search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திர தின விழா"

    • அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை வளாக இயக்குநர் புஷ்பராணி நட்டு வைத்தார்.

    மதுரை

    அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் மதுரை கீழக்குயில்குடி மையத்தில், 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    "தேச விழா முதன்மை விழா" என்ற கருப்பொருளில், "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" -ன் ஒருங்கிணைந்த பகுதியாக விழா கொண்டாடப்பட்டது. மதுரை வளாக இயக்குநர் பேராசிரியர் புஷ்பராணி தேசியக் கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவர் வளர்ச்சியும், கடமையும் என்ற தலைப்பில் பேசினார். விழாவில் மாணவிகள் பேச்சு, பாட்டு, கட்டுரை மற்றும் குழுப் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் தேசப்பற்றையும் அனைவரையும் அதில் தமக்குள்ள ஈடுபாட்டையும் வெளிப்படுத்தி உற்சாகப்படுத்தினர்.

    மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கணினியியல் துறை மாணவி நிலாபாரதி நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை வளாக இயக்குநர் புஷ்பராணி நட்டு வைத்தார்.

    • நிகழ்ச்சிக்கு வங்கி முன்னாள் ராணுவ வீரர் பாதுகாவலர் நடராஜ் தலைமை வகித்தார்.
    • இந்திய அரசு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கியுள்ளது.

    உடுமலை:

    உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்கம் சார்பில் உடுமலை நேதாஜி மைதானத்தில் சுதந்திர தின கொடியேற்று விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். டாக்டர் பாலகுமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் நாயப் சுபேதார் நடராஜ் தலைமையில் ராணுவ அணிவகுப்பு நடந்தது.

    தொடர்ந்து உடுமலை பாரத ஸ்டேட் வங்கியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வங்கி முன்னாள் ராணுவ வீரர் பாதுகாவலர் நடராஜ் தலைமை வகித்தார். வங்கி முதன்மை மேலாளர் ராபின்சன் தேசிய கொடி ஏற்றி வைத்து முன்னாள் ராணுவ நல சங்க அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் ராணுவ வீரர்கள் ,வங்கி பாதுகாவலர்கள் மதன் கோவிந்தராஜ், செல்வராஜ், நந்தகோ பால்,விஜயகுமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

    1971 ல் இந்தியா- பாகிஸ்தான் போரில் கலந்து கொண்டு வெற்றியடைந்ததற்காக இந்திய அரசாங்கம் அழகிரிசாமி மற்றும் முத்துக்காளை அழகுராஜ், சந்திரசேகர் ஆகியோருக்கு இந்திய அரசு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கியுள்ளது. இவர்களுக்கு வங்கி சார்பில் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை வளாகத்தில் சுதந்திர தின கொடி ஏற்றப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் நாயப் சுபேதார் நடராஜ் மற்றும் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தனர். இதில் டிரஸ்டிகள் கணேசன், பாலமுருகன், முன்னாள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவி ,ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சத்யம் பாபு ,சைனிக் பள்ளி சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    உடுமலை உழவர் சந்தை எதிரில் உள்ள முழு நேர கிளை நூலகம் எண் இரண்டில் நூலக வாசகர் வட்டத்துடன் இணைந்து முன்னாள் ராணுவ வீரர்கள் கொடியேற்றினர். இதில் பணி நிறைவு நூலகர் கணேசன், நூலகர்கள் மகேந்திரன், பிரமோத் மற்றும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ருத்தரப்பா நகரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் நடந்த கொடியேற்று விழாவில் நகராட்சி துணைத் தலைவர் கலைராஜன் தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றி வைத்து ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க செயலாளர் சக்தி ,செயலாளர் சிவக்குமார், துணைத்தலைவர் சுபேதார், மேஜர் கோவிந்தராஜ் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

    • வன்முறையற்ற பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும்.
    • முடிவில் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் நன்றி கூறினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகளின் சார்பில் சுதந்திர தி ன விழா கொண்டா டப்பட்டது.

    இதற்கு கல்லூரியின் தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றினார்.

    கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்ப வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் ஆறுமுகம் அனை வரையும வரவேற்றார். நிகழ்ச்சியில் தாளாளர் பெருமாள் பேசுகையில், தாய்மொழி யையும், தாய் நாட்டையும் இரு கண்களாக போற்றி பாதுகாக்க வேண்டும். தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக எண்ணற்ற தியாகிகள் தங்களின் உயிரை இழந்து புகழ் சேர்த்துள்ளனர்.

    வன்முறையற்ற பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும் என கூறினார்.

    இதில் நிர்வாகஅலுவலர் சுரேஷ், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் நன்றி கூறினார்.

    • கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
    • தேசியக்கொடிக்கு செங்கமலம் யானை மரியாதை செலுத்தியது.

    திருவாரூர்:

    மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

    அப்போது அங்கு பாகனுடன் ராஜகோபாலசாமி கோவில் யானை செங்கமலம் வந்தது.

    தொடர்ந்து யானை செங்கமலம் தனது துதிக்கையை தூக்கி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியது.

    பாப் கட்டிங் செங்கமலம் என பக்தர்களால் அழைக்கப்பட்டு புகழ்பெற்ற செங்கமலம் யானை தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது கண்கொள்ளாக்காட்சியாக இருந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

    • சுதந்திர தின விழா தருமபுரி முன்னாள் படை வீரர்கள் நல உதவி மையத்தில் நடந்தது.
    • அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல சங்கம் மற்றும் தமிழக ஒருங்கிணைந்த பட்டாளம் சார்பில் சுதந்திர தின விழா தருமபுரி முன்னாள் படை வீரர்கள் நல உதவி மையத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் லெப்டினன்ட் கர்னல் தியாகராஜன் தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றி வைத்தார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    விழாவில், லெப்டினன்ட் கர்னல் சேரன் செங்குட்டுவன், கவுரவ தலைவர் உமாபதி, மாவட்ட தலைவர் நரசிம்மன், செயலாளர் புகழேந்தி, தமிழக ஒருங்கிணைந்த பட்டாள அமைப்பின் மாநில செயலாளர் வையாபுரி, செயற்குழு உறுப்பினர்கள் சுந்தர்ராஜன், சேகரன், சோமசுந்தரம், முனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 40 பேருக்கு அவரது சேவையினை பாராட்டி கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
    • மருத்துவர் கனிமொழிக்கு மருத்துவ சேவையினை பாராட்டி கலெக்டர் சாந்தி நற்சான்றிதழை வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    இந்த விழாவில் தருமபுரி மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலத்துறை சார்பில் சிறப்பாக மருத்துவ சேவை செய்த மருத்து வர்கள்,செவிலியர்கள், மருந்தாளுநர்கள், எக்ஸ்ரே டெக்னீசியன்கள், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள், அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், முதல் -அமைச்சரின் விரிவான பாதுகாப்பு திட்ட மருத்துவர்கள் என மொத்தம் 40 பேருக்கு அவரது சேவையினை பாராட்டி கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    அந்த வகையில் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கேடயமும், அதே மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு மருத்துவராக பணிபுரிந்து வரும் மருத்துவர் கனிமொழிக்கு மருத்துவ சேவையினை பாராட்டி கலெக்டர் சாந்தி நற்சான்றிதழை வழங்கினார்.

    • தனது உரையில் இந்திய நீதித்துறையை மோடி புகழ்ந்து பேசினார்
    • தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருந்ததால் அனைவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை

    இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புது டெல்லியிலுள்ள செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    2014ல் முதல் முறை பிரதமராக பதவியேற்றதில் தொடங்கி இவ்வருடம் 10-வது முறையாக பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொடியேற்றம் முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றினார். சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த முக்கிய விருந்தினர்கள் மற்றும் பொது மக்கள் உரையை கேட்டனர்.

    அப்போது பேசிய பிரதமர் மாநில மொழியில் பாடத்திட்டங்களை அமைப்பது குறித்து தனது அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து தெரிவித்தார். அத்துடன் நில்லாமல் இந்திய நீதித்துறையை புகழ்ந்து பேசினார். அப்போது பிரதமர் கூறியதாவது:

    "மாநில மொழிகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. தீர்ப்புகளில் உள்ள செயலாக்க பாகம் (operating part) இனி மாநில மொழிகளிலும் மக்களுக்கு கிடைக்கும். இதற்காக, இந்த பணியை மேற்கொண்ட உச்ச நீதிமன்றத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன்," இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதனை கேட்டதும் விருந்தினர்களில் ஒருவராக அமர்ந்திருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மனம் நெகிழ்ந்து மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரை நோக்கி கும்பிட்டார். பின்னர் இது குறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது:

    "ஜனவரி 26 குடியரசு தினத்தையும், உச்ச நீதிமன்றத்தின் தொடக்க நாளான ஜனவரி 28-ஐ கொண்டாடும் விதமாகவும் இந்த வருடம் இந்த மொழிபெயர்ப்பு முயற்சி தொடங்கப்பட்டது. இதுவரை 9,423 தீர்ப்புகள் இந்திய மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழ் உட்பட 14 மொழிகள் அடங்கும். உச்ச நீதிமன்றம் தோன்றிய நாளிலிருந்து இதுவரை வழங்கப்பட்ட 35,000 தீர்ப்புகளும் விரைவில் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்படும். தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருந்ததனால் 99 சதவீத குடிமக்களுக்கு அவற்றை புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை," இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மோடியின் பாராட்டும், அதற்கு தலைமை நீதிபதியின் நன்றி தெரிவித்தலும் காண்போரை பெருமையடைய செய்தது. இது சம்பந்தமான வீடியோக்களும், புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

    • தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்க ளுக்கு பாராட்டு சான்றி தழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.
    • 29 பயனாளிகளுக்கு ரூ.94 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான அரசு நல திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நடந்தது.

    விழாவில் மாவட்ட கலெக்டர் சாந்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.

    புறாக்களை பறக்க விட்டார். பின்னர் அவர் திறந்த வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் கலெக்டர் வானில் வெண் புறாக்களை பறக்க விட்டார்.

    தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.

    நல திட்ட உதவி:

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 50 ஆயிரம் மதிப்பில் 2 பேருக்கும், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 3 பேருக்கு பதக்கமும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் மேம்பாட்டுகழகம் (தாட்கோ) சார்பில் ரூ.5 லட்சத்து 98 ஆயிரத்து 806 மதிப்பில் 2 பேருக்கும், வருவாய்த்துறை சார்பில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் 5 பேருக்கும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்து 500 மதிப்பில் 3 பேருக்கும், தொழிலாளர் நலத்துறை சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் ரூ.3 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் 5 பேருக்கும் என பல்வேறு அரசு துறைகள் சார்பில் 29 பயனாளிகளுக்கு ரூ.94 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான அரசு நல திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வேறு வண்ண மிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியில், 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • பள்ளி யின் சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

    மொரப்பூர், 

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர், ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியில், 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    இதில் பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன், பள்ளி இயக்குநர் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வர் வெற்றிவேல் செல்வம் மற்றும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் பொது மக்களி டமும், கல்லூரி மாணவர்களிடமும், தேசப்பற்றை ஊட்டு வதற்காக அரூர் காவல் நிலையத்திற்கு அருகிலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலும், தேசப்பற்று மிக்க கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    இதில் மாணவர்கள் தேசப்பற்று மிக்கப் பாடல்கள் பாடியும், சொற்பொழிவுகள் ஆற்றியும், நாடகம் மூலம் நடித்தும் தங்கள் தேசப்பக்தியை வெளிப்படுத்தினர். மேலும் மாணவர்கள் அரூர் பொதுமக்களிடம் 5000 தேசிய கொடியை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளியின் சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

    மேலும் பள்ளி வளாகத்தில் மழலை மாணவர்கள் தேசப்பற்று மிக்க பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    • நாட்டின் 76-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • மாவட்ட கலெக்டர் உமா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    நாமக்கல்:

    நாட்டின் 76-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நடந்தது.

    மாவட்ட கலெக்டர் உமா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக கலெக்டர் உமா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் ஆகியோர் வெண்புறாக்களையும், வண்ணப்பலூன்களையும் வானில் பறக்க விட்டனர்.

    மேலும் சுதந்திர போரட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் உமா கதர் ஆடை அணிவித்து பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் அணிவகுப்பினை சிறப்பாக நடத்தியதற்காக 16 ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினருக்கும், காவல்துறை பேண்ட் வாத்தியக்குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்து, கேடயங்களை வழங்கினார்.

    விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.83,500 வீதம் 2 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், தாட்கோ மூலம் 1 பயணியர் வாகனம், 2 டிராக்டர், 14 அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு ஆணை என மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.2.36 மதிப்பிட்டிலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு சேமிப்பு கடன், 1 பயிர்கடன் என மொத்தம் ரூ.8 லட்சம் மதிப்பீட்டிலும் வழங்கினார். தோட்டக்கலைத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு நிழல்வலை குடில், 1 பயனாளிக்கு நுண்ணீர்பாசனம் என மொத்தம் ரூ.2.55 லட்சம் மதிப்பீட்டிலும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு 18.88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், வேளாண்மை த்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2,260 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.5,580 வீதம் ரூ.11.160 மதிப்பில் இலவச தையல் எந்திரம், மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.30 லட்சம் மதிப்பில் 2 பயனாளிகளுக்கு கடனுதவிகள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் ரூ.2.11 கோடி மதிப்பில் 3 வங்கி பெருங்கடனுதவியும், 2 பயனாளிகளுக்கு முதல்- அமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை என ஆக மொத்தம் 36 பயனாளிகளுக்கு ரூ.5.08 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

    சிறப்பாக பணியாற்றிய 35 காவல்துறை அலுவலர்கள், 180 அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 215 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

    கண்கவர் கலைநிகழ்ச்சி

    விழாவில் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், நாமக்கல் அரசு தொடக்கப்பள்ளி, ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், ராசிபுரம் ஆர்.சி தூய இருதய துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் என மொத்தம் 6 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 492 மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக்கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    இவ்விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவர் சாரதா, நாமக்கல் நகர்மன்றத் தலைவர் கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செல்வகுமரன், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பிரியா, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணன் (நாமக்கல்), கௌசல்யா (திருச்செங்கோடு), மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன், துறைச்சார்ந்த அலுவலர்கள், அரசுத்துறை ஊழியர்கள், காவல்துறையினர், மாணவ, மாணவியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
    • 142 அடி உயரமுள்ள கோபுரத்தில் ஏற்றுவதற்காக ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட தேசியக்கொடியை படத்தில் காணலாம்.

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 142 அடி உயரமுள்ள கோபுரத்தில் ஏற்றுவதற்காக ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட தேசியக்கொடியை படத்தில் காணலாம்.

    • நகர மன்ற தலைவர் தேசியக்கொடியை ஏற்றினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, பொறியாளர் வே.சம்பத், மேலாளர் சுகந்தி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

    தேசியக்கொடியை நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஏற்றினார்.

    சிறப்பு அழைப்பாளராக அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்த நகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் விஜயகுமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார் நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

    குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் எம். கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக்குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அருண்முரளி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமலுவிஜயன் எம்எல்ஏ கொடி ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

    இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கள்ளூர்ரவி, ஏகாம்பரம், நகர மன்ற உறுப்பினர்கள் அரசு, கோவிந்தராஜ், மனோஜ், பாபு, நவீன்சங்கர், ஜாவித்அகமது, சுமதிமகாலிங்கம், ரேணுகாபாபு, இந்துமதிகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×