என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 55 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் அரசம்பட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசம்பட்டு மணிநதி பாலம் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த ராமர் (வயது 48), பாசார் கிராமம் அஞ்சலை (59) ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
Next Story






