search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் போட்டிகள்-கலெக்டர் ரவிச்சந்திரன் தகவல்
    X

    தென்காசி மாவட்டத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் போட்டிகள்-கலெக்டர் ரவிச்சந்திரன் தகவல்

    • 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • போட்டியில் பங்கேற்கும் அனைவரும் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட் டுத்துறை, தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) அண்ணா சைக்கிள் போட்டி கள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

    அதன்படி 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், 13 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், 15 வயதிற்கு உட்பட்ட மாணவி களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோமீட்டர் தூரமும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    போட்டியானது 14-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஐ.டி. கார்னரில் இருந்து தொடங்கி பண்பொழி ரோடு வழியாக செங்கோட்டை ரெயில்வே கேட் வரை சென்றடைய உள்ளது. போட்டியில் பங்கேற்கும் அனைவரும் முன்பதிவு செய்திருக்க வேண்டும். முன்பதிவு செய்திட கடைசி நாள் 13-ந் தேதி மாலை 5.30 மணி ஆகும்.

    முன்பதிவு செய்திட மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 9788918406, 9489153516 என்ற செல்போன் எண்ணிலோ முன்பதிவு செய்து கொள்ள லாம். போட்டியில் பங்கு பெறும் அனைவரும் இந்தியா வில் தயாரான சாதாரண மிதி வண்டியினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் பங்கு பெறும் அனைவரும் தங்கள் பள்ளி- கல்லூரியில் இருந்து 'போன்பைடு' சான்றிதழ் கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும்.

    போட்டியில் வெற்றி பெறும் ஒவ்வொரு பிரிவு மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ. 3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ. 2 ஆயிரம், 4-ம் பரிசு முதல் 10-வது பரிசு வரை ரூ. 250 மற்றும் சான்றி தழ்களும் வழங்கப்படும்.

    பரிசுத் தொகையானது நிப்ட் பேங்கிங் மூலம் வழங்கப்பட உள்ளதால் கலந்து கொள்ளும் அனைவரும் கண்டிப்பாக வங்கி கணக்கு புத்தகத்தின் முதற்பக்க நகலை கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×