search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி அருகே கண்டி கதிர்காம மூர்த்தி கோவில் கும்பாபிஷேகம்
    X

    கண்டி கதிர்காம மூர்த்தி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    கோவில்பட்டி அருகே கண்டி கதிர்காம மூர்த்தி கோவில் கும்பாபிஷேகம்

    • கயத்தாறு- கடம்பூர் சாலையில் அமைந்துள்ள கண்டி கதிர்காம மூர்த்தி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே கயத்தாறு- கடம்பூர் சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கண்டி கதிர்காம மூர்த்தி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு புண்யாவாசனம், கணபதி பூஜை, சங்கல்பம், ஸபர்ஸாகுதி, மூலமந்திர ஜெபம், யாகசாலை பூஜைகளும், பூர்ணகுதி நடைபெற்றது. பின்னர் கும்ப குடம் புறப்பட்டு கோபுரம் மற்றும் கண்டி கதிர்காம மூர்த்தி கதிர்வேலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து 10 மணிக்கு மூலவருக்கு மஞ்சள், மா, பொடி, திரவியம், பால், தேன், விபூதி சந்தனம், கும்பாபி ஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை பூமாதேவி ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் தலைமையில் வெங்கடேசன் பூஜைகளை செய்தார். இதில் குத்தாலிங்கம், திரவியம், கண்டி கதிர்காம மூர்த்தி, சுவாமிநாதன், சங்கரநாராயணன், மாரிஸ்வரன், காந்திமதி, மாரித்தாய், செல்வராணி, சங்கரி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ கண்டி கதிர்காம மூர்த்தி கோவில் குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×