என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 5 பேர் கைது
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டார்.
- அவர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்கம், தனிப்படை சப்-இன்ஸ் பெக்டர்கள் திருமால், மியாட்மனோ மற்றும் போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தொழு வந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சாது (29) என்பவர் தனது வீட்டு பின்புறம் சாராயம் விற்றார். இதை பார்த்த போலீ சார் அவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
மேலும் ரங்கப்பனூரை சேர்ந்த ராஜேந்திரன் (55), மல்லாபுரம் முத்துராமன் (45), புளியங்கோட்டை பழனியம்மாள் (45), புதுப்பேட்டை தனபாக்கியம் (70) ஆகியோர் தங்களது வீடுகளுக்கு பின்புறம் சாராயம் விற்றனர். உடன் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர்.
Next Story