search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்க்கரை நோய்"

    • அரிசியை உண்டவுடன் உடலின் ரத்த ஓட்டத்தில் வேகமாக இனிப்பை திணிக்கிறது.
    • ர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வெள்ளை அரிசி சாதம் உண்பது ஒரு மிகப்பெரிய காரணம்.

    சர்க்கரை நோய் டாக்டர் ஒருவர் கூறும் போது, "நவீன ஆலைகளில் தீட்டப்பட்டு அழகான சாக்கு பைகளில் கவர்ச்சிகரமாக பேக்கிங் செய்யப்பட்டு வரும் அரிசிகளில் பெருமளவில் காணப்படுவது மாவுச்சத்து மட்டுமே. இந்த அரிசியை உண்டவுடன் உடலின் ரத்த ஓட்டத்தில் வேகமாக இனிப்பை திணிக்கிறது. இதனை 'குளுக்கோஸ் ரைசிங் எபெக்ட்' என்போம். இன்றைக்கு, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வெள்ளை அரிசி சாதம் உண்பது ஒரு மிகப்பெரிய காரணம்.

    நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து வெள்ளை அரிசியை உண்ணும்போது அவர்களின் உடல் நிலை மேலும் மோசமாகும். ஆனால், இதற்கு நேர்மாறாக சிவப்பு அரிசி என்று சொல்லப்படும் பாரம்பரிய தீட்டப்படாத கைக்குத்தல் அரிசியை உண்ணும்போது அதில் இருக்கும் அதிகமான வைட்டமின்கள், நார்ச்சத்து ஆகியவை உடலில் சர்க்கரை உயர்வதை கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு வருவதை தடுப்பதுடன், நீரிழிவு இருந்தாலும் கட்டுக்குள் வைக்கிறது" என்றார்.

    • வட மாநிலங்களைக் காட்டிலும் தென் மாநிலங்களிலேயே சர்க்கரை நோய் விகிதம் அதிகமாக காணப்படுகிறது.
    • சர்க்கரை நோய் பாதிப்பு வட மாநிலங்களில் 12 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.

    சென்னை:

    வட மாநிலங்களைக் காட்டிலும் தென் மாநிலங்களிலேயே சர்க்கரை நோய் விகிதம் அதிகமாக காணப்படுகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளத்தில் 27.4 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து தமிழகத்தில் 22.3 சதவீதம் பேரும், ஆந்திராவில் 21.1 சதவீதம் பேரும் அந்நோய்க்கு ஆளாகியுள்ளனர்.

    யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரை கோவாவில் 22.7 சதவீதம் பேருக்கும், புதுச்சேரியில் 22 சதவீதம் பேருக்கும், லட்சத்தீவுகளில் 21.9 சதவீதம் பேருக்கும் சர்க்கரை நோய் உள்ளது. அதேவேளையில் வட மாநிலங்களான உத்தரபிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 12 சதவீதத்துக்கும் குறைவாகவே பாதிப்பு உள்ளது.

    தென்னிந்தியாவின் உணவு பழக்கவழக்கமும், அது சார்ந்த மரபணுவும் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரிப்புக்கான காரணமாகக் கூறப்படுகிறது. அதேபோன்று உடற்பயிற்சியின்மை, வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவையும் பிரதானமாக கூறப்படுகிறது.

    • 200-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
    • நோயாளிகளுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    ராய் டிரஸ்ட் இன்டர்நே ஷனல், ஆயக்காரன்புலம் அரிமா சங்கம் மற்றும் தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் ஆகியவை இணைந்து பொது, சர்க்கரை மற்றும் இருதய நோய் இலவச மருத்துவ முகாம் ஆயக்காரன்புலம் இரா.நடேசனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயக்காரன்புலம் அரிமா சங்க தலைவர் அரிமா மாதவன் தலைமையில் நடைபெற்றது.

    ஆயக்கா ரன்புலம் ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் மற்றும் திருத்துறைப்பூண்டி ஹரிஸ் தங்க மாளிகை உரிமையாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வட்டார தலைவர் அங்கை. ராசேந்திரன் முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் சிறப்பு விருத்தினராக ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனர் துரை ராயப்பன் கலந்து கொண்டார்.

    காமாட்சி மெடிக்கல் சென்டர் மூத்த மருத்துவர் கார்த்திகேயன், மருத்துவர்கள் சசிகலா, ராகுல்யா உடல்நலம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முடிவில் வைத்தியநாதன் நன்றி கூறினார்.

    முகாமில் பொருளாளர் முருகானந்தம், அரிமா சங்க முன்னாள் தலைவர்கள், இயக்குநர்கள், உறுப்பினர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடை ந்தனர். நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம், பி.எம்.ஐ, ரத்தத்தில் சர்க்கரை அளவு, இருதய பரிசோதனைகள் (இ.சி.சி.மற்றும் எக்கோ) செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    • பொதுவில் அதிக கெட்ட கொழுப்பு மிகுந்த உணவுகளை தவிர்த்து விட வேண்டும்.
    • சர்க்கரை அளவு குறைவது என்பது சற்று ஆபத்தானது. கையில் ஒரு சாக்லெட் கூட வைத்திருக்கலாம்.

    சர்க்கரை நோய், நீரழிவு நோய் என பிரம்மாண்ட வளர்ச்சியினை பெற்றுள்ள இந்த நோய் உலகினையே உலுக்கிக்கொண்டு இருக்கின்றது என்பதுதான் உண்மை. இன்சுலின் ஹார்மோன் ரத்தத்தில் இருந்து சர்க்கரையினை செல்களுக்குள் செலுத்தி சக்தியாக செயல்படச் செய்கிறது. சர்க்கரை நோய் என்றால் உடல் தேவையான இன்சுலினை சுரக்கவில்லை அல்லது இன்சுலினை முறையாக செயல்படுத்த முடியவில்லை என்பதே பொருள்.

    சிகிச்சை எடுக்கப்படாத உயர் சர்க்கரை உடலில் கொண்டவர்களுக்கு கண்கள், சிறுநீரகம், நரம்புகள் என ஒவ்வொரு உறுப்பினையும் பாதித்து விடும். இதனைப் பற்றி நன்கு அறிந்து கொள்வது வரும்முன் காப்பதற்கும், வந்து விட்டால் முறையாய் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் பயன்படும்.

    நீரழிவு நோய் பிரிவு-1: இதனை Autoimmune நோய் என்பர். நம் நோய் எதிர்பப்பு சக்தியே நம் உடலில் கணையத்தில் உள்ள நல்ல செல்களை அழித்து விடுகின்றது. கணையம் தானே இன்சுலினைத் தர வேண்டும். அதுவே அழிந்தால் என்னாவது இதன் காரணம் என்ன? என்பதனை இன்னமும் தெளிவாகச் சொல்ல முடிவதில்லை. இதனை தன்னுடல் தாக்கு நோய் பிரிவில் குறிப்பிடுகின்றனர்.

    பிரிவு-2 சர்க்கரை நோய்: 90 முதல் 95 சதவீதம் வரை சர்க்கரை நோய் உடையவர்கள் இந்த பிரிவில்தான் உள்ளனர். நமது செல்கள் இன்சுலினுக்கு முறையாய் செயல்பாட்டில் இயங்காது இருக்கும்.

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் சர்க்கரைக்கு பொதுவான அறிகுறிகள்:

    * பசி அதிகரித்தல் * தாகம் அதிகரித்தல் * எடை குறைவது * அடிக்கடி சிறுநீர் செல்லுதல் * தெளிவான பார்வை இன்மை * மிக அதிக சோர்வு * ஆறாத புண்கள் (அல்லது) ஆறுவதற்கு அதிக காலம் பிடிக்கும் புண்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

    ஆண்களுக்கு தசைகளின் வலிவு, உடலில் சக்தி குறைந்தது போல் இருக்கும்.

    பெண்களுக்கு பிறப்புறுப்பில் வறட்சி, அரிப்பு, பூஞ்ஞை பாதிப்பு, சிறுநீர் பாதையில் கிருமி பாதிப்பு என இருக்கும். சர்க்கரை நோய் கர்ப்ப காலத்தில் ஏற்படுவதினை ரத்த பரிசோதனை செய்யும் பொழுதே பல நேரங்களில் கண்டறிய முடியும்.

    சர்க்கரை நோய் முதல் பிரிவு குழந்தை பருவம் முதல் விடலை பருவத்தில் கூட ஏற்படலாம். வெகு சிலருக்கு வளர்ந்த காலத்திலும் பாதிப்பு ஏற்படலாம்.

    இது வேகமான பாதிப்பினை குறுகிய காலத்திலேயே ஏற்படுத்தி விடும். உதாரணமாக வெகு வேகமான காரணமின்றி எடை குறைதல், வயிற்று வலி, வாந்தி போன்றவை ஏற்படலாம். காலம் தாழ்த்தாமல் மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் மட்டுமே பல பிரச்சினைகளில் இருந்து தீர்வு தரும்.

    சர்க்கரை நோய் பிரிவு 2: இது மெதுவாக உருவாகும். பலருக்கு சில காலம் எந்த அறிகுறிகளுமே இருக்காது. அறிகுறிகளும் மிகக் கடுமையாக இல்லால் இருப்பதால் ஆரம்பிக்கும் பொழுது அதனை கவனிக்காமல் பலர் தவறி விடுகின்றனர். காலப்போக்கில் சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் கொண்டு வராவிட்டால்

    * சரும பாதிப்பு * பார்வை இழத்தல் * பாதங்களில் புண் * கால், கைகளில் மதமதப்பு, வலி போன்றவை ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் கட்டுப்பாட்டிற்குள் சர்க்கரை அளவினை வைக்கவில்லை என்றால் பாதிப்புகள் ஏற்படும். இதனை தனிப்பட்ட முறையில் கூறுவதே நல்லது. அதாவது கர்ப்பிணிப் பெண்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

    பிரிவு-1, பிரிவு-2 கர்ப்ப கால சர்க்கரை நோய்க்கு சிகிச்சை முறைகள் பாதிப்பின் அளவிற்கேற்ப மாறுபடும்.

    எந்த பிரிவிலும் கார்ப்போஹைடிரேட் அளவினை கட்டுப்பாட்டில் வைப்பதும், சர்க்கரை உணவுகளை எடுத்துக் கொள்ளாது இருப்பதும் மிக அவசியம்.

    உடற்பயிற்சி என்பது அவசியம். அதிகமாக ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்கள் செய்வது போன்ற பயிற்சிகள் கூடாது. வயது, வேலை இவற்றினை் பொறுத்து மருத்துவர் உடற்பயிற்சி முறை, நேரம் இவற்றினை அறிவுறுத்துவார்.

    * நடப்பது * நடனம், * சைக்கிள், * நீச்சல் இவைகளை மருத்துவர் ஆலோசனைப்படி செய்யலாம்.

    பொதுவில் அதிக கெட்ட கொழுப்பு மிகுந்த உணவுகளை தவிர்த்து விட வேண்டும். சிறு சிறு அளவில் உண்ண வேண்டும். மருத்துவர் அனுமதித்த பழங்கள் மற்றும் முழு தானியங்கள் பெரும் உதவி செய்யும். அதிக எடை இருப்பின் முதலில் அதனை முறையாய் குறைத்தாலே பல பிரச்சினைகள் தீரும். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது நல்லது.

    கீரை, ப்ரோகலி, காலிபிளவர், பச்சை காய்கறிகள், தக்காளி, குடை மிளகாய், நாட்டு காய்கறிகள், முழு தானிய உணவுகள் நார்சத்து இவை மிகுந்த பயனைக் கொடுக்கும். கொட்டை வகைகள், வேர்க்கடலை இவற்றினை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். தேவையான அளவு நீர் குடிப்பதும் அவசியம். மது, புகை இவை கண்டிப்பாக கூடாது.

    வைட்டமின் டி சத்து உடலில் சரியான அளவில் இருக்க வேண்டும்.

    * வைட்டமின்கள், தாது உப்புகள் குறைபாடு இல்லாது இருக்க மருத்துவர் ஆலோசனைப்படி சத்து மாத்திரைகள் எடுப்பது அவசியம்.

    * 3 மாதத்திற்கான சர்க்கரை அளவினை ரத்த பரிசோதனை மூலம் சரி பார்த்துக் கொள்வது நல்லது. வீட்டிலேயே பரிசோதனை கருவி மூலமும் சரி பார்த்துக் கொள்ளலாம்.

    * சிலருக்கு அவ்வப்போது குறைந்த சர்க்கரை அளவும் ஏற்படலாம்.

    * சில்லிப்பு * உடல் நடுக்கம் * மயக்கம் * படபடப்பு * பசி * வயிற்றுப் பிரட்டல் * குழப்பம் போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.

    சர்க்கரை அளவு குறைவது என்பது சற்று ஆபத்தானது. கையில் ஒரு சாக்லெட் கூட வைத்திருக்கலாம். இதனை உங்கள் மருத்துவர் மூலம் நேரடி விளக்கம் பெற வேண்டும். சர்க்கரை நோய் பாதிப்பிற்கு விருந்தும் கூடாது. கடும் விரதமும் கூடாது.

    அதிகம் பலப்படுத்தப்பட்ட சிகப்பு மாமிசம், அதிக கொழுப்பு சத்து மிகுந்த பால், பால் சார்ந்த உணவுப் பொருட்கள், பாக்கெட்டில் ரெடிமேடாக கிடைக்கும் கொரிக்கும் உணவுகள். அதிக மாவுச் சத்து நிறைந்த உணவுகள், சர்க்கரை அதிகம் கொண்ட உணவுகள், உயர் பழங்கள், பொரித்த உணவுகள், ஜூஸ், சர்க்கரை சேர்த்த பானகங்கள் என இவை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியவை.

    பச்சை காய்கறிகள், வேக வைத்த காய்கறிகள், தக்காளி, வைட்டமின் 'சி' சத்து நிறைந்த பழங்கள், முழு தானியம், கொட்டை வகைகள், பருப்பு, கொழுப்பு இல்லாத பால், தயிர் என உண்ணும் பழக்கம் உருவாக வேண்டும். 20 வருடங்களுக்கு முந்தைய காலத்தினை விட இன்று சர்க்கரை நோயாளிகளுக்கு பல முன்னேற்ற வகையிலான மருந்துகள் ஊசி முறைகள் என பல பிரிவுகளில் சிகிச்சைகள் உள்ளன. ஆயினும் முதல் சிகிச்சையாக முறையான உணவு, உடற்பயிற்சி இவைவே முதல் முக்கியத்துவம் பெறுகின்றன.

    வெந்தயம் எடுத்துக் கொள்பவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு டீஸ்பூன் அளவுக்கு மேல் எடுத்துக் கொள்வது சில வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

    இன்சுலியன் செடி- இதற்கு இன்னமும் முழுமையான ஆய்வு முடிவுகள் வெளியாகவில்லை.

    பிரிவு - 1 நீரிழிவு நோய் என்றாலே நாம் செயற்கை முறையில் உடலுக்கு இன்சுலின் கொடுத்து ஆக வேண்டும்.

    பிரிவு-1 பிரிவு-2 சர்க்கரை பாதிப்பிற்கு என்ன வித்தியாசம்? பிரிவு-1ல் கணையம் இன்சுலின் ஹார்மோன் சுரப்பதே இல்லை. முழுமையாக நாம் அதனை வாழ்நாள் முழுவதும் உடலில் ஊசி மூலமாக அன்றாட மருத்துவர் சொல்லும் அறிவுரைப்படி செலுத்திக் கொள்ள வேண்டும்.

    பிரிவு-2ல் கணையம் போதுமான அளவு இன்சுலின் சுரப்பதில்லை அல்லது கூடவே உடல் இன்சுலினை அது ஏற்றுக்கொள்ள வேண்டிய அளவு ஏற்பதில்லை. பிரிவு-1 குழந்தைகள், இளம் வயது இவற்றிலேயே ஏற்பட்டு விடும் என்பது பொதுவானது. என்றாலும் வளர்ந்த பிறகும் இந்த பாதிப்பு ஏற்படலாம். ஆயினும் பிரிவு-1 வகை சர்க்கரை நோய் பாதிப்பு பிரிவு-2 ஐ விட குறைவு தான்.

    கீட்டோ அசிடோசிஸ் என்பது சற்று கவலை தருவதான பாதிப்பாக பிரிவு ஒன்றிற்கு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இந்த பாதிப்பு ஏற்படுவதன் காரணம் உடல் தேவையான அளவு இன்சுலின் இல்லாத பொழுது தாக்குதல் ஏற்படும். இன்சுலின் எடுக்க மறந்து விடுதல் அல்லது போதுமான அளவு எடுக்கத் தவறுதல். அதிக சூடு, அதிக குளிர் இவற்றினால் இன்சுலின் பாதிக்கப்பட்டு செயலிழத்தல், காலாவதியான இன்சுலின், உடல் நோய், கிருமி தாக்குதல், மன உளைச்சல், கர்ப்ப காலம், கணைய வீக்கம், இருதய மாரடைப்பு, பக்கவாதம், மது, புகை, போதைப் பழக்கம், சில மருந்துகள் இவற்றின் காரணமாக இன்சுலின் பற்றாக்குறை ஏற்பட்டு கீட்டோ அசிடோசிஸ் பாதிப்பு ஏற்படலாம்.

    இதற்கான பரிசோதனைகளை மருத்துவர் செய்து சிகிச்சை மேற்கொள்ளலாம். பரம்பரை, கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை பிரிவு- 1, 2 இவையும் பாதிப்பிற்கு காரணமாகின்றன.

    கீட்டோ அசிட்டோசிஸ் பாதிப்பின் அறிகுறிகள்: வாந்தி, வயிற்று வலி, வேகமாய் மூச்சு வாங்குதல், குழப்பம், மயக்கம், நினைவிழத்தல் போன்றவை இருக்கும். பிரிவு-1 சர்க்கரை நோய்க்கான தீவிர ஆய்வுகள் இன்றும் நடைபெறுகின்றது.

    இருப்பினும் தாய்க்கு இவ்வாறு இருப்பின் பிள்ளைகளுக்கு ஒரு சதவீதம் முதல் 4 சதவீதம் வரை பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்றும் தந்தைக்கு இருப்பின் 3 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. தாய், தந்தை இருவருக்கும் பிரிவு-1 வகை பாதிப்பு இருந்தால் பிள்ளைகளுக்கு 30 சதவீதம் வரை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்றும் குறிப்பிடப்படுகின்றது.

    குழந்தைகளுக்கு பிரிவு 1 பாதிப்பு ஏற்படும் பொழுது குழந்தைகள் ஹார்மோன் பிரிவு சிறப்பு படிப்பினை மேற்கொண்டவரே சிகிச்சை அளிக்கின்றார். எடை, வயது, உடல் உழைப்பு, உணவு உண்ணும் வகை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இவற்றினை கொண்டே இன்சுலின் அளவு நிர்ணயிக்கப்படுகின்றது.

    இன்று இன்சுலின் ஊசி, பேனா போன்ற கருவி, பம்ப், வாயில் உள்ளிழுக்கும் வகை (ஆஸ்துமா இன்ஹேலர் போன்றது) என பல முன்னேற்ற வழிகளில் அளிக்கப்படுகின்றது. இன்சுலின் எடுக்கும் பொழுது வேகமாய் சர்க்கரை அளவு குறைந்து விடாமல் பாதுகாக்க தெரிந்து கொள்ள வேண்டும். இதன் அறிகுறிகள் முன்னமே குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும் அவசியம் கருதி மீண்டும் ஒரு முறை பார்ப்போம். நடுக்கம், அதிக வியர்வை, வேகமான இருதயத் துடிப்பு, மயக்கம், வெளிறிய சருமம், பசி, வயிற்றுப் பிரட்டல், தூக்கமின்மை, தளர்ந்து விடுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தானே முதலில் வீட்டில் பரிசோதனை கருவிக்கொண்டு சர்க்கரை அளவினை பரிசோதித்து கொள்ளலாம்.

    70mg/dt என்பதற்கும் கீழே சர்க்கரை அளவு என்பது ஆபத்தானது. உடனே ஏதாவது ஒரு மாவு சத்து உணவு கூட உட்கொள்ளலாம். 20 நிமிடங்கள் சென்று ரத்த பரிசோதனை செய்து தேவையெனில் கூடுதல் 20 கிராம் அளவுக்கு கார்போஹைட்ரேட் உணவு எடுத்துக் கொள்ளலாம். இதனை தனிப்பட்ட முறையில் மருத்துவர் ஆலோசனை பெற்று தெரிந்து கொள்வதே நல்லது.

    தாய், தந்தைக்கு பாதிப்பு இருந்தால் தனக்கு வரும் வாய்ப்பு உள்ளதா என்பதனை ஆட்டோ ஆண்ட்டி பாடிஸ் பரிசோதனையை உங்கள் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் செய்து கொள்ளலாம்.

    பிரிவு-1 சர்க்கரை நோய் என்பது சிறந்த கண்காணிப்பில் இருக்க வேண்டிய ஒன்று. பாதிப்புகளாக கண் சார்ந்த பிரச்சினைகள், பாத பிரச்சினைகள், இருதய நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, வாயில் பாதிப்பு, நரம்பு பாதிப்பு, சரும பாதிப்பு, பக்கவாதம் என எண்ணற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.

    குழந்தைகளுக்கு பாதிப்பு என்றால் அவரது பள்ளி ஆசிரியை அவரைப் பற்றி அறிய வேண்டும். குழந்தையின் பையில் நோய் பற்றிய குறிப்பு, தொலைபேசி எண் போன்றவை இருக்க வேண்டும்.

    பிரிவு- 2 வகை பிரிவினை பற்றி மீண்டும் பார்க்கும் பொழுது அளவான எடை, முறையான பரிந்துரைக்கப்பட்ட உணவுகள், உடற்பயிற்சி, இவை சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வைக்கும் என்பதனை நினைவுபடுத்திக் கொள்கின்றோம். இதற்கான அறிகுறிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

    பாதிக்கும் நீரிழிவு என்றாலே, அதுவும் கட்டுப்படாத நீரிழிவு என்றாலே ஒரு மாதிரி தான். அநேகமாக மறதி இருக்கும். மறதி நோய் போன்றவை ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது. சில சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு உள்ளதாக இருக்கும் பொழுது மேற்கூறிய முறைகளை கடைப்பிடித்தால் அதிக காலம் தள்ளிப்போடும் வாய்ப்புகள் உள்ளது.

    Hbai 6.5 சதவீதத்துக்கு கீழ் உங்கள் ரத்த பரிசோதனையில் இருந்தாலே நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். இன்று அநேக பிரீ டயபட்டிக் எனும் நிலையில் உள்ளனர். கழுத்து, கை, உள் மடிப்பு இவற்றில் சில மாற்றம், அடர்ந்த கருநிறம் போல் இருந்தால் உடனடியாக ரத்த பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வேகமான முறையான முயற்சி கைமேல் பலன் தரும். சர்க்கரை நோய் வராமல் தடுப்போம். வந்தவர்கள் அதனை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாய் வாழ்வோம்.

    • பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க பெண் டாக்டர்களை நியமித்துள்ளோம்.
    • கர்ப்பகால, மகப்பேறு மற்றும் பெண்கள் நலனுக்கான ஏனைய சிகிச்சைகள் பெண் டாக்டர்கள் மட்டுமே செய்வார்கள்.

    திருச்சி :

    திருச்சி மாநகர மக்களுக்கு நீண்ட நெடிய காலமாக சலுகை கட்டணத்தில் சிகிச்சை அளித்து வரும் மதுரம் ஆஸ்பத்திரியில் பெண்களுக்கு என பிரத்தியேக டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஐவன் மதுரம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க பெண் டாக்டர்களை நியமித்துள்ளோம். இதில் பெண்களுக்கு சகல உடற்பரிசசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்குமுறை புதிய மற்றும் உயரிய ஆய்வகவசதியுடன் துவங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்

    ரேடியாலஜி சிகிச்சைகள், சர்க்கரை நோய்க்கான நவீன மருத்துவம், கர்ப்பகால, மகப்பேறு மற்றும் பெண்கள் நலனுக்கான ஏனைய சிகிச்சைகள், பொது அறுவை சிகிச்சைகள், காது, மூக்கு, தொண்டை பிரச்சினைக்கான அறுவை சிகிச்சைகளை பெண்களுக்கு பெண் டாக்டர்கள் மட்டுமே செய்வார்கள்.

    மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டங்களை மேம்படுத்தி வருவதை கருத்தில் கொண்டு இந்த புதிய சேவை முறையை எமது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இதனைப் பெண்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • சிறுவன் மோகித்தை போலவே இரண்டாவது குழந்தையான விதர்சனாவிற்கும் சர்க்கரை நோய் உள்ளது.
    • டைப்-1 இன்சுலின் மருந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். பனியன் கம்பெனி தொழிலாளி. இவரது மனைவி பெயர் வித்ய ஜோதி . இவர்களுக்கு மோகித் என்ற 7 வயது மகனும் , விதர்சனா என்ற 4 வயது மகளும் உள்ளார்கள். மோகித் பிறந்த 4 வருடங்களில் இரவு நேரங்களில் அதிக அளவில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தவுடன் பெற்றோர்களுக்கு சந்தேகம் ஏற்படவே மோகித்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சர்க்கரை நோய் இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள் டைப் 1 என சொல்லக்கூடிய சர்க்கரை நோயால் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , வாழ்நாள் முழுவதும் தினமும் 4 முறை இன்சுலின் ஊசி செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

    சிறுவன் மோகித்தை போலவே இரண்டாவது குழந்தையான விதர்சனாவிற்கும் இதே சர்க்கரை நோய் உள்ளது. இவர்கள் இருவருக்கும் தினமும் 4 முறை ஊசி செலுத்த வேண்டும். இவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சர்க்கரை நோய் வகைக்கு அரசு மருத்துவமனையில் முறையான மருந்துகள் கிடைக்காததால் தனியார் மருத்துவமனையில் இருந்து மருந்துகளை வாங்கி வருகின்றனர்.

    ஒரு குழந்தைக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் என்ற வீதம் இரு குழந்தைகளுக்கும் சேர்த்து மாதம் ஊசிக்கு மட்டும் 12 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது என்கின்றனர் பெற்றோர்கள்.

    பனியன் கம்பெனியில் கிடைக்கும் வருவாயில் பாதிக்கும் மேல் குழந்தைகளின் மருந்து செலவிற்கே சென்று விடுகிறது. மீதமுள்ள பணத்தை கொண்டே குடும்பத்தை நடத்த வேண்டியுள்ளது. ஒரு கட்டத்துக்கு மேல் தனியார் மருத்துவமனைகளில் மருந்து வாங்க முடியாத சூழலில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தோம். ஆனால் டைப் 1 இன்சுலின் மருந்து அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை. டைப்-2 இன்சுலின் மருந்து மட்டுமே தரப்படுகிறது. எனவே குழந்தை பாதிக்கப்பட்டிருக்கும் சர்க்கரை நோய் வகைக்கு ஏற்ற மருந்துகளை எந்த தடையும் இல்லாமல் அரசு மருத்துவமனைகளில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளிலும் டைப்-1 இன்சுலின் மருந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. 

    கரும்பு அதிகளவில் உற்பத்தி செய்வது ஒருவகையில் சர்க்கரை நோய்க்கு காரணமாக இருப்பதால், விவசாயிகள் வேறு பயிர்களில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தற்போது நீங்கள் (விவசாயிகள்) அதிகளவில் கரும்பு உற்பத்தி செய்கின்றனர். கரும்பு ஒன்றை மட்டுமே பயிரிடும் விவசாயிகள் காய்கறிகள் போன்ற மாற்று பயிர்களில் கவனம் செலுத்த வேண்டும். அதிகளவிலான கரும்பு உற்பத்தி செய்யும் போது, அது அதிக கொள்முதலுக்கு வழிவகை செய்கிறது. சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு அதுவும் ஒரு காரணம்” என கூறினார்.

    மேலும், கரும்பு விவசாயிகளுக்கும் நிலுவையில் உள்ள 10 ஆயிரம் கோடி விரைவில் வழங்கப்படும் எனவும் யோகி தனது பேச்சில் கூறினார். சமீபத்திலும், குரங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகள் அனுமன் மந்திரம் தினமும் கூறினால் குரங்கு தொல்லை இருக்காது என யோகி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    சர்க்கரை நோயை குணப்படுத்த வகை செய்யும் மருந்தை கண்டு பிடித்த சிறிய நிறுவனம் ஒன்றை, மருந்து உற்பத்தி உலகின் ஜாம்பவான் நோவோ நோர்டிஸ்க் ஒரே இரவில் விலைக்கு வாங்கியது.
    லண்டன்:

    மனிதர்களுக்கு பொதுவாக இரண்டு விதமான சர்க்கரை நோய் உடலில் உள்ளது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது ஒருவகை, மற்றொன்று ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகக்குறைவாக இருப்பது. உலகம் முழுவதும் 328 மில்லியன் மக்கள் இருவகையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் அந்தோனி டேவிஸ், அவரது மாணவர் ஹாரி டெஸ்டேக்ரோயிக்ஸ் மற்றும் டான் ஸ்மார்ட் என்ற மூவர் ஸிய்லோ (Ziylo) என்ற சிறிய நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் நோய்க்கான மருந்து ஒன்றை கண்டறிந்தனர்.


    மாணவர் ஹாரி

    இதனை அறிந்த, மருந்து உற்பத்தி உலகின் ஜாம்பவான் நிறுவனமான டென்மார்க்கை சேர்ந்த நோவோ நோர்ஸ்டிக், ஸிய்லோ நிறுவனத்தை 623 மில்லியன் பவுண்ட் கொடுத்து விலைக்கு வாங்கியது. இதில், ஸிய்லோ நிறுவனத்தில் 23 சதவிகித பங்குகளை வைத்திருந்த ஹாரிக்கு 143 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய்) கிடைத்துள்ளது. 

    ஆராய்ச்சி படிப்பு மாணவரான ஹாரி இந்த டீலிங்கால் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். 
    ×