search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருவாரூர் கோவில்-நின்ற கோலத்தில் நந்தி
    X

    திருவாரூர் கோவில்-நின்ற கோலத்தில் நந்தி

    • இங்கு ஈசான்ய திசையிலுள்ள விட்டவாசல் வழியாக வெளியே செல்கிறார்.
    • இவையனைத்தும் உலோகச் சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவாரூர் கோவில்-நின்ற கோலத்தில் நந்தி

    சிவாலயங்களில், பொதுவாக நந்தி சிலைகளை படுத்த கோலத்திலேயே காண முடியும்.

    ஆனால், திருவாரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சப்த விடங்கத்தலங்களில் மட்டும் நந்தியை நின்ற கோலத்தில் காணலாம்.

    மேலும், இவையனைத்தும் உலோகச் சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கிழக்கு பார்த்து அமைந்த கோவில்களில், சுவாமி வீதி உலாவிற்கு கிழக்கு கோபுரம் வழியாகத்தான் வெளியே செல்வார்.

    ஆனால், இங்கு ஈசான்ய திசையிலுள்ள விட்டவாசல் வழியாக வெளியே செல்கிறார்.

    இந்திரனிடம் பெற்ற இலிங்கத்தை முசுகுந்த சக்கரவர்த்தி இங்கு பிரதிஷ்டை செய்தார்.

    அதை முசுகுந்தனுக்கு கொடுத்த இந்திரன், மீண்டும் அதை தேவலோகம் கொண்டு சொல்ல விரும்பினான்.

    எனவே, தியாகராஜர் கிழக்கு வாசல் வழியாக உலா வரும் போது, அவரை மீண்டும் கொண்டு சென்று விடலாம் என நினைத்து, அங்கேயே அவன் காத்திருப்பதாக ஐதீகம்.

    இந்திரனிடமிருந்து தப்புவதற்காக, தியாகராஜரை பக்தர்கள் ஈசான்யத்தில் உள்ள விட்டவாசல் வழியாக உலா கொண்டு செல்கின்றனர்.

    பெரும்பாலான பக்தர்கள் கோவிலுக்குள் நுழையக் கூட கிழக்கு வாசலை தவிர்த்து விட்டு, வடக்கு மற்றும் மேற்கு வாசல் வழியாகத்தான் கோவிலுக்கு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இத்தலம் தான் மிக அதிகமாக 353 பாடல்களைப் பெற்றுள்ளது.

    சம்பந்தர் 55 பாடல், அப்பர் 208 பாடல், சுந்தரர் 87 பாடல், மாணிக்கவாசகர் 3 பாடல்கள் பாடியுள்ளனர்.

    Next Story
    ×