search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை உடல்நலம்"

    • குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
    • குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டிற்கு இன்றைய காலகட்டத்தில் ஏராளமான காரணங்கள் உள்ளன. உருவாக்குகிறது.

    மக்களிடையே செல்போன் பயன்பாடு தற்போது அதிகமாக உள்ளது. குழந்தைகள் அழும் போது அவர்களை சமாதானம் செய்ய, பெற்றோர்கள் செல்போனை கையில் கொடுத்து அழுகையை நிறுத்துகின்றனர். காலப்போக்கில் குழந்தைகள் செல்போன் இருந்தால் தான் உணவு சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது என அனைத்திற்கும் அடம்பிடிக்க ஆரம்பிக்கின்றனர்.

    கொரோனா கால கட்டத்தில் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. அதில் இருந்து குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். செல்போன்களை அதிக நேரம் உற்றுப்பார்ப்பதால் குழந்தைகளுக்கு தூர பார்வையில் கோளாறுகள் ஏற்படுகிறது. அதேபோல் லேப்டாப்பில் படம் பார்ப்பது, அதிக நேரம் டி.வி. பார்ப்பது போன்ற செயல்களின் காரணமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கண் பார்வை அதிகம் பாதிக்கப்படுகிறது.

    காலப்போக்கில் பார்வை கோளாறு, மங்கலான பார்வை போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி கண்ணாடி பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. அதேபோல் உணவு பழக்க வழக்க முறைகளிலும் மாற்றம் வந்துள்ளது. கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், பிரைடு ரைஸ், பர்கர் போன்ற அரைவேக்காடு உணவுகளால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே குழந்தைகளுக்கு சிறு தானியங்கள், காய்கறிகள், பழ வகைகள் மற்றும் கீரைகள் போன்ற உணவு முறைகளை பழக்கப்படுத்த வேண்டும். அதேபோல் கண்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுத்தும் செல்போன் உள்ளிட்ட பயன்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டிற்கு இன்றைய காலகட்டத்தில் ஏராளமான காரணங்கள் உள்ளன. அதிகப்படியான ஒளி தொடர்ச்சியாக கண்களில் படுவதால் கண் நரம்புகளை பாதித்து கண் குறைபாடுகளை உருவாக்குகிறது. அதற்கு நம் அன்றாட வாழ்க்கை முறையில் உள்ள பல காரணங்களை கூறலாம்.

    உணவு முறை, டி.வி., செல்போன் முழு முதல் காரணம் என்றாலும், நாம் அதிகமாக கவனிக்க தவறும் காரணம் எல்.இ.டி. பல்புகள். வீடுகள், வாகனங்களில் அதிகமாக பயன்படுத்தும் எல்.இ.டி. பல்புகள் மற்றும் செல்போன் பிளாஷ் லைட்டுகளிலிருந்து வரும் நீல ஒளி விழித் திரையை குறிப்பாக குழந்தைகளுக்கு உடனடியாக பாதிக்கும். இதர கண் நோய்களையும், தூக்கமின்மையையும் கொடுக்கும்.

    அதனால் பொதுமக்கள் சமூகப் பொறுப்புடன் அலங்காரத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும், அதனை பயன்படுத்துவதை தவிர்த்தல் வருங்கால தலைமுறைக்கு செய்யும் சமூக கடமையாகும். சாதா குண்டு பல்பும், டியூப் லைட்டும் கண் பாதிப்புகளை ஏற்படுத்தாது. செல்போனை எவ்வாறு கையாள வேண்டும் என்ற ஒழுங்கு முறை மற்றும் தினசரி உடற்பயிற்சியுடன் கூடிய கண் பயிற்சி குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கற்பித்து, பெற்றோரும் அவர்களுடன் இணைந்து செய்து நடைமுறைப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டால் கண் பார்வையை பல தலைமுறைகளுக்கு காப்பாற்றிக் கொள்ளலாம்.

    • குழந்தைகளைக் கண்ணும் கருத்தாகத்தான் எல்லா பெற்றோரும் வளர்க்கிறார்கள்.
    • குழந்தைகளின் உடல் சார்ந்த விளையாட்டுகளில் பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும்.

    இளம் வயதிலேயே குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் முதுமையில் எலும்பின் அடர்த்தி குறைவது, தேய்மானம் ஏற்படுவது, எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். குழந்தைகளைக் கண்ணும் கருத்தாகத்தான் எல்லா பெற்றோரும் வளர்க்கிறார்கள்.

    குழந்தைக்குப் போதுமான ஊட்டச்சத்துள்ள உணவைக் கொடுக்க வேண்டும் என்பதிலும் பெரிதும் கவனம் செலுத்துகிறார்கள். எலும்பின் ஆரோக்கியத்துக்குத் தேவையான கால்சியம் நிறைந்துள்ள பால், முட்டை போன்ற உணவுகளைக் கொடுக்கிறார்கள். பாலின் நிறம், சுவை பிடிக்காத குழந்தைகளுக்கு மில்க் ஷேக் மாதிரியும் கொடுத்து சமாளித்துவிடுகிறார்கள். சிலர் பாலில் சாக்லெட் கலந்து கொடுப்பதையும் கேள்விப்படுகிறோம். ஆனால், அவர்களை அதீத கவனம் எடுக்கிறோம் என்ற பெயரில் விளையாட விடுவதில்லை. இதை சரிசெய்தால் போதும்.

    குழந்தைகளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது, நோயில் இருந்து பாதுகாக்க வேண்டும், சிறுகாயம்கூட ஏற்படாமல் வளர்க்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளை விளையாட அனுமதிக்காதது தவறு. குழந்தைகள் தவழும் நிலையிலிருந்து எவ்வளவு விரைவாக நடக்க ஆரம்பிக்கிறார்களோ, எந்த அளவுக்கு ஓடி ஆடி விளையாடுகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களுடைய எலும்புகள் வலிமை உள்ளதாக இருக்கும்.

    பெரும்பாலான பெற்றோர் இந்த விஷயத்தில் கவனக்குறைவாக இருந்துவிடுகிறார்கள். குழந்தைப் பருவத்தில் எலும்புகளின் அமைப்பு மாறிக்கொண்டே இருக்கும். குழந்தைகள் வளர்ச்சி அடைவதற்கு ஏற்ப, ஏற்கெனவே உள்ள எலும்புகள் மாறி புதிய எலும்புகள் உருவாகும். குறிப்பாக, எலும்புகளில் உள்ள திசுக்களின் அமைப்பு மாறிக்கொண்டு இருக்கும். இந்த மாற்றத்தை பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டும்.

    எத்தனை சீக்கிரம் நடக்கிறார்களோ அதைப் போல அவர்களின் உடல் சார்ந்த விளையாட்டிலும் பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும். சின்ன வயதில் அவர்கள் ஓடி ஆடி விளையாடுவதே உடற்பயிற்சிக்கு இணையானது. வெயிலில் விளையாடும்போது அவர்களுக்கு சூரிய வெளிச்சத்தில் இருந்து போதுமான வைட்டமின் டியும் கிடைக்கும். இதன்மூலமும் எலும்பு பலமாகும்.'ஓடி விளையாடு பாப்பா' என்று பாரதியார் சொன்னதைப் போல, குழந்தைகள் விளையாட்டை நாம் ஊக்கப்படுத்தும்போது எலும்புக்கூட்டில் இருக்கும் திசுவின் அடர்த்தி அதிகரிக்கும்.

    • ஒரு வயது குழந்தை கூட செல்போனில் இருக்கும் அப்ளிகேஷன்களை அழகாக கையாள பழகி விட்டது.
    • குழந்தைகள் குனிந்த தலை நிமிராமலேயே கூர்ந்து செல்போனை பார்ப்பது ஆபத்தானது.

    கொரோனா காலகட்டத்தில் அறிமுகமான ஆன்லைன் வகுப்பு ஏற்படுத்திய தாக்கம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் இருந்து மாணவர்களை மீள முடியாமல் வைத்துவிட்டது. தொடக்க கல்வி பயிலும் குழந்தைகளின் கைகளில் கூட சர்வ சாதாரணமாக உலா வந்து கொண்டிருக்கிறது. அவர்களின் சேட்டைகளை கட்டுப்படுத்த பெற்றோரே கையில் ஸ்மார்ட்போனை கொடுக்கும் நிலைமை உண்டாகிவிட்டது

    அதனால் ஒரு வயது குழந்தை கூட செல்போனில் இருக்கும் அப்ளிகேஷன்களை அழகாக கையாள பழகி விட்டது. அப்படி குழந்தைகள் நீண்ட நேரம் செல்போனில் வீடியோ பார்த்தலோ அல்லது வீடியோ கேம் விளையாடினாலோ கழுத்து பகுதியில் அழுத்தம் ஏற்பட தொடங்கிவிடும். அது நாளடைவில் வலியை அதிகப்படுத்திவிடும்.

    குழந்தைகள் குனிந்த தலை நிமிராமலேயே கூர்ந்து செல்போனை பார்ப்பது ஆபத்தானது. அது சட்டென்று கழுத்துவலிக்கு வித்திட்டுவிடும். நாளடைவில் தோள்பட்டை வலி, முதுகுவலி உண்டாகுவதற்கும் வழிவகுத்துவிடும். ஆதலால் குழந்தைகள் அதிக நேரம் போன் பார்ப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. செல்போன் பார்க்கும்போது நேராக அமர்ந்த நிலையில் இருக்கிறார்களா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இப்போது கல்வி சம்பந்தமான அப்ளிகேஷன்கள் ஏராளமான அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. அவை அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதிலேயே அதிக நேரத்தை செலவிடுவது கழுத்து வலிக்கு வழிவகுப்பதோடு மட்டுமில்லாமல் மூளைக்கும் அயர்ச்சியை ஏற்படுத்தி விடும். அதன் தாக்கமாக தேவையற்ற வலி, வேதனைகளை அனு பவிக்க வேண்டியிருக்கும்.

    • குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
    • குண்டு பல்பும், டியூப் லைட்டும் கண் பாதிப்புகளை ஏற்படுத்தாது.

    குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டிற்கு இன்றைய காலகட்டத்தில் ஏராளமான காரணங்கள் உள்ளன. மக்களிடையே செல்போன் பயன்பாடு தற்போது அதிகமாக உள்ளது. குழந்தைகள் அழும் போது அவர்களை சமாதானம் செய்ய, பெற்றோர்கள் செல்போனை கையில் கொடுத்து அழுகையை நிறுத்துகின்றனர். காலப்போக்கில் குழந்தைகள் செல்போன் இருந்தால் தான் உணவு சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது என அனைத்திற்கும் அடம்பிடிக்க ஆரம்பிக்கின்றனர். கொரோனா கால கட்டத்தில் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது.

    அதில் இருந்து குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். செல்போன்களை அதிக நேரம் உற்றுப்பார்ப்பதால் குழந்தைகளுக்கு தூர பார்வையில் கோளாறுகள் ஏற்படுகிறது. அதேபோல் லேப்டாப்பில் படம் பார்ப்பது, அதிக நேரம் டி.வி. பார்ப்பது போன்ற செயல்களின் காரணமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கண் பார்வை அதிகம் பாதிக்கப்படுகிறது. காலப்போக்கில் பார்வை கோளாறு, மங்கலான பார்வை போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி கண்ணாடி பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது.

    அதிகப்படியான ஒளி தொடர்ச்சியாக கண்களில் படுவதால் கண் நரம்புகளை பாதித்து கண் குறைபாடுகளை உருவாக்குகிறது. அதற்கு நம் அன்றாட வாழ்க்கை முறையில் உள்ள பல காரணங்களை கூறலாம். உணவு முறை, டி.வி., செல்போன் முழு முதல் காரணம் என்றாலும், நாம் அதிகமாக கவனிக்க தவறும் காரணம் எல்.இ.டி. பல்புகள். வீடுகள், வாகனங்களில் அதிகமாக பயன்படுத்தும் எல்.இ.டி. பல்புகள் மற்றும் செல்போன் பிளாஷ் லைட்டுகளிலிருந்து வரும் நீல ஒளி விழித் திரையை குறிப்பாக குழந்தைகளுக்கு உடனடியாக பாதிக்கும்.

    இதர கண் நோய்களையும், தூக்கமின்மையையும் கொடுக்கும். அதனால் பொதுமக்கள் சமூகப் பொறுப்புடன் அலங்காரத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும், அதனை பயன்படுத்துவதை தவிர்த்தல் வருங்கால தலைமுறைக்கு செய்யும் சமூக கடமையாகும். சாதா குண்டு பல்பும், டியூப் லைட்டும் கண் பாதிப்புகளை ஏற்படுத்தாது. செல்போனை எவ்வாறு கையாள வேண்டும் என்ற ஒழுங்கு முறை மற்றும் தினசரி உடற்பயிற்சியுடன் கூடிய கண் பயிற்சி குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கற்பித்து, பெற்றோரும் அவர்களுடன் இணைந்து செய்து நடைமுறைப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டால் கண் பார்வையை பல தலைமுறைகளுக்கு காப்பாற்றிக் கொள்ளலாம்.

    அதேபோல் உணவு பழக்க வழக்க முறைகளிலும் மாற்றம் வந்துள்ளது. கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், பிரைடு ரைஸ், பர்கர் போன்ற அரைவேக்காடு உணவுகளால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே குழந்தைகளுக்கு சிறு தானியங்கள், காய்கறிகள், பழ வகைகள் மற்றும் கீரைகள் போன்ற உணவு முறைகளை பழக்கப்படுத்த வேண்டும். அதேபோல் கண்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுத்தும் செல்போன் உள்ளிட்ட பயன்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

    • கோடை காலத்தில் குழந்தைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • கோடை காலத்தில் சாப்பிடும் உணவுகள் விஷத்தன்மையாக மாறிவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன

    வெயிலோடு உறவாடி....

    வெயிலோடு மல்லுக்கட்டி

    ஆட்டம்போட்டோமே....

    இந்த பாடல் வரிகள் கிராமப்புற சிறுவர்களின் வாழ்வியலை அப்படியே படம்பிடித்து காட்டியிருந்தது.

    கோடை விடுமுறை விட்டால்போதும், குழந்தைகள் வீட்டை துறந்து, வெயிலை மறந்து நண்பர்களுடன் காடு....கரையெல்லாம் ஓடியாடி விளையாட சென்றுவிடுவார்கள்.

    வீட்டில் உள்ள பெரியவர்கள், இப்படி வெயிலில் விளையாடுகிறாயே உடம்புக்கு ஏதாவது ஆகிவிடப்போகுது என்பார்கள். அதையெல்லாம் பிள்ளைகள் ஒரு பொருட்டாக கருதியது இல்லை.

    பொதுவாக வெயில் காலத்தில் நமக்கு தெரிந்த நோய் என்பது வியர்க்குரு உள்ளிட்ட தோல் நோய்களும், வயிற்றுப்போக்கு, நீர்க்கடுப்பு போன்ற சில நோய்களும்தான்.

    இதையெல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள், 'சூட்டுனால வருது... நல்லெண்ணெய் போடு சரியாகிவிடும் என்பார்கள்'.

    இதைத்தாண்டி, கோடை காலத்தில் சாப்பிடும் உணவுகள் விஷத்தன்மையாக மாறிவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் சூடான, ஈரப்பதமான கால நிலையால் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமி மற்றும் ரசாயான நச்சுக்கள் உண்ணும் உணவு மூலம் உடலுக்குள் புகுந்து, வயிற்று கோளாறுகள், குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

    இது தவிர வெப்பம் மிகுதியால் வரும் கண்நோய்கள். இந்த நோய்கள் வந்தால், ஒருவித வைரஸ் தொற்றால் இமைகளின் வெளிப்புற சவ்வு மற்றும் உள் கண்ணிமை பாதித்து விடும். இதனால் கண்ணில் ஒருவித கூச்ச உணர்வு ஏற்பட்டு கண்கள் சிவந்து நீர் வடியும்.

    அடுத்ததாக கோடையில் வருகின்ற ஒருவித மனச்சோர்வு. இதனால் ஏற்படும் பசியின்மை, எடை இழப்பு , தூங்குவதில் சிரமம் போன்றவை படாய் படுத்தி விடும். மேலும் கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீரிழப்பு என்பது முக்கிய பிரச்சினை.

    நமது உடலில் உள்ள நீர்த்தன்மைதான் நமது உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றன. உடலில் ஓடும் ரத்தமும் நீர்தன்மை வாய்ந்ததே. ஆனால் கோடைக்காலத்தில் நாம் அறியாமலேயே வியர்வையின் மூலம் அதிகளவு நீர் மற்றும் உப்புக்களை இழக்கிறோம்.

    பொதுவாக உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவு உட்கொள்ளும் அளவை விட அதிகமாக இருந்தால், அது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது.

    இந்த நீரிழப்பு தன்மை ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால், அவரது வாய் மற்றும் நாக்கு வறட்சியாக மாறும். கடுமையான சோர்வு, பசியின்மை, தலைவலி ஏற்பட்டு விடும். இது தவிர காதுகளுக்கு முன்னால் உள்ள பரோடிட் சுரப்பி பாதிக்கப்படும். இதன் விளைவாக குறிப்பிடத்தக்க வீக்கம், காய்ச்சல் ஏற்படுகிறது. தொடர்ந்து சூடான அனல் காற்றை சுவாசிக்கும்போது, சுவாசப்பாதைகள் சுருங்கி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

    சூரியனில் இருந்து அதிகளவில் வெளிவரும் புற ஊதாக்கதிர்கள் நமது தோல் பகுதியில் ஆபத்தான நோய்களை விளைவிக்கும்.

    இதுபோன்ற கோடைகால நோய்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடிய சாதாரண நோய்தான்.

    அதைவிட மிகவும் ஆபத்தானது 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் வெப்ப பக்கவாதம் தான்.

    இதை மருத்துவர்கள் சன் ஸ்ட்ரோக் என்றும் ஹைபர்தர்மியா என்றும் சொல்கின்றனர்.

    அது என்ன 'ஹீட் ஸ்ட்ரோக்'?

    பொதுவாக ஒருவர் கொளுத்தும் வெயிலில் வேலை செய்யும் போது, தலைவலி , தலைச்சுற்றல் மற்றும் பலவீனங்கள் ஏற்படுகின்றது. இதுதான் ஹீட் ஸ்ட்ரோக்கிற்கு முந்தைய அறிகுறி என்கின்றனர்.

    இந்த நிலைகள் தொடரும்போது, இருதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உள்ளுறுப்புகள செயலிழப்பு, சுயநினைவின்மை ஏற்பட்டு விடும். அப்புறம் என்ன....மரணம்தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு, மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற 23 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுவும் ஹீட் ஸ்ரோக் மூலம் ஏற்பட்ட இழப்பு என்றே கருதப்படுகிறது.

    திடீர் நெஞ்சுவலி போலவே இந்த வெப்ப பக்கவாத நோய் படு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும். நன்றாக பேசிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென்று மயக்கமடைந்து சாய்ந்து விட்டால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டது என்று கூறிவிடுகிறோம். அதுபோலவே இந்த நோயும் ஒன்றாக காணப்படுகிறது. இதனால் ஹார்ட் அட்டாக் எது ஹீட் ஸ்ட்ரோக் எது என்று அடையாளம் காண முடியாமல் போய் விடுகிறது.

    நம் உடலின் உள் வெப்பநிலையும், பி.எச் அளவும், எப்போதும் குறிப்பிட்ட அளவுதான் இருக்க வேண்டும். அப்போதுதான், ரத்தத்திலுள்ள ரசாயனங்கள் அனைத்தும் சரியாக வேலைசெய்யும். ரத்தத்தின் வெப்பம் குறைந்து, குளிர்ந்தநிலைக்குச் சென்றுவிட்டால் ரத்தம் உறையத்தொடங்கி விடும். இது அபாய நிலை.

    நமது உடல் வெப்பநிலையைச் சரியான அளவில் பராமரிக்க, நம் மூளையிலுள்ள ஹைப்போதாலமாஸில் ஒரு தெர்மோஸ்டாட் இருக்கிறது. தேவைப்படும்போது நம் உடலின் வெப்பநிலையைக் குறைத்தும், அதிகப்படுத்தியும் நம் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கும் வேலையை தெர்மாஸ்டாட் செய்கிறது.

    இந்த தெர்மாஸ்டாட் செயலிழந்துபோகும் நிலைக்குத்தான் ஹீட் ஸ்ட்ரோக் என்று கூறுகின்றனர். இதில் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக், மற்றும் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் என்று இரண்டு வகை.

    எந்த செயல்களிலும் ஈடுபடாமல், சாதாரண சுற்றுப்புறச்சூழலில் இருக்கிற வெப்பத்தின் தாக்கத்தால் மட்டும் ஏற்படுவதுதான் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக். இது உடலில் சூரிய ஒளி படுவதால் மட்டுமே உண்டாகும். பெரும்பாலும் இந்த வகை ஸ்ட்ரோக் வயதானவர்களுக்குத்தான் ஏற்படும். ஆனால் இளவயது காரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இதற்கு அவர்கள் வெயிலில் நீண்ட தூரம் ஓடுவது, விளையாடுவது, அந்த நேரங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களை சொல்லலாம்..

    குழந்தைகளை பொறுத்தவரை தெர்மோஸ்டாட் சுரபி வளர்ச்சியடைந்திருக்காது. அதனால் கோடை காலத்தில் குழந்தைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். முதியவர்களுக்கு தெர்மோஸ்டாட் செயலிழந்து போயிருக்கும். இது நல்லநிலையில் இருந்தாலும், வெளிப்புற செயல்பாடுகளின் மூலமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே வெயில் காலத்தில் நாம் வெளியே நடமாடுவதில் கவனம் கட்டாயம் தேவை. இல்லை எனில் சுட்டெரிக்கும் வெயிலால் உயிர் குடிக்கும் நோயான ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் உருவாகிவிடும் அல்லவா?

    இதற்காகத்தான் கோடை காலத்தில் சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். நமது உடலிலிருந்து வெளியேறும் சிறுநீரின் அளவைவிட 500 மி.லி அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதுபற்றி மருத்துவர்கள் மேலும் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.

    • குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம்.
    • குழந்தைகளுக்கு மெல்லிய பருத்தி ஆடைகளை உபயோகிப்பதே நல்லது.

    நட்சத்திரம் ஆரம்பித்து விட்டதால் முன்பை விட வெயில் அதிகமாக வாட்டி வதைக்கின்றது.குழந்தைகளுக்கும் கோடை விடுமுறை என்பதால் அவர்களை வீட்டில் அதிக நேரம் பூட்டி வைக்க முடியாது.அதற்கு மேல் பூட்டி வைத்தால் அவர்களின் விளையாட்டு மொபைல் போன்களிலும்,தொலைக்காட்சிகளிலும் கழியும். ஆனால்,அது குழந்தைகளின் உடல் நலனை பாதிக்கும்.அதனால் குழந்தைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் விளையாட அனுமதிப்பதே சிறந்தது.அதே நேரம் குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம்.

    குழந்தைகள் பொதுவாக விளையாடும் ஆர்வத்தில் உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்துவதை மறக்கின்றனர்.அதே நேரம் விளையாடும் பொழுது உடலில் உள்ள தண்ணீர் வியர்வையாக அதிகம் வெளியேறுகின்றது.எனவே உடலுக்குள் செல்வதைவிட அதிக அளவு திரவம் வெளியேறும்போது உடலில் நீர் வறட்சி ஏற்படுகின்றது. அதிக தாகம் எடுத்தல்,சிறுநீர் சிறிது சிறிதாக வெளியேறுதல் மற்றும் அடர்மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல் ஆகியவை இதற்கான அறிகுறிகள் ஆகும்.இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு குடிக்க அதிக அளவில் தண்ணீர்,இளநீர் மற்றும் ஓ. ஆர் .எஸ் பவுடர் முதலியவற்றை கொடுக்கலாம். இது உடலுக்கு தேவையான மினெரல் மற்றும் உப்பு ஆகியவற்றை தக்க வைத்துக்கொள்ள உதவும்.

    வெப்பத்தின் தாக்கம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதிகமாக இருக்கும். எனவே,அந்த நேரத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வதை தவிர்க்கலாம்.ஆறு மாதத்திற்கு கீழ் உள்ள குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லாமல் இருப்பதே சிறந்தது. ஏ.சி அறை என்றால், குளிர் 24 டிகிரி அளவில் இருப்பது போல் வைக்க வேண்டும். எப்போதும் ஏ.சி அறையிலேயே வைத்திருப்பதும் கூடாது.குழந்தைகள் வெளியில் செல்ல நேர்ந்தால் 15 நிமிடங்களுக்கு முன்பே சன் ஸ்கிரீன் பூசி விட வேண்டும்.

    வெயில் காலத்தில் குழந்தைகளை அதிகமான துணிகள் கொண்டு சுற்றினால் உடலின் வெப்பநிலை அதிகரிக்ககூடும். எனவே, குழந்தைகளுக்கு மெல்லிய பருத்தி ஆடைகளை உபயோகிப்பதே நல்லது.மிக மிருதுவான ஒரு பருத்தித் துணியால் போர்த்தினால் போதும். குழந்தைகளின் உடலுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் கனமான கவுன் முதலியவைகளை அணிய கூடாது.இரவு நேரத்தில் இன்னும் கூடுதலாக கவனம் தேவை.

    கோடை காலத்தில் குளிர்ச்சியான உணவுபொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். ராகி, கம்பு,பார்லி போன்ற உணவு பொருட்கள் கோடை காலத்தில் உண்பதற்கு ஏற்றவை.அதே போல சீரகம், கொத்துமல்லி முதலியவற்றையும் சாப்பிடலாம்.குழந்தைகளுக்கு 6 மாதத்திற்கு பின் திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது மேற்கண்ட பொருட்களை உணவுடன் சேர்த்து பார்லி வாட்டர், ராகி கஞ்சி, கம்பு கஞ்சி போன்ற வித விதமாவிதமான ரெசிபிக்களை சமைத்து கொடுக்கலாம். அதே போல் தண்ணீர்ச்சத்து அதிகமுள்ள, பழங்களையும் சாப்பிட அடிக்கடி கொடுக்க வேண்டும்.

    • குழந்தைகளை மிகவும் கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.
    • குழந்தைகள் கீழே எது கிடைத்தாலும் எடுத்து வாயில் போட்டு கொள்வார்கள்.

    சில குழந்தைகள் கீழே எது கிடைத்தாலும் எடுத்து வாயில் போட்டு கொள்வார்கள். எனவே குழந்தைகளை மிகவும் கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.

    குழந்தைகள் தவறுதலாக ஏதேனும் விழுங்கிவிட்டாலோ அல்லது சாப்பிடும்போது ஏதேனும் உணவுத் தொண்டையில் எக்குத் தப்பாகச் சிக்கிக்கொண்டாலோ, கையை விட்டு எடுக்கவோ, விரலை விட்டு எடுக்கவோ, கண்டிப்பாக முயற்சிக்கக் கூடாது.

    தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டால், அதை எடுப்பதற்கு, 'ஹீம்லிக் மெனுவர்' ( HEIMLICH MANEUVER) என்ற செய்முறை இருக்கிறது.

    இந்த முதல் உதவி சிகிச்சை முறைப்படி தெரிந்தவர்கள், அதை உபயோகித்துப் பொருளை எடுக்கலாம்.

    இல்லையெனில் உடனடியாக மருத்துவமனைக்குப் போய்விட வேண்டும்.

    ஏனென்றால், விழுங்கிய எட்டு நிமிடங்களுக்குள் அந்தப் பொருளை வெளியே எடுக்க வேண்டும். எனவே ஒவ்வொரு நொடியும், தங்க நொடிதான்.

    எட்டு நிமிடங்களுக்குப் பிறகும் ஆக்ஸிஜன் மூளைக்குச் செல்லவில்லை என்றால், விளைவு விபரீதம் ஆகிவிடும்.

    எனவே எதை செய்தாலும் தாமதிக்காமல் செய்வது மிகவும் முக்கியம்.

    • கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தாமல் பயன்படுத்தலாம்.
    • குளிர்காலத்தில் எண்ணெயை மிதமான சூட்டில் உபயோகிப்பதே நல்லது.

    இந்திய கலாசாரத்தில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் வழக்கத்தை பலரும் கடைப்பிடித்து வருகிறார்கள். குழந்தை பிறப்பதற்கு சில நாட்கள் முன்னதாகவே, வீட்டில் இருக்கும் பெரியவர்கள் குழந்தை பராமரிப்புக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாரித்து வைப்பார்கள். அதில் முக்கியமானவை மசாஜ் செய்வதற்கான எண்ணெய் மற்றும் குளியல் பொடி.

    மசாஜ் செய்வதற்கு பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யை பயன்படுத்துவார்கள். குழந்தைகளின் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும். எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும்போது சரும வறட்சி நீங்கும். உடல் வளர்ச்சி அதிகரிக்கும். எலும்புகள் வலுவாகும். ரத்த ஓட்டம் சீராகும். தேங்காய் எண்ணெய் அடர்த்தி குறைவாக இருப்பதால் சருமத்தில் எளிதாக ஊடுருவும்.

    இது கோடை காலத்தில் சருமத்தை குளிர்விக்கும். பனிக்காலத்தில் சருமத்துக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கும். பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் அழற்சியை நீக்கும். சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இதில் உள்ள ஆக்சிஜனேற்ற அழற்சி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் குழந்தைகளுக்கு சரும பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

    குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்காக, ரசாயனங்கள் கலக்காமல் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தலாம். அதற்கான குறிப்புகள் இங்கே…

    அதிக முற்றல் அல்லது இளசாக இல்லாமல், நடுத்தரமாக இருக்கும் தேங்காய்கள் 2 அல்லது 3 எடுத்துக்கொள்ளவும். அவற்றை துருவி தண்ணீர் சேர்க்காமல் இரண்டு முறை பால் பிழிந்துகொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் தேங்காய்ப்பாலை ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும். சிறிது நேரத்தில் பால் சிறு சிறு கட்டிகளாக மாறத் தொடங்கும்.

    அவ்வப்போது அதை அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். கடைசியாக பாலில் இருக்கும் தண்ணீர் சத்து முழுமையாக வற்றி, எண்ணெய் மேலே மிதந்து வரும். இப்போது தீயை அணைக்கவும். எண்ணெய் ஆறியதும் வடிகட்டி கண்ணாடி ஜாடியில் ஊற்றி வைக்கவும். இதை அறை வெப்பநிலையில் வைத்திருந்து பயன்படுத்தலாம். வீட்டில் தயாரிக்கும் இந்த எண்ணெய்யை நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம் என்றாலும், குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் புதிதாக தயாரித்து பயன்படுத்துவது நல்லது. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல், பிரசவித்த தாய்மார்களும் இதைப் பயன்படுத்தலாம்.

    தேங்காய் எண்ணெய்யை குழந்தைகளுக்கு பயன்படுத்தும் முறை

    கோடைக்காலத்தில், பிறந்த குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெய்யை சூடுபடுத்தாமல் அப்படியே பயன்படுத்தலாம். அதேசமயம், குளிர்காலத்தில் மிதமான சூட்டில் உபயோகிப்பதே நல்லது. முதலில் குழந்தையின் மார்பில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி, கைகளால் மேல்நோக்கி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

    அதைத் தொடர்ந்து தலை, கைகள், கழுத்து, கால்கள் மற்றும் பாதங்களில் எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம். வட்ட மற்றும் மேல்நோக்கிய இயக்கங்களில் மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். குழந்தையின் தொப்புள், மூக்கு, கண்கள் மற்றும் காதுகளில் எண்ணெய் ஊற்றுவதைத் தவிர்க்கவும்.

    • டயப்பர் அணிவது, சில நேரங்களில் குழந்தையின் சருமத்தில் காயங்களை ஏற்படுத்தும்.
    • குழந்தையின் தொடைப்பகுதியில் சருமம் வீக்கமடைந்து, திட்டுகள் போல இருக்கும்.

    பயன்படுத்துவதற்கு எளிதாகவும், வசதியாகவும் இருப்பதால் குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. இதனால் குழந்தைகளுக்கு சரும பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். டயப்பர் உபயோகிப்பதற்கு முன்பு, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிந்துகொண்டால் இந்த பாதிப்புகளை எளிதாகத் தடுக்கலாம்.

    டயப்பர் அணிவது, சில நேரங்களில் குழந்தையின் மென்மையான சருமத்தில் எரிச்சலுடன் கூடிய காயங்களை ஏற்படுத்தும். இது 'டெர்மடிடிஸ்' என்று அழைக்கப்படுகிறது. குழந்தையின் தொடைப்பகுதியில் சருமம் வீக்கமடைந்து, திட்டுகள் போல இருக்கும். தொடைப்பகுதி சிவந்து காணப்படும். அரிப்பு உணர்வு தீவிரமாகும்போது அந்த இடத்தில் சிறு சிறு கொப்புளங்களும் உண்டாகலாம். இவை வந்த பிறகு தடுப்பதை விட, வரும் முன்பு காப்பது நல்லது. இதற்கான தீர்வுகள் என்ன என்று பார்ப்போம்.

    டயப்பரை மாற்றுங்கள்

    பருத்தித் துணி பயன்படுத்தும் போது, சிறுநீர் கழித்தவுடன் ஈரமானதை உணர்ந்து உடனே மாற்றுவோம். ஆனால் டயப்பர் பயன்படுத்தும் போது ஈரத்தை உறிஞ்சிவிடுவதால், நாள் முழுவதும் ஒரே டயப்பரை அணிவிப்பவர்களும் இருக்கிறார்கள். துணிகளையோ, டயப்பரையோ துவைத்துப் பயன்படுத்துவதாக இருந்தால் வெந்நீரில் நன்றாக அலசி, வெயிலில் உலர வைத்து பயன்படுத்துங்கள்.

    உலர்வாக இருக்கட்டும்: டயப்பரைக் கழற்றிய உடன் குழந்தையின் பிறப்புறுப்புகள், பிட்டப்பகுதி, தொடைப்பகுதியில் மிதமான வெந்நீர் கொண்டு துடைத்து விடுங்கள். பிறகு மென்மையான பருத்தித் துணி கொண்டு ஒற்றி எடுத்து, உலர விடுங்கள். இதனால் சருமத்துக்கு தேவையான காற்றோட்டம் உள்ளே செல்லும். சருமம் சுவாசிக்க இயலும்.

    சுத்தம் செய்யுங்கள்: காலை, மாலை இரு வேளைகளிலும் குழந்தைக்கு டயப்பர் அணிவிக்கும் இடங்களில் மிதமான சூடுள்ள நீரில் சுத்தம் செய்யுங்கள். டயப்பர் அணிந்த பகுதியில், சதை மடிப்புகள் உட்பட எல்லா இடங்களிலும் மென்மையாக சுத்தம் செய்யுங்கள். பருத்தித் துணி அணிவித்தாலும் இத்தகைய பராமரிப்புகள் அவசியம் செய்ய வேண்டும்.

    இரவில் டயப்பர் அணிவித்தல்: குழந்தைக்கு இரவு நேரத்தில் டயப்பர் அணிவிப்பதை முடிந்தவரை தவிர்க்கலாம் அல்லது ஒரு டயப்பர் மட்டும் பயன்படுத்தலாம். குழந்தை தூங்கும்போது அணிவிக்கலாம். மறுநாள் காலை எழுந்தவுடன் முதலில் அதை மாற்றிவிடலாம். இதனால் டயப்பர் உபயோகிப்பதால் வரும் சரும பிரச்சினைகளைத் தடுக்கலாம்.

    பரிசோதியுங்கள்: குழந்தைகளின் தொடைப்பகுதியை அவ்வப்போது பரிசோதியுங்கள். தோல் சிவத்தல், தடிப்புகள் இருக்கும்போது டயப்பர் பயன்படுத்த வேண்டாம். குழந்தை சிறுநீர், மலம் கழித்தால் உடனே சுத்தம் செய்யுங்கள். டயப்பரை வெளியில் செல்லும்போது மட்டும் பயன்படுத்துங்கள். வீட்டில் இருக்கும்போது பருத்தித் துணிகள் அணிவிப்பது பாதுகாப்பானது.

    • குழந்தைகள் கண்ணாடி அணியும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
    • குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

    இயற்கையை ரசிக்கும் ஓர் அற்புதமான வாய்ப்பு கண்களுக்கு மட்டுமே கிடைத்து இருக்கிறது. ஆனால் இந்த கண்களை பாதுகாப்பதில் நாம் பலரும் இன்று அலட்சியம் காட்டுவதால், பல்வேறு பின்விளைவுகளை சந்திக்கிறோம். முதுமை வயதை அடைவதற்கு முன்பே கண்பார்வை மங்கி போவது, முதுமையில் அணிய வேண்டிய கண் கண்ணாடியை இளமையில் அணிவது உள்பட ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.

    முன்பு கண் கண்ணாடி அணிவதை ஒரு குறையாக பார்த்தனர். திருமண நிகழ்வுக்குக்கூட பங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு காலத்தில் அது தடையாக இருந்திருக்கிறது. ஆனால் இன்றோ கண்ணாடி அணிவது நாகரிகமாக மாறத் தொடங்கிவிட்டது. இதன் விளைவு சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ஏராளமானோர் கண்ணாடி அணியும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

    இளம் வயதினர்

    தற்போது பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கண் பார்வை பிரச்சினை அதிகரித்து, கண்ணாடி அணியும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு, டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் இளம்வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    நாகரிக வளர்ச்சி எதில் இருக்க வேண்டுமோ? அதில் இல்லாமல், மற்றவற்றில் ஊற்றி வளர்ப்பது, இன்று பெரிய அளவிலான பிரச்சினைகளை இன்றைய தலைமுறை சந்திக்க தொடங்கி இருக்கிறது. அதில் ஒன்றுதான் இளம் வயதிலேயே கண்ணாடி அணிவது. இதுதொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர், மருத்துவர் என்ன சொல்கிறார்கள்? என்பதை பார்க்கலாம்.

    செல்போன், டி.வி.

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவத் துறை தலைவர் விஜய்சோப்ரா:-மக்களிடையே செல்போன் பயன்பாடு தற்போது அதிகமாக உள்ளது. குழந்தைகள் அழும் போது அவர்களை சமாதானம் செய்ய, பெற்றோர்கள் செல்போனை கையில் கொடுத்து அழுகையை நிறுத்துகின்றனர். காலப்போக்கில் குழந்தைகள் செல்போன் இருந்தால் தான் உணவு சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது என அனைத்திற்கும் அடம்பிடிக்க ஆரம்பிக்கின்றனர். கொரோனா கால கட்டத்தில் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது.

    அதில் இருந்து குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். செல்போன்களை அதிக நேரம் உற்றுப்பார்ப்பதால் குழந்தைகளுக்கு தூர பார்வையில் கோளாறுகள் ஏற்படுகிறது. அதேபோல் லேப்டாப்பில் படம் பார்ப்பது, அதிக நேரம் டி.வி. பார்ப்பது போன்ற செயல்களின் காரணமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கண் பார்வை அதிகம் பாதிக்கப்படுகிறது. காலப்போக்கில் பார்வை கோளாறு, மங்கலான பார்வை போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி கண்ணாடி பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. அதேபோல் உணவு பழக்க வழக்க முறைகளிலும் மாற்றம் வந்துள்ளது.

    கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், பிரைடு ரைஸ், பர்கர் போன்ற அரைவேக்காடு உணவுகளால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே குழந்தைகளுக்கு சிறு தானியங்கள், காய்கறிகள், பழ வகைகள் மற்றும் கீரைகள் போன்ற உணவு முறைகளை பழக்கப்படுத்த வேண்டும். அதேபோல் கண்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுத்தும் செல்போன் உள்ளிட்ட பயன்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

    துரித உணவு

    திருப்பத்தூரை அடுத்த கெஜல் நாயக்கன்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அறிவியல் ஆசிரியை ர.நித்யா:-குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டிற்கு இன்றைய காலகட்டத்தில் ஏராளமான காரணங்கள் உள்ளன. அதிகப்படியான ஒளி தொடர்ச்சியாக கண்களில் படுவதால் கண் நரம்புகளை பாதித்து கண் குறைபாடுகளை உருவாக்குகிறது. அதற்கு நம் அன்றாட வாழ்க்கை முறையில் உள்ள பல காரணங்களை கூறலாம். உணவு முறை, டி.வி., செல்போன் முழு முதல் காரணம் என்றாலும், நாம் அதிகமாக கவனிக்க தவறும் காரணம் எல்.இ.டி. பல்புகள். வீடுகள், வாகனங்களில் அதிகமாக பயன்படுத்தும் எல்.இ.டி. பல்புகள் மற்றும் செல்போன் பிளாஷ் லைட்டுகளிலிருந்து வரும் நீல ஒளி விழித் திரையை குறிப்பாக குழந்தைகளுக்கு உடனடியாக பாதிக்கும். இதர கண் நோய்களையும், தூக்கமின்மையையும் கொடுக்கும். அதனால் பொதுமக்கள் சமூகப் பொறுப்புடன் அலங்காரத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும், அதனை பயன்படுத்துவதை தவிர்த்தல் வருங்கால தலைமுறைக்கு செய்யும் சமூக கடமையாகும். சாதா குண்டு பல்பும், டியூப் லைட்டும் கண் பாதிப்புகளை ஏற்படுத்தாது. செல்போனை எவ்வாறு கையாள வேண்டும் என்ற ஒழுங்கு முறை மற்றும் தினசரி உடற்பயிற்சியுடன் கூடிய கண் பயிற்சி குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கற்பித்து, பெற்றோரும் அவர்களுடன் இணைந்து செய்து நடைமுறைப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டால் கண் பார்வையை பல தலைமுறைகளுக்கு காப்பாற்றிக் கொள்ளலாம்.

    சத்துவாச்சாரியை சேர்ந்த பசுபதி:-எனது மகன் சிறுவயதில் இருந்தே கண் கண்ணாடி அணிந்து வருகிறான். தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் தேர்வுகள், ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. இதனால் செல்போன், கம்ப்யூட்டரை குழந்தைகள் அதிகம் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் பல குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பெடுத்து படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. எனவே மாணவர்களுக்கு பள்ளிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகளின் நேரத்தை குறைக்க வேண்டும். குழந்தைகளுக்கு துரித உணவுகள் வழங்குவதை பெற்றோர் கைவிட வேண்டும். குழந்தைகளின் நலன் மீது பெற்றோருக்கு அக்கறை வேண்டும். அனைத்து பெற்றோருக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

    பாரம்பரிய உணவு

    செய்யாறு பகுதியை சேர்ந்த முதுகலை ஆசிரியர் எம்.முனுசாமி:-இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் உடல் பராமரிப்பு இன்றி இளம் வயதில் கண்ணாடி அணிவது அதிகரித்து வருகிறது. சரியான விகிதத்தில், காய்கறிகளுடன் சத்தான உணவு சாப்பிட வேண்டும். பாரம்பரிய உணவுகளை இன்றைய தலைமுறை சாப்பிடுவதில்லை, துரித உணவகம், பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்ட தின்பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் செல்போன் மற்றும் டி.வி. பார்ப்பதால் கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி அணிகின்ற நிலை ஏற்படுகிறது. நள்ளிரவு வரை கண்விழித்து செல்போனில் விளையாடுவதும், குறைந்த நேரம் தூக்கம் மேற்கொள்வதாலும் கண்ணில் குறைபாடு ஏற்படுகிறது. சரியான தூக்கம், சத்தான உணவு எடுத்துக் கொண்டால் மட்டுமே கண் குறைபாடு இன்றி கண்ணாடி அணிவதை தவிர்க்க முடியும்.

    அதிக வெளிச்சம்

    வேலூரைச் சேர்ந்த கண் பரிசோதகரும், ஆப்டிகல்ஸ் கடை உரிமையாளருமான வி.தேசிகன் கூறியதாவது:- தாய், தந்தையருக்கு கண் குறைபாடு இருந்தால் அது பரம்பரையாக குழந்தைக்கும் வரும். அவர்கள் பரிசோதனை செய்து கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டும். பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள் 9 மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டு கண்ணாடியை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு இரண்டு ஆண்டுகள் வரை பார்வை மாறாது. மற்றவர்கள் பரிசோதனை செய்து கண்ணாடியை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் வகுப்பறையில் கரும்பலகையில் எழுதுவதை படிக்க முடியும். பாடங்களில் கவனம் செலுத்த முடியும். குழந்தைகள் செல்போனில் அதிக வெளிச்சத்துடன் பார்ப்பதால் அவர்களுடைய கண்கள் பாதிப்படைகிறது. மேலும் பல குழந்தைகள் வீட்டில் உள்ள கார்ட்டூன் சேனல்களை திரும்ப திரும்ப பார்க்கின்றனர். தொடர்ந்து டி.வி. பார்ப்பதாலும், செல்போனில் விளையாடுவதாலும் முட்டை, கீரை, காய்கறிகள் போன்ற உணவுகளை உண்ணாததாலும் குழந்தைகளின் கண்கள் இளம் வயதிலேயே பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே கண்ணாடி அணியும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    பாதுகாப்போம்

    ஒரு குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், இருட்டில் பார்க்க முடியாமல் எப்படி திணறுகிறோம். அப்படி இருக்கும் போது கடவுள் நமக்கு அளித்த சிறப்பு பரிசான கண்களை நாம் சரியான முறையில் பாதுகாப்போம். அலட்சியம் காட்டாமல் விழிப்புணர்வோடு இருப்போம்.

    கண்களை பாதுகாக்க 'டிப்ஸ்'

    * வெளிச்சம் குறைந்த இடத்தில் படிப்பதை தவிர்க்க வேண்டும். பச்சை நிற காய்கறி வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

    * கண்களுக்கு அதிக அழுத்தம் தரக்கூடிய செயல்களில் ஈடுபடுவதை கைவிடவேண்டும்.

    * கண்களில் ஏதாவது சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும், உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் பார்வை இழப்பை தவிர்க்க முடியும்.

    * இரவு படுக்கைக்கு செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு டி.வி., செல்போன், கணினி ஆகியவற்றை தவிர்க்க பழக வேண்டும். மாசு, தூசிகளினால் கண்கள் பாதிப்படையாமல் இருக்க, வெளியே சென்று வீடு திரும்பியதும் கண்களை தூய நீரில் கழுவ வேண்டும்.

    * கண்கள் தொடர்பான பயிற்சியை அவ்வப்போது மேற்கொள்வது அவசியம்.

    • டைப் 1 நீரிழிவு நோய், சிறு வயது குழந்தைகளுக்கு, பெரும்பாலும் நான்கு வயதை கடந்த பின்னர் ஏற்படுகிறது
    • கீழ்க்கண்ட மாற்று சிகிச்சை முறைகளின் சாத்தியகூறுகள் குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசிக்கலாம்.

    பிறக்கும்போது குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் இருக்கும் நிலை, 'நியோநேட்டல் டயாபட்டீஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது மரபணு காரணங்களால் ஏற்படுகிறது. இன்சுலின் மற்றும் கிளைபன்கிளைமைட் போன்ற மருந்துகளால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். இது சில குழந்தைகளுக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படுத்தினாலும் ஒரு சில குழந்தைகளுக்கு ஒரு வயது பூர்த்தியாகும் முன் தானாகவே குணமாகி விடுகிறது.

    டைப் 1 நீரிழிவு நோய், சிறு வயது குழந்தைகளுக்கு, பெரும்பாலும் நான்கு வயதை கடந்த பின்னர் ஏற்படுகிறது. இவர்களுக்கு வாழ்நாள் முழுக்க இன்சுலின் ஊசி செலுத்திக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. இருப்பினும் கீழ்க்கண்ட மாற்று சிகிச்சை முறைகளின் சாத்தியகூறுகள் குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசிக்கலாம்.

    1) 'இன்சுலின் பம்ப்' உட்செலுத்திக்கொள்வது: இதன் மூலம் தினமும் மூன்று அல்லது நான்கு முறை இன்சுலின் போட வேண்டிய நிலையை மாற்றலாம்.

    2) கணைய மாற்று அறுவை சிகிச்சை: டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு நிரந்தர தீர்வாக கருதப்படுகிறது. எனினும் இதற்கு ஆகும் செலவு அதிகம் என்பதால் வசதி இல்லாதவர்களால் இந்த சிகிச்சை மேற்கொள்ள முடிவதில்லை.

    3) ஐலட்ஸ் செல் மாற்று அறுவை சிகிச்சை: இந்த முறை சிகிச்சையும் நீரிழிவு நோயாளிகளுக்கு நிரந்தர தீர்வாக கருதப்படுகிறது. இது கணைய ஐலட்ஸ் செல்களை உறுப்பு கொடையாளிகளிடமிருந்து பெற்று கல்லீரலில் உள்ள போர்டல் தமனியில் செலுத்தப்படுகிறது.

    4) ஸ்டெம் செல் சிகிச்சை (குருத்தணு சிகிச்சை): டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதில் மனித ஸ்டெம் செல்கள் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களாக மாற்றப்பட்டு, இன்சுலின் அதிகமாக சுரந்து, அதன் மூலம் ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

    5) செயற்கை கணையம் (ஆர்டிபிசியல் பேன்க்கிரியாஸ்): இதில் இன்சுலின் பம்ப் மற்றும் குளுக்கோஸ் மானிட்டரைக் கொண்ட ஒரு மூடிய லூப் அமைப்பு, ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய செயலியுடன் இணைந்து செயலாற்றுகிறது.

    6) பயோனிக் பேன்க்ரியாஸ்: இதில் பொருத்தப்படும் செயற்கை கணைய இயந்திரம், ரத்தத்தின் சர்க்கரை அளவை கண்காணித்து ஏற்ற தாழ்வுகளை சரிசெய்கிறது.

    • நீண்டகாலப் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.
    • குழந்தைப் பருவத்தில் உடல் செல்கள் அதிவேகமாக வளர்ச்சி அடைகின்றன.

    குழந்தைகளின் உடலை அடையும் வேதிப்பொருட்களின் பாதிப்புகள் உடனடியாகக் குழந்தையாக இருக்கும்போதே வெளிப்பட்டு விடுவதில்லை. நம்மைவிட குழந்தைகளின் எதிர்காலம் நீண்டது. அவர்களின் வாழ்நாள் நம்மைவிட அதிகம்.

    அதனால் பின்விளைவுகள் காலம் தாழ்த்தி, அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகும் வெளிப்படலாம். நாம் பெரியவர்களான பிறகு எதிர்கொள்ளும் புற்றுநோய், மூளை பாதிப்பு, இனப்பெருக்கக் குறைபாடுகள் போன்றவற்றுக்கான காரணங்களை, தாயின் கருவில் நாம் வளரத்தொடங்கிய காலத்திலிருந்தே தேடவேண்டி உள்ளது..

    குழந்தை பிறந்த பிறகு எதிர்கொள்ளும் வேதிப் பொருட்களின் தாக்கத்தைவிட கருவில் இருக்கும்போதும், சிசு வளர்ச்சியின்போதும் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கம் ஆபத்தானவை என்பதை வாஷிங்டனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பணிக்குழு என்ற அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வ

    ளர்ந்த மனிதன் வேதிமாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகளைவிட குழந்தைகள் வேதி மாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகள் கடுமையானவை. நீண்டகாலப் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. பொதுவாகக் குழந்தைப் பருவத்தில் உடல் செல்கள் அதிவேகமாக வளர்ச்சி அடைகின்றன. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியோ முழு வளர்ச்சி அடையாத நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக வேதித் தாக்குதலின் தீவிரம் குழந்தைகளிடம் அதிகம்.

    குழந்தைகளின் உடலில் வேதி கூட்டுப்புரதங்கள் குறைவாக இருப்பதால், வெளியிலிருந்து உள்ளேவரும் வேதி மாசுகளை வரவேற்கும் நிலையில் அவர்களுடைய உடல் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அப்படி உள்ளே வரும் நஞ்சுகள், அவற்றுக்கான இலக்கு உறுப்புகளை அடைந்து அவற்றை எளிதாக பாதிப்பதாக வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    ×