என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்-தென்காசி கலெக்டர் அறிவுறுத்தல்
- கொடிக்குறிச்சியில் மனுநீதி நாள் முகாம் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
- தண்ணீரை நீண்ட நாள் சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடாது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே உள்ள கொடிக்குறிச்சியில் மனுநீதி நாள் முகாம் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் 86 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 63 ஆயிரத்து 237 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவி களை கலெக்டர் ரவிச்சந்தி ரன் வழங்கி பேசியதாவது:-
மகளிர் உரிமைத்தொகை
தென்காசி மாவட்டத்தில் மகளிர் உதவித்தொகை கோரி 3லட்சத்து 80 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். அதை சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது அதில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேரின் மனுக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது தென்காசி மாவட்டத்தை பொருத்த வரை 8 ஆயிரம் ஏ.டி.எம். அட்டைகள் வரப் பெற்றுள்ளன. தென்காசி ஐ.சி.ஐ. பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பயனா ளிகளுக்கு மகளிர் உரிமை தொகையை வழங்குகிறார்.
டெங்கு காய்ச்சல்
ஒவ்வொரு மாதமும் 15 -ந்தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இத்தொகை வரவு வைக்கப்படும். தென்காசி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தண்ணீரை நீண்ட நாள் சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடாது. இப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ., அனைத்து துறை அதிகாரி கள் மற்றும் ஒன்றிய சேர்மன் சுப்பம்மாள் பால் ராஜ், மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, ஒன்றிய கவுன்சிலர் பகவதியப்பன், கொடிகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் உடையார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக் களை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் வழங்கினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்