search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வெட்டுகள்"

    • இத்தலத்து சண்முகரை வழிபட்டால் பகை விலகும்.
    • நீலோத்பலாம்பாளை வழிபட்டு பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவதும் நிகழ்கிறது.

    செல்வ செழிப்பை உண்டாக்கும் திருவாரூர் ஆலயம்!

    இத்தலத்தில் உள்ள பக்தர்கள் இராகு கால துர்க்கையை வழிபட்டு பதவி உயர்வு பணிமாற்றம் உள்ளிட்ட பல காரியங்கள் வெற்றியடையப் பெறுகிறார்கள்.

    கடன் தொல்லை, உடற்பிணிகள் உள்ளவர்கள், இங்குள்ள ருண விமோசன ஈஸ்வரனை வழிபடுவது சிறப்பு.

    இத்தலத்து சண்முகரை வழிபட்டால் பகை விலகும்.

    நீலோத்பலாம்பாளை வழிபட்டு, அர்த்தஜாமத்தில் நைவேத்தியம் செய்து பால் சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கிறது.

    பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவதும் நிகழ்கிறது.

    மேலும் பிரதான மூர்த்தியான தியாகேசரை வணங்கினால் திருமண வரம், குழந்தை வரம், கல்வி மேன்மை, வேலை வாய்பபு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவை நிறைவேறுகிறது.

    மூலவர் வன்மீகி நாதரை வழிபட்டால் எண்ணற்ற வரங்களும், செல்வ செழிப்பும் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், ஆணவம் மறையும்.

    அம்மன் சன்னதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும்.

    • இதனையடுத்து கொடியேற்ற விழா வெகு விமர்சையாக நடைபெறும்.
    • இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கு பெற்று கமலாம்பாள் தரிசனம் செய்வர்.

    தியாகராஜர் கோவில்-ஆடிப்பூரம் 10 நாட்கள் திருவிழா

    தியாகராஜர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, கமலாம்பாள் சன்னதியில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

    கமலாம்பாள் சன்னதியில் வேத பண்டிதர்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை நடைபெறும்.

    இதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்படும்.

    இதனையடுத்து கொடியேற்ற விழா வெகு விமர்சையாக நடைபெறும்.

    பின்னர் கமலாம்பாள் சுவாமி வீதி உலா வருவார்.

    இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கு பெற்று கமலாம்பாள் தரிசனம் செய்வர்.

    மாசி மக நாள் சுந்தரருக்கு பூதகணம் நெல் கட்டி செல்லும் விழா, சித்திரை விழா, ஆடிப்பூரம் விழா, தெப்பதிருவிழா, நிறைபணி விழா ஆகியவை இத்தலத்தின் சிறப்பான விழா நாட்கள் ஆகும் மாதாந்திர பிரதோஷம் இத்தலத்தில் மிகவும் விசேஷமானது.

    வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின்போது கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.

    • அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த இலிங்கம் வைக்கப்படும்.
    • தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது.

    365 லிங்கங்கள் கொண்ட பிரமாண்ட ஆலயம்!

    திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் தமிழகத்தின் புகழ்பெற்ற தலம்.

    இந்தக் கோவிலை சுற்றிப் பார்க்க வேண்டுமானால், முழுமையாக ஒருநாள் ஆகும்.

    பெரும்பாலான கோவில்களின் சுற்றுப்பிரகாரத்தில் சிறிய சன்னதிகள்தான் இருக்கும்.

    ஆனால், திருவாரூர் கோவிலின் உள்ளே இருக்கும் சன்னதிகள், கிட்டத்தட்ட தெருவோர கோவில்களின் அளவுக்கு பெரிய அளவில் இருக்கிறது.

    வீதிவிடங்க விநாயகர், அசலேஸ்வரர் (இது தனியாக பாடல் பெற்றது), கமலாம்பாள், நீலோத்பலாம்பாள், ரௌவுத்ர துர்க்கை, ருண விமோசனர், தெட்சிணாமூர்த்தி, ஆனந்தீஸ்வரர், சித்தீஸ்வரர், ஹயக்கிரீஸ்வரர்,

    தட்சணேஸ்வரர், அண்ணாமலேஸ்வரர், வருணேஸ்வரர், ஓட்டு தியாகேசர், துளசிராஜா பூஜித்த கோவில், தெய்வேந்திரன் பூஜித்த இலிங்கம், சேரநாதர், பாண்டியநாதர்,

    ஆடகேஸ்வரர், புலஸ்திய ரட்சேஸ்வரர், புலஸ்திய பிரம்மேஸ்வரர், பக்தேஸ்வரர், வில்வாதீஸ்வரர் மற்றும் பாதாளேஸ்வரர் ஆகியோர் இந்த சன்னதிகளில் அருள் செய்கின்றனர்.

    கோவிலின் மேற்கு கோபுர நுழைவாயிலில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.

    இவரை வழிபட்டால் தொலைந்த பொருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    அம்மன் சன்னதியின் உள்பிரகார விநாயகர் சன்னதியில், ஐயப்பனும் அருள்பாலிக்கிறார்.

    மாற்றுரைத்த விநாயகர் சந்நிதி மேலைக்கோபுரத்தின் எதிரில் குளக்கரையில் உள்ளது.

    "செங்கழுநீர் ஓடை" எனப்படும் ஓரோடை கோவிலுக்கு அப்பால் 1 கி.மீ., தொலைவில் உள்ளது.

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    தியாகராஜர் என்றால் "கடவுள்களுக்கெல்லாம் ராஜா" என்று பொருள்.

    தியாகராஜர் கோவிலும் கோவில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது.

    9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள்,

    365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோவில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது.

    இக்கோவிலை பெரியகோவில் என்றும் சொல்வர்.

    கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

    தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது.

    இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க இலிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.

    அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த இலிங்கம் வைக்கப்படும்.

    அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும்.

    மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும்.

    • இங்குள்ள தீர்த்தம் “கமலாலயம்” எனப்படுகிறது.
    • நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

    திருவாரூர் கோவில்-நாகநாதர் சன்னதி

    லலிதா சகஸ்ரநாமத்தின் மொத்த வடிவமாக, இத்தலத்து நாயகி கமலாம்பிகை விளங்குகிறாள்.

    எனவே இங்குள்ள தீர்த்தம் "கமலாலயம்" எனப்படுகிறது.

    பங்குனி உத்திரத்தில் இங்கு நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகம் நீராடிய பலன் உண்டு என்பது ஐதீகம்.

    குளத்தின் நடுவே நாகநாதர் சன்னதி உள்ளது.

    நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

    பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப்படும்.

    ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது.

    இதை "நித்திய பிரதோஷம்" என்பார்கள்.

    இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர்களும் தரிசிப்பதாக ஐதீகம்.

    எனவே, இந்தக் கோவிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின் அருளையும் பெற்ற புண்ணியம் கிடைக்கும்.

    • இங்கு ஈசான்ய திசையிலுள்ள விட்டவாசல் வழியாக வெளியே செல்கிறார்.
    • இவையனைத்தும் உலோகச் சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவாரூர் கோவில்-நின்ற கோலத்தில் நந்தி

    சிவாலயங்களில், பொதுவாக நந்தி சிலைகளை படுத்த கோலத்திலேயே காண முடியும்.

    ஆனால், திருவாரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சப்த விடங்கத்தலங்களில் மட்டும் நந்தியை நின்ற கோலத்தில் காணலாம்.

    மேலும், இவையனைத்தும் உலோகச் சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கிழக்கு பார்த்து அமைந்த கோவில்களில், சுவாமி வீதி உலாவிற்கு கிழக்கு கோபுரம் வழியாகத்தான் வெளியே செல்வார்.

    ஆனால், இங்கு ஈசான்ய திசையிலுள்ள விட்டவாசல் வழியாக வெளியே செல்கிறார்.

    இந்திரனிடம் பெற்ற இலிங்கத்தை முசுகுந்த சக்கரவர்த்தி இங்கு பிரதிஷ்டை செய்தார்.

    அதை முசுகுந்தனுக்கு கொடுத்த இந்திரன், மீண்டும் அதை தேவலோகம் கொண்டு சொல்ல விரும்பினான்.

    எனவே, தியாகராஜர் கிழக்கு வாசல் வழியாக உலா வரும் போது, அவரை மீண்டும் கொண்டு சென்று விடலாம் என நினைத்து, அங்கேயே அவன் காத்திருப்பதாக ஐதீகம்.

    இந்திரனிடமிருந்து தப்புவதற்காக, தியாகராஜரை பக்தர்கள் ஈசான்யத்தில் உள்ள விட்டவாசல் வழியாக உலா கொண்டு செல்கின்றனர்.

    பெரும்பாலான பக்தர்கள் கோவிலுக்குள் நுழையக் கூட கிழக்கு வாசலை தவிர்த்து விட்டு, வடக்கு மற்றும் மேற்கு வாசல் வழியாகத்தான் கோவிலுக்கு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இத்தலம் தான் மிக அதிகமாக 353 பாடல்களைப் பெற்றுள்ளது.

    சம்பந்தர் 55 பாடல், அப்பர் 208 பாடல், சுந்தரர் 87 பாடல், மாணிக்கவாசகர் 3 பாடல்கள் பாடியுள்ளனர்.

    • நாரதரோ, பூமியில் மனுநீதிச்சோழனே நேர்மையானவன் என்றார்.
    • அந்த வேதனையை தானும் படவேண்டும் என்பதற்காக தன் மகனை தேரில் ஏற்றி கொன்றான் சோழன்.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்- பசுவிற்கு நீதி வழங்க மகனை இழந்த மனுநீதி சோழன் ஓவியம்

    தேவலோகத்தில் யார் நேர்மையானவர் என்ற போட்டி ஏற்பட்டது.

    எமதர்மராஜன் "நானே நேர்மையாளன்" என்றார்.

    நாரதரோ, பூமியில் மனுநீதிச்சோழனே நேர்மையானவன் என்றார்.

    இதனால் எமன் பசுவாக வடிவெடுத்து, ஒரு கன்றுடன் திருவாரூர் ராஜவீதிக்கு வந்தார்.

    அப்போது மனுநீதி சோழனின் மகன் வீதிவிடங்கன் தேரில் வந்தான்.

    வேகமாக வந்த தேரில் சிக்கி, கன்று இறந்தது.

    இதையறிந்த பசு மன்னனின் அரண்மனைக்கு சென்று நீதி கேட்டது.

    கன்றை இழந்த பசு எவ்வளவு வேதனைப்படுமோ, அதே வேதனையை தானும் படவேண்டும் என்பதற்காக தன் மகனைத் தேர்ச்சக்கரத்தில் ஏற்றி கொன்றான் சோழன்.

    பசு வடிவில் இருந்த எமதர்மராஜா மனுநீதிச்சோழனுக்கு காட்சி கொடுத்து "நீயே நேர்மையானவன்" எனக் கூறி மறைந்தார்.

    இந்த காட்சியை விளக்கும் கல்தேர் கோவிலின் வடகிழக்கு மூலையில் உள்ளது.

    • ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகேயுள்ள கொடிக்கம்பத்து நந்தி சிறப்பு வாய்ந்தவர்.
    • சோழர்கள், பாண்டியர்கள், ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன.

    திருவாரூர் கோவில் சிறப்புகள்

    *அறுபத்து மூவருள் நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், கழற்சிங்கர், விறன்மிண்டர் ஆகியோரின் முக்தித் தலம்.

    *சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் அவதரித்த (கமலாபுரம்) தலம்; இது திருவாரூரிலிருந்து மன்னார்குடி பாதையில் 7-கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் சிவன் கோவில் ஏதுமில்லை.

    *திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது.

    *திருவாரூர் - கோவில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றிய தேவாரத் திருப்பாடல்களைக் கொண்டத் திருத்தலம்.

    *திருவாரூர்க் கோவில் - தியாகராஜர் திருக்கோவில், திருமூலட்டானம், பூங்கோவில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது..

    *சோழர்கள், பாண்டியர்கள், விசயநகர வேந்தர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன.

    *திருவாரூர் கோவிலில் புற்றிடங் கொண்ட பெருமானுக்கு எதிராக இரண்டு கொடிக்கம்பங்கள் உள்ளன.

    *ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகேயுள்ள கொடிக்கம்பத்து நந்தி சிறப்பு வாய்ந்தவர்.

    *மழை இல்லாத நாட்களில் இவரை வழிபட்டு அறுகம்புல் மாலை சாத்திப் பூஜைகள் செய்து அந்த அறுகம்புல்லை பசுக்களுக்கு கொடுத்தால் பசுக்கள் நன்கு பால் சுரக்கும்.

    *மழை பொழிந்து நீர்வளம் பெருகும்.

    • ஆடிப்பூர விழா அம்பாளுக்கு மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • 54 நாட்கள் 17 முறை ஒன்றிய மனதுடன் வலம் வந்தால் வேண்டியது கிடைக்கும்.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-கமலாம்பாள் கோவில்

    திருவாரூர் திருக்கோவிலில் மூன்றாவது பிரகாரத்தில் வடமேற்கு திசையில் ஈசான்யத்தை நோக்கி அருள்மிகு கமலாம்பிகை திருக்கோவில் அமைந்துள்ளது.

    இங்கு எழுந்துள்ள அம்பிகை சிரசில் சர்வேஸ்வரனைப் போன்று கங்கையையும், பிறையையும் சூடிக் கொண்டு யோக வடிவில் அமர்ந்திருக்கின்றாள்.

    இவள் க-கலைமகள், ம-மலைமகள், ல-அலைமகள், ஆகிய மூன்று தேவியரின் ஒருங்கிணைந்த ஒருமித்த சங்கமமாக கருதப்படுகிறாள்.

    ஆதலால் புனித பாரத தேசத்தில் புகழ்பெற்ற 64 சக்தி பீடங்களுள் அன்னை ஆட்சி புரியும் ஐந்து பீடங்களில் முதன்மையானதாகவும் (காசி&விசாலாட்சி, காஞ்சி&காமாட்சி, மதுரை&மீனாட்சி,

    ஆரூர்&கமலாலயதாட்சி, நாகை & நீலாயதாட்சி) ஆகிய ஐந்து தலங்களில் சக்தி பீடமாகவும் சிவசக்தி சொரூபிணியாகவும் அருள்மிகு கமலாம்பாள் திகழ்கிறாள்.

    மூன்று தேவியரும் ஒன்றாய் நிற்கும் அன்னையை துர்வாச முனிவர் வழிபட்டுள்ளார்.

    அன்னை வலது கரத்தில் மலரினை ஏந்தியும், இடது கரத்தினை இடையில் இருத்தியும், கால்களை யோகாசன நிலையில் அமைத்து மகாராணியைப் போல் காட்சி அளிக்கிறாள்.

    இவளின் அருளை வியந்து திருவாரூர் பிறந்த இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் "நவாவர்ண கீர்த்தனை" பாடியுள்ளார்.

    அன்னையின் தவத்தினால் தான் வன்மீகநாதரே (புற்றிடங் கொண்ட பெருமான்) இத்தலத்திற்கு எழுந்தருளினார் என்பார்கள்.

    இத்திருத்தலத்தில் அருள்மிகு கமலாம்பாள் திருக்கோவில் தனிக்கொடி மரம், தனித்திருமதில் கொண்டு தனிக்கோவிலாக உள்ளது மிகவும் சிறப்புடையதாகும்.

    ஆடிப்பூர விழா அம்பாளுக்கு மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆடி வெள்ளி, தை வெள்ளிக் கிழமைகளும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    54 நாட்கள் 17 முறை ஒன்றிய மனதுடன் அன்னையை வலம் வந்தால் வேண்டியவருக்கு வேண்டுவனவற்றைத் தந்து அருள்பாலிப்பாள் அன்னை கமலாம்பிகை என்பது ஐதீகம்.

    • அருள்மிகு அசலேஸ்வரர் (இது தனியாக பாடல் பெற்ற தலம்)
    • அருள்மிகு தேவேந்திரன் பூஜித்த லிங்கம்

    திருவாரூர் ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ள முக்கிய புறக்கோவில்கள்

    1. அருள்மிகு அசலேஸ்வரர் (இது தனியாக பாடல் பெற்ற தலம்)

    2. அருள்மிகு கமலாம்பாள்

    3. அருள்மிகு நீலோத்பலாம்பாள்

    4. அருள்மிகு ராகுகால ரவுத்திர துர்க்கை

    5. அருள்மிகு ருணவிமோசனர்

    6. அருள்மிகு விஸ்வகர்மேஸ்வரர்

    7. அருள்மிகு தெட்சிணாமூர்த்தி சுவாமி

    8. அருள்மிகு ஆனந்தீஸ்வரர் கோவில்

    9. அருள்மிகு சித்திஸ்வரர் கோவில்

    10. அருள்மிகு ஹயக்ரீஸ்வரர் கோவில்

    11. அருள்மிகு தட்சனேஸ்வரர் கோவில்

    12. அருள்மிகு அண்ணாமலேஸ்வரர் கோவில்

    13. அருள்மிகு வருணேஸ்வரர்

    14. அருள்மிகு ஓட்டு தியாகேசர்

    15. அருள்மிகு துளசிராஜா பூஜித்த கோவில்

    16. அருள்மிகு தேவேந்திரன் பூஜித்த லிங்கம்

    17. அருள்மிகு சேரநாதர்

    18. அருள்மிகு பாண்டியநாதர்

    19. அருள்மிகு ஆடகேஸ்வரம்

    20. அருள்மிகு புலஸ்தியரட்சேஸ்வரர் கோவில்

    21. அருள்மிகு புலஸ்திய பிரம்மேஸ்வரர் கோவில்

    22. அருள்மிகு பக்தேஸ்வரர் கோவில்

    23. அருள்மிகு வில்வாதீஸ்வரர் கோவில்

    24. அருள்மிகு பாதாளேஸ்வரர்

    • இக்கருவறைச் சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளன.
    • திருவாரூர் தலத்துக்கு செல்லும்போது இந்த வண்ண சித்திரங்களை பார்த்து ரசித்து வாருங்கள்.

    திருவாரூர் தியாகராஜர் கோவில் கருவறை சிறப்பு

    திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலில் கருவறைச் சுவற்றில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மன் ஆகிய உருவங்கள் கல் திருமேனிகளாக உள்ளன.

    இக்கருவறைச் சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளன.

    புற்றிடங் கொண்ட பரம்பொருள் கருவறை சுவர்கள் தூண்களால் சூழப்பட்டு அத்தூண்களுக்கு இடையே தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர் ஆகிய உருவங்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளன.

    லிங்கோற்பவரின் இருபுறமும் அன்னமூர்த்தியான பிரம்மனும் வராகமூர்த்தியான விஷ்ணுவும் நின்றுள்ளனர்.

    இது மட்டுமின்றி கருவறை சுவர்களும் கூரைகளும் முழுவதம் ஊசிமுனை இடைவெளியின்றி வண்ண வண்ண ஓவியங்களால் நிரம்பியுள்ளன.

    திரிபுரதகனம், காம தகனம், காலசம்காரம், கஜசம்காரம், ஜலந்தர வதம், தட்சயாக நாசம், அந்தகாசுரவதம், பிரம்ம சிரச்சேதம் ஆகிய அஷ்ட வீரட்ட வரலாறுகளும் நடராஜப் பெருமானின் ஆனந்தக் கூத்து தரிசனமும் மற்றும்

    புஜங்க லலித மூர்த்தி, ஜதியோ நந்தமூர்த்தி, ஊர்த்துவத்தாண்டவர் போன்ற பல்வேறு வகையான நடனமூர்த்திகளும் வண்ண சித்திரங்களாக உள்ளன.

    சட்டைநாதர், பிட்சாடணர், திரிசங்கு ரட்சக மூர்த்தி, ஆயதோத்தார மூர்த்தி, நீலகண்டர், அகோர வீரபத்திரர், மான் மழு தாங்கி கைகூப்பி நின்ற நிலையில் உள்ள நந்தி தேவர்,

    அமர்ந்த நிலையில் உள்ள அதிகார நந்தி, கால பைரவர், தண்டாயுதபாணி, நிருதி, யமன், வருணன், இந்திரன், அக்கினி, முதலிய எண் திசை பாலர்கள்,

    அடியார்கள் வணங்கும் சிவலிங்கம், கங்காளர், கங்காதரர், மகிஷாசுரமர்தனி, ராசிச் சக்கரம் போன்ற பலப் பல புராண வரலாறுகளும்

    சிவ வடிவங்களும் தெய்வங்களும் தேவர்களும் வண்ணச் சித்திரங்களாகச் சுவர்கள், கூரைகள் முழுவதும் காணப்படுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

    ஆகையால் திருவாரூர் தலத்துக்கு செல்லும்போது நின்று, நிதானமாக இந்த வண்ண சித்திரங்களை பார்த்து ரசித்து வாருங்கள்.

    • ரவுத்திர துர்க்கை என்பதற்கு பெயர் காரணம் அவளுடைய ருத்ராம்சம்.
    • திருவாரூர் ஆலயத்தில் எட்டு துர்க்கைகள்.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-ரவுத்திர துர்க்கை

    தியாகேசர் ஆலயத்தில் தெற்கு பிரகாரத்தில் ரவுத்திர துர்க்கைக்கு தனி ஆலயம் உள்ளது.

    மண பருவத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் ராகுகால பூஜையின்போது இவளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமண தடை நீங்கப் பெறலாம்.

    ரவுத்திர துர்க்கை என்பதற்கு பெயர் காரணம் அவளுடைய ருத்ராம்சம்.

    ராகு தோஷ நிவர்த்திக்கும் இந்த துர்க்கையை லட்சார்ச்சனை செய்து வழிபடலாம்.

    திருவாரூர் ஆலயத்தில் எட்டு துர்க்கைகள்.

    முதல் பிரகாரத்தில் உள்ள மகிடாசுரமர்த்தினி பிரதான துர்க்கை.

    இரண்டாம் பிரகாரத்தில் அதற்கு அங்கமாக முதல் பிரகாரத்தில் மூன்றும், இரண்டாம் பிரகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சந்நிதியில் ஒன்றும் என எட்டு துர்க்கைகள் உள்ளன.

    • கல்வெட்டுகள் நிரம்ப பெற்ற தலமாக பண்ருட்டி திருவதிகை தலம் உள்ளது.
    • மகேந்திரவர்மன் திருவதிகை கோவிலைக் கட்டினான்.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான எல்லா ஆலயங்களிலும் நிச்சயம் கல்வெட்டுகள் இருக்கும். அந்த கோவிலை கட்டியது யார்? கோவிலின் நித்திய பூஜைக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது? யார்-யார் திருப்பணி செய்துள்ளனர்? என்பன போன்ற விவரங்களை தெரிவிக்கும் காலக் கண்ணாடியாக இந்த கல்வெட்டுக்கள் தான் உள்ளன.

    இந்த கல்வெட்டுக்கள் மட்டும் இல்லையெனில் தமிழ் மன்னர்களின் ஆன்மிக பணிகள் நமக்குத் தெரியாமலே போய் இருக்கும். இதை நன்கு உணர்ந்திருந்ததால் தான் ஆலயம் தோறும் திருப்பணிகள் செய்த மன்னர்கள் அந்த விபரங்களை கல்வெட்டுக்களில் குறிப்பிட்டு சுவர்களில் பதித்தனர்.

    அத்தகைய கல்வெட்டுகள் நிரம்பப் பெற்ற தலமாக பண்ருட்டி திருவதிகை தலம் உள்ளது. இத்தலத்தில் 4 சுற்றுச்சுவர்கள் பிரமாண்டமாக உள்ளது. இந்த சுவர்கள் முழுவதிலும் கல்வெட்டுகள் உள்ளன.

    தமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களின் கல்வெட்டுக்களும் இங்குள்ளது. பல்லவ மன்னன் இரண்டாம் பரமேசுவரப் போத்தரையன் (கி.பி.705-710) கங்க பல்லவர் (கி.பி.850-882) பிற்கால பல்லவர் (கி.பி.1216-1246) சோழ மன்னர்கள் (கி.பி.907-1273) பாண்டிய மன்னர்கள் (கி.பி.1054-1281) சாளுக்கிய மன்னர்கள் (கி.பி.1473-1492) விஜய நகர மன்னர்கள் (கி.பி.1339-1586) தஞ்சை நாயக்க மன்னர்கள் (கி.பி.1630-1650) ஆகியோரின் ஆட்சிக் காலக் கல்வெட்டுகள் கோவிலில் உளள்ன.

    சில இடங்களில் மட்டுமே இந்த கல்வெட்டுகள் கோர்வையாக, சீராக உள்ளன. பெரும் பாலான இடங்களில் கல்வெட்டு தகவல்கள் குண்டக்க, மண்டக்க... என மாறி, மாறியுள்ளன.

    மற்ற நாட்டு மன்னர்களின் படையெடுப்பால் முதலில் இந்த கல்வெட்டுகள் இடம் மாறியது. பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இந்த ஆலயத்தை அவர்கள் தங்கள் படை தலமாக மாற்றினார்கள்.

    இத்தகைய காரணங்களால், பல கல்வெட்டுகள் சிதைந்து போனது. என்றாலும் மிஞ்சிய கல்வெட்டுகள் தற்போது நமக்கு ஆயிரம் கதை சொல்வதாக உள்ளன.

    இந்த கல்வெட்டுகளை படிமம் எடுத்து ஆய்வு செய்துள்ள அறிஞர்கள், அந்த தகவல்களை ஒழுங்குபடுத்தி ஏராளமான உண்மைகளை வெளி உலகுக்கு கொண்டு வந்தனர். அந்த வகையில் திருவதிகை திருத்தலம், கல்வெட்டு களஞ்சியமாக இருப்பதை காணலாம்.

    இத்தலத்துக்கு செல்லும் போது சாமி தரிசனம் செய்து முடித்ததும் பிரகாரத்தை வலம் வரும் போது நாலாபுறமும் கண்களை சுழல விட்டு உன்னிப்பாகப் பார்த்தால் ஆங்காங்கே கல்வெட்டுகளை பார்க்க முடியும்.

    பார்க்க வேண்டிய மேலும் 3 இடங்கள்

    திருவதிகை திருத்தலத்தில் வீராட்டனேசுவரரை தரிசனம் செய்ய வருபவர்கள் அருகில் உள்ள மேலும் 3 இடங்களுக்கு சென்று வருவது நல்லது. சித்தவடமடம், குணபர வீச்சரம், வேகாக் கொல்லை ஆகியவையே இந்த 3 இடங்கள் ஆகும்.

    இதில் சித்தவட மடம் என்பது திருவதிகை நகரின் தொடக்கத்திலேயே உள்ளது. இங்குள்ள சிதம்பரேஸ்வரரை வணங்குவது நல்லது.

    திருவதிகைக்கு வடக்குத் திசையில் கடலூர் செல்லும் சாலையில் குணபரவீச்சரம் உள்ளது. சமணராக இருந்து சைவத்துக்கு மாறிய மகேந்திரவர்மன் இந்த கோவிலைக் கட்டினான்.

    அவனுக்கு ''குணபரன்'' என்றும் ஒரு பெயர் உண்டு. அந்த பெயரால் இவ்வாலயம் ''குணபரச்சுவரம்'' என்று அழைக்கப்படுகிறது. தற்போது இடிந்த நிலையில் உள்ள அந்த ஆலயம் ஆதிமூலேச்சுரம் என்றும் கூறப்படுகிறது.

    திருவதிகைக்கு தெற்கே சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் வேகாக் கொல்லை உள்ளது. முப்புரத்தை அழித்த போது ரத்தம் சிந்தியதால் திருவதிகை மண்ணெல்லாம் சிவப்பாக மாறியது.

    இன்றும் இந்த பகுதி மணல் சிவப்பாக இருப்பதை காணலாம். ஆனால் சிவபூஜை செய்ததால் 3 அசுரர்கள் மட்டும் தப்பினார்கள். அவர்கள் தீயில் எரியாத, சுடப்படாத இடம் வேகாக் கொல்லை எனப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் வேகாக் கொல்லை பகுதியில் மணல் வெண்மணலாக இருப்பதை காணலாம்.

    திருவதிகைக்கு செல்பவர்கள், முன்கூட்டியே திட்டமிட்டு தரிசன நேரத்தை தீர்மானித்துக் கொண்டால் திருவதிகை அருகில் உள்ள இந்த 3 இடங்களுக்கும் செல்ல முடியும். இங்கும் நீங்கள் வழிபாடுகள் செய்தால் உங்கள் திருவதிகை பயணம் முழுமையான சிறப்பை பெறும்.

    ×