search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள்- தென்காசி கலெக்டர் அறிவிப்பு
    X

    தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள்- தென்காசி கலெக்டர் அறிவிப்பு

    • வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும்.
    • ஒரு கல்லூரியிலிருந்து 2 மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் 6 முதல் பிளஸ்-2 வரை பயிலும் பள்ளிமாணவர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப்போட்டிகள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி வருகிற 6-ந்தேதியும், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி 10-ந்தேதியும் காலை 8.30 மணிக்கு தமிழ் வளர்ச்சி த்துறை சார்பில் தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளன.

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி 5-ந்தேதி பள்ளிகளுக்கு காஞ்சித் தலைவன், அண்ணாவும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா ஆகிய தலைப்புகளிலும் மற்றும் கல்லூரிகளுக்கு அண்ணாவும் மேடைபேச்சும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி 10-ந்தேதி பள்ளிகளுக்கு வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன் பெரியாரின் சமூகர் சீர்திருத்தங்கள் ஆகிய தலைப்புகளிலும் மற்றும் கல்லூரிகளுக்கு பெரியாரும் பெண் விடுதலையும் சுயமரியாதை இயக்கம், தெற்காசியாவின் சாக்ரடீஸ், தன்மானப் பேரொளி, தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள் ஆகிய தலைப்பு களில் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.

    தென்காசி மாவட்ட அளவில் நடை பெறும் கல்லூரி பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். ஒரு கல்லூரியிலிருந்து இரண்டு மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    தென்காசி மாவட்ட அளவில் நடைபெறும் 6-ம் வகுப்பு முதல்

    12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம்பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும். மேலும் இப்போட்டிகளில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2ஆயிரம், வீதம் இரண்டு மாணவர்களுக்கு வழங்கப்பெறும் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு மாணவர் மட்டுமே போட்டி யில் கலந்து கொள்ளலாம்,

    மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் 2-ம் தலத்தில் செயல்பட்டுவரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண் 04822502521) தொடர்பு கொள்ளலாம். தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் ஆர்வ த்துடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×