search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டர் சட்டத்தில் கைது"

    • குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டவர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.
    • ஆத்திரம் அடைந்த கணேசன் சக தொழிலாளி ராதாகிருஷ்ணனை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    நாகர்கோவில் :

    தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 50). இவர் மார்த்தாண்டம் பம்பம் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    அதே ஓட்டலில் நெல்லை ஆலங்குளம் நெட்டூரை சேர்ந்த கணேசன் (45) என்பவரும் வேலை பார்த்தார். இருவ ருக்கும் இடையே உணவு சப்ளை செய்வதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கணேசன் சக தொழிலாளி ராதாகிருஷ்ணனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக மார்த் தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்த னர்.

    கைது செய்யப்பட்ட கணேசன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயில் அடைக்கப் பட்டிருந்தார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் ஸ்ரீதர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கணேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தர விட்டார்.

    இதையடுத்து மார்த் தாண்டம் இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையிலான போலீசார் கணேசனை நாகர்கோவில் ஜெயிலில் இருந்து பாளையங் கோட்டை ஜெயிலில் அடைத்தனர். குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டவர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

    • கள்ளக்காதலை கண்டித்ததால் வாலிபரை குத்தி கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
    • எஸ்.பி பிரிந்துரையின் பேரில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் டொம்பு சேரி கிழக்குதெருவை சேர்ந்தவர் ராஜா(33). இவர் கோவையில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவரது அண்ணன் மருத முத்துவின் மனைவிக்கும், டொம்புசேரியை சேர்ந்த பிரவீன்(24) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

    இதனை ராஜா கண்டித்து வந்துள்ளார். இருந்தபோதும் அவர்களது கள்ளத்தொடர்பு தொடர்ந்தது. இதனால் கடந்த 26.8.23-ந்தேதி ராஜாவுக்கும், பிரவீனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரவீன் கத்தியால் ராஜாவை குத்தி கொன்றார்.

    இதனையடுத்து பழனி செட்டிபட்டி போலீசார் பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பிரவீன் மீது குண்டர்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை கலெக்டர் ஏற்றுக்கொ ண்டதை தொடர்ந்து பிர வீன் குண்டர் தடுப்பு சட்ட த்தின்கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • ஒரு வருட காலம் காவலில் வைக்க உத்தரவு
    • ஆணையை ஜெயில் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த, ஆற்காடு அப்பாய் தெருவை சேர்ந்த தமிழ்செல்வன்(எ) செல்லா (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் வளர்மதி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்செல்வன் (எ) செல்லாவை ஒரு வருட காலம் குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அதற்கான ஆணையை ஜெயில் அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

    • வருசநாடு அருகில் உள்ள காந்திபுரத்தை சேர்ந்தவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது உறவினரை கொலைசெய்து விட்டு சிறைக்கு சென்றவர்.
    • பின்னர் விடுதலையாகி ஊருக்குள் சுற்றி வந்ததால் அவருக்கு யாரும் பெண் தரவில்லை. இதனால் சைக்கோ வாலிபர் போல பெண்களை கேலி செய்து வந்துள்ளார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள காந்திபுரத்தை சேர்ந்தவர் சொக்கர் (வயது 35). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது உறவினரை கொலைசெய்து விட்டு சிறைக்கு சென்றவர். பின்னர் விடுதலையாகி ஊருக்குள் சுற்றி வந்ததால் அவருக்கு யாரும் பெண் தரவில்லை. இதனால் சைக்கோ வாலிபர் போல பெண்களை கேலி செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 2ம் தேதி அதே பகுதியை சேர்ந்த சமுத்திரம் (53) என்பவரை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்கொலை சம்பவங்களில் ஈடுபட்ட அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தனர்.

    இதனை தொடர்ந்து சொக்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் ஷஜீவனா உத்தரவின் பேரில் சொக்கர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • குண்டர் சட்டத்தில் குப்புராஜை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் பரிந்துரை செய்தார்.
    • அரூர் போலீசார் குப்புராஜை குண்டர் சட்டத்தில் மீண்டும் கைது செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள எஸ்.பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புராஜ் (வயது 36). இவர் மீது சாராயம் காய்ச்சியது தொடர்பான வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் அண்மையில் சாராயம் காய்ச்சியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது 450 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

    இதையடுத்து குண்டர் சட்டத்தில் குப்புராஜை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் பரிந்துரை செய்தார்.

    இந்த பரிந்துரையை ஏற்று குண்டர் சட்டத்தின் கீழ் குப்புராஜை கைது செய்ய கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். இதையடுத்து அரூர் போலீசார் குப்புராஜை குண்டர் சட்டத்தில் மீண்டும் கைது செய்தனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பீச்ரோடு சேர்ந்த சிவசங்கர் என்பவரை கைது செய்தனர்
    • சிவசங்கர் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் பட்டகசாலியன்விளையை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீச்ரோடு பெரிய விளையை சேர்ந்த சிவசங்கர் (வயது 39) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவசங்கர் ஜெயில் அடைக்கப்பட்டு இருந்தார். இவர் மீது ஏற்கனவே நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. இதையடுத்து சிவசங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார்.

    கலெக்டர் ஸ்ரீதர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் சிவசங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சிவசங்கர் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    • முன்விரதம் காரணமாக இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்
    • சிறையில் அடைத்தனர்

    திருவண்ணாமலை,

    திருவண்ணாமலை ஜன்னத் நகரை சேர்ந்த அப்துல் நிசார் (வயது 26 )அதே பகுதியைச் சேர்ந்தவர் தர்வேஸ்( 27) இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரதம் இருந்து வந்தது.

    இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

    இதில் காயமடைந்த அப்துல்நிசாரரின் தந்தை அப்துல் காதர் (55 )மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    தீவிர சிகிச்சையில் இருந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தர்விஸ் மற்றும் அவரது நண்பரான பல்லவன் நகரை சேர்ந்த தனசேகர் சூர்யா (27),உறவினரான ஜன்னத் நகரை சேர்ந்த முபாரக்(20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார் அதன் பெயரில் தர்பீஸ் உட்பட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்

    • ஜெயிலில் அடைப்பு
    • கலெக்டர் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் சாத்கர், கோட்டை காலனியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மகன் சுந்தரராஜ் (வயது 47). அதே பகுதி சேர்ந்தவர் பசுபதி.

    இவர்கள் 2 பேரும் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். போலீசார் பலமுறை எச்சரிக்கை செய்தும் தொடர்ந்து கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டதால் போலீசார் இருவரையும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.

    அவரது பரிந்துரையின் பேரில் 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    • 50 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை - தோலம்பாளையம் செல்லும் சாலையில் கடந்த நவம்பர் மாதம் என்ஜினீயரான யுவராஜ் என்பவரது வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இவ்வழக்கில் ெநல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற சூட் சுரேஷ் (32) என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து கொள்ளை போனவை மீட்கப்பட்டன.பின்னர் கைது செய்யப்பட்டவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் மீது 30 -க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சுரேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ேபாலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சுரேஷ் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  

    • திருவண்ணாமலை, போளூர் பகுதியில் தொடர்ந்து குற்ற செயல்கள் அதிகரிப்பு
    • ஜெயிலில் அடைப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த பூமந்தகுளம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் இவரது மனைவி ஜான்சி (வயது 48) இவர் சாராய விற்பனையில் ஈடுபட்ட போதும், திருவண்ணாமலை சமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்த அசோக்குமார் மனைவி மங்கை (42) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்கள் 2 பேரையும் திருவண்ணாமலை டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்த வெங்கடேசன் மகன் பாலாஜி (23) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவண்ணாமலை கிழக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார். போளூர் நகரம் சின்னப்பா தெருவை சேர்ந்த பாலமுருகன் (32) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு போளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா கொடுக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த குமார் (37) என்பவர் திருவண்ணாமலை கருமாரப்பட்டி ஏரிக்கரை அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட போது திருவண்ணாமலை தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இவர்கள் 5 பேரும் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடுவதை தடுக்க திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஜான்சி, மங்கை, பாலாஜி, பாலமுருகன், குமார் ஆகிய 5 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.

    • 2 நபர்கள் கத்தி முனையில், 3 பவுன் சங்கிலி, 1 பவுன் மோதிரம், ரொக்கம் ரூ.5,500 ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
    • இதுகுறித்து மதிவாணன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்–பேட்டை அருகே உள்ள சந்தைப்பேட்டை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன் (வயது 55). இவர் ஜவ்வரிசி (சேகோ) தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    கடந்த 28-ந் தேதி சந்தைப்பேட்டை பழைய வணிக வளாகம் அருகே வந்து கொண்டிருந்தபோது, இவரை வழிமறித்த 2 நபர்கள் கத்தி முனையில், 3 பவுன் சங்கிலி, 1 பவுன் மோதிரம், ரொக்கம் ரூ.5,500 ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து மதிவாணன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மதிவாணனிடம் நகை, பணம் பறித்த சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த அன்சர் மகன் குட்டி என்கிற பக்ருதீன் (48), அம்மாபேட்டை பாரதியார் தெருவை சேர்ந்த கமல்பாஷா மகன் சதாம் உசேன் (32) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் விசாரணையில், கடந்த 27-ந் தேதி சேலம் கந்தம்பட்டி ஆர்.டி.ஓ அலுவலகம் பின்புறம் சேகோ பேக்டரி நடத்தி வரும் ராமசாமி (75) என்பவரை, கத்தி முனையில் மிரட்டி ரூ.10,200 பறித்ததாக பக்ருதீன் மற்றும் சதாம் உசேன் மீது சூரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் ரவுடி பட்டியலில் உள்ளவர்கள் என்பதும், இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

    அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் அன்னதானப்பட்டி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட பக்ருதீன் மற்றும் சதாம் உசேன் ஆகியோர் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா (தெற்கு) ஆகியோர் பரிந்துரை செய்தனர். இதன்பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா பக்ருதீன் மற்றும் சதாம் உசேனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    • தொடர்ந்து வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டதால் நடவடிக்கை
    • வேலூர் ஜெயிலில் அடைப்பு

    வேலூர்:

    வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ். மானியம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல் (வயது 25).பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.

    நிர்மல் தொடர்ந்து வழிப்பறி திருட்டில் ஈடுபட்டு வந்தார். அவரை வேலூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார்.

    இதனையடுத்து கலெக்டர் உத்தரவின்படி நிர்மல் குண்டர்சட்டத்தில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    ×