search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி நகைகள்"

    • கூட்டுறவு நகர வங்கியில் போலி நகைகள் மூலம் ரூ.15 லட்சம் வரை கடன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • நகைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோட்டில் கூட்டுறவு நகர வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.15 லட்சம் வரை கடன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி கூட்டுறவு சங்கத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூட்டுறவு சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ஆனால் 3 மாதங்களுக்கு மேலாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    இந்நிலையில் கூட்டுறவு நகர வங்கி ஊழியர்கள் சிலர் போலி நகைக்கான பணத்தை செலுத்தி திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

    போலி நகைகள் வைத்து உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை காப்பாற்ற நினைக்கும் மேலாண்மை இயக்குநர் அகிலா மற்றும் அதிகரிகளை கண்டித்து வங்கியின் நிர்வாக இயக்குனராக உள்ள ராஜேந்திரன் என்பவர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.

    • நிதி நிறுவனத்தின் கிளை மேலாளர் அன்பரசு வாலாஜாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷ் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.

    பனப்பாக்கம் அடுத்த நெடும்புலி பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 31), அஜித் (22) ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் 45 பவுன் தங்க முலாம் பூசிய போலி நகைகளை தனித்தனியாக அடகு வைத்தனர்.

    இதன் மூலம் நிதி நிறுவனத்தில் இருந்து 14 லட்சம் ரூபாய் பெற்று சென்றுள்ளனர். இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் வருடாந்திர ஆய்வு தணிக்கை செய்தனர்.

    இதில் பிரகாஷ், அஜித் ஆகிய இருவரும் அடமானம் வைத்த நகைகள் போலியானது என்பதும், திட்டமிட்டு தங்க முலாம் பூசிய 45 பவுன் நகைகளை ஏமாற்றி அடகு வைத்ததும் தெரியவந்தது.

    இது தொடர்பாக நிதி நிறுவனத்தின் கிளை மேலாளர் அன்பரசு வாலாஜாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷ் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அடகு நகைகளை சோதித்துப் பார்த்தபோது அது தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரியவந்தது.
    • நிதி நிறுவன மேலாளர் ரத்தினசேகர் மனைவி காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபரை தேடி வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் கோமதியாபுரம் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது.

    போலி நகை

    இந்த நிதி நிறுவனத்தில் ராஜபாளையத்தை சேர்ந்த சச்சில் எட்வின் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலி ஆதார் கார்டு மூலம் 24 கிராம் எடையுள்ள 2 வளையல்களையும், 48 கிராம் எடையுள்ள 4 வளையல்களையும் அடகு வைத்து ரூ.2 லட்சத்து 81 ஆயிரத்து 300 பெற்றுள்ளார்.

    இந்நிலையில் அடகு வைத்த நபர் முறையாக வட்டி கட்டாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவனத்தில் உள்ளவர்கள் அவருக்கு போன் எண்ணை தொடர்பு கொண்ட போது தொடர்பு கொள்ள முடியாத தவறான நம்பரை அளித்துள்ளதாக தெரிகிறது.

    அதனைத்தொடர்ந்து அவர் அடகு வைத்த நகைகளை சோதித்துப் பார்த்தபோது அது தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த நிதி நிறுவன மேலாளர் ரத்தினசேகர் மனைவி காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபரை தேடி வருகின்றனர்.

    மேலும் இவர் மீது நெல்லை டவுன் மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

    ×