search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் விபத்து"

    • காரில் 2 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் பயணித்தனர்.
    • நொடிப்பொழுதில் கார் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

    ஜெய்ப்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் சலாசர் நகரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு காரில் சென்றனர்.

    பின்னர் அவர்கள் கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு அரியானாவின் ஹிசார் காரில் புறப்பட்டனர். காரில் 2 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் பயணித்தனர். ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் அர்ஷிவாட் புலியா பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது கார் டிரைவர் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார்.

    அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக லாரியின் பின்பக்கத்தில் கார் மோதியது. இதில் காரில் இருந்த கியாஸ் சிலிண்டரில் தீப்பற்றியது. நொடிப்பொழுதில் கார் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

    இதனால் காருக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    • நானா படோலின் கார் பாந்த்ரா அருகே பில்வாரா கிராமத்தில் விபத்தில் சிக்கியது.
    • பிரசாரம் முடிந்து திரும்பிய நிலையில் லாரி ஒன்று திடீரென மோதியது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வருகிறார் நானா படோல்.

    இந்நிலையில், நானா படோலின் கார் பாந்த்ரா நகருக்கு அருகில் உள்ள பில்வாரா கிராமத்தில் விபத்தில் சிக்கியது. விசாரணையில் பிரசாரம் முடிந்து திரும்பிய நிலையில் லாரி ஒன்று திடீரென மோதியது தெரிய வந்தது.

    இந்த விபத்தில் நானா படோலே அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமின்றி உயிர் தப்பினார். வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், இந்த விபத்தில் அவரது கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அவரை கொல்ல முயற்சியா என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

    • தர்மபுரியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக விநாயக சரவணன் என்பவர் காரில் வந்தனர்.
    • விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடத்தூர்:

    கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ரத்தினம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராமன் (வயது 67). அ.தி.மு.க.வின் முன்னாள் அவை தலைவரான இவரும் கடத்தூரைச் சேர்ந்த விநாயகர் சரவணன் மற்றும் அ.தி.மு.க. கட்சியினர் சிலரும் தர்மபுரியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக விநாயக சரவணன் என்பவர் காரில் வந்தனர். பின்னர் அவர்கள் கூட்டம் முடிந்து விடு திரும்பினர்.

    அப்போது மணியம்பாடி அருகே சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு இறங்கி பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்பொழுது அவ் வழியாக வந்த தனியார் பஸ் காரின் மீது மோதியதில் காரின் அருகில் நின்றிருந்த ராமன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பின்னா் நேற்று மாலையில் அங்கிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டனா்.
    • விபத்தில் காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனா். இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    ஆத்தூர்:

    சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் சேகா்(வயது 42). இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கோவிலுக்கு ஒரு காரில் வந்தார்.

    அப்போது அவருடன் அவரது மனைவி நித்திய கலா (41), அவர்களது மகள் தீக்ஷித் (13), மகன் ரித்விக்(8) ஆகியோரும், உறவினர்களான வனஜா(61), காா்த்திக் (40) ஆகியோரும் வந்திருந்தனர். காரை சேகர் ஓட்டி சென்றார்.

    கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பின்னா் நேற்று மாலையில் அங்கிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டனா். திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின் ரோட்டில் பழைய காயல் அருகே கார் சென்ற போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனா். இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்று காரின் இடிபாட்டில் சிக்கிய 6 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக ஆத்தூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான நாமக்கல் மாவட்டம் சோ்ந்தமங்கலம் தாலுகாவை சேர்ந்த ராமசாமி (40) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இலங்கை அணி டி20 உலக கோப்பையை வென்ற போது அந்த அணியில் இடம் பிடித்திருந்தவர்.
    • 13 ஆண்டுகளாக இலங்கை அணிக்காக விளையாடி வந்தவர்.

    இலங்கையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான திரிமன்னே கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    34 வயதாகும் திரிமன்னே இலங்கையில் உள்ள அருணாநாதபுரம் என்கிற பகுதியில் காரில் நண்பர்களுடன் யாத்திரைக்கு சென்றபோது எதிரே வந்த லாரியின் மீது அவரது கார் மோதி இருக்கிறது. இதனால் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இலங்கை அணிக்காக கடந்த 2010-ஆம் ஆண்டு அறிமுகமான லஹிரு திரிமன்னே இதுவரை அந்த அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகள், 127 ஒருநாள் போட்டிகள் மற்றும் 26 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். மூன்று வகையான இலங்கை அணியிலும் இடம்பெற்று விளையாடி வந்த திரிமன்னே கடந்த 2014-ஆம் ஆண்டு இலங்கை அணி டி20 உலக கோப்பையை வென்ற போது அந்த அணியில் இடம் பிடித்திருந்தவர். அதோடு மட்டுமில்லாமல் இரண்டு முறை இலங்கை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் போதும் அந்த அணியில் இடம் பிடித்து விளையாடி இருந்தார்.

    கடந்த 13 ஆண்டுகளாக இலங்கை அணிக்காக விளையாடி வந்த அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எவ்வித போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காமல் விரக்தியில் இருந்த வேளையில் கடந்த ஜூலை மாதம் தான் ஓய்வினையும் அறிவித்திருந்தார்.

    ரிஷப் பண்டிற்கு அடுத்து தற்போது திரிமன்னே மிகவும் மோசமான விபத்தினை சந்தித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரபல ஆஸ்திரேலியா வீரர் ஆண்ட்ரு சைமன்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்கள் மீது காரை மோதியதும் டிரைவர் அங்கிருந்து காரை பின்நோக்கி நகர்த்தி வேகமாக தப்பி செல்ல முயன்றார்.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர்.

    காஜியாபாத்:

    கிழக்கு டெல்லி காஜிப்பூரில் புத் பஜார் என்ற மார்க்கெட் உள்ளது. இங்கு எப்போதும் பொதுமக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். நேற்று இரவு 9.30 மணியளவில் பொதுமக்கள் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது திடீரென ஒரு கார் கூட்டத்தில் வேகமாக புகுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் காஜியாபாத்தை சேர்ந்த சீதா தேவி என்ற 22 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பொதுமக்கள் மீது காரை மோதியதும் டிரைவர் அங்கிருந்து காரை பின்நோக்கி நகர்த்தி வேகமாக தப்பி செல்ல முயன்றார். ஆனால் பொதுமக்கள் காரை சிறிது தூரம் விரட்டி பிடித்து டிரைவரை மடக்கி பிடித்தனர். விபத்து ஏற்படுத்திய டிரைவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா (வயது 37) கார் விபத்தில் உயிரிழந்தார்.
    • எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா மறைவிற்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தளத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.

    தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் கண்டோண்ட்மெண்ட் எம்.எல்.ஏவான லாஸ்யா நந்திதா (வயது 37) பிப்ரவரி 23-ம் தேதி நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கார் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 13-ந் தேதி நல்கொண்டாவில் பி.ஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் வீடு திரும்பிய நந்திதாவின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நந்திதா அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இன்று 2-வது விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

    லாஸ்யா நந்திதா தந்தை சயன்னா 5-முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி இறந்தார்.

    அவரது மறைவிற்குப் பிறகு சந்திரசேகர ராவ் அவரது மகளான லாஸ்யா நந்திதாவிற்கு, செகந்திராபாத் கண்டோண்ட்மெண்ட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வெண்ணேலாவை அதிக வாக்கு வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார்.

    பெண் எம்.எல்.ஏ. ஒருவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தெலுங்கானா எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா மறைவிற்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தளத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா உயிரிழப்பு போன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக பேசிய அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர், "அனுபவமில்லாத ஓட்டுநர்களால் சாலை விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக இருக்கிறது. தொலைதூரப் பயணங்களுக்காக திறமையான ஓட்டுநர்களை நியமிக்க வேண்டியது அவசியம். இதை கருத்தில்கொண்டு, ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்க முடிவு செய்துள்ளோம். ஓட்டுநர் சோதனை நடத்துவதற்கான பயிற்சி இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும்" என தெரிவித்தார்.

    • கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இடது புறத்தில் உள்ள சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது.
    • உயிருக்கு போராடிய கார் டிரைவரை மீட்டு படன் சேருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் கண்டோண்ட்மெண்ட் எம்.எல்.ஏவாக இருந்தவர் லாஸ்யா நந்திதா (வயது 37).

    இன்று அதிகாலை ஐதராபாத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டார். சங்கரெட்டி மாவட்டம் படன்செருவில் உள்ள எக்ஸ்பிரஸ் வெளிவட்ட சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

    காலை 6.30 மணி அளவில் வேகமாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இடது புறத்தில் உள்ள சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது. இதில் காரில் முன்பகுதி நொறுங்கியது.

    காரில் இருந்த லாஸ்யா நந்திதா படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கார் டிரைவரை மீட்டு படன் சேருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேலும் நந்திதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நந்திதா கடந்த 13-ந் தேதி நல்கொண்டாவில் பி.ஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் வீடு திரும்பிய நஞ்சிதாவின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நந்திதா அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இன்று 2-வது விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

    லாஸ்யா நந்திதா தந்தை சயன்னா 5-முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி இறந்தார்.

    அவரது மறைவிற்குப் பிறகு சந்திரசேகர ராவ் அவரது மகளான லாஸ்யா நந்திதா செகந்திராபாத், கண்டோண்ட்மெண்ட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார்.

    தன்னை எதிர்த்து போட்டியிட்ட வெண்ணேலாவை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தந்தை இறந்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நந்திதா விபத்தில் சிக்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெண் எம்.எல்.ஏ. ஒருவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    இந்நிலையில் தெலுங்கானா எம்.எல்.ஏ. லஷ்ய நந்திதா மறைவிற்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    "கண்டோண்ட்மெண்ட் சட்டமன்ற உறுப்பினர் லாஸ்யா நந்திதாவின் அகால மரணம் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நந்திதாவின் தந்தையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. அவர் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இறந்தார்.

    அதே மாதத்தில் திடீரென நந்திதாவும் மரணம் அடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதி விபத்து.
    • அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 2 குழந்தைகள் உயிர் தப்பியது.

    கர்நாடக மாநிலம் பெலகாவியில் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    கிட்டூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில், அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 2 குழந்தைகள், சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    உயிரிழந்தவர்கள் அனைவரும் கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

    விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளனதாக கூறப்பட்டுள்ளது.

    • தீயணைப்பு துறையினர் உதவியுடன், இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

    வேங்கிக்கால்:

    ஆந்திராவைச் சேர்ந்த 4 பேர் காரில் இன்று அதிகாலை திருவண்ணாமலை நோக்கி வந்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடி புதூர் அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் முற்றிலுமாக நொறுங்கியது. அதில் இருந்த 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஓடிவந்தனர். படுகாயம் அடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    தீயணைப்பு துறையினர் உதவியுடன், இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

    விபத்தில் பலியான 4 பேரும் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள். அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை-பெங்களூரு சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால், ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். சாலை நடுவில் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    தற்போது பனிமூட்டம் அதிகம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கார் விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • மோதிய வேகத்தில் பேருந்து மற்றும் காரில் தீ பிடித்தது.
    • வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை.

    உத்தரப் பிரதசேம் மாநிலம் மதுராவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பரபரப்பு சம்பவம் ஏற்பட்டது.

    அந்த சாலையில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து- கார் மோதி விபத்துக்குள்ளானது.

    பேருந்தின் பின்பக்கம் கார் மோதியதில், நிலை தடுமாறிய பேருந்து சென்டர் மீடியனில் மோதியது.

    மோதிய வேகத்தில் பேருந்து மற்றும் காரில் தீ பிடித்தது.

    இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தோஷியும், அமிதாவும் காரில் அம்பாஜி கோவிலுக்கு சென்று திரும்பினர்
    • காயங்களுடன் காரிலிருந்து வெளியேற முடியாமல் அமிதா சிக்கி கொண்டார்

    குஜராத் மாநில நர்மதா மாவட்டத்தை சேர்ந்தவர் 55 வயதான பரேஷ் தோஷி. இவரது மனைவி அமிதா.

    பரேஷ் தோஷி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இரு தினங்களுக்கு முன் தோஷி, தனது மனைவி அமிதாவுடன், காரில், பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார்.

    திரும்பி வரும் வழியில், சபர்காந்தா பகுதியில், தான் மஹுதி கிராமத்தில் கெரோஜ்-கேத்பிரம்மா நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது, திடீரென அவர்கள் காரின் குறுக்கே ஒரு நாய் வந்தது.


    அந்த நாய் மீது மோதுவதை தவிர்க்க தோஷி காரை திருப்பிய போது, அது எதிர்பாராத விதமாக அங்கிருந்த தூண்கள் மற்றும் சாலை தடுப்புகளிலும் மோதியது.

    அப்போது சாலை தடுப்புகளில் ஒன்று அவர்களது கார் கண்ணாடியை துளைத்து கொண்டு அமிதாவை தாக்கியது. இதில் காரிலிருந்து இறங்க முடியாமல், பலத்த காயங்களுடன் அமிதா சிக்கித் தவித்தார்.

    அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், விபத்தை கண்டு உதவ ஓடி வந்தனர். அவர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே அமிதாவை வெளியே மீட்டு, இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அமிதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து, அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்ற தோஷி, கவனக்குறைவாக கார் ஓட்டிய குற்றத்தை புரிந்ததாக தனது பெயரிலேயே முதல் தகவல் அறிக்கை (First Information Report) பதிவு செய்து கொண்டார்.

    ஆங்காங்கே சுற்றி திரியும் நாய்களால், பொதுமக்கள் கடும் சிரமத்தை அனுபவிப்பதாகவும், காலையில் நடைபயிற்சி செய்வதும் கடினமாகி வருவதாக, கடந்த வருடம், அம்மாநில உயர் நீதிமன்றமே கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×