search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்-தென்காசி கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    பயனாளி ஒருவருக்கு கலெக்டர் ரவிச்சந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது எடுத்த படம். 

    டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்-தென்காசி கலெக்டர் அறிவுறுத்தல்

    • கொடிக்குறிச்சியில் மனுநீதி நாள் முகாம் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • தண்ணீரை நீண்ட நாள் சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடாது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள கொடிக்குறிச்சியில் மனுநீதி நாள் முகாம் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் 86 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 63 ஆயிரத்து 237 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவி களை கலெக்டர் ரவிச்சந்தி ரன் வழங்கி பேசியதாவது:-

    மகளிர் உரிமைத்தொகை

    தென்காசி மாவட்டத்தில் மகளிர் உதவித்தொகை கோரி 3லட்சத்து 80 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். அதை சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது அதில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேரின் மனுக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    தற்போது தென்காசி மாவட்டத்தை பொருத்த வரை 8 ஆயிரம் ஏ.டி.எம். அட்டைகள் வரப் பெற்றுள்ளன. தென்காசி ஐ.சி.ஐ. பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பயனா ளிகளுக்கு மகளிர் உரிமை தொகையை வழங்குகிறார்.

    டெங்கு காய்ச்சல்

    ஒவ்வொரு மாதமும் 15 -ந்தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இத்தொகை வரவு வைக்கப்படும். தென்காசி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தண்ணீரை நீண்ட நாள் சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடாது. இப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ., அனைத்து துறை அதிகாரி கள் மற்றும் ஒன்றிய சேர்மன் சுப்பம்மாள் பால் ராஜ், மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, ஒன்றிய கவுன்சிலர் பகவதியப்பன், கொடிகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் உடையார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக் களை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் வழங்கினர்.

    Next Story
    ×