search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திர தின விழா"

    • செங்கல்பட்டு நகராட்சியில் நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தேசிய கொடி ஏற்றினார்.
    • நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    நாட்டின் 77-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று, போலீசார் மற்றும் ஊர்காவல் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    பின்னர் 60 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்து 55 ஆயிரத்து 40 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் நிகழ்ச்சியில் மூவர்ண பலூன், வெண்புறாக்கள் பறக்க விடப்பட்டன. பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, தாசில்தார் புவனேஸ்வரன் கலந்து கொண்டனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தின் சார்பில் சுதந்திர தினவிழா ஆலபாக்கம் ஊராட்சியில் உள்ள வேன்பாக்கம் அரசினர் தொழில் பயிற்சி வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுது.

    செங்கல்பட்டு நகராட்சியில் நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தேசிய கொடி ஏற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார். நகரமன்ற துணை தலைவர் அன்பு செல்வன், நகராட்சி ஆணையர் இளம்பரிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கலெக்டர் ஆப்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன் களை பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து இனிப்புகளை வழங்கினார். மேலும் அரசின் பல்வேறு துறையின் மூலம் 29 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 59 லட்சத்து 58 ஆயிரத்து 191 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆப்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். விழாவில் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 22 போலீசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

    தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஹரிக்குமார், மீனாட்சி, உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா, துணை கலெக்டர் சுகபுத்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் காயத்ரி சுப்பிரமணி, பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு சிபின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்கோட்டையில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தமிழ்ச்செல்வன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். வக்கீல்கள் சங்கத் தலைவர் சீனிவாசன், செயலாளர் முனுசாமி, பொருளாளர் தினகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். துணைத் தலைவர் குமரவேல், செயல் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் பல கலந்து கொண்டனர்.

    போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் தேசியக்கொடி ஏற்றினார். போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் ரவி தேசியகொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். அத்திப்பட்டு ஊராட்சியில் தலைவர் சுகந்தி வடிவேல், பொன்னேரி நகராட்சியில் தலைவர் பரிமளம் விஸ்வநாதன், தட பெரும்பாக்கம் ஊராட்சியில் தலைவர் பாபு, கோட்டைக்குப்பம் ஊராட்சியில் தலைவர் சம்பத், ஜெகநாதபுரம் ஊராட்சியில் தலைவர் மணிகண்டன், மாதவரம் ஊராட்சியில் தலைவர் சுரேஷ், ஆண்டார் குப்பம் ஊராட்சியில் ஆர்த்தி ஹரி பாபு, பஞ்செட்டியில் தலைவர் சீனிவாசன், பெரிய கரும்பூரில் தலைவர் பாக்கியலட்சுமி, வேலூர் ஊராட்சியில் தலைவர் சசிகுமார், காட்டுப்பள்ளியில் தலைவர் சேதுராமன், கொடூரில் தலைவர் கஸ்தூரி மகேந்திரன், நாலூரில் தலைவர் சுஜாதா ரகு, வாயலூரில் தலைவர் கோபி, காட்டாவூரில் தலைவர் மங்கை உமாபதி, பெரும்பேட்டில் தலைவர் ராஜேஷ், பிரளையம் பாக்கத்தில் இலக்கியா கண்ணதாசன், சிறுவாக்கத்தில் தலைவர் சேகர் தலைமையில் தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டன.

    • மாணவர்கள் சுதந்திரப் பற்றை ஊட்டக் கூடிய நாடகங்கள், சுதந்திர போராட்ட தியாகங்களின் வாழ்க்கை வரலாறு, ஒற்றுமை போன்ற நிகழ்ச் சிகளை தத்துவமாக நடித்துக் காட்டினார்கள்.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் கிரீன் பார்க் சி.பி.எஸ்.இ பள்ளியில் 77-வது சுதந்திர தின நாளை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதில் மாணவர்கள் சுதந்திரப் பற்றை ஊட்டக் கூடிய நாடகங்கள், சுதந்திர போராட்ட தியாகங்களின் வாழ்க்கை வரலாறு, ஒற்றுமை போன்ற நிகழ்ச் சிகளை தத்துவமாக நடித்துக் காட்டினார்கள்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் எவரெஸ்ட் முனிரத்தினம் மற்றும் நிர்வாக அலுவலர் ராஜா பூவிழி , பள்ளியின் முதல்வர் ஜெகதீசன், சதானந்தம், தங்கம் பிரபா, இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

    மேலும் பள்ளியில் பல்வேறு விளையாட்டு போட்டி, பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். 

    • சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டது.
    • அனைவருக்கும் இனிப்பு வழங்கபட்டது.

    மதுரை

    மதுரையில் பல்வேறு இடங்களில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த சுதந்திர தின விழாவில் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் சுந்தரமகாலிங்கம், பாக்கியம் செல்லதுரை, ஜோதி, ராஜலெட்சுமி, நச்சம்மாள் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் என திரளானோர் கலந்து கொண்டனர். சத்திரப்பட்டியில் உள்ள கல்லூரியில் கூடுதல் வளாகத்திலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    மனோகரா நடுநிலைப்பள்ளி

    மதுரை மனோகரா நடுநிலைப்பள்ளியில் குறிஞ்சி மலர் அரிமா சங்கம், மதுரை அறம் அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர் பால் ஜெயக்குமார் வரவேற்றார். அறம் அரிமா சங்க தலைவர் ஜேசுராஜா தலைமை தாங்கினார். செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். கவுன்சிலர் குமரவேல், முன்னாள் கவுன்சிலர் திலகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் தனபால் நன்றி கூறினார். இதில் தலைவர் காளிதாஸ், செயலர் செந்தில்குமார், பொருளாளர் மகேந்திரன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முத்தமிழ் மன்றம்

    மதுரை ஹார்விபட்டி முத்தமிழ் மன்றத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடபட்டது. தேசிய கொடியை மன்றத்தின் நிறுவன தலைவர் முன்னாள் அறங்காவலர் மகா.கணேசன் ஏற்றி வைத்தார். மன்ற நிர்வாகிகள் மாரியப்பன், நாகேந்திரன், கணபதி, மோகன், சங்கர், ஸ்டெல்லா, சுடலை முத்து, குமார், செல்வராஜ், ராஜேஷ், ஹரிகிருஷ்ணன், நாகராஜ், அஞ்சு, நாகராஜ், பாண்டியராஜன், மணிகண்டன், குணசேகரன், தங்கவேலு, சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனை வருக்கும் இனிப்பு வழங்கபட்டது.

    • சப்-கலெக்டர் சரண்யா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
    • ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் எஸ்.ஏ.சத்யா, தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    ஓசூர்,

    சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் சரண்யா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

    மேலும் இதில், சப்கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகம், தாசில்தார் சுப்பிரமணி மற்றும் தனி தாசில்தார்கள், வருவாய் துறை அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் எஸ்.ஏ.சத்யா, தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவிற்கு, ஆணையர் சினேகா முன்னிலை வகித்தார் இதில், மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அரசு, பள்ளிகள், குடியிருப்பு பகுதிகளில் தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    • பரமக்குடியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் தேசிய கொடி யேற்றினார்.

    பரமக்குடி

    பரமக்குடியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் தேசிய கொடி யேற்றினார்.

    வட்டாட்சியர் அலுவ லகத்தில் ரவி, அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரி முத்தரசன், நகராட்சியில் நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி ஆகியோர் கொடி ஏற்றினார். நயினார்கோவில் ஒன்றிய தலைவர் வினிதா, போகலூர் ஒன்றிய தலைவர் சத்யாகுண சேக ரன், பரமக்குடி ஒன்றிய தலைவர் சிந்தாமணி முத்தையா ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் சுதந்திர தின விழா போன்றவற்றில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
    • இளைஞர்களுக்கு நல்ல செய்தியை சொல்வோம்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் நடந்த விருந்தில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் சுதந்திர தின விழா போன்றவற்றில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    கவர்னர் விருந்து என்பது அலட்சியம் செய்யும் விழா இல்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சுதந்திர போராட்ட வீரர்கள், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள், மாற்றுதிறனாளிகள் என பலரும் இங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

    இங்கு வந்தால் அவர்கள் எல்லோரையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். கலந்து கொள்ளாததால் அவர்களுக்கு தான் நஷ்டம்.

    அன்போடு அழைத்ததன் பேரில் வந்தவர்களுக்கு வாழ்த்து. பிரச்னைகளை பேசி தீர்த்து கொள்வோம். இளைஞர்களுக்கு நல்ல செய்தியை சொல்வோம்.

    இவ்வாறு தமிழிசை பேசினார்.

    முன்னதாக கவர்னர் தேநீர் விருந்தை தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ரூ. 2 ¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
    • நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்ட ரங்கத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் இன்று நடந்தது. விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து திறந்த ஜீப்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துடன் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதை பார்வையிட்டார்.

    பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் சமாதான புறாக்களை பறக்க விட்டார். இதைத்தொடர்ந்து மூவர்ண கலரிலான பலூன்களும் பறக்க விடப்பட்டது.

    கலெக்டர் ஸ்ரீதர் ஆயுதப்படை போலீசார், தீயணைப்பு வீரர்கள், ஊர்க்காவல் படை, என்.சி.சி. மாணவர்கள், என்.எஸ்.எஸ். மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண் டார்.

    சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். 87 போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    பின்னர் மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 90 மதிப்பில் 5 பயனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தையல் எந்திரங்க ளும், திரும ணமாகாத பெண்களுக்கு உதவி தொகை ஆதரவற்ற விதவை உதவித்தொகை ஆகியவற்றை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.

    வருவாய்த்துறையில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். ஊரக வளர்ச்சி முகமை, மருத்துவத்துறை, பொது சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர் துறை, வேலைவாய்ப்பு பயிற்சி துறையில் சிறப்பாக பணிபுரிந்து அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பள்ளி கல்வித்துறை, தீயணைப்பு துறை மேலாண்மை மற்றும் உழவர் நலத்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சுற்றுலாத்துறை பதிவுத்துறை ஆகியவற்றில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    குமரி மாவட்ட வனப்பகுதியில் சுற்றித்திரிந்த புலியை பிடித்த வன அதிகாரிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    களியல் வனசரகர், வனக்காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களும் ஊக்கப்ப டுத்தப்பட்டனர். விழாவில் 40 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 30 லட்சத்து 45 ஆயிரத்து 870 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது. சுதந்திர தின விழாவை ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த 2 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கண்டு களித்தனர்.

    விழாவில் விஜய் வசந்த் எம்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பி ரமணியன், மருத்துவ பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி, ஆசாரி ப்பள்ளம் மருத்துவ கல்லூரி முதல்வர் பிரின்சி பயாஸ், முதன்மை கல்வி அதிகாரி முருகன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பூதக்கண்ணாடி மூலம் மரப்பலகையில் சூரிய ஒளிக்கதிர்களை உருவத்துக்கேற்ப பாய்ச்சுவார்.
    • உருவ வடிவத்திற்கு ஏற்ற மாதிரி நெருப்பு பிடிக்கும். பின்னர் நெருப்பு பற்றிய இடத்தில் கரி படிந்து உருவம் பிறக்கும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருவிழந்தூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30). இவர் தனது திறமைகளால் பல்வேறு ஓவியங்களை சூரிய ஒளிக்கதிர் மூலம் பூதக்கண்ணாடியால் மரப்பலகையில் குவித்து ஓவியம் வரைந்து வருகிறார்.

    அதாவது பூதக்கண்ணாடி மூலம் மரப்பலகையில் சூரிய ஒளிக்கதிர்களை உருவத்துக்கேற்ப பாய்ச்சுவார். அப்போது உருவ வடிவத்திற்கு ஏற்ற மாதிரி நெருப்பு பிடிக்கும். பின்னர் நெருப்பு பற்றிய இடத்தில் கரி படிந்து உருவம் பிறக்கும். இதன்பின் பஞ்சை வைத்து துடைத்து உருவத்துக்கு இறுதி வடிவம் கொடுப்பார். இந்த முறைக்கு 'பர்னிங் வுட் ஆர்ட்' என்று பெயர். இந்தியாவிலேயே இவர் ஒருவர் மட்டும்தான் இந்த முறையில் ஓவியம் வரைந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் தரங்கம்பாடி கடற்கரைக்கு சென்றார்.

    பின், அங்குள்ள டேனிஸ் கோட்டை முன்பு சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் மகாத்மா காந்தியின் உருவபடத்தை தனது திறமைகளால் சூரிய ஒளிக்கதிர் மூலம் மரப்பலகையில் வரைந்து அசத்தி உள்ளார்.

    மேலும், அவர் வரைந்த ஓவியத்தை வீடியோவாக பதிவு செய்து அதனை இணையதளத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த ஓவியம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
    • தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு படையினர் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    சென்னை:

    77-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்றும் அனைத்து மாநிலங்களிலும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

    தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு படையினர் ரோந்து சுற்றி வருகிறார்கள். சந்தேக நபர்களின் நடமாட்டத்தை கண்டறிந்து கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்காக சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மீனவ கிராமங்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. கடலோர பகுதிகளிலோ அல்லது கடல் பகுதியிலோ மர்மமான முறையில் ஏதாவது பொருட்கள் தென்பட்டால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக மீனவ கிராமங்களையொட்டி உள்ள போலீசாரும் மரைன் போலீசாரும் கூட்டாக மீனவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள்.

    சுதந்திர தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.

    இதையொட்டி அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவில்கள், வணிக வளாகங்கள், பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இது தவிர லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் கடந்த வாரம் முதலே சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் போது சந்தேகத்துக்கு இடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    விடுதிகளில் தங்குபவர்கள் பற்றிய முழு விவரங்களையும் லாட்ஜ் உரிமையாளர்கள் வாங்கி வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்து முக்கிய கோவில்கள் அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகங்கள் ஆகியவற்றிலும் போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள பகுதிகளில் நாச வேலைக்கு யாரேனும் திட்டமிட்டு உள்ளார்களா? என்பதை கண்டறிந்து அதனை முறியடிக்கும் வகையில் ரெயில்வே போலீசார் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி வைக்கிறார். இதையொட்டி, அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோட்டையை சுற்றி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    இன்றும், நாளையும் மாநிலம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுதந்திர தின பாதுகாப்பு தொடர்பான இந்த நடவடிக்கைகளை வருகிற 16-ந் தேதி வரை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    • லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை
    • 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

    நாகர்கோவில் :

    நாடு முழுவதும் 76-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடக்கிறது.

    இதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் தேசிய கொடி ஏற்றி வைக்கிறார். இதைத்தொடர்ந்து சிறந்த போலீசாருக்கு பதக்கங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

    பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி களும் நடக்கிறது. சுதந்திர தினத்தையொட்டி போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்றும் நடந்தது. மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், ஒத்திகை நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

    சுதந்திர தினம் கொண்டாட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடட்டுள்ளது. மைதானம் போலீசாரின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உ ள்ளது.

    மாவட்ட எல்லை பகுதி களில் உள்ள சோதனை சாவடிகளிலும் கண் காணிப்பு பலப்படுத்தப்பட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள். நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள கடற்கரை கிராமங்களி லும் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள் ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சுசீந்திரம் தாணுமாலை யன் சாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உட்பட அனைத்து கோவில்க ளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகி றார்கள். லாட்ஜ்களி லும் அதிரடி சோதனை நடத்தபபட்டது.

    கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் சந்தேகப்படும்படியாக நபர்கள் தங்கி உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்ட னர்.

    லாட்ஜில் உள்ள வருகை பதிவேட்டையும் அவர்கள் சோதனை செய்தனர். மார்த்தாண்டம், நாகர் கோவில் பகுதியில் உள்ள லாட்ஜ்களிலும் சோதனை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் போலீசார் இன்று 2-வது நாளாக சோதனை மேற்கொ ண்டனர். நாகர்கோவிலில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் முழுமையான சோதனைக்கு பிறகு அனுப்பி வைக்கப்பட் டது. மேலும் ரெயில்வே தண்டவாளங்களில் மெட் டல் டிடெக்டர் கருவியின் மூலம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    ரெயில்வே பாலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நாங்குநேரி, வள்ளியூர், இரணியல், குழித்துறை ரெயில் நிலையங்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    • காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார்.
    • பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார்.

    சென்னை:

    நாட்டின் 76-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் (15-ந் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சென்னை கோட்டையில் 15-ந் தேதி, காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி உரை நிகழ்த்த உள்ளார்.

    விழா மேடையில், 'தகைசால் தமிழர்' என்ற பெயரிலான விருதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தி.க. தலைவர் தலைவர் கி.வீரமணிக்கு வழங்குகிறார். டாக்டர் அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழா மேடையிலேயே வழங்கி கவுரவிப்பார் முன்னதாக, காலை 8.45 மணிக்கு 76வது சுதந்திர தின நாள் நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்பார். முதல்வருக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை தலைமை செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார்.

    இதையடுத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார்.

    பின்னர் கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும். இடத்துக்கு முதலமைச் சர் சென்று தேசியக் கொடியையேற்றி வைத்து தேசியக் கொடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வணக்கம் செலுத்துவார். இதையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துவார்.

    • வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தற்போது செயற்கை இலை ஓடுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • இதன் காரணமாக சுதந்திர தின விழா ஆணைக்கல்பாளையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    இந்தியாவின் சுதந்திர தின விழா ஒரு மாதம் ஆகஸ்ட் 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் ஈரோடு வ. உ. சி. விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழாக்கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    சுந்திர தினத்தன்று கலெக்டர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் மரியாதையை வாகனங்கள் சென்று பார்வையிடுவார்.

    அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெறும். சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகிகள் கவுரவிக்கப்படுவார்கள்.

    இந்நிலையில் இந்த வருடத்திற்கான சுதந்திர தின விழா ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்திற்கு பதில் ஆணைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

    ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தற்போது செயற்கை இலை ஓடுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தின விழா அங்கு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக சுதந்திர தின விழா ஆணைக்கல்பாளையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

    கலெக்டர் ராஜகோபால் சுன்கரா சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆணைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றுகிறார்.

    பின்னர் போலீஸ் மரியா தையை ஏற்றுக்கொள்கிறார். அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ -மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    ×