search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்சோவில் கைதான வாலிபர் சிறையில் அடைப்பு
    X

    போக்சோவில் கைதான வாலிபர் சிறையில் அடைப்பு

    அந்தியூரில் சிறுமியை திருமணம் செய்து கர்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    பவானி:

    அந்தியூர் காளியப்பா வீதியை சேர்ந்தவர் சிவசக்தி (24). கூலி தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திரு மணம் செய்து கொண்டார்.

    கடந்த 2 மாதத்துக்கு முன்பு சிவசக்தி தன்னுடைய மனைவியை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அப்போது அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர் 17 வயது சிறுமி என தெரிய வந்தது.

    இதை அடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளுக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர், தகவலின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் விசாரணை நடத்தி பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின்பேரில் சிவசக்தி மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சென்ற போது சிவசக்தி தலைமறைவாகி விட்டார்.

    இதை தொடர்ந்து தலை மறைவான சிவசக்தியை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.

    இநத நிலையில் சிவசக்தி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று சிவசக்தியை போக்சோ சட்ட த்தின் கீழ் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரை ஈரோடு மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×