search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுமை மாவட்டம்"

    • பிளாஸ்டிக் பைகள், குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்டவை பயன்பாட்டை தடுக்க வேண்டும்.
    • பொருட்கள் வாங்க செல்லும்பொழுது துணிப்பைகளை எடுத்து செல்ல வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியருப்பதாவது:-

    தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தினை தென்காசி மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்திட ஏதுவாக மாவட்டம் முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

    இதனை மாவட்டம் முழுவதும் அமல்படுத்தி பசுமை மாவட்டமாக உருவாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தாள்களில் வழங்கப்படும் உணவு பொட்டலங்கள், பிளாஸ்டிக் மேசை விரிப்பு, பிளாஸ்டிக் கால் செய்யப்பட்ட தட்டுகள், தேநீர் குவளைகள், குடிநீர் பாட்டில்கள், பாக்கெட்டுகள் பயன்பாட்டை தடுக்க வேண்டும்.

    மேலும் பொதுமக்களும், வணிகர்களும் தடை செய் யப்பட்ட இந்த பொருட்களை பயன் படுத்துவதை கைவிட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீட்டு கழிவுகளை மக்கும், மக்காத கழிவுகள் என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும். மேலும் கடை வீதிகளில் பொருட்கள் வாங்க செல்லும்பொழுது துணிப்பைகளை எடுத்து செல்ல வேண்டும்.

    வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக அரசு அலுவ லர்களால் எவ்வித முன்னறி விப்புமின்றி திடீர் ஆய்வுகள் மேற் கொள்ளப் படும்.

    அப்போது அந்த பொருட் களின் பயன்பாடு கண்டறி யப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்வதோடு அபராதமும் விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரங்களை தூய்மைப்படுத்தும் பணி இன்று தொடங்கியது
    • சுமார் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட் டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் வகையில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரங்களை தூய்மைப்படுத்தும் பணி இன்று தொடங்கியது. இந்த பணியினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் இன்று (புதன்கிழமை) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறுகை யில், மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் வகையில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக திடக்கழிவு மேலாண்மை, நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் மற்றும் ஏரிகள், கால்வாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலை பகுதி களை தூர் வாரி தூய்மைப்படுத்தும் பணி அந்தந்த துறைகளின் சார்பில் நடைபெற்று வருகிறது.

    ஒரு முறை பயன் படுத்தக்கூடிய பிளாக்டிக் பொருட்கள் தடுப்பு நடவடிக்கை, மழைநீர் சேகரிப்பு, மாங்ரோ மரக்கன்றுகள் வளர்ப்பது போன்ற பசுமை நட வடிக்கைகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் நாகர்கோவில் நெடுஞ்சாலைத்துறை கட்டு மானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சாந்தபுரம் சாலை முதல் பாம்பான்விளை வரையிலான சாலை ஓரங்களை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்டங்களில் அனைத்து சாலை யோரங்களையும் தூய்மைப் படுத்துவதற்கு துறை சார்ந்த அலுலவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட செயற்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) பாஸ்கரன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

    ×