search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவோ வை17"

    கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக நடித்து வரும் படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட இருக்கிறார்கள். #Karthi17
    கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “ தேவ் “ இப்படத்தின் படப்பிடிப்பு பல அழகிய இடங்களில் வைத்து நடைபெறவுள்ளது. அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இப்படத்தை இயக்கி வருகிறார்.

    சூர்யாவின் ‘சிங்கம் 2’, திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மோகினி’ ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. ஹரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார், மேலும் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னேஷ், டெம்பர் (தெலுங்கு) வில்லன் வம்சி ரவி ஆகியோர் நடித்துள்ளார்கள்.



    இந்நிலையில், இப்படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 21ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
    கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், ரஜத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு குறித்த சில தகவல் வெளியாகி இருக்கிறது. #Karthi17 #RakulPreetSingh
    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் ஜூலையில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த நிலையில், கார்த்தி அடுத்ததாக அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கத்தில் ஒரு கிரைம் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல்பிரீத்தி சிங் நடிக்கிறார். இருவரும் ஏற்கனவே `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் இணைந்து நடித்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.



    கார்த்தி, ரஜத் இணைந்திருக்கும் இந்த படத்திற்கு `தேவ்' என்னும் பெயரை சூட்டலாம் என்று ஆலோசனை நடக்கிறது. கார்த்தியின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மண்குமார் தயாரிக்கிறார். #Karthi17 #RakulPreetSingh

    298 பயணிகளுடன் கடந்த 2014-ம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தை, ராக்கெட் மூலம் ரஷ்யாதான் தாக்கி அழித்ததாக வெளியான தகவலை நெதர்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி உறுதிபடுத்தியுள்ளார். #MH17investigation #Russianinvolvement #StefBlok
    ஆம்ஸ்டர்டாம்:

    உக்ரைனில் கடந்த 2014-ம் ஆண்டு அரசியல் நிலையற்ற தன்மை ஏற்பட்ட போது, கிரீமியா பகுதி மக்கள் ரஷ்ய கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்தனர். இதனால், ரஷ்யா ராணுவ படைகள் கடந்த 2014-ம் ஆண்டு கிழக்கு உக்ரைன் பகுதிக்குள் ஊடுருவி கிரீமியா பகுதியை மீண்டும் ரஷ்யாவுடன் இணைத்தது.

    அந்தாண்டில் ஜூலை 17-ம் தேதி, மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச்-17 விமானம் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பயணிகளுடன் சென்றது.அப்போது ஒரு ஏவுகணை இந்த விமானத்தை தாக்கியதில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.



    விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார் என அறிய சர்வதேச அளவில் கூட்டு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவின் விசாரணை அறிக்கையின்படி, ரஷ்யாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை பிரிவிலிருந்துதான் பக்-டெலர் ரக ஏவுகணை ஏவப்பட்டு, மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதாகவும், ஆனால் ஏவுகணையை உபயோகித்தது யார் என்பது குறித்து தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, நெதர்லாந்து நாட்டின் அமைச்சரவையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த நெதர்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஸ்டெப் பிளாக், விமானம் தாக்கப்பட்ட சம்பவத்தில் ரஷ்யாவிற்கு நேரடி தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஸ்டெப் பிளாக்கின் இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெப் பிளாக்கின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த ரஷ்யா, விமானம் தாக்கப்பட்ட சம்பவத்தில் ரஷ்யாவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என கூறியுள்ளது. #MH17investigation #Russianinvolvement #StefBlok
    ×