search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து ஆய்வாளர்"

    • தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆவணங்களை சேகரித்துக் கொண்டு சென்றனர்.
    • தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆவணங்களை சேகரித்துக் கொண்டு சென்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலராக செந்தில் வேலன் மற்றும் ஆய்வாளராக சோமசுந்தரம் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

    இதில் சோமசுந்தரம் கடந்த 29ம் தேதி ஒரு நாளில் மட்டும் வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம் உட்பட சுமார் 400 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளித்ததாக கூறப்பட்டதுடன் இது குறித்த புகார்கள் போக்குவரத்து ஆணையருக்கு சென்றது.

    இதனைத் தொடர்ந்து கடந்த 30ம் தேதி போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜ், கூடுதல் ஆணையர் மணக்குமார் ஆகியோர் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆவணங்களை சேகரித்துக் கொண்டு சென்றனர்.

    இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில் வேலன் உடனடியாக விடுவிக்கப்பட்டு சோழிங்கநல்லூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் யுவராஜ் தாம்பரம் வட்டார போக்குவரத்து பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் நான் ஒரு விண்ணப்பங்களுக்கு ஒரே நாளில் அனுமதி வழங்கிய ஆய்வாளர் சோமசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கே.கே நகர் வட்டார போக்குவரத்து அமலாக்க பிரிவில் இருந்த கார்த்திக் என்பவர் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • கோவில்பட்டி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும்.
    • கோவில்பட்டி நகரில் சுமார் 1½ லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர்.

    கோவில்பட்டி:

    தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற கோவில்பட்டி நகர தலைவர் எம்.மைக்கேல் அமலதாஸ் செய்தியாளரிடம் கூறிய தாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி வளர்ந்து வரும் மிகப் பெரிய நகரமாகும். கோவில்பட்டி நகரில் 36 வார்டுகள் உள்ளன. தொழிற்சாலைகள் மற்றும் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும்.

    கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மூப்பன்பட்டி, இலுப்பையூரணி, பூசாரிபட்டி, வடக்கு, தெற்கு திட்டக்குளம் மற்றும் மேற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாண்ட வர்மங்கலம், மந்திதோப்பு, தோணுகால்,

    சாலைப்புதூர், ஆவல்நத்தம், அய்யனேரி, வெங்கடாசலபுரம், புளி யங்குளம், பாறைப்பட்டி, கிருஷ்ணா நகர், சுபா நகர், கணேஷ் நகர், ராஜகோபால் நகர், பல்லக்கு ரோடு, சண்முக சிகாமணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கோவில்பட்டியை சுற்றி சுமார் 30 கிராமங்களில் இருந்தும் தினசரி பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் கோவில்பட்டி நகருக்குள் வந்து செல்கின்றனர்.

    இதனால் அவ்வபோது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துக்களால் உயிர் பலியும் ஏற்படுகிறது. கோவில்பட்டி நகரில் சுமார் 1½ லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர். இங்கு டி.எஸ்.பி அலுவலகம், கிழக்கு, மேற்கு போலீஸ் நிலையம், போக்குவரத்து பிரிவு மகளிர் போலீஸ் நிலையம், மதுவிலக்கு என பல போலீஸ் நிலையங்கள் உள்ளன. அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் பொது மக்களின் நலன் காத்திடவும், விபத்து மற்றும் குற்றசெயல்களை தடுத்திடும் வகையிலும் போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

    பெருகி வரும் வாகன போக்குவரத்தை கணக்கில் கொண்டு போக்குவரத்து காவல் ஆய்வாளரை உடன டியாக நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×