search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monkeypox"

    • குரங்கு அம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு எம்பாக்ஸ் என மாற்றியுள்ளது.
    • உலகளாவிய மருத்துவ நிபுணர்களின் தொடர்ச்சியான ஆலோசனையை தொடர்ந்து இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    ஜெனிவா:

    டென்மார்க்கில் 1958-ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்கு ஒருவித வைரசால் பாதிப்புக்கு ஆளானது. இதனால் அந்த வைரஸ் நோய்க்கு குரங்கு அம்மை என பெயர் வந்தது. பின்னர் இந்த நோய் தாக்கம் மனிதர்களுக்கும் கண்டுபிடிக்கப்பட்டது.

    தற்போது குரங்கு அம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு எம்பாக்ஸ் என மாற்றியுள்ளது. உலகளாவிய மருத்துவ நிபுணர்களின் தொடர்ச்சியான ஆலோசனையை தொடர்ந்து இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    • குரங்கு அம்மை நோய் பாதிப்பு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 70,000 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
    • குரங்கு அம்மை நோய் பரவல் சர்வதேச சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

    ஜெனீவா:

    உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மறுபுறம் புதிய நோய் தொற்று பரவல் எண்ணிக்கை சில நாடுகளில் இன்னும் அதிகரித்து வருகிறது.

    குரங்கு அம்மை நோய் பாதிப்பு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 70,000 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக பதிவாகின.

    இந்நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர அச்சுறுத்தலாக குரங்கு அம்மை நோய் பரவல் இருந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    பல நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய் பரவல் குறித்த அவசரக் குழுவின் 3-வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டப்பட்டது. கமிட்டியின் 15 உறுப்பினர்களில் 11 பேரும், 9 ஆலோசகர்களில் 6 பேரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பேசுகையில், உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவலில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், சில நாடுகளில் சரிவைச் சந்தித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்தியங்களில் சில நாடுகளில் நோய் தொற்று அபாயம் அதிகரித்து வருகின்றன. மேலும் சில நாடுகளில் குறைவாக பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.

    • கடந்த மாதம் பெண்ணின் உடலில் பல்வேறு இடங்களில் கொப்புளங்கள் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி சுப்பிரமணிய சிவா தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தற்போது கூட்டுறவு வங்கியில் அலுவலராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி பரிமளா (35). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் பரிமளாவின் உடலில் பல்வேறு இடங்களில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது.இது உடல் முழுவதும் பரவத் தொடங்கியதால், வட புதுப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்துள்ளனர்.

    அங்கு சுமார் 15 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் கொப்புளங்கள் உடல் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிமளா அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான பழனிச்செட்டிபட்டிக்கு கொண்டுவரப்பட்டு அவசர அவசரமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    குரங்கு அம்மை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்று நோய் என்பதால், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களை காப்பாற்ற வேண்டிய சுகாதாரத்துறை இந்த விஷயத்தை முற்றிலுமாக மூடி மறைத்துள்ளது.

    மேலும் அந்தத் தெருவில் உள்ள பெண்களிடம் விசாரித்த போது, உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டு உயிரிழந்தது மட்டுமே தங்களுக்குத் தெரியும் என்றும், பரிமளா உயிரிழந்தது குரங்கு அம்மை பாதிப்பால் தான் என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் கூறினர். எனவே குரங்கம்மை பாதிக்கப்பட்ட தெருவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • டெல்லியில் நைஜீரியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • டெல்லியில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்தியாவில் இதுவரை குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த நபருக்கு குரங்கம்மை பாதிப்பு இருந்தது தெரியவந்தது. டெல்லியில் கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

    • குரங்கு அம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியது.
    • இந்தோனேசியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

    ஜகார்த்தா:

    ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.

    இந்நிலையில், இந்தோனேசியாவில் முதன்முறையாக குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அண்டை நாடான சிங்கப்பூரில் கடந்த மாதம் முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது. அங்கு ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 15 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    மேலும், தென்கிழக்கு நாடுகளான பிலிப்பைன்ஸ், மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    • உலக அளவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது.
    • ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 92க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

    ஜெனீவா:

    ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 92க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி வருகிறது.

    உலகம் முழுவதிலும் குரங்கு அம்மை காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அடுத்தடுத்து அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும் சுகாதார நடவடிக்கைகளை அந்நாட்டு அரசுகள் தீவிரபடுத்தி உள்ளன.

    இந்நிலையில், உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கூறுகையில், குரங்கு அம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பல நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த தடுப்பூசியின் தேவை அதிகம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது.
    • உலக நாடுகளில் குரங்கு அம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியது.

    டெஹ்ரான்:

    ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.

    இந்நிலையில், ஈரான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 34 வயது பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதும், அவர் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை சூட்டி உள்ளது.
    • மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு கிளேட் 1, மேற்கு ஆப்பிரிக்காவில் கிளேட் 2 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    ஜெனீவா:

    கொரோனா தொற்றுக்கு மத்தியில் குரங்கு அம்மையும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 89 நாடுகளில் 27 ஆயிரத்து 814 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1958-ம் ஆண்டு முதன்முதலாக கண்டறியப்பட்டபோதுதான் இந்த நோய்க்கு குரங்கு அம்மை என்று பெயர் சூட்டப்பட்டது.

    இந்த நிலையில், குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை சூட்டி உள்ளது.

    மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு கிளேட் 1, மேற்கு ஆப்பிரிக்காவில் கிளேட் 2 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிளேட்-2 வைரஸ், 2 துணை வைரஸ்களை கொண்டுள்ளது. அவை கிளேட் 2-ஏ, கிளேட் 2-பி என அழைக்கப்படும். உலகளாவிய நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து இந்தப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

    தற்போது உலகளவில் பரவி வருவது கிளேட் 2-பி வைரஸ் ஆகும். புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள வைரஸ்கள், தொடர்புள்ள நோய்கள் மற்றும் வைரஸ் மாறுபாடுகள் எந்தவொரு கலாசார, சமூக, தேசிய, பிராந்திய தொழில் முறை மற்றும் இனக்குழுக்களுக்கு தீங்கு ஏற்படுத்துவதைத் தவிர்க்கிற வகையிலும், வர்த்தக சுற்றுலா, சுற்றுலா அல்லது பிராணிகள் நலனில் எதிர்மறை விளைவுகளை குறைக்கும் விதத்திலும் இந்தப் பெயர்களால் அழைக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

    • டெல்லியில் வசிக்கும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கு குரங்கு அம்மை பாதிப்பு.
    • இதன்மூலம் டெல்லியில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு.

    புதுடெல்லி:

    ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவி வருகிறது. இந்தியாவிலும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் டெல்லிவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 22 வயது பெண் என தெரிய வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக இந்தப் பெண் நைஜீரியா சென்று வந்துள்ளார். டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட ஆப்பிரிக்க பெண்ணின் மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பட்டது. அதன் முடிவுகள் வெளியானதில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    ஆப்பிரிக்காவில் முதன் முதலில் தோன்றிய குரங்கு அம்மை நோய் தற்போது ஜெர்மனி.இங்கிலாந்து,ஸ்பெயின்.போர்ச்சுகல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிவிட்டது.
    காசியாபாத்:

    கொரோனாவை தொடர்ந்து குரங்கு அம்மை நோய் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. ஆப்பிரிக்காவில் முதன் முதலில் தோன்றிய இந்த நோய் தற்போது ஜெர்மனி.இங்கிலாந்து,ஸ்பெயின்.போர்ச்சுகல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிவிட்டது

    இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த 5 வயது சிறுமி க்கு திடீரென உடல்நிலை பாதிக்கபட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த சிறுமிக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்த அந்த சிறுமியின் ரத்த மாதிரிகள் எடுக்கப்படடு பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பி வைக்கபட்டு உள்ளதாக மருத்துவ அதிகாரி தெரிவித்தார். பரிசோதனை முடிவில் தான் அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ளதா என்பது தெரியவரும். தற்போது அந்த சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    குரங்கு அம்மை நோய் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பல்வேறு நாடுகள் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன.
    லண்டன்:

    கொரோனாவைத் தொடர்ந்து இப்போது குரங்கு அம்மை நோய் மக்களை மிரட்டி  வருகிறது. குறிப்பாக பிரிட்டனில் இந்நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. பிரிட்டனில் நேற்று புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுவரை 179 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவத்துள்ளது. உலக அளவில் 555 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. 

    கொரோனா போன்று குரங்கு அம்மையும், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தும்போது மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. எனவே, குரங்கு அம்மை நோய் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து அந்தந்த நாடுகள் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன.

    அவ்வகையில், பிரிட்டன் சுகாதாரத்துறை புதிய வழிநாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களும், பாதிப்பு அறிகுறி கொண்டவர்களும் உடலுறவு கொள்வதை தவிர்க்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

    குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புண்கள் குணமாகும் வரையிலோ அல்லது, உடலில் ஏற்பட்ட சிரங்குகள் காயும்வரையிலோ மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவேண்டும் என வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி. கல்லூரி மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 234 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
    திருச்சி:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருண்ணன் இன்று திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், புதியதாக அமைக்கப்பட்டு வரும் உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒவ்வொரு படுக்கையும் தலா ரூ.2.90 லட்சம் மதிப்பில் என மொத்தம் 32 படுக்கைகள் அமைத்துள்ளதை பார்வையிட்டார்.

    மேலும் இந்த வார்டில் அமையவுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவ அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்தப் பிரிவில் 32 படுக்கைகளில் 20 படுக்கைகள் பெரியவர்களுக்கும், 12 படுக்கைகள் சிறுவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆய்வுக்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் அனைத்து நோய்களும் கட்டுப்பாட்டில் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு ஓமைக்ரான் அதிவேகமாக பரவி வந்தது. டெல்லியிலும் நோய் தாக்கம் ஏற்றம் அடைய தொடங்கியிருக்கிறதே தவிர குறையவில்லை.

    இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 15-ந்தேதிக்கு பிறகு ஏறக்குறைய நாள் ஒன்றுக்கு 22 என்ற அளவிற்கு மிக குறைந்த அளவில் நோய் தொற்று பதிவானது.

    தற்போது கொஞ்சம் அதிகமாக தொடங்கி இருக்கிறது. ஆகவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா மூன்று அலைகளையும் நாம் முழுமையாக வென்றிருக்கிறோம். தற்போது கரை ஒதுங்கும் நேரத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது. கவனமாக இருக்க வேண்டும்.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி. கல்லூரி மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 234 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்குரிய முழு ஒத்துழைப்பையும் கல்லூரி நிர்வாகம் அளித்தது. அதன்பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அதுவும் சரி செய்யப்பட்டது.

    வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடியவர்கள் கல்யாண நிகழ்ச்சி, சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளில் கலந்து கொள்ளும் பொழுது அதிகமான நபருக்கும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது நாம் கவனமாக இருக்க வேண்டும்.

    மார்ச் 17-ந்தேதிக்கு பிறகு இறப்பு எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் மீண்டும் தொற்று அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் எச்சரித்து உள்ளோம். பொதுவாக எதிர்ப்பு சக்தி படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

    93 சதவீதம் பேர் தடுப்பூசி முதல் தவணை செலுத்தியுள்ளார்கள். 80 சதவீதம் பேர் இரண்டாவது தவணை செலுத்தி உள்ளனர். மருத்துவ கட்டமைப்பு வலுப்படுத்த வேண்டும். பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும்.

    இரண்டாவது தவணை தடுப்பூசி 1.21 கோடி பேர் போட்டுள்ளனர். உலக அளவில் குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் பரவி வந்தாலும் தமிழகத்தில் இன்னும் இல்லை. ஆனால் இந்தியாவில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு எச்சரிக்கை தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை சார்பில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவோம். குரங்கம்மை அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக டாக்டர்களை அணுகவேண்டும்.

    வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் பாதுகாப்பாக வரவேண்டும். தமிழகத்தில் 100-க்கும் கீழ் பாதிப்பு இருக்கிறது. பொது மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிவது கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வது கட்டாயமாக இருக்கவேண்டும். கொரோனா பரிசோதனையையும் தீவிரப்படுத்த இருக்கிறோம். ஏர்போர்ட் உள்ளிட்ட பகுதிகளிலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு இருக்கிறது.

    பயோமெட்ரிக் முறையை படிப்படியாக அனைத்து மருத்துவமனைகளிலும் பயன்படுத்த இருக்கிறோம். தவறுகள் செய்யும் டாக்டர்கள் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும். காப்பீட்டு திட்டத்தில் 46 சதவீதம் அரசு மருத்துவமனையில் சலுகைகள் வழங்கப்படுகிறது. இண்டர்நெட் அடிக்சன் மையம் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு சேவை வழங்கப்படுகிறது.

    ஆறு மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி இல்லாமல் இருக்கிறது அதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு பரிசீலனை நடந்து வருகிறது. மருத்துவமனைகளில் முறைகேடுகள் நடந்தால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு கட்டாயமாக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

    நோய்கள் பரவாமல் தடுப்பதற்கு உரிய வழிமுறைகள் தற்போது தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின் போது திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா, கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×