search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்சோவில்"

    • சேலம் பெரமனூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
    • கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் வெளியில் சென்று விட்டு சின்னவர் வீட்டிற்கு வந்தபோது, மகாலட்சுமி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    ேலம்:

    சேலம் 4 ரோடு அருகே உள்ள பெரமனூர் நாராயண பிள்ளை தெருவில் வசிப்பவர் சின்னவர் (28).

    இவர் கடந்த ஓராண்டிற்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த சின்னவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரை காதல் திருமணம் செய்தார்.

    இருவரும் பெரமனூர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி சின்னவர், மகாலட்சுமியிடம் ஏன் வீட்டை சுத்தப்படுத்தி வைக்கவில்லை என கேட்டார். இதனால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    அதன் பின்னர் வெளியில் சென்று விட்டு சின்னவர் வீட்டிற்கு வந்தபோது, மகாலட்சுமி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே திருமணமாகி 9 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்ததால் சேலம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார்.

    இதில் மகாலட்சுமியின் பள்ளி சான்றிதழ் ஆய்வு செய்தபோது 17 வயதில் மகாலட்சுமியை சின்னவர் திருமணம் செய்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக ஆர்.டி.ஓ. சேலம் பள்ளப்பட்டி போலீசுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து பள்ளப்பட்டி போலீசார் 17 வயது சிறுமியை திருமணம் செய்ததாக சின்னவரை போக்சா வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஆத்தூர் அருகே உள்ள தென்குமரை கிரா மத்தை சேர்ந்தவர் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8-ம் வகுப்பு மாணவியை பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது வழிமறித்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
    • இந்த சில்மிஷம் குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் கூறினார். இது குறித்து மாணவியின் தாயார் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தென்குமரை கிரா மத்தை சேர்ந்தவர் கோவர்த்தனன் (வயது 33), கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8-ம் வகுப்பு மாணவியை பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது வழிமறித்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சில்மிஷம் குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் கூறினார். இது குறித்து மாணவியின் தாயார் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், கோவர்த்தனன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாப்பநாயக்கன் பட்டியைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
    • 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி குழந்தை திருமணம் செய்தாவரை போக்சோ சட்டத்தின் கீழ் ‌ வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, வசந்தபுரம் அருகே உள்ள நடந்தை, மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் தனசேகரன் (வயது 23) கூலித் தொழிலாளி. இவர் பாப்பநாயக்கன் பட்டியைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஊர்நல அலுவலர் சுமதிக்கு தகவல் கிடைத்தது.

    அதைதொடர்ந்து, பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தார். அதன்பேரில் பரமத்திவேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி, 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி குழந்தை திருமணம் செய்தாக தனசேகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் ‌ வழக்கு பதிவு செய்து கைது செய்தார். பின்னர், பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தனசேகரன் சிறையில் அடைக்கப்பட்டார். 

    • தாரமங்கலம் அருகே உள்ள மோட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
    • இந்தநிலையில் நேற்று கார்த்திக்கை மடக்கி பிடித்தனர். சிறுமியையும் மீட்டனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள மோட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் கார்த்திக்(வயது 22). கல் அறுக்கும் தொழிலாளி. இவர் 17 வயது சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.

    இதுபற்றி தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில், புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கையும், சிறுமியையும் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று கார்த்திக்கை மடக்கி பிடித்தனர். சிறுமியையும் மீட்டனர். இதை தொடர்ந்து கார்த்திக்கை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

    அந்தியூரில் சிறுமியை திருமணம் செய்து கர்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    பவானி:

    அந்தியூர் காளியப்பா வீதியை சேர்ந்தவர் சிவசக்தி (24). கூலி தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திரு மணம் செய்து கொண்டார்.

    கடந்த 2 மாதத்துக்கு முன்பு சிவசக்தி தன்னுடைய மனைவியை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அப்போது அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர் 17 வயது சிறுமி என தெரிய வந்தது.

    இதை அடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளுக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர், தகவலின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் விசாரணை நடத்தி பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின்பேரில் சிவசக்தி மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சென்ற போது சிவசக்தி தலைமறைவாகி விட்டார்.

    இதை தொடர்ந்து தலை மறைவான சிவசக்தியை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.

    இநத நிலையில் சிவசக்தி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று சிவசக்தியை போக்சோ சட்ட த்தின் கீழ் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரை ஈரோடு மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×