search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தியாகராஜர் கோவில்-ஆடிப்பூரம் 10 நாட்கள் திருவிழா
    X

    தியாகராஜர் கோவில்-ஆடிப்பூரம் 10 நாட்கள் திருவிழா

    • இதனையடுத்து கொடியேற்ற விழா வெகு விமர்சையாக நடைபெறும்.
    • இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கு பெற்று கமலாம்பாள் தரிசனம் செய்வர்.

    தியாகராஜர் கோவில்-ஆடிப்பூரம் 10 நாட்கள் திருவிழா

    தியாகராஜர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, கமலாம்பாள் சன்னதியில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

    கமலாம்பாள் சன்னதியில் வேத பண்டிதர்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை நடைபெறும்.

    இதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்படும்.

    இதனையடுத்து கொடியேற்ற விழா வெகு விமர்சையாக நடைபெறும்.

    பின்னர் கமலாம்பாள் சுவாமி வீதி உலா வருவார்.

    இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கு பெற்று கமலாம்பாள் தரிசனம் செய்வர்.

    மாசி மக நாள் சுந்தரருக்கு பூதகணம் நெல் கட்டி செல்லும் விழா, சித்திரை விழா, ஆடிப்பூரம் விழா, தெப்பதிருவிழா, நிறைபணி விழா ஆகியவை இத்தலத்தின் சிறப்பான விழா நாட்கள் ஆகும் மாதாந்திர பிரதோஷம் இத்தலத்தில் மிகவும் விசேஷமானது.

    வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின்போது கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.

    Next Story
    ×