ஒருவேளை இது பில்லா 3 படத்திற்கான பேச்சுவார்த்தையாக இருக்குமோ என்றும் ஒரு சமூக வலைதளங்களில் ஒரு பேச்சு அடிபடுகிறது. #STR #Simbu #VenkatPrabhu
சிம்பு நடிப்பில் அடுத்ததாக `செக்கச் சிவந்த வானம்' படம் ரிலீசாக இருக்கும் நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் சிம்பு 4 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #STR #Simbu
மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக 3 வருடங்களுக்கு பிசியாகவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சிம்பு அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. `செக்கச் சிவந்த வானம்' சிம்புவின் 33-வது படமாக உருவாகி இருக்கிறது. சிம்புவின் 34-வது படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்திற்கு பிறகு, அடுத்த படத்தை சிம்புவே எழுதி இயக்கவிருக்கிறாராம். திரில்லர் படமாக உருவாகும் இந்த படம் ஆங்கில மொழியில் உருவாக இருக்கிறது. இந்த படத்திற்கு கவுதம் மேனன் வசனங்களை எழுத இருக்கிறாராம். அதனைத் தொடர்ந்து சிம்புவின் 36-வது படமாக உருவாகும் படத்தை கவுதம்மேனன் இயக்கவிருப்பதாகவும், இந்த படத்தில் 3 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும், அதில் சிம்புவும் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரிப்பில் ஒரு படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறாராம். இது ரத்தின சிவா இயக்கும் படம் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு சிம்பு பிசியாகிவிட்டாராம். #STR #Simbu
மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மாடல் அழகி டயானா எரப்பா நடித்திருப்பதாக சிம்பு கூறியிருக்கிறார். #CCV #STR
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `செக்கச் சிவந்த வானம்'. அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு செர்பியாவில் சமீபத்தில் முடிந்தது.
இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மாடல் அழகி டயானா எரப்பா நடித்திருப்பதாக சிம்பு வெளியிட்ட வீடியோவில் கூறியிருக்கிறார். சிம்பு - டயானா எரப்பா சம்பந்தப்பட்ட காட்சிகள் கடைசியாக செர்பியாவில் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் படத்தின் டப்பிங் பணிகள் துவங்க இருக்கிறது.
சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது. படத்தை வருகிற செப்டம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. #CCV #STR #Simbu #DayanaErappa
Maniratnam Chekka Chivantha Vaanam CCV Arvindswami Simbu STR Vijay Sethupathi Arun Vijay Jyothika Aishwarya Rajesh Aditi Rao hydaari AR Rahman Sreehar Prasad Santhosh Shivan Nawab Dayana Erappa மணிரத்னம் செக்கச் சிவந்த வானம் அரவிந்த்சாமி சிம்பு விஜய் சேதுபதி அருண் விஜய் ஜோதிகா ஐஸ்வர்யா ராஜேஷ் அதிதி ராவ் ஹிடாரி
மணிரத்னம் இயக்கி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் சிம்பு, இதுக்கு அப்புறம் படத்தில் நடிப்பேனா என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். #CCV #Simbu
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `செக்கச் சிவந்த வானம்'. அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் என பலரும் இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு செர்பியாவில் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் துபாயில் படப்பிடிப்பை முடித்த மணிரத்னம், அடுத்ததாக செர்பியாவில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்தார். இந்த நிலையில், சிம்பு காட்சிகளுடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இந்நிலையில், நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘செக்கச் சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மணிரத்னமுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் இயக்கத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. அஞ்சலி படம் பார்த்து கஷ்டப்பட்டேன். இவருடைய இயக்கத்தில் நடிக்க வில்லை என்று வருத்தப்பட்டேன். மணிரத்னம் இயக்கத்தில் நம்மால் நடிக்க முடியாது என்று நினைத்தேன்.
ஆனால், எனக்கு மணிரத்னம் வாய்ப்பு கொடுத்தார். இந்த படத்தில் நடிக்க கூடாது என்று பல பிரச்சனைகள் தடைகள் வந்தாலும், அதையும் தாண்டி என் மேல் நம்பிக்கை வைத்தார். அவருக்கு பெரிய நன்றி. படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி.
நான் வேலையை சரியாக செய்வதில்லை என்று எப்பவும் ஒரு குற்றச்சாட்டு இருந்துக் கொண்டே இருக்கிறது. நான் என் வேலையை மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்ததிலிருந்து சினிமாவில்தான் இருக்கிறேன். அதை விட்டா வேற எதுவும் தெரியாது. எனக்கு வாழ்க்கை எந்த பிரச்சனையும் இல்லை.
என்னால் ரோபோ மாதிரி வேலை செய்ய முடியாது. என்னால ஒரு விஷயம் தப்பா இருக்கிறது என்றால், நான் மாற்றிக் கொள்வேன். தவறில் இருந்து கற்றுக் கொள்வேன். தப்பு பண்ணா மன்னிப்பு கேட்பேன். ஆனால், பண்ணாத தப்புக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்.
இதுக்கு அப்புறம் படத்தில் நடிப்பேனா, சினிமாவில் இருப்பேனா என்று தெரியவில்லை’ என்றார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில், நடிகர் சிம்பு அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #CCV
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `செக்கச் சிவந்த வானம்'. அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் என பலரும் இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு செர்பியாவில் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் துபாயில் படப்பிடிப்பை முடித்த மணிரத்னம், அடுத்ததாக செர்பியாவில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்தார். இந்த நிலையில், சிம்பு காட்சிகளுடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது. விரைவில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்க இருப்பதாகவும் படத்தை வருகிற செப்டம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. #CCV #VijaySethupathi
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #CCV
மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்படிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அவரது காட்சிகளை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் இணைந்து நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அரவிந்த்சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ் அருண் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு முடித்துவிட்ட நிலையில், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. சிம்புவும் சமீபத்தில் துபாய் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். இந்த நிலையில், விஜய் சேதுபதியும் அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டாராம்.
ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது.
படத்தை வருகிற அக்டோபரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #CCV #VijaySethupathi
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் `செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சிம்பு - விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் படப்பிடிப்பு நிறைவடையவிருக்கிறது. #CCV
மணிரத்னம் தற்போது முன்னணி நட்சத்திரங்களை வைத்து `செக்கச் சிவந்த வானம்' படத்தை இயக்கி வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் அரவிந்த்சாமி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்தார். அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அருண் விஜய் அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துவிட்டனர். தற்போது மணிரத்னம், சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை துபாயில் படமாக்கி வருகிறார்.
அதேநேரத்தில் ஜோதிகாவின் காட்சிகளும் விரைவில் முடியவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் சிம்பு, விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும், இந்த மாத இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. படம் வருகிற அக்டோபரில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. #CCV #STR #VijaySethupathi
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X