search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காரடையான் நோன்பு"

    • காரடையான் நோன்பை பெண்கள் கடைப்பிடிப்பார்கள்.
    • பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து இருக்கும்

    மாசி மாதமும், பங்குனி மாதமும் சேரும் நாளில் `காரடையான் நோன்பை' பெண்கள் கடைப்பிடிப்பார்கள். `கவுரி விரதம்', `காமாட்சி விரதம்', `சாவித்திரி விரதம்' என்று பல பெயர்களில் இந்த விரதம் அழைக்கப்படுகிறது. `மாசி கயிறு பாசி படரும்' என்பது சொல்வழக்கு. அதாவது இந்த விரதம் இருக்கும் பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து இருக்கும் என்பது இதன் பொருள்.

    அஸ்வபதி என்ற மன்னர், மாலதி தேவி என்ற நல்ல குணங்கள் நிரம்பப்பெற்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நீண்ட காலமாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை. இதையடுத்து கணவன்- மனைவி இருவரும், வசிஷ்ட மகரிஷியை சென்று பார்த்து, தங்கள் குறைகளை கூறினர். அந்த தம்பதியர்க்கு, சாவித்திரி தேவியின் மகா மந்திரத்தை வசிஷ்டர் உபதேசம் செய்தார்.

    சாவித்திரி தேவியின் அந்த மகா மந்திரத்தை மன்னனும், அவனது மனைவியும் தொடர்ந்து சொல்லி வந்தனர். இதன் பயனாக விரைவிலேயே அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    தங்கள் தெய்வத்தின் ஞாபகமாக அந்த பெண் குழந்தைக்கு `சாவித்திரி' என்று பெயர் வைத்தார்கள். சாவித்திரி வளர்ந்து வருகையில் சிறிது தூரத்தில் உள்ள தேசத்தில் துயுமத்சேனன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு சத்திய சேனன் என்ற மகன் இருந்தான். சத்தியசேனன் மிக உயர்ந்த குணங்களைக் கொண்டிருந்தான்.

    சத்தியசேனன் அருமை பெருமைகளை கேள்விப்பட்ட சாவித்திரி, அவனையே தன் கணவனாக நினைத்து, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாள். அதே நேரத்தில் துயுமத்சேனன், தன்னுடைய பகைவர்களின் துரோகத்தால் ராஜ்ஜியத்தை இழந்து, தன் மனைவி, மகனுடன் ஒரு வனத்தை வந்தடைந்தான்.

    சாவித்திரி தன் தந்தையிடம் "சத்தியவானையே (சத்தியசேனன்) திருமணம் செய்வேன்" என்று கூறினாள். அப்பொழுது நாரத மகரிஷி அங்கு வந்து, "நீ நினைக்கும் சத்தியவான், தற்பொழுது நாட்டை இழந்து, கண்களை இழந்த தன் தந்தையுடன் காட்டில் வசித்து வருகிறான். எல்லாவற்றுக்கும் மேலாக, அவன் இன்னும் சரியாக 12 மாதத்தில் இறந்து விடுவான். அவனை நீ திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாயா?" என்றார்.

    அதற்கு சாவித்திரி "என் மனதால் நினைத்த சத்தியவானை, இனி நான் மறக்க மாட்டேன். என்ன நடந்தாலும் சத்தியவானை தான் திருமணம் செய்து கொள்வேன்" என்று உறுதி படக் கூறினாள்.

    இதையடுத்து சாவித்திரியின் தந்தையான அஸ்வபதி, தன் மகளை அழைத்துக் கொண்டு வனத்தை அடைந்தார். அங்கு வாழ்ந்து வந்த சத்தியவானுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்தார்.

     சரியாக 12 மாதம் முடியும் வேளையில், நடுக்காட்டில் விறகு வெட்டிக் கொண்டிந்த சத்யவான், திடீரென்று தன் மனைவி சாவித்திரியின் மடியில் சரிந்து விழுந்து தன் உயிரை இழந்தான்.

    அவனது ஆன்மாவை தன் பாசக் கயிற்றால் கட்டி இழுத்துச் சென்றார், எமதர்மன். சாவித்திரி மேற்கொண்ட பதிவிரதை மகிமையால், அவளது கண்ணுக்கு எமதர்மன் தெரிந்தார். சாவித்திரி, எமதர்மனை பின் தொடர்ந்து சென்றாள். அதைக் கண்டு ஆச்சரியப்பட்ட எமதர்மன், "உன்னுடைய கண்ணுக்கு என் உருவம் எப்படி தெரிகிறது? நீ திரும்பிச்செல். சரீரத்துடன் யாரும் என் பின்னால் எமலோகம் வர முடியாது. இறந்த பின் தான் வர முடியும்" என்றார்.

    எமதர்மன் சொன்னதைப் பொருட்படுத்தாமல், அவரைப் பின் தொடர்ந்தாள் சாவித்திரி. இதையடுத்து எமதர்மன், "சரி.. உனக்கு ஒரு வரம் தருகிறேன். நீ கேள்" என்றார். சாவித்திரியோ, "என் கணவனைத் திருப்பிக் கொடுங்கள்" என்று கேட்க, அதற்கு எமதர்மன், "பறித்த உயிரை திருப்பித் தர மாட்டேன். பதிவிரதையே, வேறு ஏதாவது வரம் கேள்" என்று கூறினார்.

    உடனே சாவித்திரி, "என் மாமனார் தன் கண்களால் அவரது 100 பேரக் குழந்தைகளைக் காண வேண்டும்" என்று வரம் கேட்டாள். (சத்தியவான் துயுமத்சேனனுக்கு ஒரே மகன்). சாவித்திரி கேட்ட வரத்தை தருவதாக எமதர்மனும் வாக்கு கொடுத்தார்.

    பின்னர் சாவித்திரி, "என் கணவனின் உயிரை நீங்கள் எடுத்துச் சென்றுவிட்டால், எப்படி எனக்கு குழந்தை உண்டாகும்" என்றாள். எமதர்மன், சாவித்திரியின் சாதுர்யத்தை எண்ணி மகிழ்ந்து, சத்தியவானின் உயிரைத் திருப்பித் தந்ததுடன், துயுமத்சேனன் இழந்த ராஜ்ஜியத்தையும் திரும்பப் பெறுவான் என்று வரம் கொடுத்தார்.

    சாவித்திரிக்கு அவளது கணவனைத் திரும்பித் தந்தது, அவள் கடைப்பிடித்து வந்த பதிவிரதை விரதம்தான். அதைத்தான் நாம் `சாவித்திரி விரதம்' என்கிறோம்.

    விரதம் இருக்கும் முறை

    பூஜை அறையில் கோலம் போட்டு விளக்கேற்றி வீட்டில் உள்ள பெண் குழந்தைகளின் எண்ணிக்கையின்படி ஒவ்வொரு இலையாக எண்ணி கோலத்தின் மீது வைப்பார்கள். இலையின் நூனி வடக்கு நோக்கி இருக்குமாறு போட வேண்டும். கார் அரிசி மற்றும் வெல்லம் கொண்டு இனிப்பு அடை, மற்றும் உப்பு அடை செய்து பின் நெய் விளக்கேற்றி பூரண கும்பம் வைத்து அம்பாளை பூஜிப்பார்கள்.

    கலசத்திற்கு பூச்சரம் அல்லது மாலை அணிவித்து, ரவிக்கை துண்டு வைத்து, கும்பத்தை அலங்காரம் செய்வார்கள். பின்னர் கும்பத்திற்கு தூப, தீபங்கள் காட்டி அம்பாளை வழிபடுவார்கள்.

    இந்த இலையின் நுனிப்பகுதியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூ கட்டிய மஞ்சள் சரடு ஆகியவற்றை வைத்து, இலையின் நடுவில் இரண்டு வெல்ல அடைகளும், வெண்ணெய்யும் வைக்க வேண்டும். வயதானவர்கள் இந்த இலையில் அம்மனுக்கு ஒரு சரடு சேர்த்து வைத்துக்கொள்வார்கள்.

    ஒற்றைப்படையில் இலை வந்தால், ஒரு இலையை அதிகப்படுத்துவார்கள். அதாவது ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு என இருந்தால் அதை மாற்றி, இரண்டு, நான்கு, ஆறு, எட்டு என இரட்டைப் படையில் வருமாறு இலைகளைப் போடுவார்கள்.

    வீட்டில் உள்ள வயதான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள், ஒவ்வொரு இலையின் முன்பாக நின்று கொண்டு நீரை எடுத்து மூன்று முறை இலையை சுற்றி விட்டு, 'உருகாத வெண்ணெய்யும் ஓர் அடையும் நான் தருவேன். ஒரு காலும் என்னை விட்டு என் கணவர் பிரியாது இருக்க வேண்டும்' என சொல்லுவார்கள். பிறகு வீட்டில் உள்ள வயதான பெண், பூஜை அறையில் நின்று முதலில் சரடு ஒன்றை எடுத்து அம்மனுக்கு கட்டிவிட்டு அல்லது படத்திற்கு சாற்றி விட்டு, தோராம் என்னும் சுலோகத்தை சொல்லி, தன் கழுத்தில் கட்டிக்கொண்டு, குழந்தைகளுக்கும் அது போல் கட்டி விடுவார்கள்.

     அடையில் ஒன்றை தன் கணவருக்காக தனியாக எடுத்து வைத்துவிட்டு, பின் அடையை சாப்பிடுவார்கள். இரண்டு அடையை எடுத்து தனியாக வைத்து விட்டு, மறுநாள் பசு மாட்டிற்கு கொடுப்பார்கள். 'ஏழையார் நோற்ற நோன்பை மோழையார் கொண்டு செல்வார்' என்று பழமொழி. எனவே அன்று முழுவதும் மோர் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

    காரடையான் நோன்பை கடைப்பிடிப்பதால் ஜாதகத்தில் உள்ள மாங்கல்ய தோஷம் விலகும். மேலும் சிலருக்கு திருமணத்திற்குப்பின் ரஜ்ஜு தோஷம் இருந்தால், அந்த தோஷமும் விலகும். கணவருக்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.

    அங்க பூஜை

    * ஓம் காமாக்ஷ்யை நம: பாதௌ பூஜயாமி (கால்)

    * ஓம் கல்மஷக்ன்யை நம: குல்பே பூஜயாமி (முன்கால்)

    * ஓம் வித்யாப்ரதாயின்யை நம: ஜங்கே பூஜயாமி (நுனிக்கால்)

    * ஓம் கருணாம்ருத ஸாகராயை நம: ஜாநுநீ பூஜயாமி (முழங்கால்)

    * ஓம் வரதாயை நம: ஊரூ பூஜயாமி (தொடை)

    * ஓம் காஞ்சீ நகர வாஸின்யை நம: கடிம் பூஜயாமி (இடுப்பு)

    * ஓம் கந்தர்ப்ப ஜனன்யை நம: நாபிம் பூஜயாமி (நாபி)

    * ஓம் புரமதனபுண்யகோட்யை நம: வக்ஷ: பூஜயாமி (மார்பு)

    * ஓம் மஹாக்ஞான தாயின்யை நம: ஸ்தநௌ பூஜயாமி (ஸ்தனம்)

    * ஓம் லோகமாத்ரே நம: கண்டம் பூஜயாமி (கழுத்து)

    * ஓம் மாயாயை நம: நேத்ரே பூஜயாமி (கண்)

    * ஓம் மதுரவேணீ ஸஹோதர்யை நம: லலாடம் பூஜயாமி (நெற்றி)

    * ஓம் ஏகாம்பரநாதாயை நம: கர்ணம் பூஜயாமி (காது)

    * ஓம் காமகோடி நிலயாயை நம: சிர: பூஜயாமி (தலை)

    * ஓம் காமேச்வர்யைநம: சி'குரம் பூஜயாமி (முன் முடி)

    * ஓம் காமிதார்த்ததாயின்யை நம: தம்மில்லம் பூஜயாமி (நெற்றிச்சுட்டி)

    * ஓம் காமாக்ஷ்யை நமஸர்வாணி அங்கானி பூஜயாமி (முழுவதும்)

    • இன்று காரடையான் நோன்பு விரதம்.
    • பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பாகும்.

    இன்று காரடையான் நோன்பு விரதம். பூஜை செய்து சரடு கட்டிக் கொள்ள உகந்த நேரம், காலை 10.30 மணிமுதல் 11.30 மணிவரை. இனி இந்த விரதம் குறித்து சுருக்கமாகக் காண்போம்.

    எமனுடன் வாதாடி இறந்த தன் கணவனின் உயிரை மீட்ட சாவித்திரியின் பதி விரதத்தைப் போற்றவும், உயிருடன் இருக்கும் தங்கள் கணவர்கள் சத்தியவான் போல எவ்வித குறைவுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும் என்பதற்காகவும், பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பாகும்.

    சுமங்கலி பெண்கள் தங்களது மங்கள வாழ்வை நீட்டித்துக் கொள்ளும் மகத்தான விரத நாள்தான் இது. மாசி மாதத்தின் இறுதி நாளும், பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் நேரத்தில் இந்த விரதம் கொண்டாடப்படுகிறது. இது சாவித்திரி விரதம், சர்வ மங்கள விரதம், கர்வ சாவத், கங்கார் விரதம், ஜித்திய விரதம் என்ற பெயர்களில் வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

    எந்த பெயரில் இந்த விரதம் கொண்டாடப்பட்டாலும், நோக்கம் என்னவோ ஒன்றுதான். தன் கணவன், பூரண ஆயுளைப் பெற்று அனைத்து வளங்களுடன் வாழ வேண்டும் என்பதுதான் காரடையான் நோன்பு விரதத்தின் நோக்கமாகும்.

    கார் அரிசியால் செய்த இனிப்பு அடையும், உப்பு அடையும் செய்வது வழக்கம். இந்த நாளில் மஞ்சள் பூசிய நோன்புக் கயிற்றை பெண்கள் கட்டிக் கொள்வார்கள். சிலர் புதிய தாலிச்சரடுடன் நோன்புக்கயிற்றையும் கட்டிக் கொள்வார்கள். `மாசிக்கயிறு பாசி படியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, பங்குனி நாளில் இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்கள், தங்கள் தாலிக்கயிற்றை மாற்றிக் கொள்வார்கள். படைக்கப்பட்ட அடையை எல்லோரும் உண்ட பிறகு, பசுமாட்டுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

     சம்பத்கௌரி விரதம்

    முதலில் பங்குனி மாத பிறப்பு என்பதால், மாத பிறப்பு பூஜையை செய்வார்கள். முன்னோர்களுக்கான மாத தர்ப்பணத்தை செய்வார்கள். ஒவ்வொரு மாதமும் அம்பாளுக்குரிய விரத நாட்களை ''கௌரி விரத நாள்கள்'' என்று சொல்வார்கள்.

    ஒவ்வொரு கௌரி விரதத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதில் பங்குனி மாதம் அதாவது இன்றைய தினம் அனுஷ்டிக்க வேண்டிய கௌரி விரதம், சம்பத் கௌரி விரதம். சகல விதமான செல்வாக்குடன் பெண்கள் வாழ்வதற்கும், குடும்ப கருத்து ஒற்றுமைக்கும் இந்த விரதமானது அனுசரிக்கப்படுகிறது. காரடையான் நோன்பு நாளாகவும் இந்த நாள் அமைவதால், இரண்டு விரதத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். அம்பாளை வழிபடுவதுதானே முக்கியமான நோக்கம்.

    • பெண்களின் திருமாங்கல்யத்தை காப்பதற்காக இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
    • நோன்பு இருக்கும் தினத்தன்று காலையில் ஒருவேளை மட்டும் சாப்பிடலாம்.

    மாசி மாத ஏகாதசியில் வருகின்ற முக்கியமான நோன்பு காரடையான் நோன்பு.

    பெண்களால் இந்த விரதம் மேற்கொள்ளப்படும்.

    இந்த விரதத்தை கடைபிடிக்க ஒரு கலசத்தில் தேங்காயை வைத்து அதைச் சுற்றி மாவிலைகள் கொண்டு கட்ட வேண்டும்.

    அந்த கலசத்தின் மேல் மஞ்சள் கயிறு கொண்டு கட்டி மஞ்சள், சந்தனம், குங்குமம் பூச வேண்டும்.

    அலங்கரிக்கப்பட்ட கலசத்தை பூஜையறையில் வைத்து காமாட்சியம்மனை வேண்டிக் கொண்டு

    நைவேத்தியம் படைத்து, தீபாராதனைகள் செய்து வணங்க வேண்டும்.

    நைவேத்தியமாக பழம், பொரி, சுண்டல் வைக்கலாம்.

    பெண்களின் திருமாங்கல்யத்தை காப்பதற்காக இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

    பூஜை முடிந்தவுடன் கார அடையுடன், ஜாக்கெட் பிட், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை

    சுமங்கலிப் பெண்களுக்கு தந்து விட்டு அதன்பின்னர் கலசத்தில் கட்டிய மஞ்சள் கயிற்றை எடுத்து

    விரதமிருந்த பெண் கட்டிக் கொள்ளலாம்.

    நோன்பு இருக்கும் தினத்தன்று காலையில் ஒருவேளை மட்டும் சாப்பிடலாம்.

    • சித்தர் பீடத்தில் காரடையான் நோன்பு விழா நடைபெற்றது.
    • பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேகம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் காரடையான் நோன்பு விழா நடைபெற்றது.

    அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 7 மணிக்கு அம்பாள் உற்சவ அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்தார்கள். இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், மகாராஜா, மாரிஸ் வரன் விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி இசக்கிமுத்து, மாரித்தாய் செல்வராணி, ஜோதிலட்சுமி, சந்திரா மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வளையல், மஞ்சள், சரடு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்திருந்தனர்.

    ×