search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சுதந்திர தின விழா
    X

    காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சுதந்திர தின விழா

    • செங்கல்பட்டு நகராட்சியில் நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தேசிய கொடி ஏற்றினார்.
    • நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    நாட்டின் 77-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று, போலீசார் மற்றும் ஊர்காவல் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    பின்னர் 60 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்து 55 ஆயிரத்து 40 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் நிகழ்ச்சியில் மூவர்ண பலூன், வெண்புறாக்கள் பறக்க விடப்பட்டன. பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, தாசில்தார் புவனேஸ்வரன் கலந்து கொண்டனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தின் சார்பில் சுதந்திர தினவிழா ஆலபாக்கம் ஊராட்சியில் உள்ள வேன்பாக்கம் அரசினர் தொழில் பயிற்சி வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுது.

    செங்கல்பட்டு நகராட்சியில் நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தேசிய கொடி ஏற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார். நகரமன்ற துணை தலைவர் அன்பு செல்வன், நகராட்சி ஆணையர் இளம்பரிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கலெக்டர் ஆப்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன் களை பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து இனிப்புகளை வழங்கினார். மேலும் அரசின் பல்வேறு துறையின் மூலம் 29 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 59 லட்சத்து 58 ஆயிரத்து 191 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆப்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். விழாவில் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 22 போலீசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

    தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஹரிக்குமார், மீனாட்சி, உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா, துணை கலெக்டர் சுகபுத்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் காயத்ரி சுப்பிரமணி, பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு சிபின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்கோட்டையில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தமிழ்ச்செல்வன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். வக்கீல்கள் சங்கத் தலைவர் சீனிவாசன், செயலாளர் முனுசாமி, பொருளாளர் தினகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். துணைத் தலைவர் குமரவேல், செயல் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் பல கலந்து கொண்டனர்.

    போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் தேசியக்கொடி ஏற்றினார். போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் ரவி தேசியகொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். அத்திப்பட்டு ஊராட்சியில் தலைவர் சுகந்தி வடிவேல், பொன்னேரி நகராட்சியில் தலைவர் பரிமளம் விஸ்வநாதன், தட பெரும்பாக்கம் ஊராட்சியில் தலைவர் பாபு, கோட்டைக்குப்பம் ஊராட்சியில் தலைவர் சம்பத், ஜெகநாதபுரம் ஊராட்சியில் தலைவர் மணிகண்டன், மாதவரம் ஊராட்சியில் தலைவர் சுரேஷ், ஆண்டார் குப்பம் ஊராட்சியில் ஆர்த்தி ஹரி பாபு, பஞ்செட்டியில் தலைவர் சீனிவாசன், பெரிய கரும்பூரில் தலைவர் பாக்கியலட்சுமி, வேலூர் ஊராட்சியில் தலைவர் சசிகுமார், காட்டுப்பள்ளியில் தலைவர் சேதுராமன், கொடூரில் தலைவர் கஸ்தூரி மகேந்திரன், நாலூரில் தலைவர் சுஜாதா ரகு, வாயலூரில் தலைவர் கோபி, காட்டாவூரில் தலைவர் மங்கை உமாபதி, பெரும்பேட்டில் தலைவர் ராஜேஷ், பிரளையம் பாக்கத்தில் இலக்கியா கண்ணதாசன், சிறுவாக்கத்தில் தலைவர் சேகர் தலைமையில் தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டன.

    Next Story
    ×