search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்பட்டி"

    • ஸ்ரீ கோடி சக்தி விநாயகருக்கு 18 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • பூஜையில் விநாயருக்கு கொழுக்கட்டை, சுண்டல் படைக்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வளர்பிறை சதுர்த்தி சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. பிறகு ஸ்ரீ கோடி சக்தி விநாயகருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பிறகு விநாயருக்கு கொழுக்கட்டை, சுண்டல் படைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார்.

    விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சொர்ணமலை திருச்செந்தூர் பாதயாத்திரை மற்றும் அன்னதான குழு, முருகன், பிரேமா ஆகியோர் செய்தனர்.

    • விழாவுக்கு கஸ்தூரிபா கல்வி சங்க தலைவர் ராமசுப்பு தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி கதிரேசன் கோவில் தெருவில் அமைந்துள்ள கஸ்தூரிபா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 38-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வ.உ.சி. அரசு மேல்நிலைபள்ளியின் முன்னாள் தமிழ் ஆசிரியரும், கஸ்தூரிபா கல்வி சங்க தலைவருமான ராமசுப்பு தலைமை தாங்கினார். சென்னை ஸ்டான்ஸா லிவ்விங் நிறுவனத்தின் மாநில தலைவர் ராம்பிரசாத், தொழிலதிபர்கள் அசோக்குமார் மற்றும் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தமிழ் ஆசிரியை ஜெயலெட்சுமி, கஸ்தூரிபா பள்ளியின் முன்னாள் ஆசிரியை ஆதிராம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணவேணி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளின் ஆடல், பாடல், சிலம்பம், யோகா உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    மேலும் நிகழ்ச்சியில் அருணாச்சலா ஆன்மீக அறக்கட்டளையின் சார்பாக பள்ளி நிர்வாகத்தினருக்கு சிறந்த கல்வி சேவைக்கான விருதினை அறக்கட்டளையின் தலைவர் அசோக்குமார் வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் சரஸ்வதி சுபா மற்றும் ஆசிரியைகள் திவ்யதர்ஷினி, வேயிலம்மாள், மாரி, மதனா மற்றும் சரண்யா ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை சத்தியா நன்றி கூறினார்.

    • சித்தர் பீடத்தில் காரடையான் நோன்பு விழா நடைபெற்றது.
    • பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேகம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் காரடையான் நோன்பு விழா நடைபெற்றது.

    அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 7 மணிக்கு அம்பாள் உற்சவ அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்தார்கள். இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், மகாராஜா, மாரிஸ் வரன் விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி இசக்கிமுத்து, மாரித்தாய் செல்வராணி, ஜோதிலட்சுமி, சந்திரா மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வளையல், மஞ்சள், சரடு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்திருந்தனர்.

    • மகளிர் தின விழா கோலப்போட்டி கோவில்பட்டி ராஜீவ் நகரில் நடைபெற்றது.
    • சிறந்ததாக 2 கோலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் கரிசல் இலக்கியம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் மகளிர் தின விழா கோலப்போட்டி நடை பெற்றது.

    கோவில்பட்டி ராஜீவ் நகரில் உள்ள கவுணியன் பதின்ம பள்ளியில் நடைபெற்ற போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பெண்மையை போற்றும் வகையிலும், பெண் உரிமை, பெண்கள் சுதந்திரம், தாய்மை என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வண்ண கோலங்கள் இட்டு அசத்தினர்.

    இதையடுத்து சிறந்ததாக 2 கோலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழக்கப்பட்டன. பரிசளிப்பு விழாவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமை தாங்கினார். ஆசிரியை அமல புஷ்பம் வரவேற்றார். சத்தியபாலன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மருத்துவர் லதா வெங்கடேஷ் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்ற செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விழா ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    • கோவில்பட்டி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும்.
    • கோவில்பட்டி நகரில் சுமார் 1½ லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர்.

    கோவில்பட்டி:

    தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற கோவில்பட்டி நகர தலைவர் எம்.மைக்கேல் அமலதாஸ் செய்தியாளரிடம் கூறிய தாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி வளர்ந்து வரும் மிகப் பெரிய நகரமாகும். கோவில்பட்டி நகரில் 36 வார்டுகள் உள்ளன. தொழிற்சாலைகள் மற்றும் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும்.

    கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மூப்பன்பட்டி, இலுப்பையூரணி, பூசாரிபட்டி, வடக்கு, தெற்கு திட்டக்குளம் மற்றும் மேற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாண்ட வர்மங்கலம், மந்திதோப்பு, தோணுகால்,

    சாலைப்புதூர், ஆவல்நத்தம், அய்யனேரி, வெங்கடாசலபுரம், புளி யங்குளம், பாறைப்பட்டி, கிருஷ்ணா நகர், சுபா நகர், கணேஷ் நகர், ராஜகோபால் நகர், பல்லக்கு ரோடு, சண்முக சிகாமணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கோவில்பட்டியை சுற்றி சுமார் 30 கிராமங்களில் இருந்தும் தினசரி பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் கோவில்பட்டி நகருக்குள் வந்து செல்கின்றனர்.

    இதனால் அவ்வபோது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துக்களால் உயிர் பலியும் ஏற்படுகிறது. கோவில்பட்டி நகரில் சுமார் 1½ லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர். இங்கு டி.எஸ்.பி அலுவலகம், கிழக்கு, மேற்கு போலீஸ் நிலையம், போக்குவரத்து பிரிவு மகளிர் போலீஸ் நிலையம், மதுவிலக்கு என பல போலீஸ் நிலையங்கள் உள்ளன. அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் பொது மக்களின் நலன் காத்திடவும், விபத்து மற்றும் குற்றசெயல்களை தடுத்திடும் வகையிலும் போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

    பெருகி வரும் வாகன போக்குவரத்தை கணக்கில் கொண்டு போக்குவரத்து காவல் ஆய்வாளரை உடன டியாக நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புற்றுக்கோவிலில் தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு வித்யா ஹோமம் நடைபெற்றது.
    • கோடிசக்தி விநாயகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வித்யா ஹோமம் நடைபெற்றது. அரசு தேர்வு, மத்திய இடைநிலை கல்விவாரிய தேர்வு சி.பி.எஸ்.இ., எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் நீட் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு வித்யா ஹோமம் நடைபெற்றது. இதனையொட்டி காலையில் சங்கல்பம் கணபதி பூஜை, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், ருத்ர ஜபம் வருண ஜபம், ஹயக்கிரிவர் ஹோமம், சரஸ்வதி ஹோமம், பூர்ணாகுதி தீபாராதணை நடைபெற்றது.

    பிறகு கோடிசக்தி விநாயகருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்து வைத்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உமா சேதுராஜ், கயல்விழி காந்தி ஆகியோர் செய்தனர்.

    • அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் மாசி முதல் ஞாயிறு அன்னதான பூஜை நடைபெற்றது.
    • கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் மாசி முதல் ஞாயிறு அன்னதான பூஜை நடைபெற்றது

    அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜையும், 7 மணிக்கு அம்பாள், உற்சவ அம்பாள், குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்தார். இதில் சுப்பாராஜ் சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், மகாராஜா, மாரிஸ்வரன், கதிர்காம சுப்பிரமணியன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி, ஜோதிலட்சுமி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்திருந்தனர்.

    • புற்றுக்கோவிலில் மகா சனி பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • சங்கரலிங்க சுவாமிக்கு 18 வகையான அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் மகா சனி பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பிரதோஷ வழிபாடு சுபமங்களம் தரும், சனிக்கிழமைகளில் வரும் மகா பிரதோஷம் அதாவது சனி பிரதோஷ வழிபாட்டினால் பதவி, புகழ் போன்றவற்றை தருவதோடு, மாயைகளில் மாட்டிக்கொண்டு அலைக்கழியாத நிலையையும் அளிக்கும்.சகல தோஷமும் போக்கி சந்தோஷம் அளிக்கும் பிரதோஷ வழிபாடு சிறப்புடையது என்று ஆன்றோர்களின் ஜதீக வாக்காகும்.

    இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமாளுக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தனர்.

    இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • கோவில்பட்டி புற்றுக்கோவிலில் தைப்பூச சிறப்புப் பூஜை நடைபெற்றது.
    • வள்ளி, தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு 18 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் தைப்பூச சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 10 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி, தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இதில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • கயத்தாறு- கடம்பூர் சாலையில் அமைந்துள்ள கண்டி கதிர்காம மூர்த்தி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே கயத்தாறு- கடம்பூர் சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கண்டி கதிர்காம மூர்த்தி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு புண்யாவாசனம், கணபதி பூஜை, சங்கல்பம், ஸபர்ஸாகுதி, மூலமந்திர ஜெபம், யாகசாலை பூஜைகளும், பூர்ணகுதி நடைபெற்றது. பின்னர் கும்ப குடம் புறப்பட்டு கோபுரம் மற்றும் கண்டி கதிர்காம மூர்த்தி கதிர்வேலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து 10 மணிக்கு மூலவருக்கு மஞ்சள், மா, பொடி, திரவியம், பால், தேன், விபூதி சந்தனம், கும்பாபி ஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை பூமாதேவி ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் தலைமையில் வெங்கடேசன் பூஜைகளை செய்தார். இதில் குத்தாலிங்கம், திரவியம், கண்டி கதிர்காம மூர்த்தி, சுவாமிநாதன், சங்கரநாராயணன், மாரிஸ்வரன், காந்திமதி, மாரித்தாய், செல்வராணி, சங்கரி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ கண்டி கதிர்காம மூர்த்தி கோவில் குழுவினர் செய்திருந்தனர்.

    • கூட்டுறவு நகர வங்கியில் போலி நகைகள் மூலம் ரூ.15 லட்சம் வரை கடன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • நகைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோட்டில் கூட்டுறவு நகர வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.15 லட்சம் வரை கடன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி கூட்டுறவு சங்கத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூட்டுறவு சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ஆனால் 3 மாதங்களுக்கு மேலாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    இந்நிலையில் கூட்டுறவு நகர வங்கி ஊழியர்கள் சிலர் போலி நகைக்கான பணத்தை செலுத்தி திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

    போலி நகைகள் வைத்து உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை காப்பாற்ற நினைக்கும் மேலாண்மை இயக்குநர் அகிலா மற்றும் அதிகரிகளை கண்டித்து வங்கியின் நிர்வாக இயக்குனராக உள்ள ராஜேந்திரன் என்பவர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.

    • கோவில்பட்டியில் விழிப்புணர்வு கைப்பந்து போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் கிழக்கு காவல் நிலையம் சார்பில், போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கைப்பந்து போட்டி நடந்தது. கோவில்பட்டி தனியார் கலைக் கல்லூரி வளாகத்தில் நடந்த இப்போட்டியில், எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி ஏ.பி.சி. அணிகள், வாரியர்ஸ் கைப்பந்து கழகம், காவல்துறை அணி, இலுப்பையூரணி தாமஸ் நகர் அணி ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டன. போட்டியின் தொடக்கமாக போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    இறுதி போட்டியில், வாரியர்ஸ் கைப்பந்து கழக அணியும், எஸ்.எஸ்.டி.எம். பி அணியும் மோதின. இதில் 15 - 13, 15 - 7 என்ற செட் கணக்கில் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. 2-வது இடத்தை எஸ்.எஸ்.டி.எம். 'பி' அணியும், 3-வது இடத்தை காவல்துறை அணியும் பெற்றன.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். இதில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாதவராஜா, தர்மராஜ், ரவீந்திரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×