search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்கு அம்மை"

    • குரங்கு அம்மை நோய் பாதிப்பு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 70,000 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
    • குரங்கு அம்மை நோய் பரவல் சர்வதேச சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

    ஜெனீவா:

    உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மறுபுறம் புதிய நோய் தொற்று பரவல் எண்ணிக்கை சில நாடுகளில் இன்னும் அதிகரித்து வருகிறது.

    குரங்கு அம்மை நோய் பாதிப்பு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 70,000 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக பதிவாகின.

    இந்நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர அச்சுறுத்தலாக குரங்கு அம்மை நோய் பரவல் இருந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    பல நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய் பரவல் குறித்த அவசரக் குழுவின் 3-வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டப்பட்டது. கமிட்டியின் 15 உறுப்பினர்களில் 11 பேரும், 9 ஆலோசகர்களில் 6 பேரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பேசுகையில், உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவலில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், சில நாடுகளில் சரிவைச் சந்தித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்தியங்களில் சில நாடுகளில் நோய் தொற்று அபாயம் அதிகரித்து வருகின்றன. மேலும் சில நாடுகளில் குறைவாக பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது.
    • அவர் வெளிநாடுகளுக்கு சென்றபோது அங்கு ஓரின சேர்க்கை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள்.

    உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதில், இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றார்.

    5 நாள் பயணத்தை முடித்து கொண்டு அவர் இத்தாலி திரும்பினார். வீட்டுக்கு சென்ற அவருக்கு காய்ச்சலும், உடல் சோர்வும் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

    இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உடனே அவரை டாக்டர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். கொரோனா சிகிச்சையில் இருந்தபோது அந்த நபருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்புளங்கள் உருவானது. ஜூலை மாத தொடக்கத்தில் இந்த கொப்புளங்கள் உடைந்து அவருக்கு வேதனையை அளித்தது.

    எனவே டாக்டர்கள் அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டனர். அதற்கான சோதனையும் அவருக்கு நடத்தப்பட்டது. இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியானது.

    கொரோனா, குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அந்த வாலிபர் ஏற்கனவே எச்.ஐ.வி. நோயில் இருந்து மீண்டவர் என்ற தகவல் டாக்டர்களுக்கு தெரியவந்தது.

    அவர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பதால் அவருக்கு மீண்டும் ஒரு முறை எச்.ஐ.வி. பரிசோதனையையும் மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி எச்.ஐ.வி. பரிசோதனை செய்தபோது அதுவும் அந்த நபருக்கு இருப்பது தெரியவந்தது.

    ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை மற்றும் எச்.ஐ.வி. பாதிப்புகள் ஒரே நபருக்கு ஏற்பட்டிருப்பது அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுபோன்று 3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த நபருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 3 நோய்களால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஓரின சேர்க்கை பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    அவர் வெளிநாடுகளுக்கு சென்றபோது அங்கு ஓரின சேர்க்கை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் தொடர்ந்து அந்த நபரை கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவர் கொரோனாவில் இருந்தும், குரங்கு அம்மை பாதிப்பில் இருந்தும் மீண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • குரங்கு அம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியது.
    • இந்தோனேசியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

    ஜகார்த்தா:

    ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.

    இந்நிலையில், இந்தோனேசியாவில் முதன்முறையாக குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அண்டை நாடான சிங்கப்பூரில் கடந்த மாதம் முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது. அங்கு ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 15 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    மேலும், தென்கிழக்கு நாடுகளான பிலிப்பைன்ஸ், மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    • உலக அளவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது.
    • ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 92க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

    ஜெனீவா:

    ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 92க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி வருகிறது.

    உலகம் முழுவதிலும் குரங்கு அம்மை காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அடுத்தடுத்து அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும் சுகாதார நடவடிக்கைகளை அந்நாட்டு அரசுகள் தீவிரபடுத்தி உள்ளன.

    இந்நிலையில், உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கூறுகையில், குரங்கு அம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பல நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த தடுப்பூசியின் தேவை அதிகம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது.
    • உலக நாடுகளில் குரங்கு அம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியது.

    டெஹ்ரான்:

    ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.

    இந்நிலையில், ஈரான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 34 வயது பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதும், அவர் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டெல்லியில் வசிக்கும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கு குரங்கு அம்மை பாதிப்பு.
    • இதன்மூலம் டெல்லியில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு.

    புதுடெல்லி:

    ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவி வருகிறது. இந்தியாவிலும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் டெல்லிவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 22 வயது பெண் என தெரிய வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக இந்தப் பெண் நைஜீரியா சென்று வந்துள்ளார். டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட ஆப்பிரிக்க பெண்ணின் மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பட்டது. அதன் முடிவுகள் வெளியானதில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    • குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து கேரளா வருவோர் கண்காணிக்கப்பட்டனர். இதற்காக விமான நிலையங்களில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • வெளிநாடுகளில் இருந்து வருவோர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை நோய் இந்தியாவின் கேரளாவிலும் பரவி வருகிறது.

    வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு முதன்முதலாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி ஆனது.

    இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டனர். பின்னர் அடுத்தடுத்து மேலும் 4 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இவர்களையும் சேர்த்து குரங்கு அம்மை நோயாளிகள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

    இதையடுத்து குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து கேரளா வருவோர் கண்காணிக்கப்பட்டனர். இதற்காக விமான நிலையங்களில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வெளிநாடுகளில் இருந்து வருவோர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து கேரளாவின் நெடும்பாசசேரி விமான நிலையத்தில் வந்து இறங்கிய வாலிபர் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி இருப்பது தெரிய வந்தது.

    உத்தரபிரதேசத்தை சேர்ந்த அந்த வாலிபர் உடனடியாக ஆலுவாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவுகள் வந்த பிறகே அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ளதா? என்பது தெரியவரும்.

    • குரங்கு அம்மை பரவலால் அமெரிக்காவின் சில மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்நிலையில் அமெரிக்கா முழுவதும் சுகாதார அவசரநிலையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    ஆப்பிரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குரங்கு அம்மை நோய் அமெரிக்காவில் 6,600-க்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. மேலும், நியூயார்க், இல்லினாய்ஸ், கலிபோர்னியா உள்பட பல மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்துள்ளன.

    இந்நிலையில், குரங்கு அம்மை நோயை சுகாதார அவசர நிலையாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.

    அவசர நிலை பிரகடனம் காரணமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் முழு வீச்சில் சுகாதார ஊழியர்கள் ஈடுபடுவார்கள். அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

    • டெல்லியில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த 31 வயது பெண்ணுக்கு குரங்கு அம்மை பாதிப்பு.
    • டெல்லியில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு.

    புதுடெல்லி:

    ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் மட்டும் இதுவரை 4 பேருக்கு குரங்கு அம்மை உறுதியாகியுள்ளது.

    தற்போது குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 31 வயது பெண் என்றும், அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • அம்மை காலத்தில் பயன்படுத்தப்படும் மஞ்சள், வேப்பில்லை, போன்றவை குரங்கு அம்மைக்கும் பயன்படுத்தலாம்.
    • நீர் மோர், முலாம் பழம் உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சித்தரும் உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும்.

    இந்தியாவில் குரங்கு அம்மை பரவுதல் மற்றும் பெண்களின் உடல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து சித்த மருத்துவர் யோகா வித்யா நம்மிடம் பகிர்ந்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    உலகளவில் 18 ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களில் குரங்கு அம்மை பரவி வருகிறது. ஆராய்ச்சியின்படி சின்னம்மை, பெரியம்மை போன்று குரங்கு அம்மையும் தொற்று நோய். இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்று நோய் என்பதால், குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டுள்ள நபரின் பொருட்கள், எச்சில் துளிகள், வியர்வை துளிகள் நம் உடலில் கலப்பதன் மூலம் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. அதனால், கொரோனா தொற்று போன்று குரங்கு அம்மைக்கும் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை பின்பற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக, அம்மை காலத்தில் பயன்படுத்தப்படும் மஞ்சள், வேப்பிலை, போன்றவை குரங்கு அம்மைக்கும் பயன்படுத்தலாம். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கேழ்வரகு, கம்பங்கூழ், நீர் மோர் போன்றவை நிறைய குடிக்கலாம். நீர் மோர், முலாம் பழம் உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சித்தரும் உணவுப் பொருட்களை அதிகளவில் சாப்பிடலாம்.

    உடலுக்கு அதிகப்படியான வெப்பம் கண்கள், மூளையை தாக்கக்கூடும். உடல் உஷ்ணத்தால் ஆண்களுக்கு விதைப்பையை தாக்கி விந்தணுக்கள் உற்பத்தியை பாதிக்கிறது. இதனால், குழந்தை உருவாவதில் பிரச்சினை ஏற்படுகிறது.

    உணவுப் பொருட்களில் கலப்படம் என்பதை தாண்டி அனைத்தும் செயற்கையாகிவிட்டது. விதையுள்ள பழங்களை விதையுடன் சாப்பிடுவதுதான் நல்லது. அதில் ஆண்டிஆக்ஸிடன்ட் சத்து இருக்கிறது. ஆனால், அனைத்தும் ஆர்கானிக் பொருட்களா என்பதை பார்த்து வாங்குவதே பெரிய டாஸ்காக இருக்கிறது.

    பெண்கள் விரைவாக பருவமடைதல், சீக்கிரமாக மாத விலக்கு முடிவடைவது தற்போது சாதாரணமாகிவிட்டது. இதற்கு, நாம் நமக்கே தெரியாமல் சாப்பிடக்கூடிய ஹார்மோன் கலந்த உணவுப் பொருட்கள். இதனால், பெண்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது. குழந்தையின்மை பிரச்சினைகள் உருவாகிறது. அந்தக் காலத்தில் குடும்ப கட்டுபாடுக்கான சுகாதார நிலையங்கள் அதிகளவில் இருந்தன. தற்போது குழந்தையின்மை மருத்துவமனைகள்தான் ஊருக்கு ஊர் அதிகரித்து வருகின்றன.

    இளம்பெண்களுக்கு மாத விலக்கு நேரங்களில் ஏற்படும் வலி என்பது பயப்படத்தேவையில்லை. இருப்பினும் வலி ஏற்படுவதற்கான காரணம் ரத்தசோகை. ஹூமோகுளோபின் அளவு 12 முதல் 14 வரை இருக்க வேண்டும். பெண்கள் புரோட்டீன், இரும்புச் சத்து பொருட்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லியில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த 35வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு.
    • டெல்லியில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு.

    குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கடந்த 14-ம் தேதி முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கேரளாவில் 3, டெல்லி, ஆந்திராவில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

    தொடர்ந்து, நேற்று டெல்லியில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த 35வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில், டெல்லியில் மீண்டும் ஒரு நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. டெல்லியில் வசிக்கும் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது. இதன் மூலம், டெல்லியில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

    • கேரளாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த 35வயது நபர் உள்பட 2 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது.

    புதுடெல்லி:

    குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கடந்த 14-ம் தேதி முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளாவின் கொல்லம், கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 3 பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. அதில் கொல்லத்தைச் சேர்ந்தவர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிவிட்டார்.

    இதற்கிடையே, வெளிநாட்டில் குரங்கு அம்மை பாதித்த நிலையில் ஊர் திரும்பிய திருச்சூரைச் சேர்ந்த இளைஞர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் குரங்கு அம்மை நோய்க்கு இறந்த முதல் நபர் என அவர் கருதப்பட்டுள்ளார். கேரளாவில் 3, டெல்லி, ஆந்திராவில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில், டெல்லியில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த 35வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் வெளிநாடுகளுக்கு எந்தவித பயணமும் மேற்கொள்ளவில்லை. அவர் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடலில் கொப்புளங்களும் இருப்பதால் அவரை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் டெல்லியில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல இந்தியாவில் குரங்கு அம்மை நோய் தொற்றின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    ×