search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குல்தீப் யாதவ்"

    • குல்தீப் யாதவ் கையை சுழற்றுவதில் முன்பு மெதுவாக சுழற்றினார். இப்போது கொஞ்சம் வேகமாக சுழற்றுகிறார்.
    • சாஹல் கையை மெதுவாகச் சுழற்றுகிறார் இதனால் பந்தில் ஸ்பின் இல்லாமல் போய் விடுகிறது.

    குல்தீப் யாதவ் வங்காளதேசத்தில் டிசம்பரில் நடந்த தொடரில் அவர் விளையாடிய ஒரே டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார். அவர் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடர்களில் மேட்ச்-வின்னிங் ஸ்பெல்களுடன் அதைத் தொடர்ந்தார்.

    மேலும் அடுத்த வாரம் நாக்பூரில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.

    இந்நிலையில் இந்திய தேர்வுக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த முன்னாள் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷி 2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணியிலிருந்து குல்தீப் யாதவ்வை நீக்கிய பிறகு உத்தரப்பிரதேச அணியில் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். கையை சுழற்றுவதில் முன்பு மெதுவாக சுழற்றினார். இப்போது கொஞ்சம் வேகமாக சுழற்றுகிறார். அவர் வீசும் திசையும் நன்றாக உள்ளது. முன்பை விட இப்போது பந்து அதிகமாக ஸ்பின் ஆகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குல்தீப் யாதவ்வை டெஸ்ட் போட்டிகளில் வைத்துக் கொள்ள வேண்டும். பிட்ச், மைதானம், ஊர் இதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. குல்தீப் எப்படி வீசுகிறார் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

    சமீபத்தில் அவர் ஆடிய டெஸ்ட், ஒருநாள், போட்டிகளில் அவர் விக்கெட்டுகளை வீழ்த்தும் விதங்களைப் பார்க்க வேண்டும், அவரிடம் ஆட்டமிழந்தவர்கள் 30 யார்டு சர்க்கிளுக்குள் கேட்ச் ஆகி அவுட் ஆகின்றனர். அல்லது பவுல்டு, எல்.பி.என்று வீழ்த்துகிறார். இது பெரிய விஷயம்.

    சாஹல் கையை மெதுவாகச் சுழற்றுகிறார் இதனால் பந்தில் ஸ்பின் இல்லாமல் போய் விடுகிறது. இதனால் பேட்டர்கள் அவர் பந்துகளை எளிதில் அடித்து விட முடிகிறது. இப்போதெல்லாம் உடல் செயற்பாடில்லாமல் வெறுமனே கையால் பந்தை ரிலீஸ் மட்டுமே செய்கிறார். இதனால் பிளாட்டாக விழுகிறது. ஆனால் குல்தீப் அந்த விதத்தில் நல்ல நிலையில் இருக்கிறார்.

    ஆகவே உலகக்கோப்பை போட்டிகளில் குல்தீப் யாதவ்வுக்குத்தான் இடமளிக்க வேண்டும்.

    இவ்வாறு சுனில் ஜோஷி கூறினார்.

    • நாங்கள் ஒரு இடது கை பேட்ஸ்மேனை வைத்திருக்க விரும்புகிறோம்.
    • அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் ஒருவர் 5-வது வரிசையில் பேட்டிங் செய்யும் போது அது நம்பிக்கையை அளிக்கிறது.

    கொல்கத்தா:

    இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி நேற்று கொல்கத்தாவில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 39.4 ஓவரில் 215 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நுவானிது பெர்னாண்டோ 50 ரன்னும், குசல் மென்டிஸ் 34 ரன்னும் எடுத்தனர்.

    இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டும், அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது. 86 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது. அதன் பின் லோகேஷ் ராகுல் (64ரன்), ஹர்த்திக் பாண்ட்யா (36ரன்) ஜோடி பொறுப்புடன் விளையாடியது.

    இந்தியா 43.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    இந்த போட்டி நெருக்கமான விளையாட்டாக இருந்தது. இதுபோன்ற விளையாட்டுகள் நிறைய கற்று கொடுக்கிறது. லோகேஷ் ராகுல் நீண்ட காலமாக 5-வது வரிசையில் விளையாடி வருகிறார். அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் ஒருவர் 5-வது வரிசையில் பேட்டிங் செய்யும் போது அது நம்பிக்கையை அளிக்கிறது.

    தொடக்க வரிசையில் ஒரு இடது கை ஆட்டக்காரர் இருப்பது நன்றாக இருக்கும். ஆனால் வாய்ப்பு கொடுக்கப்பட்ட வீரர்கள் கடந்த ஒரு வருடத்தில் நிறைய ரன்களை எடுத்துள்ளனர். நாங்கள் ஒரு இடது கை பேட்ஸ்மேனை வைத்திருக்க விரும்புகிறோம். ஆனால் எங்கள் வலது கை பேட்ஸ்மேன்களின் தரம் எங்களுக்கு தெரியும்.

    3-வது ஒரு நாள் போட்டிக்கான ஆடுகளத்தை பார்ப்போம். மேலும் மற்றொரு ஒருநாள் தொடரும் வர உள்ளது. எனவே ஏதாவது மாற்றங்களை செய்ய வேண்டுமா என்று பார்ப்போம்.

    இப்போட்டியில் குல்தீப் யாதவ் திருப்புமுனையை ஏற்படுத்தினர். இந்த நேரத்தில் அவர் ஒரு பந்து வீச்சாளராக மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். இது அணிக்கு நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இலங்கை கேப்டன் ஷனகா கூறும் போது, இப்போட்டி எங்கள் கையில் இருந்தது. ஆனால் போதிய ரன்களை எடுக்க தவறி விட்டோம். ஆரம்பத்தில் 280 ரன்கள் பற்றி விவாதித்தோம். ஆனால் குல்தீப் யாதவ் நன்றாக பந்து வீசினார் என்றார்.

    இந்த வெற்றி மூலம் மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது.

    3-வது மற்றும் கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    • குல்தீப் யாதவ் 3-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றினார்.
    • இதற்கு முன்பு 57 ரன் விட்டு கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியது சிறந்ததாக இருந்தது.

    வங்காளதேசத்துக்கு எதிராக முதல் டெஸ்டில் குல்தீப் யாதவ் 16 ஓவர்கள் வீசி 40 ரன் விட்டு கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். இது டெஸ்டில் ஒரு இன்னிங்சில் அவரது சிறந்த பந்து வீச்சு ஆகும்.

    இதற்கு முன்பு 57 ரன் விட்டு கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியது சிறந்ததாக இருந்தது. குல்தீப் யாதவ் 3-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றினார். முன்னதாக அவர் பேட்டிங்கில் 40 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து ரோகித், தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
    • வங்காளதேச அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

    மிர்புர்:

    3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது.

    இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் , குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

    இதனையடுத்து 3-வது ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. வங்காளதேச அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்காவின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய குல்தீப் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
    • இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

    டெல்லியில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. நேற்றைய போட்டியில் இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 18 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் அவர் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

    போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது மகிழ்ச்சியானது. எனது தன்னம்பிக்கையை இந்த போட்டி அதிகமாக்கி இருக்கிறது. ஐபிஎல் இந்த சீசன் எனது நம்பிக்கையை உயர்த்தியது. வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் இந்தியா-ஏ அணிக்காகவும் சிறப்பாக பந்து வீசினேன்.

    நீங்கள் சில நேரங்களில் விக்கெட்டுகளைப் பெறுவீர்கள், சில நேரங்களில் நீங்கள் விக்கெட்டுகளைப் பெறுவதில்லை. இருப்பினும் என் நம்பிக்கை அதிகமாக உள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கவில்லை. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணி சிறந்த ஒன்றாகும். எனது செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வரவிருக்கும் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவின் சுழல் பந்துவீச்சு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். #SachinTendulkar #ENGvIND #KuldeepYadav

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து சூழ்நிலை வேகப்பந்து வீச்சுக்கு, முக்கியமாக ஸ்விங் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் புவனேஸ்வர் குமார் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இங்கிலாந்துக்கு ஏதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது அவரது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை. 

    இந்நிலையில், இது குறித்து இந்திய முன்னாள் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஒரு நாள் கிரிக்கெட்டில் குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சை இங்கிலாந்தின் ஜோ ரூட் திறம்பட கையாண்டார். அவரது மணிக்கட்டு சுழற்சியை துல்லியமாக கணித்து அதற்கு ஏற்ப விளையாடினார். அவரை போல் மற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் குல்தீப்பின் சுழலை சமாளிக்க முடியும் என்று நினைக்கவில்லை. 



    பெரும்பாலான வீரர்கள் நிச்சயம் தடுமாறுவார்கள். ஆடுகளம் வெயிலால் நன்கு காயும் போது குல்தீப் யாதவால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏதுவாக உலர்ந்து காணப்பட்டால் இந்தியா வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது. 

    ஆனால், ஆடுகளத்தில் நிறைய புற்கள் இருந்தால் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள். இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார், பந்தை நன்கு ஸ்விங் செய்யக்கூடியவர். அவர் காயத்தால் அவதிப்படுவது இந்தியாவுக்கு உண்மையிலேயே மிகப்பெரிய பின்னடைவாகும்’ என்றார். 
    இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் களமிறங்க உள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், சாஹல் ஆகிய இருவருக்கும் இது முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் என்பதால் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. #ENGvIND

    இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மூன்று டி20 போட்டி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. நாளை முதல் டி20 போட்டி தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியை தழுவியது.

    அப்போது, தோல்விக்கு கூறப்பட்ட முக்கிய காரணம் விரிஸ்ட் ஸ்பின்னர்கள் (மணிக்கட்டை சுழற்றி பந்து போடும் சுழற்பந்து வீச்சாளர்கள்) இல்லை என்பதே. அப்போது, அணியில் இருந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தற்போது பார்மில் இல்லாததால் ஒருநாள் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை.

    அவர்களுக்கு பதிலாக சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் அணியில் உள்ளனர். இவர்கள் இருவரையும்தான் கோலி மலைபோல நம்பியுள்ளார். இடைநிலை ஓவர்களில் நிச்சயமாக சுழற்பந்து வீச்சாளர்களால் விக்கெட் எடுக்க முடியும் என விராட் கோலி இங்கிலாந்து டூருக்கு கிளம்பும் முன்னர் கூறியிருந்தார். 

    இருந்தாலும், இங்கிலாந்து அணி தற்போதுதான் ஆஸ்திரேலியாவை 6-0 என்ற கணக்கில் அடித்து துவைத்தது. அதிலும், 481 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி உலக சாதனையும் படைத்தது. இந்த வெற்றி இந்திய அணியை சற்றே கலங்க வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதனால், எந்த இடத்திலும் சறுக்கிவிடக்கூடாது என்பதில் கோலி திட்டவட்டமாக உள்ளார். இந்த தொடர் அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடக்க உள்ள உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாக இருக்கும். தட்ப வெப்ப நிலை, ஆடுகளத்தின் தண்மை என அனைத்தையும் வீரர்கள் புரிந்து கொள்ளலாம்.

    இந்தாண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக கோலி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றது. இந்த தொடரில் குல்தீப் யாதவ் 17 விக்கெட்டுகளையும், சாஹல் 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருந்தனர்.

    கடந்தாண்டு இந்திய அணியில் அறிமுகமான குல்தீப் யாதவ் விளையாடிய 20 ஒருநாள் போட்டியில் 15 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. அதேபோல, சாஹல் விளையாடிய 23 போட்டிகளில் இந்தியா 19 போட்டிகளில் வென்றுள்ளது. 

    இங்கிலாந்து அணியில் உள்ள பட்லர், ஜேசன் ராய், பைர்ஸ்டோ ஆகிய அதிரடி வீரர்களை குல்தீய், சாஹல் இணை வீழ்த்தும் என்ற நம்பிக்கை உள்ளது. 
    ×