search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் கோலப்போட்டியில் அசத்திய பெண்கள்
    X

    கோவில்பட்டியில் கோலப்போட்டியில் அசத்திய பெண்கள்

    • மகளிர் தின விழா கோலப்போட்டி கோவில்பட்டி ராஜீவ் நகரில் நடைபெற்றது.
    • சிறந்ததாக 2 கோலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் கரிசல் இலக்கியம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் மகளிர் தின விழா கோலப்போட்டி நடை பெற்றது.

    கோவில்பட்டி ராஜீவ் நகரில் உள்ள கவுணியன் பதின்ம பள்ளியில் நடைபெற்ற போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பெண்மையை போற்றும் வகையிலும், பெண் உரிமை, பெண்கள் சுதந்திரம், தாய்மை என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வண்ண கோலங்கள் இட்டு அசத்தினர்.

    இதையடுத்து சிறந்ததாக 2 கோலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழக்கப்பட்டன. பரிசளிப்பு விழாவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமை தாங்கினார். ஆசிரியை அமல புஷ்பம் வரவேற்றார். சத்தியபாலன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மருத்துவர் லதா வெங்கடேஷ் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்ற செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விழா ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    Next Story
    ×