search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்கு அம்மை"

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 22 வயது இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தது.
    • குரங்கு அம்மை அறிகுறியுடன் இருந்த நபர் உயிரிழந்தது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும்.

    உலகளவில் பெரும்பாலான நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவி வருகிறது. இது, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது.

    குறிப்பாக கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 22 வயது இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தது. இதையடுத்து அவர் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இவரது மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

    குரங்கு அம்மை அறிகுறியுடன் இருந்த நபர் உயிரிழந்தது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா தெரிவித்துள்ளார்.

    மேலும், குரங்கு அம்மை அறிகுறி இருந்த நபருக்கு சிகிச்சையளிப்பதில் தாமதம் ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்து உள்ளது.
    • இமாசலபிரதேச மாநிலம் சோலான் மாவட்டம் பாடி பகுதியில் வசித்து வரும் ஒருவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.

    சிம்லா:

    தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து கேரளா மாநிலம் திரும்பிய 3 பேருக்கு ஏற்கனவே இந்த நோய் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு இதன் அறிகுறி இருப்பது தெரியவந்தது.

    இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்து உள்ளது. தற்போது இமாசலபிரதேச மாநிலம் சோலான் மாவட்டம் பாடி பகுதியில் வசித்து வரும் ஒருவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.

    அவரை பரிசோதித்ததில் குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவில் தான் அவர் குரங்கு அம்மை நோய் உள்ளதா? என்பது தெரிய வரும்.

    • வாலிபர் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஸ்கூட் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார்.
    • வாலிபர் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தை சேர்ந்த 35 வயது வாலிபர் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஸ்கூட் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி இருந்துள்ளது.

    இதையடுத்து, அந்த பயணி திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நோய் பாதிப்பு ஒன்றும் இல்லை, அதனால் பயப்பட வேண்டாம் என டாக்டர் ஒருவர் அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனால் அவர் டிஸ்சார்ஜ் ஆகாமல் சொந்த ஊருக்கு சென்றார்.

    இந்தநிலையில், ஆஸ்பத்திரியில் அந்த வாலிபர் இல்லாததால் புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த நபரின் முகவரியை வைத்து அதிகாரிகள் நேற்று அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரிடம் பேசி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகளான கொப்புளங்கள் இருக்கிறதா? என கண்காணிக்கப்படுகிறது.
    • ஐ.சி.எம்.ஆர். விதிப்படி வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை “மாஸ் பீவர்ஸ் ஸ்கிரீனிங் கேம்ப்” அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பரவல் தடுப்பு குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. முதற்கட்டமாக திருச்சி, சென்னை, கோவை, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகளான கொப்புளங்கள் இருக்கிறதா? என கண்காணிக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஐ.சி.எம்.ஆர். விதிப்படி வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை "மாஸ் பீவர்ஸ் ஸ்கிரீனிங் கேம்ப்" அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து தினமும் வரும் 300 முதல் 400 பயணகளுக்கு ரேண்டம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் 12 வயதில் இருந்து 17 வயதிலான நபர்களுக்கு பெரும்பாலும் பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மத்திய அரசு அறிவித்தவுடன் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தப்படும்.

    தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி ரூ. 386-க்கு செலுத்தப்பட்டு வந்த நிலையில் முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி தற்போது 75 நாட்கள் இலவசமாக செலுத்தப்படுகிறது.

    அதுமட்டுமின்றி வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாமும் நடத்தப்படுகிறது. வருகிற 7-ந்தேதியும் தடுப்பூசி முகாம் மூலம் 50 லட்சம் பேர் பயனடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களையும் எல்லையிலேயே பரிசோதனைகள் செய்ய முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.
    • பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது.

    கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்நோய் பரவி உள்ளது. கேரளாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.

    டெல்லியில் இன்று ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு டெல்லியைச் சேர்ந்த அந்த நபருக்கு குரங்கு அம்மை பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், குரங்கு அம்மை பாதிப்பால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் கூறியதாவது:-

    டெல்லியில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் குணமடைந்து வருகிறார்.

    அதனால் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. நிலையையும் கட்டுக்குள் உள்ளது. லோக் நாயக் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டை உருவாக்கியுள்ளோம். காய்ச்சல் பரவுவதைத் தடுக்கவும் பாதுகாக்கவும் சிறந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சம்பந்தப்பட்ட நபர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை.
    • நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளாவுக்கு வந்த 35 வயது நபருக்கு காய்ச்சல் இருந்ததை அடுத்து அவருக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த நபருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதியானது. இதன்மூலம், குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 3-வது நபர் இவராவார்.

    மலப்புரத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர் ஜூலை 6-ம் தேதி தென் மாநிலத்திற்கு வந்ததாகவும், அங்குள்ள மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

    மேலும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

    • கேரளாவில் கொரோனா, சிக்குன் குனியா, பறவை காய்ச்சலை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.
    • சுகாதாரத் துறையினர் சிறப்பு முகாம் அமைத்து தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கம்பம்:

    கேரளாவில் கொரோனா, சிக்குன் குனியா, பறவை காய்ச்சலை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. தென் மாநிலங்களில் கேரளாவில் மட்டுமே குரங்கு அம்மை நோய் காணப்பட்டதால் தென் மாநிலங்கள் உஷாராக இருக்க வேண்டுமென மத்திய அரசு எச்சரித்துள்ளது.

    இதனை அடுத்து தமிழகத்தில் விமான நிலையங்கள் ரயில்வே நிலையங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் தீவர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழக -கேரளா எல்லைகளில் 16 இடங்களில் கண்காணிப்பு செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டமாகும்.தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கக்கூடிய போடி மெட்டு, கம்பம் மெட்டு, குமுளி ஆகிய 3 வழித்தடங்கள் உள்ளது.

    இந்த 3 வழித்தடங்கள் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் தமிழக கேரள எல்லை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் விவசாயம் அதிக அளவில் நடைபெறுவதால் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஜீப்புகளில் கூலி வேலை ஆட்கள் கேரளாவிற்கு சென்று கூலி தொழில் செய்துவிட்டு வருகின்றனர்.

    எனவே கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களிடம் கொரோனா, குரங்கு அம்மை போன்ற நோய் தாக்குதல்கள் ஏதேனும் தென்படுகிறதா என்பது குறித்து குமுளி அடிவாரப் பகுதியான லோயர் கேம்ப் பகுதியிலும்,கம்பம் மெட்டு அடிவாரப் பகுதியான கம்பத்திலும் சுகாதாரத் துறையினர் சிறப்பு முகாம் அமைத்து தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களிடம் காய்ச்சல், தலைவலி மற்றும் குரங்கு அம்மைக்கான நோய் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா எனவும் அவ்வாறு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே கம்பம் மெட்டு, குமுளி போன்ற சோதனை முகாம்களில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக ஷிப்ட் முறையில் ஒரே ஒரு சுகாதாரத் துறை சார்ந்த நபர் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படுகிறது, மேலும் முகாம் அமைப்பதற்கான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமலும் உள்ளது. இந்த சோதனை முகாம் ஒரு கண்துடைப்பாகவே நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    • கேரளாவில் தற்போது புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கேரளாவுக்கு சென்று வருகின்றனர்.

    செங்கோட்டை:

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவலால் தமிழக-கேரள எல்லையான புளியரை உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை சாவடிகளில் போலீசார் மற்றும் கால்நடை துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டது.

    குரங்கு அம்மை

    இதன் காரணமாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது கேரளாவில் புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அண்டை மாநிலங்களுக்கும் இந்த பாதிப்பு பரவி விடாமல் இருக்க மாநில எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென்காசி மாவட்டம் புளியைரை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதில் பொதுமக்கள் தொழில் நிமித்தமாகவும், சுற்றுலாவுக்காகவும் என பல்வேறு காரணங்களுக்காக ஏராளமானோர் கேரளா செல்கின்றனர்.

    தீவிரப்படுத்த வேண்டும்

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து பாலருவி, கழுதுருட்டி அருவி, தென்மலை அணை பகுதி, குற்றாலம், குண்டாறு உள்ளிட்டவற்றில் குளிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கேரளாவுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கேரளாவில் குரங்கு அம்மை பரவ தொடங்கி உள்ளதால் புளியரை சோதனை சாவடியில் கொரோனா பரவலின்போது சுகாதாரத்துறை கடைபிடித்த அதே நடைமுறைகளை தற்போதும் தீவிரப்படுத்த வேண்டும்.

    கோரிக்கை

    அவ்வாறு செய்வதன் மூலமாக தமிழகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக சுகாதரத்துறையினரிடம் தெரிவித்தால், அவர்கள் அலட்சியமாக பதில் கூறுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    எனவே மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உடனடி நடவடிக்கை எடுத்து சோதனை சாவடியில் மருத்துவர்கள் முகாமிட்டு அந்த வழியாக வருபவர்களை பரிசோதனை செய்ய ஆவண செய்யவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
    • நோய் பரவல் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் உயர்மட்டக்குழு கேரளா விரைகிறது.

    திருவனந்தபுரம்:

    உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த குரங்கு அம்மை வைரஸ் தைவான் மற்றும் கொலம்பியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. இந்தியாவில், சில சந்தேகத்திற்கிடமான சில தொற்று பாதிப்புகள் இருந்தது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை.

    இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடந்த 12ம் தேதி கேரளா திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பின் அறிகுறிகள் இருந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

    தற்போது அந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் அவருடன் தொடர்புடைய 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

    கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யபட்டதையடுத்து, ஆய்வு செய்ய மத்திய அரசின் உயர்மட்டக்குழு கேரளா விரைகிறது.

    • குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ள நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
    • மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்.

    கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

    அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே குரங்கு அம்மை தொற்று இருப்பதை உறுதி செய்ய முடியும் என்றார்.

    சம்பந்தப்பட்ட நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளைக் காட்டியதாகவும், வெளிநாட்டில் உள்ள குரங்கு அம்மை நோயாளி ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் கூறினார்.

    மேலும், குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ள நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்பட 20க்கு மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது.
    • உலக நாடுகளில் குரங்கு அம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியது.

    பெய்ரூட்:

    ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20-க்கு மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.

    இந்நிலையில், லெபனான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    வெளிநாட்டில் இருந்து திரும்பிய நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதும், அவர் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×