என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இமாசலபிரதேசத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை?
- இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்து உள்ளது.
- இமாசலபிரதேச மாநிலம் சோலான் மாவட்டம் பாடி பகுதியில் வசித்து வரும் ஒருவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.
சிம்லா:
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கேரளா மாநிலம் திரும்பிய 3 பேருக்கு ஏற்கனவே இந்த நோய் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு இதன் அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்து உள்ளது. தற்போது இமாசலபிரதேச மாநிலம் சோலான் மாவட்டம் பாடி பகுதியில் வசித்து வரும் ஒருவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.
அவரை பரிசோதித்ததில் குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவில் தான் அவர் குரங்கு அம்மை நோய் உள்ளதா? என்பது தெரிய வரும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்