search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இமாசலபிரதேசத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இமாசலபிரதேசத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை?

    • இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்து உள்ளது.
    • இமாசலபிரதேச மாநிலம் சோலான் மாவட்டம் பாடி பகுதியில் வசித்து வரும் ஒருவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.

    சிம்லா:

    தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து கேரளா மாநிலம் திரும்பிய 3 பேருக்கு ஏற்கனவே இந்த நோய் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு இதன் அறிகுறி இருப்பது தெரியவந்தது.

    இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்து உள்ளது. தற்போது இமாசலபிரதேச மாநிலம் சோலான் மாவட்டம் பாடி பகுதியில் வசித்து வரும் ஒருவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.

    அவரை பரிசோதித்ததில் குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவில் தான் அவர் குரங்கு அம்மை நோய் உள்ளதா? என்பது தெரிய வரும்.

    Next Story
    ×