search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கரன்கோவில்"

    • முகாமில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் வட்டார வளமையத்தின் சார்பில் 6 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

    மேலும், முகாமில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு நடைபயிற்சி உபகரணங்கள் (வாக்கர்), தேசிய அடையாள அட்டை போன்ற நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்துசெல்வி வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் ஆனந்தராஜ் பாக்கியம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் நோக்க உரை ஆற்றினார். கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தெய்வபிரியா வாழ்த்தி பேசினார். முகாமில் மனநல மருத்துவர் தேவிபிரபா கல்யாணி, காது மூக்கு தொண்டை மருத்துவர் ஜெயலட்சுமி, கண் மருத்துவர் முகமது அப்துல்லா, எலும்பு முறிவு மருத்துவர் விஸ்வநாத் பிரதாப்சிங் ஆகிய மருத்துவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளை பரிசோதனை செய்தனர்.

    தகுதியான குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் வாக்கர் போன்ற உபகரணங்கள் உடனடியாக வழங்கப்பட்டது. மேலும், காது கேட்கும் கருவி, ஸ்மார்ட் கார்ட், ரெயில் பாஸ், பஸ் பாஸ், மாதாந்திர உதவி தொகை, பெற்றோர்களுக்கு தையல் எந்திரம், வீல் சேர், கேலிபர், ட்ரை சைக்கிள் போன்ற உபகரணங்கள் வழங்குவதற்கு தகுதியான குழந்தைகள் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக், மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் வீரமணி, தகவல் தொழில்நுட்ப அணி ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிறப்பாசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.

    • கருத்தரங்கில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் பட்டியலின உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பட்டியலின பாதுகாப்பு உரிமை கருத்தரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கூட்டமைப்பு ஊர்க்காவலன், தியாகி இம்மானுவேல் பேரவை பொதுச் செயலாளர் வேல்முருகன், ஐந்திணை மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், தமிழக மக்கள் கட்சி மாநில செயலாளர் தனராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி பட்டியலின மக்கள் தொகைக்கு ஏற்பட்ட இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. தங்கவேலு, முன்னாள் மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் துரை.ஜெயச்சந்திரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சுகந்தி, அகில இந்திய செயலாளர் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் ராமகுரு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தென்காசி மாவட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி, பட்டியல் இன உரிமை பாதுகாப்பு இயக்கம் கண்ணன் ஆகியோர் பங்கேற்று இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பேசினர். இதில் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி, அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பட்டியலின உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அசோக்ராஜ் வரவேற்று பேசினார். நடராஜன் நன்றி கூறினார்.

    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் கே.எஸ்.எஸ். மாரியப்பன் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சங்கரன்கோவிலில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜதுரை, ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, பெரியதுரை, வெற்றி விஜயன், கிறிஸ்டோபர், மதிமாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி, மாவட்ட பிரதிநிதி செய்யதுஅலி, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன் உள்ளிட்ட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    • தேவர் படத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    பசும்பொன் முத்துராம லிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் பஸ் நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் உருவ படத்திற்கு அ.தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலெட்சுமி தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சண்முகையா, ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலா ளர் ஆறுமுகம், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், நகர பொருளாளர் வேலுச்சாமி, அவை தலைவர் அய்யப்பன், மாவட்ட பிரதிநிதி ராமநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், சரவணகுமார், பேரவை செயலாளர் சவுந்தர் என்ற சாகுல் ஹமீது, தலைமை பேச்சாளர் ராமசுப்பிர மணியன், குருவிகுளம் ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணசாமி, நிர்வாகிகள் நிவாஸ், செந்தில்குமார், குட்டி மாரியப்பன், வெள்ளி முருகன், குமார் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மைதானத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் சென்றதாக கூறப்படுகிறது.
    • பள்ளி கதவு காலை 8.30 மணிக்கு மேல் திறந்து விடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளி நூற்றாண்டு கடந்த பாரம்பரிய மிக்க பள்ளி ஆகும்.

    இந்த பள்ளி மைதானத்தில் பல ஆண்டுகளாக சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், போலீசார் மற்றும் ராணுவத்தில் பணிக்கு சேர பயிற்சி செய்பவர்கள் இந்த மைதானத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

    இங்கு உடற்பயிற்சி மேற்கொண்டு தேர்வுகளில் பங்கேற்றவர்கள் ஏராள மானவர்கள் காவல்துறை மற்றும் ராணு வத்தில் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் பள்ளி மைதானத்தில் இரவு நேரங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் பள்ளி நிர்வாகம் பள்ளி மைதானத்திற்குள் வெளியாட்கள் நுழைய அனுமதி மறுத்து பள்ளி கதவு மூடப்பட்டது. காலை நேரத்திலும் கதவு பூட்டப்பட்டு 8.30 மணிக்கு மேல் திறந்து விடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் காலை நேரத்தில் உடற்பயிற்சி, நடை பயிற்சி மேற்கொள்ளும் வயதான வர்கள், இளைஞர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    இதனால் உடற்பயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள் வேதனை அடைந்தனர். மேலும் சாலை பகுதிகளில் நடை பயிற்சி உடற்பயிற்சி மேற்கொண்டால் விபத்து அபாயம் உள்ளதால் பள்ளி மைதானத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வது மிகுந்த பாதுகாப்பாக இருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

    மேலும் அவர்கள் தெரிவிக்கும் போது மாலை 5 மணிக்கு மேல் மூடப்படுவதில் எந்தவித ஆட்சேபனை யாருக்கும் கிடையாது. ஆனால் அதி காலை நேரத்தில் இத்தனை ஆண்டு காலமாக நடை பயிற்சி மேற்கொண்டு வந்தவர்களுக்கு இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளியில் இரவு நேரங்களில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்க ளை தடுத்து பல ஆண்டு களாக பொதுமக்கள் உடற்பயிற்சிக்காக பயன்படுத்தி வந்த இந்த மைதானத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

    • குருக்கள்பட்டியில் 3 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது.
    • கிணறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல தனியாக 16 கே.வி. மின் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

    சங்கரன்கோவில்:

    மேலநீலிதநல்லூர் ஒன்றியம் குருக்கள்பட்டி கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்த தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க குருக்கள்பட்டியில் 3 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் ஊராட்சி நிர்வாகம் மூலம் அமைக் கப்பட்டது.

    மேலும் இந்த பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையான தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த கிணறுகளில் இருந்து ஊருக்குள் தண்ணீர் கொண்டு செல்ல தனியாக 16 கே.வி. மின் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணி நிறைவடைந்த நிலையில் அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ், துணை தலைவர் வேலுச்சாமி, சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கிணற்றில் இருந்து ஊருக்குள் தண்ணீர் கொண்டு செல்ல அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை தொடங்கி வைத்தார்.

    இதில் கிளை செயலாளர் சுகுமாரன், பாலசுப்பி ரமணியன், மின் வாரிய உதவிசெயற்பொறியாளர் ரவி ராமதாஸ், உதவி பொறியாளர் முருகேசன், தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் தங்கப்பாண்டியன், பாலசுப்பிரமணியன், சாலை ஆய்வாளர் துரைராஜ், மக்கள் நல பணியாளர் சண்முகவேல், ஊராட்சி செயலாளர் கிருஷ்ணன், தி.மு.க. நிர்வாகி பூசைப்பாண்டியன், ஸ்டாலின், சின்னப்பாண்டியன், பெரியசாமி மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • மருத்துவர்கள் கழிவு நீர் கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ராஜா எம்.எல்.ஏ.விடம் வலியுறுத்தினர்.
    • மக்களுக்கு மருத்துவ சிகிச்சை எந்த வித குறையும் இல்லாமல் நடக்க வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சுகாதார வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் இங்கு கழிவு நீர் கால்வாய் வசதி, ஜெனரேட்டர் எந்திரம் மழையில் நனையாமல் இருக்க செட் அமைத்து தர வேண்டும், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு ராஜா எம்.எல்.ஏ. அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் எனவும், மேலும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை எந்த வித குறையும் இல்லாமல் நடக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது தலைமை மருத்துவர் கிருஷ்ணவேணி மருத்துவர்கள் வேலம்மாள், பெப்சீர், நகராட்சி கமிஷனர் சபா நாயகம், சுகாதார ஆய்வாளர் மாரிசாமி, தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், ஜெயகுமார், வீரா, சங்கர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • திருவேங்கடம் தாலுகாவில் பட்டா இல்லாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டி 2 நாள் முகாம் நடந்தது.
    • ஏழை, எளிய மக்களுக்கும் பட்டா கிடைக்க செய்யும் படி ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு திருவேங்கடம் தாலுகாவில் பட்டா இல்லாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டி 2 நாள் முகாம் நடந்தது. முகாமில் மலையாங்குளம் அரபாத் நகரில் மனைகள் வாங்கியுள்ள இஸ்லாமிய மக்கள் 300 பேருக்கும் மேற்பட்டோர் பட்டா வழங்க வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். மனு வழங்கிய அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் பட்டா கிடைக்க செய்யும் படி அரபாத் நகர் வளர்ச்சி குழுவினர் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

    மனுவை பெற்றுக்கொண்ட ராஜா எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது தி.மு.க. தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ் அலி, அரபாத் நகர் வளர்ச்சி குழுவை சேர்ந்த அப்துல்ரசாக், சபியுல்லா ஜாபர், அப்துல் ரஹ்மான்இல்லியாஸ், காஜாமைதீன்செய்யது அலி மற்றும் தி.மு.க. 20-வார்டு பிரதிநிதி ஹசன் இப்ராஹிம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தேரடி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் அசோக்ராஜ் தலைமை தாங்கினார். இதில் தென்காசி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்துப்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இசக்கி துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் லிங்க வளவன், பார்வர்டு பிளாக் தென்காசி மாவட்ட செயலாளர் தங்கப்பாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் பொன் ஆனந்தராஜ், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் அப்பாஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் திவான் மைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.கவை சேர்ந்த அப்பாஸ், அப்துல் ரகுமான், ம.தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ஹக்கீம், சங்கரன்கோவில் நகர செயலாளர் ரத்னவேல் குமார், ஒன்றிய செயலாளர் சசி முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பாலுச்சாமி, செல்வின், செந்தில்வேல், வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் நடராஜன், புளியங்குடி நகர செயலாளர் மாரியப்பன், திருவேங்கடம் தாலுகா செயலாளர் கருப்பசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மனுவேல்ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பீர் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
    • பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார்.

    மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செய லாளர் பெரியதுரை முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி, கிளை செயலாளர் எஸ்.பி. முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வீரகுமார், ஒன்றிய பிரதிநிதி சதீஷ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் குட்டிராஜ், ஒன்றிய இளைஞ ரணி அமைப்பாளர் கார்த்திக் மற்றும் மனோஜ்குமார், சின்னத்துரை, செந்தூர் பாண்டியன், வல்லரசு, யேசுதாஸ், மகேந்திரன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஒன்றிய நிர்வாகி கள், கிளை நிர்வாகிகள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • மாணவி முவித்ரா 10 கிலோ மீட்டர் தூரத்தை 27 நிமிடம் 32 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார்.
    • ராஜா எம்.எல்.ஏ., அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மாணவி முவித்ராவை அழைத்துச் சென்று வாழ்த்து பெற வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெய்கணேசன், கோகிலா தம்பதியரின் மகள் முவித்ரா. 6 வயது மாணவியான இவர் யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் ஸ்கேட்டிங்கில் முந்தைய சாதனையான சங்கரன்கோவிலை சேர்ந்த ஆதவன் என்ற 7 வயது மாணவன் 10 கிலோமீட்டர் தூரத்தை 32 நிமிடம் 48 வினாடிகளில் கடந்து படைத்த சாதனையை முறியடிக்கும் வகையில் மாணவி முவித்ரா சங்கரன்கோவில் கழுகுமலை சாலையிலிருந்து அழகனேரி வரை 10 கிலோ மீட்டர் தூரத்தை 27 நிமிடம் 32 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ல் இடம் பிடித்தார்.

    அதனை தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மாணவி முவித்ராவை அழைத்துச் சென்று வாழ்த்து பெற வைத்தார். அப்போது விவேகானந்தா ஸ்கேட்டிங் மற்றும் யோகா பயிற்சி நிலைய நிறுவனர் சுரேஷ்குமார், ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பாக்கியராஜ், முவித்ராவின் தாயார் கோகிலா மற்றும் மாஸ்டர் சாந்தனு, கல்பனா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பூத்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
    • ஆய்வின்போது பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்டம் மானூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு பூத் கமிட்டி அமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆலோசனை குழு அமைத்து நிர்வாகிகளை சந்திப்பது, பூத்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    அதன்பேரில் மானூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி துணை செயலாளருமான ராஜலெட்சுமி தலைமையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு நடைபெற்றது. தொடர்ந்து பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பூத் கமிட்டி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட குருக்கள்பட்டி செல்வம், இளைஞர் அணி நிர்வாகி மேல இலந்தைக்குளம் செந்தில் குமார், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×