search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராயம் விற்பனை"

    • சிறுபாக்கம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக சிறுபாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    சிறுபாக்கம் அருகே கீழ ஒரத்தூர் கிராமத்தின் ஏரிக்கரை யில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக சிறுபாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் அப்பகுதிக்கு சென்ற வேப்பூர் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ஜ.ஏந்தல் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை (வயது 75), கள்ளக்குறிச்சி தாலுக்கா அசக்களத்தூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி (55) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • போலீசார் உலகுடையாம்பட்டு, குளத்தூர், விரியூர், ஊராங்காணி ஆகிய கிராமங்களில் ரோந்துபணி மேற்கொண்டனர்.
    • கைது செய்து, அவர்களிடமிருந்து 450 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் உலகுடையாம்பட்டு, குளத்தூர், விரியூர், ஊராங்காணி ஆகிய கிராமங்களில் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை, வயல்வெளி, வீடுகளின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததாக சிவபுரம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (32), குளத்தூரை சேர்ந்த பட்டம்மாள் (50), விரியூரை சேர்ந்த ஜான் கென்னடி (36), குரும்பாலூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் (22), ஊராங்காணி கிராமத்தை சேர்ந்த வேலு (50) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 450 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

    • ரோந்து பணியின்போது சிக்கினர்
    • சிறையில் அடைப்பு

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இடத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதனை யடுத்து வேப்பங்குப்பம் சப்- இன்ஸ்பெக்டர்கள் இன்பரசன், விஜயகுமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மேல்அரசம்பட்டு ஆற்று ஓடையில் சாராயம் விற்பனை செய்து வந்த சீனிவாசன் (வயது49) என்பவரையும், அதே போல் அகரம் கிராமத்தில் வீட்டின் பின்புறம் வைத்து சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சிவானந்தம் (35) என்பவரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் அரசம்பட்டு பகுதியில் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் அருகே உள்ள அரசமரத்தடியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(வயது 42) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டார்.
    • அவர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்கம், தனிப்படை சப்-இன்ஸ் பெக்டர்கள் திருமால், மியாட்மனோ மற்றும் போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தொழு வந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சாது (29) என்பவர் தனது வீட்டு பின்புறம் சாராயம் விற்றார். இதை பார்த்த போலீ சார் அவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

    மேலும் ரங்கப்பனூரை சேர்ந்த ராஜேந்திரன் (55), மல்லாபுரம் முத்துராமன் (45), புளியங்கோட்டை பழனியம்மாள் (45), புதுப்பேட்டை தனபாக்கியம் (70) ஆகியோர் தங்களது வீடுகளுக்கு பின்புறம் சாராயம் விற்றனர். உடன் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர்.

    • வீட்டில் சாராயம் பதுக்கி விற்றனர்.
    • போலீசாரை பார்த்ததும் தப்பிக்க முயற்சி செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே மல்லிகை ப்பாடி கிராமத்தைச் சேர்ந்த வெங்க டேசன் (வயது 37), ரவி (46). இவர்கள் வீட்டில் பதுக்கி சாராயம் விற்றனர். உடனே போலீசார் அங்கு விரை ந்தனர். போலீசாரை பார்த்ததும் தப்பிக்க முயற்சி செய்தனர். உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்த னர். 

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 10 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் புதுப்பாலப்பட்டு சோதனை சாவடி அருகே தீவிர ரோந்துபணி மேற் கொண்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குளத்தூர் கிராமத்தை சேர்ந்த முனியன்(38), ஆரூர் கிராமத்தை சேர்ந்த விஸ்வ நாதன்(42) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    • கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த ஆறுமுகம் மற்றும் உதயசூரியன் ஆகியோர் வீடுகளில் மொத்தம் 110 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் வடகனந்தல் ஊரைச் சேர்ந்த தோப்புத் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 56). இவர் தனது வீட்டின் அருகில் கள்ள சாராயம் வைத்து விற்பனை செய்வதாக கச்சிராயபாளையம் போலீசருக்கு தகவல் வந்தது. அதன்படி சப்இன்ஸ்பெக்டர் ராமர் வடக்கனந்தல் தோப்புத் தெருவில் உள்ள ஆறுமுகம் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர.

    அப்போது அருகில் 2 லாரி டியூப்பில் 55 லிட்டர் கள்ள சாராயம் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதேபோல் வடக்க நந்தல் கடை தெரு போகும் பாதையில் உதயசூரியன் அவர் தனது வீட்டின் அருகில் கள்ள சாராயம் வைத்து விற்பனை செய்து வருகிறார் என்ற தகவல் கச்சிராயபாளையம் போலீசாருக்கு தெரியவந்தது.

    அதன் அடிப்படையில் கச்சிராயபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்ர் ஏழுமலை கடைத்தெரு போகும் பாதை உதயசூரியன் வீட்டிற்கு சென்று சோதனைசெய்தனர்.

    அங்கு 2 லாரி டியூப்பில் 55 லிட்டர் கள்ள சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த ஆறுமுகம் மற்றும் உதயசூரியன் ஆகியோர் வீடுகளில் மொத்தம் 110 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு ஆறுமுகம், உதயசூரியன் ஆகிய 2 பேரை கைதுசெய்தனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 55 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் அரசம்பட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசம்பட்டு மணிநதி பாலம் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த ராமர் (வயது 48), பாசார் கிராமம் அஞ்சலை (59) ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • அமரன், ஆறுமுகம், ரவி ஆகிய 3 பேர் சாராயம் விற்பனை செய்வதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஆறுமுகம் தப்பித்து ஓடி விட்டார். அமரன், ரவி ஆகிய 2 பேரை கைது செய்து திண்டிவனம் சிறையில் அடைத்தனர்.

    விழுப்புரம்:

    மரக்காணத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர்கள் அமரன், ஆறுமுகம், ரவி ஆகிய 3 பேர் சாராயம் விற்பனை செய்வதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் மரக்காணம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் மரக்காணத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் ஆய்வு செய்தனர். அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அமரன் (வயது 29). ரவி (32), ஆறுமுகம் (42) ஆகியோரை பிடித்தனர். இதில் ஆறுமுகம் தப்பித்து ஓடி விட்டார். அமரன், ரவி ஆகிய 2 பேரை கைது செய்து திண்டிவனம் சிறையில் அடைத்தனர். இவர்களிலிருந்து100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    • வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்ததாக அரசராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (51) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செந்தில் (41) அதே பகுதியில் குன்று மேட்டு அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து, அவரிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்ததாக அரசராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (51) என்பவரை போலீசார் கைது செய்து, 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் புதுப்பாலப்பட்டில் பூபதி (50), பாச்சேரி கிராமத்தில் சக்தி் (28), சங்கராபுரம் தாமோதரன் (21), ஊராங்காணியில் தண்ணீர் தொட்டி அருகே சாராயம் விற்றதாக வேலு (50) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    • சங்கராபுரம் அருகே கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சங்கராபுரம் அருகே தொண்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த யோகிதாஸ் (29) என்பவர் கடந்த மாதம் 15-ந் தேதி அவரது வீட்டின் பின்புறம் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும்போது பகண்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 114 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. இவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாரயம் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

    இவர் மீது பகண்டை காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் க்கு பரிந்துரை செய்தார். அதன்படி மேற்படி நபரை ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி யோகிதாஸை, போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

    ×