search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவோ வை17"

    • அரியலூர் மாவட்டத்தில் 17,388 குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட இயக்குநர் தெரிவித்தார்.
    • குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் பெற்றோர் ஆகியோர் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.

    அரியலூர்:

    அரியலூர் அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட ஆரம்ப நோய் கண்டறிதல் மையம் மற்றும் குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்க மேற்பார்வையாளர்களுக்கென உருவாக்கப்பட்ட கைப்பேசி செயலியின் மாதிரி செயல்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட இயக்குநர் வி.அமுதவள்ளி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:

    தமிழகத்திலுள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு உயரம், எடை அளக்கப்பட்டது, வயதிற்கேற்ற உயரம், வயதிற்கேற்ற எடை, உயரத்திற்கேற்ற எடை குழந்தைகள் உள்ளனரா என்பது குறித்து மூன்று வகையான சோதனை செய்யப்பட்டது.

    இச்சோதனையின் மூலம் தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள 37 இலட்சம் குழந்தைகளில் 2.50 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து நிலையில் பின்தங்கி உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 17,388 குழந்தைகள் ஊட்டச்சத்து நிலையில் பின்தங்கி உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.

    இத்தகைய குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதன்படி மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் பெற்றோர் ஆகியோர் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.

    குழந்தைகளுக்கு சத்துணவு மையத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதே போன்று வீட்டில் குழந்தைகளுக்கு காலை மற்றும் இரவு சத்தான உணவுகள் வழங்குவதை பெற்றோர்கள் உறுதிபடுத்த வேண்டும்.

    குழந்தைகளுக்கு காய்கறிகள், பால், பருப்பு, கீரைகள், நெய் உள்ளிட்ட சத்தான உணவுகளை பெற்றோர்கள் வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு நமது பாரம்பரிய உணவுகளை வழங்க வேண்டும். இது குறித்து பெற்றோர்கள் தங்களது உறவினர்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதில் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் சத்துமாவினை குழந்தைகளுக்கு தவறாமல் வழங்க வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் அவசியமாகும்.

    எனவே, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கி, ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    இந்தியாவில் விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.4000 குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.



    விவோ நிறுவனம் தனது வி15 மற்றும் வை17 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் அறிமுகமாகி இருமாதங்கள் நிறைவுற்றிருக்கும் நிலையில், விவோ வை15 மற்றும் விவோ வை17 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை குறைக்கப்படுகிறது.

    இந்தியாவில் விவோ வி15 ஸ்மார்ட்போன் ரூ.23,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விவோ வி15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.17,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.2000 விலை குறைக்கப்பட்டு ரூ.15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ வி15 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் FHD+ LCD மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசஸர் கொண்டிருக்கும் விவோ வி15 ஸ்மார்ட்போன் 32 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    பின்புறம் 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா-வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது. விவோ வை17 ஸ்மார்ட்போனில் ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த ஃபன் டச் ஓ.எஸ்., அல்ட்ரா கேம் மோட், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120 டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, 12 எம்.பி. டெப்த் கேமரா, 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
    விவோ நிறுவனத்தின் புதிய வை17 ஸ்மார்ட்போன் மூன்று ஏ.ஐ. கேமரா சென்சார்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. #Vivo



    விவோ நிறுவனம் இந்தியாவில் தனது புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய விவோ வை17 ஸ்மார்ட்போனில் 6.35 இன்ச் ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P35 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கிறது.

    புகைப்படம் எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா மற்றும் 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிரேடியன்ட் பேக் கொண்டிருக்கும் விவோ வி17 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    விவோ வை17 சிறப்பம்சங்கள்:

    - 6.35 இன்ச் 1544x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19.3:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P35 12 என்.எம். பிராசஸர்
    - IMG பவர் வி.ஆர். GE8320 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஓ.எஸ். 9 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ வை17 ஸ்மார்ட்போன் மினரல் புளு மற்றும் மிஸ்டிக் பர்ப்பிள் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஒப்போ நிறுவனம் முன்னதாக இந்தியாவில் அறிமுகம் செய்த ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் அசத்தல் சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. #oppor17 #smartphone



    இந்தியாவில் ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஆர்17 மாடலில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, நாட்ச், 91.5% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு, 10 என்.எம். குவால்காம் ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர் , இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 25 எம்.பி. ஏ.ஐ. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிரேடியன்ட் கிளாஸ் பேக், மெட்டல் ஃபிரேம் மற்றும் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. 



    ஒப்போ ஆர்17 சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - ஆக்டா-கோர் ஸ்ன்ப்டிராகன் 670 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 615 GPU
    - 8 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 5 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார், 3D போர்டிரெயிட்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - VOOC ஃபிளாஷ் சார்ஜ்

    ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் ட்விலைட் புளு, ஸ்டேரி பர்ப்பிள் நிறங்களில், கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் விலை ரூ.34,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.4900 மதிப்புள்ள 3200 ஜி.பி. அதிவேக 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் ஒருமுறை ஸ்கிரீன் சரி செய்து கொள்ளும் வசதி, பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ.5000 தள்ளுபடி மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. #OppoR17  #smartphone
    மீத்தேன் எடுக்க வேதாந்தா குழுமத்தினருக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு செய்யும் சூழ்ச்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக வைகோ குற்றம் சாட்டினார். #vaiko #centralgovernment

    மதுரை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் வேதாந்தா குழுமத்தினர் மீத்தேன் எடுக்க 2 இடங்களை ஒதுக்கீடு செய்யும் சூழ்ச்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். மே தின இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான தேச துரோக வழக்கு மத்திய அரசின் பாசிச போக்கை காட்டுகிறது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் நாடார் சமூகத்தை இழிவுபடுத்தும் பாடத்தை நீக்க வேண்டும்.


    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர், 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

    இதனால் அவர்களது வாழ்க்கை சீரழிந்து விட்டது. அவர்களது விடுதலை தொடர்பாக கோர்ட்டு மற்றும் தமிழக அரசு உத்தரவிட்ட பிறகும், கவர்னர் தாமதம் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். #vaiko #centralgovernment

    ரஜத் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் தேவ் படத்தில் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்ட ரகுல் ப்ரீத் சிங்குக்கு, பிறந்தநாளுக்கு முன்னதாகவே கேக் வெட்டி படக்குழு கொண்டாடியது. #Dev #RakulPreetSingh
    ரகுல் பிரீத் சிங் தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு தான் அவரை முன்னணி கதாநாயகியாக வளர்த்தது. மீண்டும் தமிழுக்கு வந்து முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடித்து வருகிறார். கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்கு பிறகு தேவ் படத்திலும் ஜோடியாகி இருக்கிறார்.

    சென்னை, ஐதராபாத், உக்ரைன் உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. குலுமணாலியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கு ஏற்பட்ட பெருமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பலரும் பாதிக்கப்பட்டனர். பொருட்சேதமும் ஏற்பட்டது.

    இதனால் தேவ் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டதுடன் படக்குழுவினரும் அங்கிருந்து வர சிரமப்பட்டனர். தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ரகுல் பிரீத் சிங்கின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன.

    முக்கிய நடிகர்கள், நடிகைகள் படப்பிடிப்பை முடித்தால் படக்குழு கேக் வெட்டி கொண்டாடி அவர்களை வழியனுப்பி வைப்பது சமீபகாலமாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
    அதோடு வரும் அக்டோபர் 10-ம் தேதி ரகுல் பிறந்தநாள் வருவதால் முன்கூட்டியே அதையும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதை ரகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் வெளியிட்டுள்ளார். டிசம்பர் 21-ந்தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. #Dev #RakulPreetSingh #Karthi

    சிறையில் உள்ள திருமுருகன் காந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் மருத்துவ சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. #ThirumuruganGandhi
    ராமநாதபுரம்:

    மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், ராமநாதபுரம் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு பற்றி ஐ.நா. சபையில் பேசியதற்காக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பல பொய் வழக்குகளைப் பதிவு செய்து தமிழக அரசு சிறையில் அடைத்துள்ளது.

    தனியறையில் அடக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தி அந்த அறையை விட்டால், வேறெங்கும் செல்லவோ, யாருடனும் பேசவோ அனுமதிக்கப்படுவதில்லை. அவருக்கு சுகாதாரமான உணவு வழங்கப்படவில்லை, இதனால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் மருத்துவ சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

    இது அப்பட்டமான மனித உரிமை மீறிய செயலாகும். காவல்துறையின் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

    மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் திருமுருகன் காந்தியை மன ரீதியாக பலவீனமாக்கி விடலாம் என்று கனவு கண்டால் அது வெறும் பகல் கனவாகவே இருக்கும் என்பதை மத்திய- மாநில அரசுகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார். #ThirumuruganGandhi
    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு 3-வது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #ThirumuruganGandhi
    வேலூர்:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஐ.நா. சபையில் பேசினார்.

    பின்னர், நாடு திரும்பிய அவர் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    வயிற்றுப்போக்கு, மயக்கம், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவரது உணவு குழாயில் பிரச்சனை இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து, உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட திருமுருகன் காந்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ஐ.எம்.சி.யு. பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு 3-வது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று திருமுருகன் காந்தியின் தந்தை, சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினர் சந்தித்து பார்த்தனர். மேலும் தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் சந்தித்து நலம் விசாரித்தார்.

    தொடர்ந்து டாக்டர்கள் திருமுருகன் காந்தி உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர். #ThirumuruganGandhi
    மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மீதான சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தை (UAPA) ரத்து செய்து சென்னை எழும்பூர் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #ThirumuruganGandhi #May17 #UAPA
    சென்னை:

    மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை 8 வழிச்சாலை போராட்டத்தின் போது நடந்த தடியடி ஆகியவை குறித்து ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் பேசினார்.

    நார்வேயிலிருந்து கடந்த 9ந்தேதி பெங்களூரு விமான நிலையம் வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர்.

    சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில், ஆஜர்படுத்திய போது சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு மறுத்து விட்டார்.

    இதையடுத்து, தடையை மீறி ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கில் ராயப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    இதற்கிடையே, கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கூட்டம் ஒன்றில் பேசியதற்காக, அவர் மீது UAPA (சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை எழும்பூர் கோர்ட்டில் திருமுருகன் காந்தியை போலீசார் இன்று ஆஜர்படுத்தினர்.

    அப்போது, அவர் மீது போடப்பட்ட UAPA வழக்கை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார். 

    ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Oppo #smartphone


    ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் PBEM00, PBET00 மாடல் நம்பர்களுடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட மாடல்களும், சற்று விலை குறைந்த வெர்ஷன் PAGM00, PAGT00 மாடல் நம்பர்களுடன் பின்புற கைரேகை சென்சார் கொண்ட மாடல்கள் உருவாகின்றன.

    அந்த வகையில் ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போனின் முதல் போஸ்டர் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ஆர்17 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா மாட்யூல்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கின்றன. கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 10 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.



    ஒப்போ ஆர்17 மாடலின் மற்றொரு படத்தில் F9/F9 ப்ரோ போன்ற நாட்ச், பின்புறம் டூயல் கேமரா செட்டப் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கிறது. இதிலும் கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டுள்ளது. ஒப்போ ஆர்17 மாடலில் ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஒப்போ மாடல்களில் 6.3 இன்ச், 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும் புதிய ஸ்மார்ட்போன்கள் TENAA மூலம் சான்று பெறும் போது இவற்றின் முழு விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒப்போ நிறுவனத்தின் ஆர்17 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Oppo


    ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் PBCM00 மற்றும் PBCT00 மாடல் எண்களில் சான்று பெற்றிருக்கிறது. ஆர்15 சீரிஸ் இன் மேம்படுத்தப்பட்ட மாடலாக உருவாகி இருக்கும் ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் டிஸ்ப்ளே, 19:9 ரக OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    இத்துடன் டூயல் பிரைமரி கேமரா, 3415 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. சீனாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 16 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.



    ஒப்போ ஆர்17 மற்றும் ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை என்பதால், புதிய மாடல்களில் 3D ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இரண்டு ஒப்போ ஸ்மார்ட்போன்களும் ஆகஸ்டு மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த வகையில் புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்களின் முழு விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. #Oppo #smartphone
    கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக நடித்து வரும் படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட இருக்கிறார்கள். #Karthi17
    கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “ தேவ் “ இப்படத்தின் படப்பிடிப்பு பல அழகிய இடங்களில் வைத்து நடைபெறவுள்ளது. அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இப்படத்தை இயக்கி வருகிறார்.

    சூர்யாவின் ‘சிங்கம் 2’, திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மோகினி’ ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. ஹரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார், மேலும் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னேஷ், டெம்பர் (தெலுங்கு) வில்லன் வம்சி ரவி ஆகியோர் நடித்துள்ளார்கள்.



    இந்நிலையில், இப்படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 21ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
    ×