search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறையில்"

    • சேலம் மாவட்–டம், ஜல–கண்–டா–பு–ரம் அருகே சவு–ரி–யூ–ரில் நவோ–தயா அரசு மேல்–நி–லைப்–பள்ளி உள்–ளது. இந்–தப் பள்–ளி–யில் 14 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வரு–கி–றார்.
    • அங்கு மற்ற மாண–வி–கள் யாரும் இல்–லாத நேரத்–தில், கணித ஆசி–ரி–யர் அந்த 9-ம் வகுப்பு மாண–வியை கட்–டி–பி–டித்து பாலி–யல் தொல்லை கொடுத்–த–தாக கூறப்–ப–டு–கிறது.

    ஓம–லூர்:

    சேலம் மாவட்–டம், ஜல–கண்–டா–பு–ரம் அருகே சவு–ரி–யூ–ரில் நவோ–தயா அரசு மேல்–நி–லைப்–பள்ளி உள்–ளது. இந்த பள்–ளி–யில் கணித ஆசி–ரி–ய–ராக கன்–னி–யா–கு–மரி மாவட்–டம் நாகர்–கோ–விலை சேர்ந்த சர–வ–ண–கு–மார் (வயது 44) என்–ப–வர் வேலை பார்த்து வரு–கி–றார்.

    இந்–தப் பள்–ளி–யில் 14 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வரு–கி–றார். இந்–த–நி–லை–யில் நேற்று முன்–தி–னம் மாலை 3 மணி அள–வில் கணித ஆசி–ரி–யர் சர–வ–ண–கு–மார் அந்த மாண–வி–யி–டம் அடை–யாள பதிவு எண் எழுத சோதனை கூடத்–திற்கு அழைத்து உள்–ளார். அங்கு மற்ற மாண–வி–கள் யாரும் இல்–லாத நேரத்–தில், கணித ஆசி–ரி–யர் அந்த 9-ம் வகுப்பு மாண–வியை கட்–டி–பி–டித்து பாலி–யல் தொல்லை கொடுத்–த–தாக கூறப்–ப–டு–கிறது.

    இத–னால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, வீட்–டுக்கு சென்று நடந்த விவ–ரங்–களை தனது பெற்–றோ–ரி–டம் கூறி கதறி அழு–துள்–ளார். உடனே அந்த மாண–வி–யின் பெற்–றோர் ஓம–லூர் அனைத்து மக–ளிர் போலீ–சில் புகார் அளித்–த–னர். அதன்–பே–ரில் ஆசி–ரி–யர் சர–வண குமார் மீது போக்சோ சட்–டத்–தின் கீழ் போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து அவரை கைது செய்–த–னர்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி சஸ்பெண்டு செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.

    • துப்பாக்கி தயாரித்ததாக கடந்த மே மாதம் ஓமலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • சேலம் மத்திய சிறையில் உள்ள 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று ஆஜர் படுத்தினர்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த என்ஜி னீயர் சஞ்சய் பிரகாஷ் (வயது 24), எருமாபாளையத்தை சேர்ந்தவர் பி.சி.ஏ.பட்டதாரி நவீன்சக்ரவர்த்தி (25), அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்தவர் கபிலன் (25) .

    இவர்கள் துப்பாக்கி தயாரித்ததாக கடந்த மே மாதம் ஓமலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறபபு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக சேலம் மத்திய சிறையில் உள்ள 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று ஆஜர் படுத்தினர்.

    அப்போது 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க என்.ஐ.ஏ. போலீ சார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசா ரணை வருகிற 16ந் தேதி மீண்டும் சென்னை கோர்ட்டில் நடைபெற உள்ளது.

    இதையடுத்து மீண்டும் பலத்த பாதுகாப்புடன் சேலத்திற்கு அழைத்து வரப்பட்ட 3 பேரும் சேலம் மத்திய சிறையில் நேற்றிரவு அடைக்கப்பட்டனர். 

    • கோவிலில் இருந்த 6 சி. சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
    • இதையடுத்து வைரவேல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் அவர் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்ப ட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பா–ளையத்தில் உள்ள மாரியம்மன், பாலமுருகன் கோவிலுக்குள் கடந்த 23-ந் தேதி நள்ளிரவு புகுந்க மர்ம நபர் 2 கோவில் உண்டியல்களை உடைத்து ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றார்.

    இது குறித்து கோவில் நிர்வாகிகள் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் கோவிலில் இருந்த 6 சி. சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் உண்டியல் உடைப்பில் ஈடுபட்டது ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்த வைரவேல் (20) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வைர வேலை கைது செய்தனர்.

    வைரவேல் மீது ஏற்கனவே இரண்டு கஞ்சா வழக்குகள், கத்தியை காட்டி பணம் பறித்தது, திருட்டு வழக்குகள் உட்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.இதையடுத்து வைரவேல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் அவர் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்ப ட்டார்.

    அந்தியூரில் சிறுமியை திருமணம் செய்து கர்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    பவானி:

    அந்தியூர் காளியப்பா வீதியை சேர்ந்தவர் சிவசக்தி (24). கூலி தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திரு மணம் செய்து கொண்டார்.

    கடந்த 2 மாதத்துக்கு முன்பு சிவசக்தி தன்னுடைய மனைவியை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அப்போது அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர் 17 வயது சிறுமி என தெரிய வந்தது.

    இதை அடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளுக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர், தகவலின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் விசாரணை நடத்தி பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின்பேரில் சிவசக்தி மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சென்ற போது சிவசக்தி தலைமறைவாகி விட்டார்.

    இதை தொடர்ந்து தலை மறைவான சிவசக்தியை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.

    இநத நிலையில் சிவசக்தி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று சிவசக்தியை போக்சோ சட்ட த்தின் கீழ் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரை ஈரோடு மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×