search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    வெயில் காலத்தில் குழந்தைகளை இந்த நேரங்களில் வெளியில் அனுப்பாதீங்க...
    X

    வெயில் காலத்தில் குழந்தைகளை இந்த நேரங்களில் வெளியில் அனுப்பாதீங்க...

    • குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம்.
    • குழந்தைகளுக்கு மெல்லிய பருத்தி ஆடைகளை உபயோகிப்பதே நல்லது.

    நட்சத்திரம் ஆரம்பித்து விட்டதால் முன்பை விட வெயில் அதிகமாக வாட்டி வதைக்கின்றது.குழந்தைகளுக்கும் கோடை விடுமுறை என்பதால் அவர்களை வீட்டில் அதிக நேரம் பூட்டி வைக்க முடியாது.அதற்கு மேல் பூட்டி வைத்தால் அவர்களின் விளையாட்டு மொபைல் போன்களிலும்,தொலைக்காட்சிகளிலும் கழியும். ஆனால்,அது குழந்தைகளின் உடல் நலனை பாதிக்கும்.அதனால் குழந்தைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் விளையாட அனுமதிப்பதே சிறந்தது.அதே நேரம் குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம்.

    குழந்தைகள் பொதுவாக விளையாடும் ஆர்வத்தில் உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்துவதை மறக்கின்றனர்.அதே நேரம் விளையாடும் பொழுது உடலில் உள்ள தண்ணீர் வியர்வையாக அதிகம் வெளியேறுகின்றது.எனவே உடலுக்குள் செல்வதைவிட அதிக அளவு திரவம் வெளியேறும்போது உடலில் நீர் வறட்சி ஏற்படுகின்றது. அதிக தாகம் எடுத்தல்,சிறுநீர் சிறிது சிறிதாக வெளியேறுதல் மற்றும் அடர்மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல் ஆகியவை இதற்கான அறிகுறிகள் ஆகும்.இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு குடிக்க அதிக அளவில் தண்ணீர்,இளநீர் மற்றும் ஓ. ஆர் .எஸ் பவுடர் முதலியவற்றை கொடுக்கலாம். இது உடலுக்கு தேவையான மினெரல் மற்றும் உப்பு ஆகியவற்றை தக்க வைத்துக்கொள்ள உதவும்.

    வெப்பத்தின் தாக்கம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதிகமாக இருக்கும். எனவே,அந்த நேரத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வதை தவிர்க்கலாம்.ஆறு மாதத்திற்கு கீழ் உள்ள குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லாமல் இருப்பதே சிறந்தது. ஏ.சி அறை என்றால், குளிர் 24 டிகிரி அளவில் இருப்பது போல் வைக்க வேண்டும். எப்போதும் ஏ.சி அறையிலேயே வைத்திருப்பதும் கூடாது.குழந்தைகள் வெளியில் செல்ல நேர்ந்தால் 15 நிமிடங்களுக்கு முன்பே சன் ஸ்கிரீன் பூசி விட வேண்டும்.

    வெயில் காலத்தில் குழந்தைகளை அதிகமான துணிகள் கொண்டு சுற்றினால் உடலின் வெப்பநிலை அதிகரிக்ககூடும். எனவே, குழந்தைகளுக்கு மெல்லிய பருத்தி ஆடைகளை உபயோகிப்பதே நல்லது.மிக மிருதுவான ஒரு பருத்தித் துணியால் போர்த்தினால் போதும். குழந்தைகளின் உடலுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் கனமான கவுன் முதலியவைகளை அணிய கூடாது.இரவு நேரத்தில் இன்னும் கூடுதலாக கவனம் தேவை.

    கோடை காலத்தில் குளிர்ச்சியான உணவுபொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். ராகி, கம்பு,பார்லி போன்ற உணவு பொருட்கள் கோடை காலத்தில் உண்பதற்கு ஏற்றவை.அதே போல சீரகம், கொத்துமல்லி முதலியவற்றையும் சாப்பிடலாம்.குழந்தைகளுக்கு 6 மாதத்திற்கு பின் திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது மேற்கண்ட பொருட்களை உணவுடன் சேர்த்து பார்லி வாட்டர், ராகி கஞ்சி, கம்பு கஞ்சி போன்ற வித விதமாவிதமான ரெசிபிக்களை சமைத்து கொடுக்கலாம். அதே போல் தண்ணீர்ச்சத்து அதிகமுள்ள, பழங்களையும் சாப்பிட அடிக்கடி கொடுக்க வேண்டும்.

    Next Story
    ×