search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூரில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம்
    X

    கடையநல்லூரில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம்

    • புதிய அங்கன் வாடி கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.
    • விழாவில் பொறியாளர் அப்துல் காதர், இளநிலை பொறியாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட ரெயில்வே பீடர் ரோட்டில் பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியகிராம் திட்டத்தின் கீழ் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன் வாடி கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.

    கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். கவுன்சிலர் வேல்சங்கரி முத்துக்குமார், நகராட்சி ஆணையாளர் சுகந்தி, தி.மு.க. நகர செயலாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அங்கன்வாடி மாவட்ட திட்ட அலுவலர் ஜோஸ் பின் சகாய பிரமிளா, குழந்தை கள் நல அலுவலர் பர்கத் சுல்தானா வரவேற்றனர்.

    விழாவில் பொறியாளர் அப்துல் காதர், இளநிலை பொறியாளர் கண்ணன், சுகாதார அலுவலர் பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் சிவா, தி.மு.க. வார்டு செயலாளர் ராமையா, தி.மு.க. தன்னார்வலர் ரொட்டேரியன் வினோத், சீனிச்சாமி, சுப்புராஜ், தாவல் தொழில்நுட்ப அணி ஜாகிர் உசேன், முனியசாமி, சமுதாய நிர்வாகிகள் கண்ணன், வேலுச்சாமி, பழனிச்சாமி, தொழிலதிபர் வைரவச்செல்வம், அழகு ராஜ், நகராட்சி ஒப்பந்ததாரர் கருப்பையா தாஸ் மற்றும் பொதுமக்கள், அங்கன்வாடி மைய குழந்தைகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×