search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் ரவிச்சந்திரன்"

    • புதிய அங்கன் வாடி கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.
    • விழாவில் பொறியாளர் அப்துல் காதர், இளநிலை பொறியாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட ரெயில்வே பீடர் ரோட்டில் பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியகிராம் திட்டத்தின் கீழ் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன் வாடி கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.

    கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். கவுன்சிலர் வேல்சங்கரி முத்துக்குமார், நகராட்சி ஆணையாளர் சுகந்தி, தி.மு.க. நகர செயலாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அங்கன்வாடி மாவட்ட திட்ட அலுவலர் ஜோஸ் பின் சகாய பிரமிளா, குழந்தை கள் நல அலுவலர் பர்கத் சுல்தானா வரவேற்றனர்.

    விழாவில் பொறியாளர் அப்துல் காதர், இளநிலை பொறியாளர் கண்ணன், சுகாதார அலுவலர் பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் சிவா, தி.மு.க. வார்டு செயலாளர் ராமையா, தி.மு.க. தன்னார்வலர் ரொட்டேரியன் வினோத், சீனிச்சாமி, சுப்புராஜ், தாவல் தொழில்நுட்ப அணி ஜாகிர் உசேன், முனியசாமி, சமுதாய நிர்வாகிகள் கண்ணன், வேலுச்சாமி, பழனிச்சாமி, தொழிலதிபர் வைரவச்செல்வம், அழகு ராஜ், நகராட்சி ஒப்பந்ததாரர் கருப்பையா தாஸ் மற்றும் பொதுமக்கள், அங்கன்வாடி மைய குழந்தைகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் தலைமையில் கல்லூரி களப்பயணம் தொடர்பாக முன் திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    நான் முதல்வன் - உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் உள்ள 53 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி ஆர்வமூட்டல் - கல்லூரி களப்பயணம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் முன் திட்டமிடல் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் முன்னிலையில் , மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், கல்லூரி முதல்வர்கள், போக்குவரத்து துறை அலுவலர், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர், முதன்மைக் கருத்தாளர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்நாடு கல்வி பெல்லோஸ் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் செய்திருந்தார்.

    • போட்டியில் 450-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று சைக்கிள் போட்டிகள் நடை பெற்றது. 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவி களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப் பட்டது.

    இதேபோல் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோமீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் நிர்ண யிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.

    போட்டியினை ராஜா எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். இதில் சுமார் 450-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிச ளிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும். 3-வது பரிசாக ரூ.1,000 மற்றும் 4 முதல் 10-வது பரிசு வரை ரூ.250 வீதம் காசோலையாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    • 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • போட்டியில் பங்கேற்கும் அனைவரும் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட் டுத்துறை, தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) அண்ணா சைக்கிள் போட்டி கள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

    அதன்படி 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், 13 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், 15 வயதிற்கு உட்பட்ட மாணவி களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோமீட்டர் தூரமும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    போட்டியானது 14-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஐ.டி. கார்னரில் இருந்து தொடங்கி பண்பொழி ரோடு வழியாக செங்கோட்டை ரெயில்வே கேட் வரை சென்றடைய உள்ளது. போட்டியில் பங்கேற்கும் அனைவரும் முன்பதிவு செய்திருக்க வேண்டும். முன்பதிவு செய்திட கடைசி நாள் 13-ந் தேதி மாலை 5.30 மணி ஆகும்.

    முன்பதிவு செய்திட மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 9788918406, 9489153516 என்ற செல்போன் எண்ணிலோ முன்பதிவு செய்து கொள்ள லாம். போட்டியில் பங்கு பெறும் அனைவரும் இந்தியா வில் தயாரான சாதாரண மிதி வண்டியினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் பங்கு பெறும் அனைவரும் தங்கள் பள்ளி- கல்லூரியில் இருந்து 'போன்பைடு' சான்றிதழ் கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும்.

    போட்டியில் வெற்றி பெறும் ஒவ்வொரு பிரிவு மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ. 3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ. 2 ஆயிரம், 4-ம் பரிசு முதல் 10-வது பரிசு வரை ரூ. 250 மற்றும் சான்றி தழ்களும் வழங்கப்படும்.

    பரிசுத் தொகையானது நிப்ட் பேங்கிங் மூலம் வழங்கப்பட உள்ளதால் கலந்து கொள்ளும் அனைவரும் கண்டிப்பாக வங்கி கணக்கு புத்தகத்தின் முதற்பக்க நகலை கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்தார்.
    • அரசு திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற இணை இயக்குனர் பிரேமலதா கேட்டுக் கொண்டார்.

    தென்காசி:

    மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சார்பாக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆயுஷ்மான் பவா முகாம் நடைபெற்றது. பிரதம மந்திரி ஆரோக்கியா திட்டம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சிறப்பு சுகாதார முகாம் நடத்தப்பட்டது. தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்தார். பழனி நாடார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினார்.

    இணை இயக்குனர் பிரேமலதா அரசு திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் பொதுமக்கள் அனைவரும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும்பிரதம மந்திரி காப்பீட்டு திட்ட அட்டைபெற்றுவருடத்திற்கு 5 லட்சம் மதிப்புள்ள சிகிச்சைகளைஇலவசமாக பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.அனைத்து பொதுமக்களும் மிகுந்த காப்பீட்டு திட்ட அட்டைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். உறைவிட மருத்துவர் செல்வபாலன் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, தேசிய சுகாதாரா திட்ட அலுவலர் கார்த்திக் அறிவுடைநம்பி, தென்காசி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக நுட்புனர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டதில் தமிழக அளவில் 3-வது இடம் பிடித்த தென்காசி மருத்துவமனைக்கு கலெக்டர் ரவிச்சந்திரன் பாராட்டு தெரிவித்தார். மாவட்ட சுகாதார திட்ட அலுவலர் கார்த்திக் அறிவுடைநம்பி நன்றி கூறினார்.

    • திட்டத்தின் சிறப்புகளை பற்றி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உரையாற்றினார்.
    • ஓவியப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்ட அரங்கில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் இணைந்த 5-ம் ஆண்டு விழா கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலும், சுகாதாரம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குநர் பிரேம லதா முன்னிலையிலும் நடைபெற்றது.

    விழாவில் திட்டத்தின் சிறப்புகளைப் பற்றியும், பயன்கள் பற்றியும் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உரையாற்றினார். மேலும் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சைப் பெற்று குணமடைந்த பயனாளிகள் 5 பேருக்கு நினைவு பரிசும், முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்ட அட்டை 5 பேருக்கும், பிரதம மந்திரி காப்பீடு திட்ட அட்டை 5 பேருக்கும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய 3 அரசு மருத்துவமனை மற்றும் 2 தனியார் மருத்துவமனைக்கு நினைவு பரிசுகளும் மற்றும் விழாவை ஒட்டி நடைபெற்ற ஓவியப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு நினைவுப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    விழாவில் துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட மாவட்ட அலுவலர் ஜோதிவேல், தென்காசி அரசு மருத்துவமனை டீன் ஜெஸ்லின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும்.
    • ஒரு கல்லூரியிலிருந்து 2 மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் 6 முதல் பிளஸ்-2 வரை பயிலும் பள்ளிமாணவர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப்போட்டிகள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி வருகிற 6-ந்தேதியும், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி 10-ந்தேதியும் காலை 8.30 மணிக்கு தமிழ் வளர்ச்சி த்துறை சார்பில் தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளன.

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி 5-ந்தேதி பள்ளிகளுக்கு காஞ்சித் தலைவன், அண்ணாவும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா ஆகிய தலைப்புகளிலும் மற்றும் கல்லூரிகளுக்கு அண்ணாவும் மேடைபேச்சும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி 10-ந்தேதி பள்ளிகளுக்கு வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன் பெரியாரின் சமூகர் சீர்திருத்தங்கள் ஆகிய தலைப்புகளிலும் மற்றும் கல்லூரிகளுக்கு பெரியாரும் பெண் விடுதலையும் சுயமரியாதை இயக்கம், தெற்காசியாவின் சாக்ரடீஸ், தன்மானப் பேரொளி, தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள் ஆகிய தலைப்பு களில் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.

    தென்காசி மாவட்ட அளவில் நடை பெறும் கல்லூரி பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். ஒரு கல்லூரியிலிருந்து இரண்டு மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    தென்காசி மாவட்ட அளவில் நடைபெறும் 6-ம் வகுப்பு முதல்

    12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம்பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும். மேலும் இப்போட்டிகளில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2ஆயிரம், வீதம் இரண்டு மாணவர்களுக்கு வழங்கப்பெறும் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு மாணவர் மட்டுமே போட்டி யில் கலந்து கொள்ளலாம்,

    மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் 2-ம் தலத்தில் செயல்பட்டுவரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண் 04822502521) தொடர்பு கொள்ளலாம். தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் ஆர்வ த்துடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • பிளாஸ்டிக் பைகள், குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்டவை பயன்பாட்டை தடுக்க வேண்டும்.
    • பொருட்கள் வாங்க செல்லும்பொழுது துணிப்பைகளை எடுத்து செல்ல வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியருப்பதாவது:-

    தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தினை தென்காசி மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்திட ஏதுவாக மாவட்டம் முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

    இதனை மாவட்டம் முழுவதும் அமல்படுத்தி பசுமை மாவட்டமாக உருவாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தாள்களில் வழங்கப்படும் உணவு பொட்டலங்கள், பிளாஸ்டிக் மேசை விரிப்பு, பிளாஸ்டிக் கால் செய்யப்பட்ட தட்டுகள், தேநீர் குவளைகள், குடிநீர் பாட்டில்கள், பாக்கெட்டுகள் பயன்பாட்டை தடுக்க வேண்டும்.

    மேலும் பொதுமக்களும், வணிகர்களும் தடை செய் யப்பட்ட இந்த பொருட்களை பயன் படுத்துவதை கைவிட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீட்டு கழிவுகளை மக்கும், மக்காத கழிவுகள் என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும். மேலும் கடை வீதிகளில் பொருட்கள் வாங்க செல்லும்பொழுது துணிப்பைகளை எடுத்து செல்ல வேண்டும்.

    வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக அரசு அலுவ லர்களால் எவ்வித முன்னறி விப்புமின்றி திடீர் ஆய்வுகள் மேற் கொள்ளப் படும்.

    அப்போது அந்த பொருட் களின் பயன்பாடு கண்டறி யப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்வதோடு அபராதமும் விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சாலையோரங்கில் உள்ள மரம், மின்கம்பி ஆகிய வற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுது பார்க்க வேண்டும்.
    • மாவட்டத்தில் 17 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் வடகிழக்கு பருவமழை குறித்து ஆய்வு கூட்டம் அனைத்துதுறை அலுவ லர்களுடன் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    அரசு கட்டிடங்கள், சாலையோரங்கில் உள்ள மரம், மின்கம்பி ஆகியவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுது பார்க்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்களின் தேவையற்ற கிளைகளை அகற்ற வேண்டும். நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் அன்றாட பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பொது சுகாதார துறையின் மூலம் தேவையான மருந்துகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். கால்நடை பராமரிப்பு துறை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைக ள் இறப்புகள் குறித்து உடனடியாக கணக்கெடுப்பு எடுத்து நிவாரண உதவி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மாவட்டத்தில் 17 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.

    மழைகாலங்களில் ....

    அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படும். பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மழைகாலங்களில் பொது மக்களுக்கு வழங்கப்படும் குடித்தண்ணீரில் குளோரின் கலந்த குடித்தண்ணீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துறை அலுவலர்களும் வருகின்ற வடகிழக்கு பருவமழையினை உரிய முன்னேற்பாடுகளுடன் எதிர்கொண்டு இயற்கை இன்னல்களில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோனி பெர்னாண்டோ, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிர மணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வட்டார வாரியாக 152 தமிழ் ஆசிரியர்களுக்கும் பொறுப்பு தமிழ் ஆசிரியர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • அனைத்து மாணவர்களையும் தமிழில் எழுத மற்றும் படிக்க வைக்க தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை செயின் மேரீஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழ் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி மற்றும் பயிற்சி கட்டகம் வெயிடுதல் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரக்கூடிய மாணவ- மாணவிகளில் தமிழ் எழுத, வாசிக்க தெரியாத மாணவர்களுக்காக மாவட்ட கலெக்டர் தலைமையிலும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முன்னிலையிலும் ஒவ்வொரு பள்ளியிலிருந்து ஒருங்கிணைப்பு தமிழ் ஆசிரியர்கள் மொத்தம் 152 பேர் வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு வட்டாரம் வாரியாக இந்த 152 தமிழ் ஆசிரியர்களுக்கும் பொறுப்பு தமிழ் ஆசிரியர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டு இவர்களின் செயல்பாடுகளை கவனிக்க 29 தலைமை ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நிகழ்ச்சியில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு 55 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்.தொடர்ந்து மாவட்டம் முழுமையும் ஒரே மாதிரியாக இந்த மாணவர்களுக்கு நடத்தப்பட்டு மாதம் இருமுறை இந்த மாணவர்களுக்கு தேர்வும் நடத்தி அனைத்து மாணவர்களையும் தமிழில் எழுத மற்றும் படிக்க வைக்க தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவை அனைத்தையும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொரு பள்ளியாக சென்று ஆய்வு செய்து மாதம் 2 முறை அறிக்கைகள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முத்தையா அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • 10-ம் வகுப்பு தேர்ச்சி, 14 வயது முதல் உள்ளவர்கள் தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
    • அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு ரூ.1,000 கூடுதலாக வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தொழிற்பயிற்சி நிலையம்

    கடையநல்லுர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023-ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் நேரடி சேர்க்கை வருகிற 23-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்நுட்ப மையம் 4.0-ல் 2 ஆண்டு தொழிற்பிரிவுகளான மேம்படுத்தப்பட்ட சி.என்.சி. எந்திர தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் ஓராண்டு தொழிற் பிரிவான தொழில்துறை ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர் பிரிவு களுக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி, 14 வயது முதல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மகளிருக்கு வயது வரம்பு இல்லை. மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடையநல்லூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் அணுகவும்.

    கல்வி உதவித்தொகை

    பயிற்சியில் சேர்பவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகை மாதம் ரூ. 750, அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் தி்ட்டத்தின் கீழ் ரூ. 1,000 கூடுதலாக வழங்கப்படும். சைக்கிள், சீருடைகள், தையல் கூலி, காலணிகள் மற்றும் வரைபட கருவிகள் வழங்கப்படும்.

    மேலும் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதியும் உள்ளது. 10-ம் வகுப்பு முடித்து 2 ஆண்டு ஐ.டி.ஐ. தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப் பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி பிளஸ்-2 வகுப்பு சான்றிதழ் பெறலாம். மேலும் 8-ம் வகுப்பு முடித்து இரண்டாண்டு தொழிற்பிரிவு களில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம் ) மட்டும் எழுதி 10- ம் வகுப்பு சான்றிதழ் பெறலாம்.

    இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, மீனாட்சி, முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கடையநல்லூர், பண்பொழி ரோடு (அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடையநல்லூர் அருகில்) தொலைபேசி எண் 04633-290270-ல் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொடிக்குறிச்சியில் மனுநீதி நாள் முகாம் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • தண்ணீரை நீண்ட நாள் சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடாது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள கொடிக்குறிச்சியில் மனுநீதி நாள் முகாம் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் 86 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 63 ஆயிரத்து 237 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவி களை கலெக்டர் ரவிச்சந்தி ரன் வழங்கி பேசியதாவது:-

    மகளிர் உரிமைத்தொகை

    தென்காசி மாவட்டத்தில் மகளிர் உதவித்தொகை கோரி 3லட்சத்து 80 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். அதை சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது அதில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேரின் மனுக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    தற்போது தென்காசி மாவட்டத்தை பொருத்த வரை 8 ஆயிரம் ஏ.டி.எம். அட்டைகள் வரப் பெற்றுள்ளன. தென்காசி ஐ.சி.ஐ. பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பயனா ளிகளுக்கு மகளிர் உரிமை தொகையை வழங்குகிறார்.

    டெங்கு காய்ச்சல்

    ஒவ்வொரு மாதமும் 15 -ந்தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இத்தொகை வரவு வைக்கப்படும். தென்காசி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தண்ணீரை நீண்ட நாள் சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடாது. இப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ., அனைத்து துறை அதிகாரி கள் மற்றும் ஒன்றிய சேர்மன் சுப்பம்மாள் பால் ராஜ், மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, ஒன்றிய கவுன்சிலர் பகவதியப்பன், கொடிகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் உடையார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக் களை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் வழங்கினர்.

    ×